புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2019

சிறிலங்கா காவல் துறை உயர் பத­விகள் பல­வற்றில் அதிரடி மாற்றம்

சிறிலங்காவில் ஏற்­பட்­டுள்ள, எதிர்­கா­லத்தில் ஏற்­படவுள்ள, பாது­காப்­பற்ற
நிலைமை மற்றும் தேசிய பாது­காப்­புக்­கான அச்­சு­றுத்தல் உள்­ளிட்ட விட­யங்­களை  ஆராய்ந்து  காவல் துறை திணைக்­க­ளத்தின் உயர் பத­விகள் பல­வற்றில் மாற்றம் செய்ய தேசிய காவல் துறை  ஆணைக் குழு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.
அதன்­படி உயர் காவல் துறை அதி­கா­ரிகள் பலரை ஆணைக்­குழு இட­மாற்­றி­யுள்­ளது. வேறு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­பட்டு குறித்த உயர் காவல் துறை அதி­கா­ரி­களை இட­மாற்ற நேற்று கூடிய தேசிய காவல் துறை  ஆணைக் குழு  தீர்­மா­னித்­துள்­ளது. 
அதன்­படி புதிய மேல் மாகாண சிரேஷ்ட பிரதி  காவல் துறை மா அதி­ப­ராக இது­வரை வடமேல் மற்றும் வட­மத்­திய மாகாண சிரேஷ்ட பிரதி காவல் துறை  மா அதி­ப­ராக கட­மை­யாற்­றிய  அபே­சிறி குண­வர்­தன நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 
மேல் மாகா­ணத்தின் சிரேஷ்ட பிரதி காவல் துறை  மா அதி­ப­ராக இருந்த  நந்­தன முன­சிங்க வடமேல் மற்றும் வட மத்­திய மாகா­ணங்­க­ளுக்கு பொறுப்­பாக இட­மாற்­றப்­பட்­டுள்ளார்.
 கொழும்பு பிரதி காவல் துறை  மா அதிபர் பத­வி­யிலும் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளது. அதன்­படி கொழும்பின் பிரதிப் காவல் துறை மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்க காவல் துறை அபி­வி­ருத்தி பகு­திக்கு மாற்­றப்­பட்டு, கொழும்­புக்கு பொறுப்­பாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த வீர­சூ­ரிய நிய­மிக்­கப்பட்­டுள்ளார். 
அத்­துடன் மேல் மாகா­ணத்தின் வடக்­குக்கு பொறுப்­பாக இருந்த  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  தேச­பந்து தென்­னகோன் புத்­த­ளத்­துக்கு மாற்­றப்ப்ட்டு அந்த இடத்­துக்கு புத்­தளம் பிரதி காவல் துறை மா அதி­ப­ராக இது­வரை இருந்த சம்­பிக்க சிறி­வர்­த­னவை நிய­மிக்க நேற்று காவல் துறை ஆணைக் குழு தீர்­மா­னித்­துள்­ளது.
 நீர்­கொ­ழும்பு சிரேஷ்ட காவல் துறை அத்­தி­யட்­ச­ராக இருந்த சந்­தன அத்­து­கோ­ரள திரு­கோ­ண­ம­லைக்கு மாற்­றப்­பட்டு திரு­மலை சிரேஷ்ட காவல் துறை அத்­தி­யட்சர் கே.கட்­டு­பிட்­டிய நீர்­கொ­ழும்­புக்கு பொறுப்­பாக அழைக்­கப்­பட்­டுள்ளார்.
கொழும்பு வடக்கு காவல் துறை அத்­தி­யட்சர் சஞ்­ஜீவ பண்­டார  சீத்­தா­வக்க காவல் துறை பிரி­வுக்கு மாற்­றப்­பட்டு கொழும்பு வடக்­குக்கு பொறுப்­பாக ஏ.எம்.யூ. சந்­தன நிய­மிக்­கப்­பட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 
கொழும்பு மத்­திய பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்த பொலிஸ் அத்­தி­யட்சர் ஜே.ஏ.யூ.பி. ஜய­சிங்க எல்­பிட்­டிய காவல் துறை பிரி­வுக்கு மாற்­றப்­பட்டு எல்­பிட்­டிய பொலிஸ் அத்­தி­யட்சர் தல்­துவ கொழும்பு மத்­திய பிரிவுக்கு அழைக்கப்படவுள்ளார். 
அத்துடன் காவல் துறை  அத்தியட்சர் ரொஷான் டயஸ், களனி பொலிச் பிரிவுக்கு பொருப்பாக நியமிக்கப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான காவல் துறைஅறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

ad

ad