புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2020

அன்பான உறவுகளுக்கு . சில அன்பு நெஞ்சங்கள் உள்பெட்டியில் கவலை பாடுறாங்க  நலம் விசாரிக்கின்றனர்  நன்றி ,உண்மையில் புலம்பெயர் தமிழர் தாயக தமிழருக்கு   தாராளமாக பல வகையிலும்  உதவிகொண்டு இருக்றிறார்கள் நல்ல திடடமிடல்  ஒருங்கிணைத்தல்  இல்லாமல்    சில  தவறுகள் அல்லது  முழுப்பலனை தராமல் கூட இருக்கலாம்    சில நாட்களாக  என்  மனசு கவலையில்  ஆழ்ந்துள்ளது ,  சென்ற வாரம் சுவிஸில் கொரோனாவால்  மறைந்த லோகநாதன்  என்  மனைவியின் பெரியம்மா மகன் , என்  தாய் மாமன் மக்களின் கணவன் .  என்  மனைவியின் பெரியப்பாவின் மக்களின் கணவன் .  அவரது மரணம்  நம்பமுடியாமல்  இருக்கிறது , பூதவுடலை கூட பார்க்க முடியாமல் சொந்த சகோதர்கள் நால்வரும் நாங்களுமாக  சுவிஸில்  வாழ்கிறோம் . இதே  நிலையில்  இன்னும் 5-6  தமிழர் ஐரோப்பாவில் பலியாகி விடடார்கள் .. இதைவிட எனக்கு  பெரிய கவலை தாயக தமிழ் உறவுகள்   புலம்பெயர்  தமிழரின் இந்த  உயிரா பத்தான  இக்கடடான  நிலை கண்டு பெரிதாக  கண்டுகொள்ளவில்லை  ,நலம்  விசாரிப்பதில்லை  ,   புலம்பெயர்  தமிழரின் பாதிப்பு ,பொருளாதார வீழ்ச்சி   அவர்களை கூட  தாக்கும் என்பது  கூட விளங்காமல்   தம் போக்குக்கு இயல்பாக உள்ளார்கள் நேற்று கூட என்  நண்பனும்  நல்ல  கொ டை வள்ளலுமான இம் போட்  தாஸ்  ஸ்ரீதாசின்  கொடுப்பனவு எனது ஊரில்  நடந்து கொண்டிருக்கிறது .  இதற்கு  மேல் எழுத முடியவில்லை  நன்றாக  உள்வாங்கி< சிந்திப்போருக்கு  பூரண விளக்கம்  தானாக  உருவாகும் நன்று 

ad

ad