புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2019

தமிழீழ பிரச்சனையை சிக்கலாக்கியவர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

தெற்காசிய பிராந்தியத்தில் நிகழும் புவிசார் அரசியலின் அனைத்து நிகழ்ச்சிநிரல்களிலும் தமிழர்களாகிய நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபடுத்தப்பட்டுள்ளோம். அதன்பொருட்டு, தமிழீழத்தில் ஒரு இனப்படுகொலையை சந்தித்துள்ளோம். நாம் வாழும் இந்த பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த தமிழர் கடல் பகுதி தான் இன்றைய அமெரிக்க-சீனா போட்டியிடும் களம். அப்படியென்றால் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை பாகிஸ்தானை மையமாக கொண்ட காலம் இனி இருக்கப்போவதில்லை. அமெரிக்கா-அமெரிக்க ஆதரவு நாடுகள், சீனா-சீன ஆதரவு நாடுகள் என்று இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் என முடிவுசெய்யப்படும். இப்படிப்பட்ட வெறியுறவுக் கொள்கைகளை இனி கையாளப்போகிறவர் தான் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர்.

தமிழரென்று சிலரால் சொல்லப்படும் இந்த ஜெய்ஷங்கர், தனது பணிக்காலத்தில் முதன்முதலாக பெற்ற மிகப்பெரிய பொறுப்பு என்றால் அது, ராஜிவ்காந்தி காலத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதி காக்கும் படையை வழிநடத்தியது. IPKF படையின் முதன்மை செயலாளராகவும், அரசியல் ஆலோசராகவும் இருந்துள்ளார். இவரது ஆலோசனையின் படி தான் IPKF ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்றுகுவித்தது. ஆனாலும் இந்தியாவின் மிகப்பெரிய படையை விடுதலைப்புலிகளின் சிறு படை தோற்கடித்து ஓட செய்தது. தமிழர்களுக்கு எதிரான கொள்கையை வகுத்து, தமிழீழ பிரச்னையை சிக்கலாக்கி, இந்தியாவிற்கு தோல்வியை பெற்று தந்தவர் தான் இந்த ஜெய்ஷங்கர்.

ad

ad