புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2019

முள்ளிவாய்க்காலில் மூக்குடைபட்ட சிறிலங்கா இராணுவம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நுாற்றுக்கணக்கான பொலிஸாா் குவிக்கப்பட்டு பெருமெடுப்பில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆவணங்கள் மற்றும் ஆயுதங்களை தேடிய பொலிஸாா் வழக்கம்போல் இறுதியில் ஒன்றையுமே எடுக்கவி ல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அகழ்வு நடவடிக்கையின் போது அங்கிருந்து புலிகளின் ஆயுதங்கள், ஆவணங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதிக்கு இன்று முற்பகல் சென்ற பொலிஸாரும் அதிரடிப்படையினரும் தனியார் வீடு ஒன்றை முற்றுகையிட்டு சுமார் 5 மணித்தியாலங்கள் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


எனினும் இந்த அகழ்வு நடவடிக்கையின் போது அங்கிருந்து புலிகளின் ஆயுதங்கள், ஆவணங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் இறுதியுத்தத்தில் பாதிக்கப்பட்ட சில பொதுமக்களின் உடமைகள் மற்றும் யுத்த தடயப்பொருட்கள் சிலவற்றை மட்டும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு பணி தற்பொழுது நிறைவிற்கு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ad

ad