புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2019

ரெலோ ஆதரவு - சம்பந்தனின் முடிவு இன்று?

எழுக தமிழ் பேரணிக்கு ரெலோ ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் இன்று அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகின்றது.

எழுக தமிழ் பேரணிக்கு ரெலோ ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் இன்று அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகின்றது.

எதிர்வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மூன்றாவது எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள குறித்த பேரணிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோ எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நேற்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக ரெலோ அமைப்பு ஆதரவு வெளியிட்டுள்ளது.

இந்தநிலையிலேயே இதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பான அறிவிப்பு இன்றைய தினம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ad

ad