புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 டிச., 2019

   பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்ற 15 இந்தியர்கள்!
பிரித்தானியாவில் நேற்று இடம்பெற்ற பொது தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

650 உறுப்பினர்களைக் கொண்ட இங்கிலாந்தின் பாராளுமன்ற தேர்ந்தல் நேற்று நடைபெற்றது. உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் வெற்றிக் கணக்கை கன்சர்வேட்டிவ் கட்சி முதலில் தொடங்கியது.

அந்தக் கட்சி 364 இடங்களை கைப்பற்றி வெற்றியடைந்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சி 203 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான பொரிஸ் ஜான்சன் தான் போட்டியிட்ட தொகுதியில் வென்றுள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற முடிவில் மக்கள் உறுதியாக உள்ளதை தேர்தல் முடிவு காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்து தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் லேபர் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 பேர் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

உள்துறை மந்திரியாக இருந்த பிரீத்தி பட்டேல், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் வெற்றிபெற்றுள்ளார். கருவூல தலைமைச் செயலராக இருந்த இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். சர்வதேச மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக இருந்த அலோக் சர்மா வெற்றி பெற்றுள்ளார்.

சைலேஸ்வரா, சுயெல்லா பிரேவர்மன், பிரீத்தி கவுர் கில், தன்மன்ஜித் சிங் தேசி, வீரேந்திர சர்மா, லிசா நந்தி, சீமா மல்ஹோத்ரா, வலேரி வாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில், ககன் மொஹிந்திரா, கிளேர் கொட்டின்ஹோ, லேபர் கட்சி சார்பில் நவேந்தரு மிஸ்ரா ஆகிய புதுமுகங்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

ad

ad