இது தொடர்பான கானொலி த்றபோது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகின்றது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகின்றது. சீனாவில் இதுவைரை 3000 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆனால் தற்போது சீனாவில் இறப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் உலக நாடுகள் சிலவற்றில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் லண்டனில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் லண்டன் ஷாப்பிங் சென்டரில் ஒருவர் மயங்கி விழுந்தமை பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் நுழைந்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்.ஹெச்.எஸ்-ன் பார்வையில் தனியாக வைக்கப்பட்டு கவனிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.