புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2019

தலையின்றி முதியவர் சடலமாக மீட்பு

அம்பாறை, திருக்கோவில் நேருபுரம் தாண்டியடி மயானப் பிரதேசத்தில் ஆடு மேய்க்க சென்ற முதியவர் தலையின்றி நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 65 வயதான மாரிமுத்து முனிசாமி எனும் முதியவரே சடலமாக மீட்கப்பட்டார்.
அம்பாறை, திருக்கோவில் நேருபுரம் தாண்டியடி மயானப் பிரதேசத்தில் ஆடு மேய்க்க சென்ற முதியவர் தலையின்றி நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 65 வயதான மாரிமுத்து முனிசாமி எனும் முதியவரே சடலமாக மீட்கப்பட்டார்.

இக் கொலை தொடர்பாக தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

திருக்கோவில் நேருபுரம் கிராமத்தைச் சேர்ந்த கொலை செய்யப்பட்ட நபர் சம்பவ தினத்தன்று காலை 8.30 மணியளவில் வீட்டிலிருந்து ஆடுகளை மேய்ப்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளதுடன் மதிய உணவுக்கு வரமுடியாது மாலை 4.00 மணிக்கு வீட்டுக்கு வருவதாக அவரது மனைவிக்கு தெரிவித்து சென்ற நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் இருந்த இடத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் கத்தியும், தண்ணீர் போத்தலும் துவிச்சக்கரவண்டியும் இருந்தன. இவை இவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

ad

ad