புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2020

சுற்றுலா சென்ற 4 மாணவர்கள் மரணம்: 8 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

கல்விச் சுற்­று­லா­வொன்றின் போது நான்கு மாண­வர்கள் நீரில் மூழ்கி மர­ண­மான சம்­ப­வத்தைத் தொடர்ந்து, எட்டு ஆசி­ரி­யர்கள் மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ளன.

ஹாலி–-­எல விஞ்­ஞா­னக்­கல்­லூ­ரி­யி­லி­ருந்து கடந்த 19ஆம் திகதி திரு­கோ­ண­மலை பகு­திக்கு மேற்­படி கல்­லூரி மாணவ, மாண­விகள் 87 பேரும் ஆசி­ரி­யர்கள் 8 பேரு­மாக கல்விச் சுற்­று­லா­வொன்­றினை மேற்­கொண்­டி­ருந்­தனர். கொம­ரன்­கட மத­வாச்சி குளத்தில், சுற்­று­லாவுக்கு வந்த மாண­வர்கள் பலர் குளிக்கச் சென்­றி­ருந்த வேளையில், நான்கு மாண­வர்கள் நீரில் மூழ்கி மர­ண­மா­னார்கள்.

இச்­சம்­ப­வத்­தை­ய­டுத்து, ஊவா மாகாண கல்வித் திணைக்­களம், ஊவா மாகாண ஆளுநர் ஆகிய இரு பகு­தி­யி­னரால் இரு குழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு, விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லையில், இக் கல்விச் சுற்­று­லா­வினை ஏற்­பாடு செய்­தி­ருந்த ஆசி­ரி­யர்­களின் கவ­ன­யீ­னமே இம்­மா­ண­வர்­களின் மர­ணத்­துக்கு கார­ண­மென்று ஆரம்ப விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

நிய­மிக்­கப்­பட்ட இரு விசா­ரணைக் குழுக்­களின் அறிக்­கைகள் வெளி­வரும் முன்பே, கல்விச் சுற்­று­லா­வினை ஏற்­பாடு செய்­தி­ருந்த எட்டு ஆசிரியர்கள் குறிப்பிட்ட கல்லூரியிலிருந்து விசா ரணைகள் முடியுமட்டும் வேறு பாட சாலைகளுக்கு இணை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ad

ad