புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2012

Photo: முன்னொரு காலத்தில் சீனத்தில் ஒரு கிழவன் இருந்தானாம். வடக்கு மலையின் மூடக்கிழவன் என்று அவனுக்குப் பெயர். அவனுடைய வீட்டின் வாசலை மறைத்து நின்ற இரு பெரும் மலைகளை உடைத்து அகற்றுகிறேன் என்று கோடரியை வைத்துக் கொண்டு உடைக்கத் தொடங்கினானாம் அந்தக் கிழவன். “அட முட்டாளே ஒண்டி ஆளாய் மலையை யாராவது உடைக்க முடியுமா?” என்று அவனைக் கேலி செய்தானாம் அந்த ஊரிலிருந்த ஒரு புத்திசாலிக் கிழவன்.

முட்டாள் கிழவன் சொன்னானாம், “நான் உடைப்பேன், நான் செத்த பிறகு என் பிள்ளைகள் உடைப்பார்கள், பிறகு பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரன்கள் என்று உடைத்துக் கொண்டே இருப்போம். என் சந்ததி வளரும், ஆனால் இந்த மலை வளராது. எனவே நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூறி உடைக்கத் தொடங்கினானாம். அவனுடைய விடாமுயற்சியைக் கண்டு மனமிரங்கிய இரண்டு தேவதைகள் வானத்திலிருந்து இறங்கி வந்து அந்த மலைகளைத் தம் முதுகில் தூக்கிக் கொண்டு பறந்து விட்டார்களாம்.

இந்த நீதிக்கதையை சீனக் கம்யூனிஸ்டுகளுக்குக் கூறிய மாவோ, “ஏகாதிபத்தியமும் நிலப்பிரபுத்துவமும்தான் நம் நாட்டை அழுத்திக் கொண்டிருக்கும் மலைகள். சீன மக்கள்தான் நம் தேவதைகள். கம்யூனிஸ்டுகளாகிய நாம் விடாப்பிடியாக உழைத்தால் மக்கள் எனும் தேவதைகளின் மனதைத் தொடுவோம். மக்கள் நம்முடன் இணைந்தால் அடுத்த கணமே இந்த மலைகளை நாம் தூக்கி எறிந்துவிட முடியும்”  என்றார்.

அந்தச் சீனத்துப் புனைகதையை நிஜமாக்கியிருக்கிறான் ஒரு வீரக்கிழவன். 22 ஆண்டுகள்  ஒற்றை மனிதனாக நின்று ஒரு மலைக்குன்றையே உடைத்து 60 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பாதை அமைத்துக் கொடுத்த தசரத் மான்ஜி என்ற மாவீரர் சென்ற ஆகஸ்டு மாதம் மறைந்து விட்டார். வாழ்ந்த காலம் வரை அந்த 74 வயதுக் கிழவனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்திருக்கிறது.

இது ஒரு மாமனிதனின் கதை. ஒரு மலையையும், அதனைக் கண்டு மலைத்து நின்ற மக்களின் மனத்தையும் தன்னந்தனியனாக நின்று வென்று காட்டிய ஒரு மாவீரனின் கதை.

பீகாரின் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாயக் கூலி. தாழ்த்தப்பட்ட சாதிகளில் ஆகக் கடைநிலைச் சாதியான முசாகர் சாதியில் பிறந்தவர். அறுவடைக்குப் பின் நிலத்தில் உள்ள எலி வளைகளைத் தோண்டி அதில் மிச்சமிருக்கும் தானியங்களைத் துழாவி எடுத்து வயிறு கழுவுவது அந்தச் சாதிக்கு விதிக்கப்பட்ட தொழில். அந்தத் தானியமும் கிடைக்காத காலங்களில் எலியும் பெருச்சாளியும்தான் அவர்களுடைய உணவு.

1959ஆம் ஆண்டில் ஒரு நாள். அப்போது தசரத்திற்கு வயது 24. கூலி வேலை செய்து கொண்டிருந்த அவருக்கு  மலையின் மறுபுறத்திலிருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்த அவர் மனைவி பாகுனி தேவி மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தாள். மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்வதற்குள் உயிர் பிரிந்தாள். ஒரு பாதை மட்டும் இருந்திருந்தால்….?

கோடிக்கணக்கான இந்தியக் கிராம மக்கள் நாள்தோறும் அனுபவித்து வரும் இந்தத் துயரம் தசரத் மான்ஜியின் நெஞ்சில் ஒரு தீக்கனலாய் உருமாறியது. அந்த மலைக்குன்றைப் பிளந்து, 25 அடி உயரம், 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் வரை அந்தக் கனல் அவியவில்லை.

தனி ஒருவனாக நின்று இத்தகைய சாதனையை நிகழ்த்திய வீரனை மனித குல வரலாறு இதுவரை கண்டதில்லை. “மலையை உடைக்கப் போகிறேன்” என்று கையில் உளியையும் சுத்தியலையும் எடுத்த தசரத்தை ‘வரலாறு படைக்க வந்த மாவீரன்’ என்று மக்கள் கொண்டாடவில்லை. ‘பைத்தியம்’ என்று அவரை அலட்சியப்படுத்தினார்கள் கிராமத்து மக்கள். கேலி செய்தார்கள் விடலைகள்.

அந்த மக்களுடைய கண்களைப் பாறை மறைத்தது. தசரத்தின் கண்ணிலோ பாறை தெரியவில்லை. அவர் உருவாக்க விரும்பிய பாதை மட்டும்தான் தெரிந்திருக்கிறது. மலை கரையத் தொடங்குவதைப் பார்க்கப் பார்க்க மக்களின் மனமும் மெல்லக் கரையத் தொடங்கியது. மக்கள் சோறு கொடுத்தார்கள், உளியும் சுத்தியலும் செய்து கொடுத்தார்கள். அந்தக் கிராமத்தின் பெண்களோ, மனைவி மீது கொண்ட காதலுக்காக மலையுடன் மோதத்துணிந்த இந்த ஆண்மகன் மீது மரியாதை கொண்டார்கள்.

22 ஆண்டுகள் தவமிருந்து செதுக்கி, அந்தப் பாறைக்குள் இருந்து பாதையை வடித்தான் தசரத் என்ற அந்த மாபெரும் சிற்பி. இது ஒரு மன்னன் தன் காதலுக்காக ஆள் வைத்துக் கட்டி எழுப்பிய தாஜ்மகால் அல்ல. ஒரு அடிமை தன் சொந்தக் கரத்தால் வடித்த காதல் சின்னம்.

ஆனால் “இது என் மனைவிக்கான காதல் சின்னமில்லை” என்று மறுக்கிறார் மான்ஜி.  “அன்று அவள் மீது கொண்ட காதல்தான் இந்தப் பணியில் என்னை இறக்கியது. இருப்பினும், ஆயிரக்கணக்கான என் மக்கள் கவலையின்றி இந்த மலையைக் கடந்து செல்வதைக் காணவேண்டும் என்ற ஆசை தான் அந்த 22 ஆண்டு காலமும் என்னை இயக்கியது” என்கிறார் மான்ஜி.

அன்று 50 கி.மீ தூரம் சுற்றிக் கொண்டு நகரத்துக்குச் சென்று கொண்டிருந்த 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று பத்தே கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் மூன்றே கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள்.

தேவதைகளின் கருணையையோ அரசின் தயவையோ எதிர்பார்க்காத அந்த மூடக்கிழவன் 1981 இலேயே மலையைக் குடைந்து பாதையை அமைத்துவிட்டான். எனினும் இப்படி ஒரு அதிசயத்தை அறிந்த பின்னரும், அந்தப் பாதை அமைக்கப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதன்மீது ஒரு சாலை போடுவதற்கு இந்த அரசால் முடியவில்லை.

தங்களிடம் அனுமதி பெறாமல் மலையைப் பிளந்திருப்பதால் அதில் சாலை அமைக்கக் கூடாதென்று அனுமதி மறுத்திருக்கிறது வனத்துறை. தசரத் மான்ஜியின் பெயர் பத்ம பூஷண் விருதுக்குச் சிபாரிசு செய்யப்பட்ட போது, “அவர் தனி ஆளாகத்தான் அந்த மலையைப் பிளந்தார் என்பதற்கு ஆதாரமில்லை” என்று கூறி முட்டுக்கட்டை போட்டிருக்கிறது பீகாரின் அதிகார வர்க்கம்.

1981இல் இத்தகையதொரு மாபெரும் சாதனையை நிகழ்த்திய பின்னரும் கடந்த 26 ஆண்டுகளாகக் கூலி வேலை செய்துதான் வயிற்றைக் கழுவியிருக்கிறார் மான்ஜி. “இரவு பகலாக சாமி வந்தவரைப் போல அவர் இந்த மலையைக் கொத்திக் கொண்டிருப்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். 22 ஆண்டுகளாக எங்கே போயிருந்தது இந்த வனத்துறை?” என்று குமுறி வெடிக்கிறார்கள் கிராமத்து இளைஞர்கள்.

தசரத் மான்ஜியோ இவையெதையும் பொருட்படுத்தவில்லை. “நான் என்ன செய்தேன் என்பது மக்களுக்குத் தெரியும்.. இந்த அரசாங்கம் என்னை தண்டிக்க நினைத்தால் அதற்கு நான் அஞ்சவும் இல்லை. அவர்கள் விருது கொடுப்பார்கள் என்று நான் ஏங்கவும் இல்லை. என் உயிர் இருக்கும் வரை இந்தக் கிராமத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவேன். அவ்வளவுதான்” அவரது உளியில் பட்டுத்தெறித்த பாறைத் துகள்களைப் போலவே, மிகவும் அலட்சியமாகத் தெறித்து விழுகின்றன சொற்கள்.

மான்ஜியின் உளி பட்டுத் தெறித்துப் பிளந்து கிடக்கும் அந்தக் கற்பாறை ஒரு நினைவுச்சின்னம். மரணத்துக்குப் பின்னும் அந்த மாவீரனை மதிக்கத் தவறிய இந்த அரசின் இரக்கமற்ற இதயத்துக்கு இது நினைவுச்சின்னம்  அதில் எந்த ஐயமும் இல்லை.

அதே நேரத்தில்  22 ஆண்டுகள் ஒரு  மலையோடு தன்னந்தனியனாக ஒரு மனிதன் மோதிக்கொண்டிருக்க, அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த  இந்தச் சமூகத்தின் பாறையை விஞ்சும் ‘மன உறுதி’க்கும் இதுதான் நினைவுச்சின்னம்.

உணவும் தண்ணீரும், உளியும் சுத்தியலும் வழங்கினார்கள் மக்கள். உண்மைதான். ஆனால் அவற்றைத் தவிர வேறு எதையும் அந்தப் பாதையால் பயனடையப்போகும் மக்கள் அவருக்கு வழங்கியிருக்க முடியாதா? தசரத் மான்ஜியுடன் கைகோர்த்திருக்க முடியாதா? மலையைப் பிளந்து பாதையைத் திறந்து காட்டிய அந்தத் தருணம் வரை  “இவன் மூடனல்ல  வீரன்” என்னும் உண்மையை அந்த மக்களால் புரிந்து கொள்ள இயலவில்லையா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண எண்ணும்போது  நெஞ்சம் நடுங்குகிறது.

நூற்றாண்டுகளாய்ப் புதுப்பிக்கப்படும் அடிமைப் புத்தியும், சாதுரியமான விதிவாதமும், கபடம் கலந்த கருணையும் செயலின்மையில் பிறந்த இரக்கமும், அம்மணமான காரியவாதமும் சேர்ந்த கலவையால் உருவாக்கப்பட்டிருக்கிறது மக்களின் ‘புறக்கணிப்பு’ என்னும் பாறை. இந்தப் பாறையை உளியும் சுத்தியலும் கொண்டு பிளக்க முடியாது. கரைக்க மட்டுமே முடியும் என்ற உண்மையை உணர்ந்து வைத்திருந்த அந்த எளிய மனிதனின் அறிவை எண்ணும் போது வெட்கம் வருகிறது.

மக்களின் புறக்கணிப்பு எனும் அந்தப் பாறையை நெஞ்சில் சுமந்தபடி, தன்னுடைய உளிச் சத்தத்திற்கு அந்த மலைத்தொடர் வழங்கிய எதிரொலியை மட்டுமே  தன் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாய்ப் பருகி, உத்வேகம் பெற்று,  22 ஆண்டுகள் இயங்கியிருக்கிறார் தசரத் மான்ஜி. இந்த வீரத்தின் பரிமாணம் நம்மைப் பிரமிக்கச் செய்கிறது. சேர்ந்து ஒரு கை கொடுக்க தன் மக்கள் வரவில்லையே என்ற ஏக்கமின்றி, கசப்பு உணர்ச்சியின் சாயல் கடுகளவுமின்றி, நிபந்தனைகள் ஏதுமின்றி சாகும்வரை தன் மக்களை நேசித்திருக்கிறானே, அந்தக் காதல் நம்மைக் கண் கலங்கச் செய்கிறது.

சீனத்துக் கிழவனைப் போல ‘என்றோ ஒரு நாள் இந்த மலை அகன்றே தீரும்’ என்று தன் நம்பிக்கையைக் கனவில் பிணைத்து வைக்கவில்லை தசரத் மான்ஜி. தான் வாழும் காலத்திலேயே கனவை நனவாக்கும் உறுதியோடுதான் உளியைப் பற்றியிருக்கிறது அவனுடைய கரம். உளியின் மீது இறங்கிய சுத்தியலின் ஒவ்வொரு அடியும் ‘இன்றே.. இன்றே’ என்று அந்த மலையின் மரணத்திற்கு நாள் குறித்திருக்கிறது.

உணவுக்கும் ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் நேரம் ஒதுக்கி,  ‘இத்தனை ஆண்டில் இந்தப் பணி முடிப்போம்’ என்று திட்டம் போட்டுச் செயலாற்றும் ‘திறமை’யெல்லாம் எலி பிடிக்கும் சாதியில் பிறந்த அந்த ஏழை மனிதனுக்கு இல்லை.

“என்று வருமோ புரட்சி … இன்று எதற்கு இழக்கவேண்டும், இயன்றதைச் செய்வோம்” என்று சிந்திக்கும் படித்த வர்க்கத்தின்  புத்திசாலித்தனத்தை எள்ளி நகையாடுகிறது எழுத்தறிவற்ற அந்தக் கிழவனின் மடமை. ‘இயலாததை’ச் செய்யத் துணிந்த அந்தக் கிழவனின் வீரம், இயன்றதைச் செய்ய எண்ணும் நம் சிந்தனைக்குள் பாசியாய்ப்  படர்ந்திருக்கும் கோழைத்தனத்தைப் பிதுக்கி வெளிக்காட்டுகிறது.

விவரக்கணைகளால் துளைக்க முடியாமல் நம்மில் இறுகியிருக்கும் எதிரிகளின் வலிமை குறித்த மலைப்பை,  அந்தக் கிழவனின் கை உளி எழுப்பிய இசை, அநாயாசமாகத் துளைத்துச் செல்கிறது.

மக்கள் மீது கொண்ட காதலில் தோய்ந்து தன் இளமையைக் கொண்டாடிய அந்தக் கிழவனின் வாழ்க்கை, நம் இளைஞர்களுக்குக் காதலைப் புதிதாய்க் கற்றுக் கொடுக்கிறது.

ஒரு பாறை, ஒரு உளி, ஒரு சுத்தியல், ஒரு கிழவன்  ஒரு வாழ்க்கை. பீகாரின் சுட்டெரிக்கும் வெயில், எலும்பைத் துளைக்கும் நள்ளிரவின் குளிர். அந்த உளியின் ஓசை, தொலைவில் ஒலிக்கும் அவலக் குரலாய் நம்மை ஈர்க்கிறது. நெருங்க நெருங்க கனத்துக் கவியும் சோக இசையாய் அழுத்துகிறது. அந்தக் கணமே  ஒரு அறைகூவலாய் மாறி நம்மைச் செயலுக்கு  இழுக்கிறது.  தேவதைகளின் இதயத்தை இளக்கி,  கருணையைப் பிழிந்தெடுத்த அந்தக் கிழவனின் ஆவி மெல்ல நம்மை ஆட்கொள்ளத் தொடங்குகிறது.

( http://www.vinavu.com/2008/12/16/manji/)தனி ஒருவனாக நின்று இத்தகைய சாதனையை நிகழ்த்திய வீரனை மனித குல வரலாறு இதுவரை கண்டதில்லை. “மலையை உடைக்கப் போகிறேன்” என்று கையில் உளியையும் சுத்தியலையும் எடுத்த தசரத்தை ‘வரலாறு படைக்க வந்த மாவீரன்’ என்று மக்கள் கொண்டாடவில்லை. ‘பைத்தியம்’ என்று அவரை அலட்சியப்படுத்தினார்கள் கிராமத்து மக்கள். கேலி செய்தார்கள் விடலைகள்.
முன்னொரு காலத்தில் சீனத்தில் ஒரு கிழவன் இருந்தானாம். வடக்கு மலையின் மூடக்கிழவன் என்று அவனுக்குப் பெயர். அவனுடைய வீட்டின் வாசலை மறைத்து நின்ற இரு பெரும் மலைகளை உடைத்து

இலங்கையில் தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கப்படவேண்டும்!- மத்திய பிரதேஸ் முதலமைச்சர்
இலங்கையில் தமிழர்கள்> சிங்களவர்களுக்கு இணையாக நடத்தப்படவேண்டும் என்பதே தமது எதிர்ப்பார்ப்பாகும் என்று மத்திய பிரதேஸ் முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சௌஹான் வலியுறுத்தியுள்ளார்

பொங்கு தமிழ் நிகழ்வையொட்​டி ஜெனீவா நவநீதம்பிள்​ளையின் அலுவலக உயரதிகாரிக​ளிடம், தமிழர் பிரதிநிதிகள் மனு கையளிப்பு
இன்று நடைபெறவிருக்கும் "எமது நிலம் எமக்கு வேண்டும் " மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வையொட்டி நேற்று ஜெனீவா ஐக்கிய நாட்டு சபை மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின்  காரியாலயத்தில் உயரதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்ட

வைகோவை கைது செய்த மத்திய பிரதேச பொலிஸார், அவரை விடுவித்து மாலை அணிவித்து மரியாதை!
மஹிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிந்த்வாராவில் 3 நாட்களாகப் போராட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் மத்திய பிரதேசப் பொலிஸார் கைது செய்து,பின்னர் விடுதலை செய்தது மட்டுமல்லாது பொலிஸார் வைகோவிற்கு மாலை அணிவித்து

தமிழ் கூட்டமைப்பின் ஆலோசனை நிறுவனத்தினுள் ஊடுருவியுள்ள இலங்கை புலனாய்வு அதிகார

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஆலோசனை நிறுவனத்தினுள், இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரிகேடியர் றிஸ்வி சக்கி ஊடுருவியுள்ளது, தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

300 படகுகளில் வந்து கடற்கரை வழியாக தூத்துக்குடி துறைமுகம் முற்றுகை
கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்செப்டம்பர் 22ம் தேதியான இன்று தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மத்திய அமைச்சர்கள் ராஜினாமா

இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வெள்ளிக் கிழமையன்று பிரதமரிடம் ராஜினாமா கடிதத்தை அளிப்பார்கள் என்று அக்கட்சியின் தலைவர் மமதா பேனர்ஜி
வைகோ உட்பட மதிமுக.வினர் 1200 பேர் கைதாகி விடுதலை
மத்திய பிரதேச மாநிலத்திற்குள் நுழைய முயன்ற மதிமுக கட்சியின் தலைவர் வைகோ உட்பட 1200 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து மத்திய பிர
LIVE

England innings (20 overs maximum)

சாஞ்சியில் குண்டுதுளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் நின்று மகிந்த ராஜபக்ச உரை
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், சாஞ்சியில் இன்று நடைபெற்ற பௌத்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்றுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் , பொதுச் செயலாளரின் வாகனங்கள் மீது தாக்குதல்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மஹிந்தவுக்கு கறுப்பு கொடி: போபாலுக்குள் புகுந்தனர் ம.தி.மு.க. தொண்டர்கள்
கடும் எதிர்ப்பு மற்றும் பதட்டத்துக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியை அடைந்தார் ராஜபக்ஷ. இதன்போது ராஜபக்ஷவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மத்தியப் பிரதேச மாநில அரசு மற்றும் பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு பெரும் திரளான ம.தி.மு.க.வினர் போபால் நகருக்குள் புகுந்து கொண்டனர். இருப்பினும் அவர்கள் மேற்கொண்டு சாஞ்சிக்குப் போய் விடாதபடி அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 செப்., 2012


LIVE SCORE
England 196/5 (20/20 ov)
Afghanistan 75/9 (16.3/20 ov)

New Zealand 191/3 (20/20 ov)
Bangladesh 132/8 (20.0/20 ov)
New Zealand won by 59 runs
வங்கதேச அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கையில் நடைபெற்று வரும் 4வது டி20 உலகக் கிண்ணத் தொடரின் 5வது லீக் போட்டியில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இன்று மோதின.

உலகத் தமிழர்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்;
ராஜபக்சே விரிக்கும் வஞ்சக வலையில் விழுந்துவிட வேண்டாம்; கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்திலே உள்ள ஆளுங்கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக்கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதையும், அவருக்கு இங்கே வரவேற்பு கொடுப்பதையும்,

தமிழகத்திற்கு வந்த சிங்களர்கள் - தமிழுணர்வாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
19.09.2012 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழகத்தின் பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை எதிர்த்து யுத்தம் விரும்பா புத்தன் பூமியில் ரத்தம் குடித்த

திரும்பிப் போ திரும்பிப் போ சிங்கள இனவெறியன் இராஜபக்சேவே திரும்பிப் போ :
திருமாவளவன் ஆர்ப்பாட்டம் 
மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ள சிங்கள இனவெறியன் இராஜபக்சேவைக் கண்டித்தும், 

செய்தி 0 8



மஹிந்த ராஜபக்‌ஷ மத்திய பிரதேச விழாவில் பாங்கேற்பு! வைகோ கைது! சாகர் சிறையில் அடைப்பு!
மஹிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப்பிரதேச எல்லையில் தமது கட்சியினருடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட அக்கட்சித் தொண்டர்கள் 750 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் ஆப்ரிக்கா 10 விக்கட்டுகளினால் வெற்றி - மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே
டுவென்டி- 20 உலக கிண்ண போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சி பிரிவில் உள்ள தென் ஆப்ரிக்கா- ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

    சுவிட்சர்லாந்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா 

                   '''பண் உடைந்து போன  கடலாள் '''

எங்கள் மண்ணின் படைப்பாளி பாலகணேசனின் கவிதை ஓலை 
உங்கள்  உள்ளத்து    உணர்வை      உரக்க   கொடுக்க   ஓர்   வேளை  

சுவிஸ் பீல் நகரத்தில் எதிர்வரும் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு


   இடம். Buendenweg 21,2503 Biel ,Switzerland .  T.P. No 079 398 28 19 ,  032 365 32 40


                                                      அன்போடு வரவேற்கும் பீல் மதி 


ராஜபக்சே வருகையை எதிர்த்து ரயில் மறியல் (படங்கள்)
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் தமிழ்நாதன், பெரியரசு ஆகியோர் தலைமையில் திருச்சி ரயில்வே ஜென்ஷனில் உள்ள 3வது பிளாட் பாரத்தில் ரயில் மறிய-ல் ஈடுபட்டனர். ரயில் மறிய-ல் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான கமலா ரணதுங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமீர் அலிக்கு தேசியப் பட்டியலில் இடம்கொடுத்து பிரதியமைச்சர் பதவியொன்றினை பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த ராஜினாமா

ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இடையில் சற்றுமுன்னர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு ஐ.நா. தலைமையக காரியாலயத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, பாதுகாப்பு வலையத்திற்குள் இருக்கும் காணி தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக மறுபடி குடியேற முடியாமை காரணமாக வலிகாமம் மற்றும் சாம்பூர் பகுதிகளின் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள்,


பிரிட்டனில் புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையர்கள் மீது கட்டுநாயக்கவில் விசாரணை
பிரித்தானியாவில் புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையர்கள் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பிரணாப், மன்மோகனுடன் மகிந்த சந்திப்பு!- மன்மோகன் தனது இல்லத்தில் இரவு விருந்தளித்தார்
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை இன்று வியாழக்கிழமை மாலை சந்தித்தார்.
.மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை நீதிமன்றத்தின் மேல் ஏறி மாணவர்கள் தற்கொலை மிரட்டல்
லங்கை ஜனாதிபதி மகிந்த  ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் இருவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய போத்தலுடன்  ஏறி நின்று தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர்

கிழக்கு மாகாணத்தில் சிங்களவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமை சிறுபான்மையினருக்கு விடுக்கப்படும் சவால்: துரைரெட்ணம்
கிழக்கு மாகாண சபையில் புதிதாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமை 13ஆவது திருத்தச்சட்டம் மூலமாக சிறுபான்மைச் சமூகத்தினருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின்

மத்திய பிரதேச எல்லையில் வைகோ இரவிரவாக தரையில் அமர்ந்து போராட்டம்! சுட்டெரிக்கும் வெயிலிலும் தொடர்கிறது!
[ வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர் 2012, 06:18.03 AM GMT ]
இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடத்தச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய பிரதேச எல்லையில் தொண்டர்களுடன் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், நேற்று இரவிலிருந்து தரையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றார்.
மத்திய பிரதேச மாநிலம், ராய்சென் மாவட்டம் சாஞ்சியில் புத்த மற்றும் இந்திய அறிவுசார் கல்வி பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது.சுமார் ரூ.200 கோடி செலவில் அமைய உள்ள இந்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது.
இவ்விழாவில் கலந்துகொள்ள ராஜபக்ச நேற்று டெல்லி வந்துவிட்டார்.
இந்நிலையில், ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழா நடக்கும் சாஞ்சியில் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார்.
இதற்காக, அவர் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் கடந்த 17-ம் தேதி சென்னையில் இருந்து 21 பஸ்களில் சாஞ்சி புறப்பட்டுச் சென்றார்.
நேற்று வைகோவும், அவருடன் சென்ற 750 தொண்டர்களும் மத்திய பிரதேச எல்லையான பட்சிரோலி நகரை சென்றடைந்தனர்.
ஆனால் பாதுகாப்பு கருதி அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2000 க்கும் அதிகமான பொலிஸார் அவர்களை மேலும் முன்னேறவிடாமல் அங்கேயே தடுத்து நிறுத்தினார்கள்.
நாங்கள் இந்திய குடிமக்களா இல்லையா? எங்களை தடுத்து நிறுத்திவிட்டு கொலைகாரன் ராஜபக்சவை வரவேற்கிறீர்களா..? என்று கோசத்துடன் பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைகோ, நடுரோட்டில் அமர்ந்தபடியே தனது போராட்டத்தை இரவு முழுவதும் தொடர்ந்தார்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வைகோவின் போராட்டத்துக்கு பட்சிரோலி பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இரண்டாம் இணைப்பு
ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நடுரோட்டில் தூங்கி, சுட்டெரிக்கும் வெயிலிலும் போராடும் வைகோ!
ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநில எல்லையில் நடுரோட்டில் அமர்ந்து வைகோ போராட்டம் மேற்கொண்டுள்ளார். விடிய விடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராடிய வைகோ, தற்போது சுட்டெரிக்கும் வெயிலிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தமத கல்வி நிலைய தொடக்க விழாவில் பங்கேற்க டில்லி வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரது கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் மத்தியப் பிரதேசத்திற்கு பேருந்துகளில் சென்றனர்.
இவர்கள் மகாராஷ்டிரம்- மத்தியப் பிரதேச எல்லையில் உள்ள பந்துர்னா என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து அதே இடத்தில் மாலை 4.30 மணி முதல் நடு ரோட்டில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், போராட்டத்தைக் கைவிட்டு திரும்பிச் செல்லுமாறு கூறினர். மத்தியப் பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை தொடர்பு கொண்டு, போராட்ட முடிவைக் கைவிட்டு திரும்பிச் செல்லுமாறு கோரிக்கை வைத்தார்.

20 செப்., 2012


முஸ்லிம் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலக ஆயத்தம்?
கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பதவிகளை வழங்கும் போது சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகுவதற்கு ஆயத்தமாகி

மஹிந்தவின் வருகையை எதிர்த்து தமிழகத்தில் ரயில் மறியல்! 2000 க்கு மேற்பட்டோர் கைது!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து, தமிழக அரசியல் கட்சிகள் இன்று பரவலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. இதன்போது 2000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்துள்ளதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை வீரர் அஜந்த மென்டிஸ் புதிய உலக சாதனை
இலங்கை ஹ‌ம்ப‌ாந்தோட்டையில் நே‌ற்‌றிரவு நட‌ந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் இல‌ங்கை அ‌ணி ஜிம்பாப்வே அ‌ணியுட‌ன் ‌விளையாடிது.
ஜிம்பாப்வேயை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக கோப்பை  ஆட்டத்தில் இந்தியா வெற்றி
இலங்கையில் நடந்து வரும் 4-வது உலககோப்பை தொடரின் மூன்றாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியும், ஆப்கானிஸ்தான்
அயர்லாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா
அயர்லாந்து அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் லீக் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கம்பஹா மாவட்டத்திலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்
வத்தளை, நீர்கொழும்பு, களனி, ஜா-எல, கட்டானை ஆகிய பல்வேறு வட்டாரங்கள் கம்பஹா மாவட்டத்துக்குள் வருகின்றன. குறிப்பாக வத்தளை, நீர்கொழும்பு ஆகிய வட்டாரங்களில் தமிழர்கள்

அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப் பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த 132 கைதிகள், சுரங்கம் தோண்டி தப்பியோடியது தெரியவந்துள்ளது.
தப்பியோடிய கைதிகளை பொலிஸாரும், இராணுவத்தினரும் தேடி வருகின்றனர்.
மெக்சிகோ-அமெரிக்கா நாடுகளின் எல்லை பகுதியில் உள்ள நகரம் பீட்ராஸ் நெக்ராஸ். இங்கு உள்ள
சகோதரனுக்காக பதவியை இராஜினாமா செய்யும் எஸ்.எம்.சந்திரசேன
கமநல மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் (IUSF) சஞ்சீவ பண்டார கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இறுதி ஊர்வலத்திற்கு பின் விஜயராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது


ராஜபக்சே வருகையை கண்டித்து தீக்குளித்து  இறந்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மதியம் போஸ் மைதானத்திற்கு உடல் கொண்டுவரப் பட்டது


தீக்குளித்த இடத்திலேயே விஜயராஜின் உடலுக்கு  பொதுமக்கள் அஞ்சலி
சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜ், ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு கண்டனம் தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்தார்.    அவரின் உடலை போஸ்ட்மார்டம் செய்யக்கூடாது என்றும்

மகிந்த வருகையை எதிர்த்து இலங்கைத் தூதரகத்தை முற்றுகையி​டும் போராட்டம்! திருமாவளவன் அறிவிப்பு
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் வருகையை எதிர்த்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் இலங்கைத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடும் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்

முதலமைச்சர் பதவி கிடைக்காதது ஏன்? விளக்குகிறார் சிவநேசத்துரை சந்திரகாந்தன்
கிழக்கு மாகாண முதலமைச்சராக மீண்டும் தான் வரமுடியாது என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தன்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததாக முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணை. ஏமாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் சுயநல தலைமைகள.!
கடந்த மாகாணசபை தேர்தல் களத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கொடுத்த வாக்குறுதிகளும் அவரது கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் அரசாங்கத்தை விமர்சித்து தனித்து போட்டியிட்டதனால்தான் இவ்வளவு ஆசனங்களையேனும் பெறமுடிந்தது.

பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 60 இலங்கையர் இன்று திருப்பி அனுப்பப்படுகின்றனர்
பிரிட்டனில் இருந்து சுமார் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மற்றும் விசா காலம் முடிந்த பின்னும் இங்கு தங்கிய போன்ற பலதரபட்டவர்கள் அடங்கிய சுமார் 60 பேர் இன்று பிற்பகல் பிரிட்டிஷ் எல்லை நிறுவன

19 செப்., 2012


ராஜபக்சேக்கு கறுப்பு கொடி காட்ட 15-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ம.தி. மு.க. / வைகோ சாஞ்சி பயணம்.

போர்க்குற்றவாளி ராஜபக்சே வருகிற 21-ந்தேதி மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி நகருக்கு வருகிறார். அங்கு நடைபெறும் புத்த பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு ...See More
Photo: ராஜபக்சேக்கு கறுப்பு கொடி காட்ட 15-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ம.தி. மு.க. / வைகோ சாஞ்சி பயணம்.

போர்க்குற்றவாளி ராஜபக்சே வருகிற 21-ந்தேதி மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி நகருக்கு வருகிறார். அங்கு நடைபெறும் புத்த பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார். ராஜபக்சே இந்தியா வருகைக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சாஞ்சி நகரில் ராஜபக்சேவுக்கு எதிராக வைகோ தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ம.தி. மு.க. அறிவித்தது.

இந்த போராட்டத்தை கைவிடும் படி மத்திய பிரதேச முதல்- மந்திரி சிவராஜ்சிங் சவுகான் வைகோவை கேட்டுக் கொண்டார். ஆனால் வைகோ மறுத்து விட்டார். திட்டமிட்டப்படி 21-ந் தேதி சாஞ்சி நகரில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இன்று பிற்பகலில் சென்னை அண்ணா சமாதி முன்பிருந்து 15-க்கும் மேற்பட்ட பஸ்களில் வைகோ தலைமையில் தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர். அனைவரும் கறுப்பு கொடிகளுடன் சென்றனர். 21-ந்தேதி சாஞ்சியில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேசத்தில் நடக்க இருக்கும் கறுப்புக் கொடி ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்ற வைகோ, வழியில் ஹைதராபாத் அருகே உள்ள சூரிய ஜெய் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய போது..
Photo: இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேசத்தில் நடக்க இருக்கும் கறுப்புக் கொடி ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்ற வைகோ, வழியில் ஹைதராபாத்  அருகே உள்ள சூரிய ஜெய் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய போது..

கொடியவன் இராஜபக்ஷ-வை விரட்டி அடிக்க வைகோ உடன் சென்றிருக்கும் மகளிர் அணியினர் நாக்பூர் சட்டமன்ற உறுப்பினர் விடுதி முன்பு..
கொடியவன் இராஜபக்ஷ-வை விரட்டி அடிக்க வைகோ உடன் சென்றிருக்கும் மகளிர் அணியினர் நாக்பூர் சட்டமன்ற உறுப்பினர் விடுதி முன்பு..
Photo: கொடியவன் இராஜபக்ஷ-வை விரட்டி அடிக்க வைகோ உடன் சென்றிருக்கும் மகளிர் அணியினர் நாக்பூர் சட்டமன்ற உறுப்பினர் விடுதி முன்பு..

மகாராஷ்டிரா எல்லையில் இருந்து மத்திய பிரதேசத்தில் ஐந்து கிலோ மீட்டர் நுழைந்தபின் வைகோவும் மதிமுகவினரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். 
இரண்டாயிரம் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு தடுக்கப்பட்ட பின் வைகோவும் மதிமுகவினரும் சாலைகளில் மூன்று மூன்று ந
பர்களாக மனிதசங்கிலியாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். காவல்துறை கைது செய்து திருமண மனடபங்களுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தவுடன் வைகோ அவர்கள் அதை மறுத்து தங்களை கைது செய்வதாக இருந்தால் சிறைசாலைகளுக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்று வாதாடி இருக்கிறார். இதற்கு இடையில் தலைவர் வைகோ அரைமணி நேரம் ஆங்கிலத்தில் வட இந்திய ஊடகங்களுக்கு ராஜபக்ஷே பற்றியும் ஈழத்தை பற்றியும் விரிவாக பேட்டி அளித்து இருக்கிறார். இதை அடுத்து வந்த மாவட்ட ஆட்சி தலைவரும் வைகோவுடன் பேசி திருமண மண்டபத்து செல்ல வலியுறுத்தியும் வைகோ மறுத்து திருமண மண்டபத்துக்கு சென்றாலும் அங்கு இருந்தும் எங்கள் ஆர்ப்பாட்டம் தொடரும். ஒன்று எங்களை ஜனநாயக வழியல் கருப்பு கொடி காட்ட அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் எங்களை சிறைக்கு அழைத்து செல்லவும் என்று மறுத்து தொடர்ந்து தங்கள் போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். நாக்பூர் - போபால் தேசிய நெடுஞ்சாலையில் பிற்பகலில் இருந்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் வைகோவின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஒரு சிறு வன்முறை கூட நிகழாமல் போராட்டத்தை தொடர்ந்து கொண்டு இருப்பதை பார்த்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் நமது போராட்டத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள்.
Photo: மகாராஷ்டிரா எல்லையில் இருந்து மத்திய பிரதேசத்தில் ஐந்து கிலோ மீட்டர் நுழைந்தபின் வைகோவும் மதிமுகவினரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இரண்டாயிரம் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு தடுக்கப்பட்ட பின் வைகோவும் மதிமுகவினரும் சாலைகளில் மூன்று மூன்று நபர்களாக மனிதசங்கிலியாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். காவல்துறை கைது செய்து திருமண மனடபங்களுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தவுடன் வைகோ அவர்கள் அதை மறுத்து தங்களை கைது செய்வதாக இருந்தால் சிறைசாலைகளுக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்று வாதாடி இருக்கிறார். இதற்கு இடையில் தலைவர் வைகோ அரைமணி நேரம் ஆங்கிலத்தில் வட இந்திய ஊடகங்களுக்கு ராஜபக்ஷே பற்றியும் ஈழத்தை பற்றியும் விரிவாக பேட்டி அளித்து இருக்கிறார். இதை அடுத்து வந்த மாவட்ட ஆட்சி தலைவரும் வைகோவுடன் பேசி திருமண மண்டபத்து செல்ல வலியுறுத்தியும் வைகோ மறுத்து திருமண மண்டபத்துக்கு சென்றாலும் அங்கு இருந்தும் எங்கள் ஆர்ப்பாட்டம் தொடரும். ஒன்று எங்களை ஜனநாயக வழியல் கருப்பு கொடி காட்ட அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் எங்களை சிறைக்கு அழைத்து செல்லவும் என்று மறுத்து தொடர்ந்து தங்கள் போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். நாக்பூர் - போபால் தேசிய நெடுஞ்சாலையில் பிற்பகலில் இருந்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் வைகோவின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஒரு சிறு வன்முறை கூட நிகழாமல் போராட்டத்தை தொடர்ந்து கொண்டு இருப்பதை பார்த்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் நமது போராட்டத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள்.










அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவின் மனமத லீலைகளை காட்டக் கூடிய ஒரு தொகை புகைப்படங்கள் சிங்கள இணையங்கள் பலவற்றிலும் வெளியாகி உள்ளன.
இராணுவ மேயர் ஒருவரை கடந்த வாரம் அடித்தமையையை தொடர்ந்து மாலக சில்வா குறித்த பரபரப்பு, விறுவிறுப்புச் செய்திகளுக்கு சிங்கள வாசகர்கள் மத்தியில் பெரிய மவுசு ஏற்பட்டு உள்ளது.

18 செப்., 2012



ஆரம்பமாகிறது உலகக் கிண்ண இருபது20 சமர்: முதல் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது சிம்பாப்வே
 

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபது20 உலகக்கிண்ண கிரிக்கெட் சமர் இன்று இலங்கையில் ஆரம்பமாகின்றது. ஆடவர் மற்றும் மகளிருக்கான இந்த உலகக்கிண்ணத் தொடரில்
முஸ்லிம் காங்கிரஸ் பணத்துக்கும் பதவிக்கும் பேரினவாதத்திடம் அடகு வைத்து விட்டது என உலமாக் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளர். 
கிழக்கு மாகாண சபையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டுள்ளாராயினும் முஸ்லிம் மக்களின் உரிமைகளைக் காட்டி சமூகத்தை ஏமாற்றிய
பிள்ளையான், பயங்கரவாதம் சம்மந்தமான ஆலோசகரா?: ஐ.தே.க கேள்வி
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்காக ஜனாதிபதி முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ள அதேவேளை 52 முஸ்லிம்களை படுகொலை செய்த முன்னாள் முதல்வர் பிள்ளையானை தனது
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளை புதன்கிழமை இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சி பௌத்த நிலையத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் அங்கு செல்லும் ஜனாதிபதி டில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் முக்கியஸ்தர்களையும் சந்தித்து அரசியல்,பொருளாதாரம் போன்றவை 


காயக்குழி காட்டிற்குள் மரங்களுக்கு கீழ் இருந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கு ரி.ஆர்.ரி Radio உதவி!

மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் எந்த ஒரு வசதிகளுமற்ற காட்டுப்பகுதியான காயக்குழி எனும் இடத்தில் வசித்து வருகின்றனர்.  இங்குள்ள

பிரதமர், சோனியா மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்! விஜயராஜ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கதறல்
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மீது விஜயராஜாவின் தற்கொலைக்கு காரணம் என வழக்கு பதிவு செய்தால்தான், விஜயராஜாவின் உடலை வாங்கிக்

தலமைச்சர் கனவுகண்ட பிள்ளையான் மகிந்தவின் ஆலோசகராக நியமனம்
கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரான நியமிக்கப்பட்டுள்ளார்.

ழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை அரசாங்க பிரதிநிதிகளுக்கும் முஸ்விம் காங்கிரஸ் பிரதி நிதிகளுக்குமிடையில் நடந்த சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

ராஜபக்ச வருகையைக் கண்டித்து சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ சாரதி மரணம்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி இரங்கல்!
இலங்கை  ஜனாதிபதி ராஜபக்சவின் இந்திய வருகையைக் கண்டித்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ  சாரதி விஜய்ராஜ் இன்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ.மஜீட் பதவிப் பிரமாணம்

கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நஜீப் ஏ. மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் சற்று முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவி பிரமானம் செய்துக் கொண்டதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ad

ad