புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2019

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து த.தே.கூ ஆராய்கிறது



அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்தும், கூட்டமைப்பின் இந்­திய விஜயம் குறித்தும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்றக் குழு நாளை கூடி ஆரா­ய­வுள்­ளது.

அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை மக்கள் விடு­தலை முன்­னணி கொண்­டு­வந்­துள்ள நிலையில் அந்த பிரே­ரணை அடுத்த மாதம் 9-10ஆம் திக­தி­களில் பாரா­ளு­மன்ற விவா­தத்­திற்கு எடுத்­து­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

இது குறித்து பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சிகள் தத்­த­மது கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்ற நிலையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து ஆரா­ய­வுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளது.

நாளை நண்­பகல் பாரா­ளு­மன்ற அமர்வு கூட­வுள்ள நிலையில் அதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் கூடு­கின்­றது.

இதன்­போது இந்த விட­யங்­களை தாம் ஆரா­ய­வுள்­ள­தாக மாவை சேனா­தி­ராஜா எம்.பி தெரி­வித்தார்.

அண்­மையில் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்­கான விஜயம் ஒன்­றினை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் தமிழர் தரப்பின் சார்பில் சந்திப்பை முன்­னெ­டுத்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் தமிழ் மக்­களின் அர­சியல் தீர்­வுகள் குறித்து தலை­யீ­டு­களை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்­வைத்­தி­ருந்­தனர்.

இது குறித்து ஆழ­மா­னதும் ஆரோக்­கி­ய­மான கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை முன்­னெ­டுக்க டெல்­லிக்கு வரு­மாறு இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி அழைப்பு விடுத்­தி­ருந்தார்.

ஆகவே இது குறித்தும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நகர்­வுகள் குறித்தும் சந்திப்புகளை மேற்கொள்ளும் கால கட்டம் குறித்தும் ஆராயவும் நாளைய பாராளுமன்ற குழுக் கூட்டத்தை பயன்படுத்திக்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்

ad

ad