புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2019

பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்பாடசாலையில் 8 வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்! - ஆசிரியருக்கு விளக்கமறியல்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய, குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஜூலை 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய, குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஜூலை 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த 46 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பெண்கள் பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் 8 வயது மாணவியை மலசல கூடத்துக்குள் வைத்து பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆசிரியர் உட்படுத்தினார் என்று பொலிஸாரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த மே மாதம் 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

எனினும் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்தே பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் மாணவியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார், அவரை மந்திகை வைத்தியசாலையில் பரிசோதனைக்காகச் சேர்த்தனர்.

அத்துடன், மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வியாபாரிமூலையைச் சேர்ந்த 46 வயதுடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். அவர் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சந்தேகநபர் நேற்றுமுன்தினம் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். எனினும் சந்தேகநபர் விசாரணைகளில் தலையீடு செய்யலாம் என்றும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அவரால் அச்சுறுத்தல் உண்டும் எனவும் பொலிஸாரால் மன்றுரைக்கப்பட்டது.

அதனால் சந்தேகநபரின் விளக்கமறியலை எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதிவரை நீடித்து நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, மாணவி பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என்று சட்ட மருத்துவப் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

ad

ad