புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2019

நீதிமன்ற கூண்டில் கழுத்தை அறுத்த சந்தேக நபர்

போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் தனது கழுத்தை பிளேட்டால் கீறி காயப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.
போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் தனது கழுத்தை பிளேட்டால் கீறி காயப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.

சந்தேக நபருக்கு எதிராக ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு பொலிஸாரால் முன்வைக்கப்பட்டுள்ளது. 2 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் அவரது உடமையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதனால் சந்தேகநபர் கடந்த ஜூலை 5 ஆம் திகதியில் இருந்து தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ. பீற்றர் போல் உத்தரவிட்டார். இந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் சந்தேக நபர் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டார்.

அதன் போதே தான் வைத்திருந்த பிளேட் போன்ற கூரிய ஆயுதத்தால் சந்தேக நபர் தனது கழுத்தை கீறி காயத்தை ஏற்படுத்தினார். அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல சிறைச்சாலை வாகனம் வர சுமார் அரை மணி நேரம் தாமதமானது. அதனால் சந்தேக நபரின் தாயார் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்குள் பெரும் சத்தமிட்டு குரல் எழுப்பினார். எனினும் பொலிஸார் அவரை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே அழைத்துச் சென்று நீதிமன்றில் அமைதியை ஏற்படுத்தினர்.

இதேவேளை, சந்தேக நபரை தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கும் நோக்குடன் ஹெரோயினை அவரது உடமைக்குள் திணித்து சோடிப்பு வழக்கைத் தாக்கல் செய்தனர் என்று சந்தேகநபரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்

ad

ad