புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2019

தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்காமைக்கான காரணம் குறித்து கோட்டா விளக்கம்

நாட்டை பிளவுப்படுத்தக்கூடாது என்றக் காரணத்தினால்தான் தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பன்னலையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது பொலிஸார் நாட்டுக்காக பாரிய சேவைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனது காலத்தில்தான் இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

எனது காலத்தில்தான் இவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுக்காணப்பட்டது. ஆனால், இன்று இவர்களுக்கு மீண்டும் சவால்கள் வந்துவிட்டன.

உயர் பதவிகள், சம்பள உயர்வுகள் கிடைப்பதில்லை. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.

நாம் ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்வோம். இராணுவத்தினருக்கு எம்மால் தனியான வைத்தியசாலையொன்று கட்டப்பட்டதைப்போல, பொலிஸாருக்கும் தனியான வைத்தியசாலையொன்றை நாம் அமைப்போம்.

இந்த ஊக்குவிப்புக்களே அவர்களின் சேவையை இன்னும் முன்னேற்றமடையச் செய்யும். இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம், பாதாளக்குழுக்கள், போதைப்பொருள் வர்த்தகர்கள் தலைத்தூக்காமல் இருக்க எமக்கு சிறந்ததொரு பொலிஸ் சேவையொன்று தேவைப்படுகிறது.

நாம் என்றும் பயங்கரவாதத்துக்கும் அடிப்படைவாதத்திற்கும் இடமளிக்கப்போவதில்லை. ஒருமித்த நாட்டை பிளவுப்படுத்த நாம் எந்தவொரு தரப்புக்கும் அனுமதிளிக்கப்போவதில்லை.

இதனால்தான், தமிழ் அடிப்படைவாதக் கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தோம். இவை எமது கொள்கைகளுக்கு முற்றிலும் முரணான வகையிலேயே அமைந்துள்ளன” என மேலும் தெரிவித்தார்

ad

ad