புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2019

சுவிஸ் சிறையில் இலங்கையர் உயிரிழப்பு!

சுவிஸ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

42 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அபராதம் செலுத்த, பணம் இல்லாதநிலையில் கடந்த இரண்டு நாட்களாக லூசெர்ன் நகரில் அமைந்துள்ள தடுப்புக் காவல் மையத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திடீர் உடல் நலக்குறைவு காரணமாகவே குறித்த இலங்கையர் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் அவரது மரணத்திற்கான சரியான காரணத்தினை கண்டறியும் நோக்கில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சுவிஸ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் செய்த குற்றம், அவரது பெயர் உள்ளிட்ட எந்த தகவலையும் சிறைநிர்வாகம் வெளியிட மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad