புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2020

பாலியல் வல்லுறவின் பின் கொலை?

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகளை வைத்தியரொருவரும், மூன்று தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்துள்ளதாகவும், எனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டுமெனக் கோரியும் தமிழரான தந்தையாரொருவர் யாழ். மருதனார்மடம் சந்திக்கு அருகில் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று காலை ஆரம்பமான குறித்த போராட்டத்தில் உயிரிழந்த தனது மகளின் புகைப்படம் மற்றும் எனது மகளின் மரணத்துக்கு நீதி வேண்டுமென எழுதப்பட்ட சுலோகத்தைத் தமது கைகளில் தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
திடீர் மனநலப் பாதிப்புக்குள்ளான தனது மகள் கடந்த-2017 ஆம் ஆண்டில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் அங்கொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு ஒரு வைத்தியரும் மூன்று தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் உண்மை வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக எனது மகளின் உடலுக்கு ஊசியேற்றியுள்ளனர். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு மே மாதம்-31 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். எனது மகள் இறந்து பல நாட்களின் பின்னரே இந்த விடயம் எமக்குத் தெரிய வந்தது.
மகளின் உயிரற்ற உடலை எம்மிடம் கையளிக்கும் போது அவரது உடலிலிருந்து சிறுநீரகம் உள்ளிட்ட பகுதிகள் எங்களின் அனுமதியின்றி எடுக்கப்பட்டிருந்தன.
எனது மகளுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடந்த கொடுமைகள் தொடர்பில் நான் முன்னாள் ஜனாதிபதி , முன்னாள் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தேன்.எனினும், இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

ad

ad