புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2019

7 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்- அதிபர் கைது!

கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹெல்பொட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹெல்பொட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தபட்டு வந்ததாக குறித்த மாணவிகள் தமது பெற்றோர்களிடம் அறிவித்ததை அடுத்து அவர்கள் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரான அதிபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு ஹெல்பொட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட்ட போதே எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹெல்பொட நீதிமன்ற நீதிவான் சாந்தினி மீகொடவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிந்த இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னகோன் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியேரை நேரடியாக சந்தித்து குறித்த அதிபருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த அதிபருக்கு இடமாற்றம் வழங்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்

ad

ad