புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2019

புலிகளைத் தோற்கடிக்க முடியாவிட்டால் முஸ்லிம் மக்களுக்கு வடக்கிற்கு மீண்டும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.மகிந்த ராஜபக்ச.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாவிட்டால் முஸ்லிம் மக்களுக்கு வடக்கிற்கு மீண்டும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் முஸ்லிம் மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டதாகக் கூறிய அவர், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத ஒருவருக்கு நாட்டின் தலைமைத்துவத்தையும் வகிக்கமுடியாது என்றும் குறிப்பிட்டார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர், “பேருவளை சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் கிழக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டபோது, நோன்புக்கு முன்னரே அவர்களை மீள்குடியேற்றுவதாக உறுதியளித்திருந்தேன். அவ்வாறு செய்தேன். முஸ்லிம் சமூகத்துடன் எல்லா சந்தர்ப்பங்களிலும் நெருங்கி செயற்பட்டோம். தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாவிட்டால் முஸ்லிம் மக்களுக்கு வடக்கிற்கு மீண்டும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

ad

ad