சட்டவிரோதமாக பாலியல் தொழில் விடுதிகள் இயங்குவதாக கிடைத்த தகவலுக்கு அமைய 35 மசாஜ் நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 25 பாலியல் தொழில் இடம்பெற்ற விடுதிகளின் முகாமையாளர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை, வெல்லவத்தை, கிருலபனை, பம்பலப்பிட்டிய, நாரஹேன்பிட, கிரேன்பாஸ், மருதானை மற்றும் தலங்கம பிரதேசங்களில் இயங்கிய பாலியல் தொழில் மையங்களே சுற்றிவளைக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்றங்களில் முற்படுத்தப்படவுள்ளனர்
|