புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2019

தமிழ்மக்களுக்கு துரோகமிழைத்துள்ளது கூட்டமைப்பு

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கிடையாது என்று, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிக்கான குரல் அமைப்பின் மாநாடு இன்று பத்தரமுல்லையில் உள்ள 'அபே கம' கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கிடையாது என்று, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிக்கான குரல் அமைப்பின் மாநாடு இன்று பத்தரமுல்லையில் உள்ள 'அபே கம' கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆட்சி மாற்றத்தையே நாட்டு மக்கள் தற்போது எதிர்பார்த்து உள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கு கடந்த அரசாங்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது வடக்கில் பெயரளவிலே அபிவிருத்திகள் செயற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கிடையாது.

அவர்கள் கடந்த நான்கு வருட காலமாக அரசியலமைப்பு உருவாக்கம் என்ற விடயத்தை குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுக் கொண்டு தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்துள்ளார்கள். ஆகவே அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் நாட்டில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படாது, அரசியல் பழிவாங்கல்களே இடம்பெற்றன. அரசியல் பழிவாங்களுக்குட்பட்ட மக்களுக்கு எமது ஆட்சியில் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.

ad

ad