புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2019

கனடிய நாடாளுமன்ற நிலையியல் குழுவில் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பிரேரணை!

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதென்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுதந்திரமான, சர்வதேச விசாரணை ஒன்று தேவையென கோரும் பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி ஆகியன தொடர்பான நிலையியல் குழுவில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் ஸ்காபறோ ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதென்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுதந்திரமான, சர்வதேச விசாரணை ஒன்று தேவையென கோரும் பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி ஆகியன தொடர்பான நிலையியல் குழுவில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் ஸ்காபறோ ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

“பல மாத கால கடுமையான முயற்சியின் பின்னரும், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியின் பலத்த எதிர்ப்பின் பின்னரும், கனடாவில் உள்ள கட்சிகள் இந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு இணங்கியமை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

முள்ளிவாய்க்காலின் பத்தாம் ஆண்டு நினைவுகூரப்படும் இந்த தருணத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களையும், அட்டூழியங்களில் உயிர் தப்பியோரையும் உலகம் மறந்துவிடவில்லையென்பதை நினைவூட்டுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு அனைத்துக் கனேடியர்களும் ஒரு குரலாக ஒன்றிணைய வேண்டுமென்பதையும் இது கட்சி சார்ந்த விடயம் அல்லவென்பதையும் நாம் இன்று காண்பித்துள்ளோம்.

மே 15, ஜூன் 12 ஆகிய திகதிகளில் இந்தப் பிரேரணையைச் சமர்ப்பித்த லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஷோன் சென் (Shaun Chen), என்டீபீ நாடாளுமன்ற உறுப்பினர் ஷெறில் ஹார்ட்காசில் (Cheryl Hardcastle) ஆகியோருக்கு நான் நன்றியைத் தெரிவிக்கிறேன். இதைப் போன்ற மனித உரிமை விடயங்கள், கட்சி வேறுபாடுகளைக் கடந்து முன்னெடுக்கப்படுவது முக்கியமானது. இந்த விடயம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அது சாத்தியமாகாதமை வருத்தத்துக்குரியது.

எனினும், இன்றைய பிரேரணை, அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவை வெளியிடும் வகையில் அமைந்துள்ளதுடன், இலங்கைத் தீவில் நீதி, பொறுப்புக் கூறப்படுதல் ஆகியவற்றுக்கு கனடா தொடர்ந்து இணைந்து பணியாற்றுமென்பதையும் நினைவுபடுத்துகிறது.

இலங்கையில் பொறுப்புக் கூறலை முன்னகர்த்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடாகவும், பொதுநலவாய நாடுகளின் அரசுத் தலைவர்களின் மகாநாட்டின் ஊடாகவும், ஏனைய சர்வதேச மகாநாடுகள் ஊடாகவும் கனடா தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது.”

பிரேரணை நிறைவேற்றப்பட்டவேளை வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியற் குழுவின் பின்வரும் உறுப்பினர்கள் சமுகமளித்திருந்தனர்.

லிபரல்-

ஃபிறாங்க் பெய்லிஸ் (Frank Baylis), மைக்கல் லெவிட் (Michael Levitt), ராஜ் சாய்னி (Raj Saini), ஜரி சித்து (Jati Sidhu), அனிரா வன்டென்பெல்ட் (Anita Vandenbeld), பொறிஸ் வெஸெஸ்நெவ்ஸ்கி (Borys Wrzesnewskyj), கமால் கேரா, நாடாளுமன்ற செயலாளர் (Kamal Khera), ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree), ஃபிறாங்க் பெய்லிஸ்க்குப் (Frank Baylis) பதிலான உறுப்பினர்

கொன்சேவடிவ்

ஸியாட் அபுல்ரயிஃப் (Ziad Aboultaif), லியோனா அலெஸ்லெவ் (Leona Alleslev), கார்னெட் ஜெனுவிஸ் (Garnett Genuis) எரின் ஓ ரூலுக்குப் (Erin O'Toole) பதிலான உறுப்பினர்

என்டீபீ

கீ கறோன் (Guy Caron)

நிறைவேற்றப்பட்ட பிரேரணை பின்வருமாறு அமைந்துள்ளது:

இலங்கையில் வன்முறையாலும், போரினாலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறது.

இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து அண்மையில் இடம்பெற்ற வன்முறையைக் கண்டிக்கும் அதேவேளை, அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்தவாறு இன வெறுப்பையும், தீவிரவாதத்தையும் எதிர்கொள்வதற்கான முயற்சிகளை அதிகரிக்குமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குமாறும், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களின் கீழ் பணிக்கப்பட்ட கடப்பாடுகளை தெளிவாக வரையறுத்த காலத்தினுள் நிறைவேற்றுமாறு கனேடிய அரசு விடுத்த கோரிக்கையை மீள உறுதிசெய்வதுடன், பொறுப்புக் கூறலை மேற்கொள்வது, சமாதானத்தை ஏற்படுத்துவது, நாட்டில் உள்ள அனைவருக்கும் மத்தியில் மீளிணக்கத்தை ஏற்படுத்து ஆகியவற்றுக்குக் கனடாவின் ஆதரவை மீள உறுதிசெய்கிறது.

2009 ஆம் ஆண்டில் ஆயுதப் போரின் இறுதிப் பகுதி உள்ளடங்கலாக இலங்கையில் தமிழர்கள் மீது இனப்படுகொலை புரியப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை செய்வதற்கு சுதந்திரமான, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கிறது.

இந்தப் பிரேரணையை நாடாளுமன்றத்துக்கு அறிவித்து, 109 ஆம் இலக்க நிலையியல் கட்டளைக்கு அமைவாக இந்த அறிக்கைக்கு விரிவான பதில் ஒன்றை வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கிறது.”

ad

ad