புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2019

சித்திரை 21 தாக்குதல் - 2 ஆயிரத்து 289 பேர் கைது

கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாடு பூராகவும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸ் மற்றும் முப்படையினரும் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்தில் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் பலர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு 2 ஆயிரத்து 289 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஆயிரத்து 665 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் 423 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 211 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ad

ad