கிளிநொச்சி – முறிப்பு பகுதியில், மோட்டார் சைக்கிளும் கெப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த பரந்தன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இராசரத்தினம் சந்திரகுமார் (வயது -34 ) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.