புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2019

பனிப்புயல் எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அல்பேர்டாவிற்கு விடுக்கப்பட்ட பனிப்புயல் எச்சரிக்கை, தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் -19 முதல் -30 செல்சியஸ் குளிர் காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ad

ad