புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2020

கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைக்கும் ஜனநாயகப் போராளிகள்

நாடாளுமன்ற தேர்தலில், வடக்கு- கிழக்கு இணைந்த தாயக பகுதியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றிக்காக ஜனநாயக போராளிகள் கட்சி உழைக்கும் என்று, அந்தக் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், ​இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில், வடக்கு- கிழக்கு இணைந்த தாயக பகுதியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றிக்காக ஜனநாயக போராளிகள் கட்சி உழைக்கும் என்று, அந்தக் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், ​இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

''கடந்த காலங்களில், ஐ.நா சபையில் கொண்டு வரப்பட்ட இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானங்கள் ஒரு வலுவான தீர்மானங்களாக அமைந்திருந்தால், இன்று இந்த முடிவை இலங்கை அரசாங்கம் எடுத்திருக்காது. இப்போது எடுத்த இறுக்கமான முடிவு, கடந்த காலங்களில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்டிருந்தால் இன்று உலகத்துக்கே சவால்விடும் அளவுக்கு இலங்கை அரசாங்கம் செயற்பட்டிருக்க முடியாது.

சிங்கள பேரினவாதம் சர்வதிகார ஆட்சிமுறையும் நாட்டில் தலைதூக்கி நிக்கின்றது என்ற ஆணவத்தில்தான், இலங்கை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக இந்த முடிவை அறிவித்துள்ளது.

43ஆவது ஐ.நா மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வைத்து இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்தால் தான் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற முடியும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட யாப்பு முறையைக் கொண்ட அரசாங்கம் தங்கள் நாட்டில் கூட இறையாண்மையைப் பாதுகாக்க முடியாமல் இருக்கின்றது. இறையாண்மை இங்கு இல்லை.

எதிர்வரும் காலங்களில், சர்வதேச சமூகம் இதற்காக தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு சர்வதேச ரிதியான நீதி விசாரணையினை கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனநாயக போராளிகள் கட்சி தெளிவாக இருக்கின்றது. சர்வதேசம் இதனை செய்யும் என்று நாங்கள் நம்புகின்றோம்” எனவும், அவர் தெரிவித்தார்.

ad

ad