சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில், பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றிப் பெற்றது. அந்த கூட்டணியில் அ.தி.மு.க.வும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று (சனிக்கிழமை) காலை 9.55 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர்.
அங்கு பா.ஜ.க. தலைவர்களை இருவரும் சந்தித்து பேச உள்ளனர். பின்னர் இவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு எப்போது திரும்புகிறார்கள் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.