புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2019

மொனராகலையில் 15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது

மாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவனையும் நேற்று (11) கைது செய்துள்ளனர்.

மொனராகலைப் பகுதி அரச பாடசாலையொன்றில் ஆசிரியையாக கடமையாற்றி வருபவர், 10ம் ஆண்டு கல்வி கற்கும் 15 வயது நிரம்பிய மாணவனை டியூசன் வகுப்பிற்கு வருமாறு, தமது வீட்டிற்கு அழைப்பித்து அம்மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.



மாணவன் வீட்டிலிருக்கும் போது, குறிப்பிட்ட ஆசிரியை அடிக்கடி கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வந்ததை மாணவனின் தாய் கண்டு சந்தேகம் கொண்டுள்ளார். அத்தாய் மகனுக்குத் தெரியாமல் மகனின் கையடக்கத் தொலைபேசியை எடுத்து ஆசிரியையிடமிருந்து மகனுக்கு வந்த குறுந்தகவல்களைக் கண்டு விடயத்தை புரிந்து கொண்டுள்ளார்.

இது குறித்து மாணவனின் தாய் மொனராகலைப் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இப்புகாரையடுத்து பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையின் வீட்டிற்கு விரைந்து ஆசிரியையையும் அம்மாணவனையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையிலான இவ் உறவு கடந்த ஒருவருடமாக இடம்பெற்று வருவதும் மாணவனை கட்டாயப்படுத்தி தமது வீட்டிற்கு வரவழைத்து ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.



குறிப்பிட்ட ஆசிரியை 41 வயது நிரம்பிய இரு பிள்ளைகளுக்கு தாயானவர் எனத் தெரியவருகிறது. இவ்விருவரையும் மொனராகலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யமுன்பு குறிப்பிட்ட மாணவனின் மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அம் மாணவனை மொனராகலை வைத்தியசாலையில் பொலிசார் அனுமதித்துள்ளனர்.

ad

ad