புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2019

பாரிய விபத்து இந்தியர் உட்பட 17 பேர் பலி!

சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

துபாயில் ஐ ரஷிதியா மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே நேற்று மாலை 5.40 மணியளவில் சுற்றுலா பேருந்து ஒன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பயணித்த பேருந்து சாலைத் தடுப்பு மற்றும் விளம்பரப் பலகை மீது பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது,

இதில் 8 இந்தியர்கள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளதோடு 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பலியான இந்தியர்கள் ராஜகோபாலன், பெரோஷ் கான் பதான், ரேஷ்மா பெரோஷ்கான் பதான், தீபக் குமார், ஜமாலுதீன், அரக்கவீடில், கிரண் ஜானி, வாசுதேவ், திலகராம் ஜவஹர் தாக்கூர் ஆகியோர் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ad

ad