புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2019

இராஜினாமா செய்யத் தயார்-ரிஷாத் பதியூதீன்

சிறிலங்கா ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கோரிக்கை விடுத்தால் அமைச்சுப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­வ­தற்கு நான் தயா­ராக உள்ளேன் எனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியூதீன், நானும் எனது கட்­சியை சேர்ந்த இரண்டு பிரதி அமைச்­சர்­களும் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு பாரா­ளு­மன்­றத்தில் பின்­வ­ரிசை ஆச­னத்தில் அமர்­வ­தற்கு தயா­ராக உள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

சிறிலங்கா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது தன்­ மீ­தான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் விளக்­க­ம­ளித்­துள்ளார். தனக்கு எதி­ராக எதி­ர­ணி­யினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள பத்து குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் அவர் விளக்கி கூறி­யுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட நபரை விடுக்­கு­மாறு இரா­ணு­வத்­த­ள­ப­தி­யிடம் தான் கோரி­ய­தாக தெரி­விக்­கப்­படும் குற்­றச்­சாட்டு மற்றும் குண்­டுத்­தா­ரி­க­ளான சகோ­த­ரர்­களின் தந்­தை­யான இப்­ராஹிம் உட­னான தொடர்பு குறித்த குற்­றச்­சாட்டு என்­பன குறித்தும் அமைச்சர் விளக்­க­ம­ளித்­துள்ளார். தன்­மீ­தான குற்­றச்­சாட்­டுக்கள் அபாண்­ட­மா­னவை என்று அவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad