புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2019

மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக வெளியாகிய அதிர்ச்சி தகவல்…


மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1499 முதல் 1719 ஆண்டிற்குட்பட்டவையாகயிருக்கலாம் என அமெரிக்க ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை ஆய்வு செய்த புளோரிடா ஆய்வுகூடம் இதனை தெரிவித்துள்ளது.

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1404 முதல் 1450 ஆண்டிற்குற்பட்டவையாகயிருப்பதற்கான 95 வீத சாத்தியக்கூறுகள் உள்ளன என புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது. அதேவேளை 1417 முதல் 1440 ஆண்டிற்குபட்டவையாயிருப்பதற்கான 68 வீத வாய்ப்புகள் உள்ளதாகவும் புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

மன்னார் மனித புதைகுழி தொடர்பான சட்டபூர்வமான ஆய்வறிக்கை நேற்று கிடைக்கப்பெற்ற நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இடம்பெற்ற கார்பன் மாதிரி பரிசோதனைகள் குறித்த சட்டபூர்வ அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad