புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2012


யாழில் உள்ள ஐந்து தீவுகளுக்கு சூரிய மற்றும் காற்று மூலம் சக்தியினை வழங்க நடவடிக்கை

வட மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து தீவுகளுக்கு சூரிய மற்றும் காற்று மூலமான சக்தியினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளை மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள மேலும் ஒரு பிரேரணையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் தனிக்குழு அமைத்து, சுயமாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரேரணை ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

Champions League Twenty20 - Group A FULL SCORECARD
Delhi Daredevils won by 52 run
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பெடரரை வீழ்த்தி ஆன்டி முர்ரே இறுதி போட்டிக்குத் தகுதி
முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் ரோலர்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த ஒரு அரை இறுதிப்போட்டியில் பெடரர்,
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்
சாம்பியன்ஸ் லீக் 20ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது லீக் போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- டெல்லி

வேலூர் சிறையில் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை: மு.க.ஸ்டாலின் வரவேற்பு
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை செய்யப்பட்டார். அவரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் வரவேற்றனர். 

கிறித்துவ மதத்தை கொச்சைப்படுத்துகிறேனா? -கவியரசு வைரமுத்து விளக்கம்!
ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, சீனுராமசாமி டைரக்டு செய்துள்ள படம் நீர்ப்பறவை. இப்படத்தின் பாடல்களை கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார்.



யாழ்ப்பாணத்துக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் நேற்று விஜயம் செய்த போது, அவர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பலாலி விமானத்தளத்திலிருந்து துரையப்பா விளையாட்டரங்கை நோக்கி புறப்படத் தயாரானபோதே இந்த இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



யாழ்ப்பாணத்தில் பருவமடையாத சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாற்றான்- கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள மாற்றான் திரைப்படத்தில் சூர்யா ஒட்டிபிறந்த இரட்டையர்களாக நடித்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் ஒரே ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கின்றார். சூர்யா, காஜல் அகர்வால் என சிலர் மட்டும் தான் நமக்கு நன்கு பரிட்சயமான நடிகர்கள்.
இப்படத்தில் நடித்திருக்கும் மற்றவர்கள் வெளிநாட்டு நடிகர்கள். ஒரு சமூக பிரச்சனையை கையில் எடுத்து, அதில் முடிந்த அளவிற்கு மசாலாவை சேர்த்து பெரிய கமர்ஷியல் படமாக எடுப்பார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.
ஒட்டிப்பிறந்த இருவர் என்பது தான் மாற்றான் படத்தின் கதைக்களம் என்ற மைண்ட் செட்டில் இருந்தனர் ரசிகர்கள். ஆனால் அதையும் தாண்டி சூர்யாவின் கடும் உழைப்பிற்கு

13 அக்., 2012


தனி ஈழத்தை உருவாக்க இந்தியா அமெ. கூட்டுச் சதி; தேசப்பற்றுள்ள இயக்கம் குற்றச்சாட்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசும் இந்தியாவுக்கு, தமிழகத்தை சீனா கைப்பற்றும்போது தான் எல்லாமே தெரிய வரும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து வீரர் ரொஜர் பெடரர் தர வரிசையில் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார்.
முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் ரோலர்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகின்றது.

விரிவுரையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்காலிக போர் நிறுத்தமே தவிர நிலையானதல்ல. எப்போதும் போர் வெடிக்கலாம் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் மேற்கண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் போன்றதொரு நடவடிக்கையே தற்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்காலிக போர் நிறுத்தமே தவிர நிலையானதல்ல. எப்போதும் போர் வெடிக்கலாம் என்று

ஜனாதிபதியின் ஆலோசகர் பிள்ளையானின் வீடு பற்றிய விண்ணப்பம் போலியானது! மக்கள் அஞ்ச வேண்டாம் சீ.யோகேஸ்வரன்
தமது கட்சிக்கும் அரசிற்கும் சார்பாக செயற்பட்டவர்கட்கு மாத்திரம் வீடு அமைத்துத் தருவதாக புரளியை  கிளப்பி போலி விண்ணப்பங்கள் விநியோகித்து மக்களை பீதியடைய வைத்த ஜனாதிபதியின் ஆலோசகர் சி.சந்திரகாந்தனின் (பிள்ளையான்) செயற்பாட்டில் எந்தவித உண்மையும் இல்லை என பாராளுமன்ற

கைதடி முதியோர் இல்லத்தில் இணைந்த முல்லைத்தீவு வயோதிபருக்கு காத்திருந்த சந்தோச அதிர்ச்சி!
கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித்தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதடியில் இடம்பெற்றுள்ளது.


கனடாவில் அண்மையில் விபத்துக்குள்ளான பேருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பிற்கு சொந்தமானது என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்தில் எட்டு பயணிகள் கயாமடைந்திருந்தனர். கனடாவின் டொரன்டோ நகரில் இந்த பேருந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இராணுவம் யாழ்ப்பாணத்தில் எங்கும் முகாம் அமைக்கலாம்!- ஈ.பி.டி.பி மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் எங்கு வேண்டுமானாலும் முகாம் அமைக்க முடியும். அவர்களை யாரும் தடுத்து விட முடியாது. என யாழ்.மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் கண்டுபிடிப்பு
மு்ன்னாள் போராளி ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.1998ம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் தாக்குதலுக்கு உள்ளான லயன் எயார் விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றத்தில் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்ச
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் மொனராகலை மாவட்ட நீதிமன்றில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வணிகவரித்துறை, சட்டம், நீதித்துறை பொறுப்புகளை வகித்து வந்த அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவதாக அரசு செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

அதே நேரம் சட்டமன்ற அஇஅதிமுக கொறடா ப.மோகன் ஊரக தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஷண்முகம் விழுப்புரம் வடக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருக்கும்

12 அக்., 2012


துப்பாக்கி -ல மொத்தம் 8 பாடல்கள் உள்ளன.அதில் வெண்ணிலவே என்ற மெலடியான பாடல் கேட்டவுடன் மனதில் ஒட்டிக்கொள்கிறது.
பாடல்களை MP3 வடிவில் பதிவிறக்கம் செய்ய…கீழே இணைப்பை சொடுக்குங்கள்.

ரூ 2. 5 கோடி தருவதாக சொல்லியும் ஆபாசமாக நடிக்க மறுத்த நயன்தாரா

டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ 2. 5 கோடி தருவதாக தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதனை நயன்தாரா தரப்பு மறுத்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைதான் இந்த டர்ட்டி பிக்சர்.
தகுதி சுற்றில் சியால்கோட், ஹாம்ப்ஷைர் அணிகளை வீழ்த்திய நியூசிலாந்தை சேர்ந்த ஆக்லாந்து அணி சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டின் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றது.
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்

10 அணிகள் பங்கேற்கும் 4ஆவது சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு, ஐ.பி.எல்.-ல் கிரிக்கெட்டில் முதல் 4
இடங்களை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெ


ம.தி.மு.க.,விலிருந்து வெளியேறுகிறாரா நாஞ்சில் சம்பத்? முடிவு குறித்து அறிய வைகோ காத்திருப்பு!

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவுடனான கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியிலிருந்துவெளியேற, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

11 அக்., 2012




இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து பேசினர்.
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் 7 எம்.பி.க்கள், சம்பந்தன் தலை‌மையில் இந்தியா சென்றுள்ளனர். இவர்கள் இன்று பிற்பகல் பிரதமர் மன்மோகன் சிங்கை டில்லியில் சந்தித்து பேசினர்.

மன்மோகன் சிங் - தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து பேச்சு
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து பேசினர்.
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் 7 எம்.பி.க்கள், சம்பந்தன் தலை‌மையில் இந்தியா சென்றுள்ளனர். இவர்கள் இன்று பிற்பகல் பிரதமர் மன்மோகன் சிங்கை டில்லியில் சந்தித்து பேசினர்.

99 நாள் போராட்டம், 100 வது நாளில் நிறைவு! பல்கலை. விரிவுரையாளர் சங்கத்தின் பொது செயலாளர் தெரிவிப்பு
சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி நாளை முதல் விரிவுரையாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என அவர் மதுஜீத் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தமது 99 நாள் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளனர். சங்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜீத் இதனை தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிய மாட்டார்கள் என்று கனவு காண்பது வேதனைக்குரிய விடயம்! யோகேஸ்வரன் பா.உ.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிய மாட்டார்கள் என்று கனவு காண்பதெல்லாம் வேதனைக்குரிய விடயமாகும். சிலர் தங்களின் சுய இலாபத்திற்காக எங்கள் மக்களை குழப்புகின்றார்கள். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாணசபை

கடுமையான வாய்த்தர்க்கத்தோடு நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் - நடந்தது என்ன?
தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த கூட்டத்தில்,இராணுவத்தினர் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமிப்பது குறித்து கூட்டமைப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு, ஆளுநர் அதிகாரத் தொனியிலும், அமைச்சர், அதிகாரிகள் மழுப்பல் பாணியிலும் பதிலளிக்க கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான வாதத்தில் ஈடுபட்டனர்.

லண்டனில் இலங்கைத் தமிழர் வீட்டில் 200 பவுண் நகை மற்றும் 18 ஆயிரம் பவுண்ட்ஸ் பணம் கொள்ளை
பிரித்தானியா, வோலிங்டன் (சட்டன்)  பகுதியில் ஈழத் தமிழர் வீடொன்றில் பகல் பதினொரு மணிமுதல் ஒருமணிக்குள் உள்புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருநூறு பவுண் நகைகள் பதினெட்டாயிரம் பவுண்டுகள் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இச்சம்பவத்தின்போது ஆறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட இந்த பணத்தினையே குறித்த திருடர்கள் மோப்பம் பிடித்து கொள்ளையடித்துள்ளனர்.

யாழ். நல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தனியார் தொலைத்தொடர்பு கோபுர தீ விபத்து
.இன்று பிற்பகல் 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
யாழ்.சட்டநாதர் கோயிலடியிலுள்ள தனியார் தொலைத் தொடர்பு நிறுவன தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று மின் ஒழுக்கு காரணமாக தீப்பிடித்து எரிந்துள்ளது.

மட்டக்களப்பு சிறுவர் நாடகம் தேசிய ரீதியில் 10 விருதுகள் பெற்று சாதனை! ( செய்தித் துளிகள்)
மட்டக்களப்பில் இருந்து நெய்தல் ஊடக தரிசனம் தயாரிப்பில் “பிறந்தநாள் கொண்டாட்டம்” எனும் சிறுவர் நாடகம் ஒன்பது தேசிய விருதுகளையும், ஒரு சிறப்பு விருது அடங்கலாக பத்து விருதுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளது.
அரச சிறுவர் நாடக விழா கொழும்பு ஜோன் டி சில்வா அரங்கில், கலாசார மற்றும் கலை

யாழில் கிணற்றில் மறைத்திருந்த பெருமளவான ஆயுதங்கள் மீட்பு
நேற்று முன்தினம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே பொலிஸார் இதனை மீட்டுள்ளதாக யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிஹெரா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டப்பகுதியில் விடுதலைப்புலிகளால் மறைத்து

ஒஸ்லோவில் யாழ்.குடாநாட்டைச் சேர்ந்த தாய்மாரின் சாகும்வரை உண்ணாவிரதம் வெற்றி!
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவரும் சிறுவர் காப்பகத்தின் நடவடிக்கைகளை கண்டித்தும் அதனிடமிருந்து தமது பிள்ளைகளை விடுவித்துக்கொள்ளும் வகையிலும் இலங்கைத் தாய்மாரினால் ஒஸ்லோவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 10ஆவது நாளான இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இரண்டு கைகளும் கால்களும் அடித்து முறிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சையின்றி 4ம் மாடியில்கனடாவிலிருந்த நாடுகடத்தப்பட்ட தமிழர்

சன் சீ என்ற கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த 492 அகதிகளில் ஒருவர் மாத்திரம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் கொழும்பில் சித்திரவதைக் கூடமாகப் பயன்படுத்தும் 4ம் மாடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவருடைய இரண்டு கைகளும் கால்களும் அடித்து முறிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சையின்றி
டக்ளஸ் தேவானந்தாவும், யாழ்.மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவும் ஏமாற்றி விட்டதாக கூறி தாயொருவர்  உண்ணாவிரதப் போராட்டம் 
யாழ். வசந்தபுரம் கிராமத்தில் தனது மகளுக்கு நிலம் தருவதாக கூறி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், யாழ்.மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவும் ஏமாற்றி விட்டதாக கூறி தாயொருவர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார்.
குறித்த கிராமம் கடந்த 1995ம் ஆண்டு முதல் உயர் கடல்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்தாண்டின்

கமலின் ‘விஸ்வரூபம்’ : சர்ச்சை காட்சிகள் நீக்கம்
 கமல் இயக்கி, நடிக்கும் படம் 'விஸ்வரூபம்'. இப்படத்தின் நாயகிகளாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடிக்கின்றனர். வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தது. நவீன சவுண்ட் தொழில்நுட்பத்தில் இப்படத்தை கமல் உருவாக்கி உள்ளார். ஹாலிவுட் நிபுணர்கள் இப்படத்தை பாராட்டி உள்ளனர். தமிழ், இந்தி மொழிகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. 

இலங்கைத்தமிழர்களை அகதிகளாக நடத்தக்கூடாது;அதிதிகளாக நடத்த வேண்டும் : வைரமுத்து பேச்சு
இலங்கை அகதியைப்பற்றிச் சொல்லும் கதை ‘நீர்ப்பறவை’.  இப்படத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் கொடூரம் இடம்பெறுகிறது.  இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் இன்று மாலை நடைபெற்றது.

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் இருபதுக்கு20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேசக் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை அணி 127 புள்ளிகளுடன் முதலிலிடத்தில் உள்ளது. 
உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவினாலும் கூட இத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை இலங்கை அணி வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் இலங்கை அணி தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதோடு உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய மேற்கிந்திய அணி ஐந்து இடங்கள் முன்னேறி 121 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.


மேலும் இந்திய அணி 120 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் இருப்பதோடு தொடர்ந்து இங்கிலாந்து (118), தென்னாபிரிக்கா (117), பாகிஸ்தான் (116), அவுஸ்திரேலியா (108), நியூசிலாந்து (97), பங்களாதே~; (85), அயர்லாந்து (82), ஜிம்பாப்வே (44) புள்ளிகளுடன் உள்ளன.


அப்பாவி இளைஞர்கள் புலிகள் என முத்திரை குத்தப் பொறுப்பான அதிகாரிகள் ஆண்டவனுக்குக் கணக்குகொடுக்க வேண்டியவர்கள் வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆனந்தசங்கரி எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிவக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'முன்னாள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த போராளிகள் 2500பேரை சிவில் சமூக பாதுகாப்பு திணைக்களம் மூலமாகத் தெரிந்தெடுத்து பல்வேறு உப கொடுப்பனவுகளுடன் கூடிய நல்ல வேதனம்
அரசாங்கம் தீர்வுத் திட்டத்தில் இழுத்தடிப்புக்களையே மேற்கொண்டு வருகின்றது-இரா. சம்பந்தன்
அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் அக்கறை காட்டுவதாக இல்லை. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்வுத் திட்டத்தில் இழுத்தடிப்புக்களையே மேற்கொண்டு வருகின்றது. அர்த்தபுஷ்டியான அதிகாரப் பரவலாக்கலுடனான தீர்வுக்காகவே நாம் பாடுபட்டு வருகின்றோம் ௭ன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட ௭ம்.பி.யுமான. இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

10 அக்., 2012

கர்நாடக அரசை கலைக்க வேண்டும் - கருணாநிதி

திமுக தலைவர் மு கருணாநிதி காவிரி நதி நீர் ஆணையத்தலைவர் என்ற முறையில் பிரதமர் மன்மோகன் சிங் பிறப்பித்த உத்திரவினைப் புறந்தள்ளி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கலைப்பது குறித்து மத்திய அரசு

சொல்ஹேம் கூற்றுக்கு ருத்ரகுமாரன் மறுப்பு

இலங்கை இனப் பிரச்சினையில், நோர்வேயின் சமாதானத் தூதராக செயல்பட்ட, சொடுக்குஎரிக் சொல்ஹேம்தமிழோசையிடம் தெரிவித்தது போல சரணடைவது குறித்து திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை என்று நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் B B C


சாம்பியன்ஸ் லீக் டி20: தகுதிப் போட்டியில் யுவா நெக்ஸ்ட் அணியை வீழ்த்தியது யார்க்‌ஷை
இந்தப் போட்டியின் முதன்மை சுற்றுப் போட்டிகள் வரும் 13-ம் தேதி துவங்க உள்ள நிலையில், தகுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று துவங்கின. இதில் இங்கிலாந்தை சேர்ந்த யார்க்‌ஷைர் அணியும், இலங்கையின் யுவாநெக்ஸ்ட்
சூதாட்டத்தில் 6 நடுவர்கள்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணைக்கு உத்தரவு
கிரிக்கெட் போட்டியில் ‘மேட்ச் பிக்சிங்’ விவகாரம் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. வீரர்கள், சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இதற்கு முன்பு நடந்தது
உதயகுமாருக்கு ஆதரவாக காங். எம்.எல்.ஏ.க்கள் வீடுகளை முற்றுகையிடுவோம்: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் அறிவிப்பு
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் இசங்கன்விளையில் உள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வீட்டில் இன்று நடந்தது

காவிரி பிரச்சினைக்காக 71 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக தயார் என்கிறது கர்நாடக காங்கிரஸ் 
காவிரி பிரச்சினைக்காக கர்நாடகாவில் மொத்தம் உள்ள 71 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பதவி விலக தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ்வர் கூறியுள்ளார். 

உல்லாசத்திற்கு அழகிகள் அனுப்பி வைக்கப்படும் : நூதன விளம்பர மோசடி
திருச்சி கலெக்டர் ஆபீசு ரோடு ராஜா காலனியை சேர்ந்தவர் ராஜா (28). ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். இவர் இணையதளத்தில் 'பிரவுசிங்' செய்தபோது உல்லாசத்திற்கு

லங்கை ராணுவத் தளபதி கொக்கரிப்பு : கலைஞர் பதிலடி
 திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை:
இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா என்பவர் இலங்கை சிறப்புப் படையைச் சேர்ந்த 45 உயர் அதிகாரிகள் வரும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு பயிற்சிக்காக

9 அக்., 2012


ஆந்திர போலீஸ் - தமிழக வக்கீல்கள் மோதல்
பதட்டம் நீடிப்பு
சென்னை ஐசவுஸ் பகுதியை சேர்ந்தவர் உசேன்.  இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் ஆந்திர மாநிலத்தின் அமைச்சராக இருக்கும் ரகமதுல்லா.  சென்னையில் இருக்கும் தன்னுடைய சொந்த வீட்டை காலி செய்ய முடியாமல் அமைச்சர் ரகமதுல்லா, 

யாழ். குடாநாட்டில் படையினருக்கு காணிகள் வழங்கக்கூடாது! ஈபிடிபி உட்பட தமிழ்க் கட்சிகள் ஒருமித்த கருத்து
யாழ்.குடாநாட்டில் படையினரின் தேவைகளுக்காகக் காணிகள் எதனையும் வழங்குவதில்லை எனவும், காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாகவும் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த குரலில் கருத்து வெளியிட்டுள்ளன.

போரை முடிவுக்கு கொண்டுவர சர்வதேசம் வைத்த திட்டத்தை புலிகளின்
தலைமை ஏற்கவில்லை! எரிக் சொல்ஹெய்ம் செவ்வி

ப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதிவடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரை தடுத்துவிட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய

படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் முறுகல்நிலை!
முள்ளிவாய்க்கால் பகுதியில் படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நேற்றுக்காலை முறுகல்நிலை ஏற்பட்டதாகவும் இதன்போது பொது மக்கள் பலர் சிறுகாயங்களுக்கு உள்ளானதாகவும் தெரியவருகிறது.

பொஸ்னியா, சிரியா ஆகிய நாடுகளை விடவும் இலங்கைப் போரில் அதிகளவானோர் பலி: பி.பி.சீ ஊடகவியலாளர்
பொஸ்னியா, சிரியா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற உயிரிழப்புக்களை விடவும் இலங்கைப் போரில் அதிகளவானோர் பலியாகியுள்ளதாக பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

மெழுகுவர்த்தியை மீள் சுழற்சிக்கு உட்படுத்தும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழ்ச் சிறுவனின் மேலும்பல சாதனை
இலங்கையில் இவ்வாண்டுக்கான இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப் பேரில் ஒரேயொரு தமிழ்மாணவனான சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தை சேர்ந்த மாணவன் வினோஜ்குமார் கிழக்கில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
காங்கிரஸிலிருந்து மாயாவதியும் விலகல்?
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவை தொடருவது குறித்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி நாளை முடிவு செய்கிறது.
 பணம் பெற்றுக் கொள்ள சம்மதித்தது யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக தீர்ப்பளிக்க கிரிக்கெட் நடுவர்கள் ஒப்புக் கொண்ட காட்சிகளை இண்டியா டி.வி. தொலைக்காட்சி திங்கள்கிழமை ஒளிபரப்பியது. VIDEO 

இந்த விடியோவில், வங்கேதசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த 6 நடுவர்கள் பணம் பெற்றுக் கொள்ள சம்மதித்தது பதிவாகியுள்ளது.
இவர்கள், சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும்,

13 ஆம் திகதி ஜனாதிபதி குவைத் பயணம்
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி குவைத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.குவைத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கோப்ரேட் டயலொக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மஹிந்த
கொழும்பில் சட்டத்தரணிகள் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்
 


நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீதான தாக்குதலைக் கண்டித்து கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு முன்பாக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தாக்குதலுக்கு
ஏனைய துறைகளைப் போல் நீதித்துறையையும் அடக்கியாள அரசு முயற்சிக்கின்றது: சட்டத்தரணி ரத்தினவேல்
ஏனைய துறைகளைப் போல் நீதித்துறையையும் தன்னகப்படுத்தி அடக்கியாள அரசு முயற்சிக்கின்றது என ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கே. எல். ரத்தினவேல் தெரிவித்தார். 
நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன தாக்கப்பட்டதைக் கண்டித்து இன்றைய
புகலிடக் கோரிக்கையாளர்களை மானூஸ் தீவுகளுக்கு அனுப்பம் நடவடிக்கை
புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களை பப்புவா நியூகினியின் மானூஸ் தீவுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு, குடியகல்வுத்துறை அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார்.

நீதிவான்கள், மாவட்ட நீதிபதிகள் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பு
நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து நாட்டிலுள்ள சகல நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் இன்று திங்கட்கிழமை முதல் நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை ௭ன தீர்மானித்துள்ளனர். 
த.தே. கூட்டமைப்பு 13ஆவது சட்டத்திருத்தத்தை ௭ப்போதுமே ஓர் அரசியல் தீர்வாக ஏற்றதில்லை: சம்பந்தன்
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்படிகொண்டுவரப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தத்தை தமிழர் இனப்பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாக தாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை ௭ன்றும், ஐக்கிய இலங்கைக்குள் நடைமுறை சாத்தியமுள்ள ஒரு தீர்வையே தாம் நாடுவதாகவும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர்கள் ஒன்றாக ஓர் அணியாக ஏன் இந்தியா செல்லக்கூடாது?வினோ எம்.பி சீற்றம்
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் நிமித்தம் டில்லி செல்லும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதி நிதிகள் குழுவில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகளும் அல்லது கட்சித்தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளாமையானது மிகுந்த ஏமாற்றத்தையும்,சந்தேகத்தையும் நமக்குத் தோற்றிவித்துள்ளது.

8 அக்., 2012

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மகள் வர்ஷா, மும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 
இவருக்கு வயது 56. துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வர்ஷா உயிரிழந்ததை உறுதி செய்தனர்.


பல்வேறு பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதி வந்த வர்ஷா போஸ்லே, ஏற்கனவே 2008, 2010ல் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியவர். 

துரை தயாநிதிக்கு போடப்பட்ட பிடிவாரன்ட் ரத்து!
பதில் மனு தாக்கல் செய்யக்கோரி நீதிபதிஉத்தரவு!
மதுரையில் கிரானைட் மோசடி தொடர்பாக கீழவளவு போலீசார் கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்தனர். இந்த புகாரில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின்

எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார் உதயகுமார்.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக் குழு இன்று (08.10.2012) கட-ல் முற்றுகையிடும் போராட்டடம் அ
றிவித்திருந்தது.

இருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது மேற்கிந்திய அணி.
இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் புதிய சம்பியன் பட்டத்திற்கான இறுதி போட்டியில் இலங்கை-மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று பலபரீட்சை நடத்தின.

பயிற்சி ஆட்டம் மற்றும் சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் இவ்விரு அணிகள் ஏற்கனவே சந்தித்திருந்தன. ஆனால் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில்
இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன இருபதுக்கு20 போட்டிகளுக்கான அணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே மஹேல இதனை தெரிவித்தார். எனினும் தொடர்ந்து வரும் இருபதுக்கு 20 போட்டிகளின் தான் பங்கேற்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று மாலை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி

நேருக்குநேர் விவாதிக்க தயாரா?
நடிகர் சரத்குமாருக்கு உதயகுமார் கேள்வி!
கூடங்குளம் அணு உலை பற்றி நேருக்குநேர் விவாதிக்க தயாரா என்று சரத்குமாருக்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ் .பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்,


எங்கு இருக்கிறார் துரைதயாநிதி? 
அனுஷா துரைதயாநிதியிடம் போலீசார் விசாரணை! 

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக முன்னாள் கலெக்டர் சகாயம் அறிக்கை தாக்கல் செய்தார். 

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஊக்கமளிக்க பிரேமதாஸ மைதானத்தில் ஜனாதிபதி!
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மைதானத்துக்கு

வடமராட்சி கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு
வடமராட்சி கிழக்கு பகுதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்து, அப்பகுதி மக்களின் தேவைகள்

பிரித்தானிய யுவதிகள் கைது விடயத்தில் தவறிழைத்த இலங்கைப் படையினர்!
மேற்கிந்திய கிரிக்கட் வீரர் கிறிஸ் கெய்ல் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு செல்ல முற்பட்டதாக கூறி 3 பிரித்தானிய யுவதிகள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கையின் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு தவறு இழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 அக்., 2012


WEST INDIES  WIN BY 36  RUNS 
FULL SCORE CARD

தமிழ் தேசிய கூட்டமைப்பு - இலங்கை அரசு பேச்சுக்கு இந்தியா உத்தரவாதமளிக்கும்!
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இருதரப்புப் பேச்சுக்களை  இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும்: சொல்ஹெய்ம் கோரிக்கை
இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மே. தீவுகள் கிரிக்கெட் இறுதிப்போட்டியை முன்னாள் புலிப் போராளிகளும் கண்டுகளிக்க வாய்ப்பு
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவுள்ள 20 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட உலக கிண்ண கிரிக்கட் இறுதிப்போட்டி காரணமாக கொழும்பு நகரம் தயாராகியுள்ளது..


இனந்தெரியாத நபர்கள் இன்று கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து, மஞ்சுள திலகரட்னவை தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த மஞ்சுள திலகரட்ன தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன தாக்கப்பட்டுள்ளார்.

 
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள் தவிர வேறு யார் பிறந்தநாளாக இருந்தாலும் அடக்கிதான் வாசிக்கணும்.
வைரவிழா கொண்டாடும் தமிழக சட்டப்பேரவையின் தலைவரான சபாநாயகர், ஆட்சிக்குத் தலைவரான முதலமைச்சரின் வெறுப்புக்கு ஆளாகி தனது பதவியை ராஜினாமா
அன்பான புங்குடுதீவு மக்களே நான் நடத்தி வரும் புங்குடுதீவு சுவிஸ் கொம் என்ற இணையதளம் பற்றி அறிந்திருப்பீர்கள் .இந்த இணையத்தை மேலும் சிறப்பக்குமுகமாக நீங்களும் உங்கள் ஆக்கங்களை எழுதி உதவலாம் உங்கள் வசம் உள்ள நிழல் படங்களை  தகவல்களை எமக்கு அனுப்பி வைக்கலாம் குறைகள் இருப்பின் சுட்டிக் காட்டலாம் ,பாடசாலைகள் சனசமூக நிலையங்கள் கிராமங்கள் எனப் பல உப இணையங்களை  உருவாக்கி உள்ளேன் .ஐரோப்பிய இயந்திரமயமான வாழ்க்கை ஓட்டத்தில் வெகு சிரமத்தின் மத்தியில் நான்  செய்கின்ற இந்த  புனிதமான மண்பற்றுள்ள பணிக்கு நீங்களும் என்னோடு சேர்ந்து பணியாற்றலாம் .இணைய அறிவு இல்லாதவர்களுக்கும் மிக இலகுவாக பயிற்ச்சி வழங்கி தர காத்திருக்கிறேன் தயவு செய்து இந்த மண்ணின் வாசம் மிக்க இணையத்துக்கு உங்கள் ஆதரவும் பங்களிப்பும் கிடைக்கட்டும் நன்றி 

பிரதமரின் உத்தரவை கண்டித்து கர்நாடக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக சனிக்கிழமை நடத்திய தர்னா போராட்டத்தில் கலந்துகொண்டு எடியூரப்பா பேசியது:

ர்

கர்நாடக முதல்வர் இல்லம் முற்றுகை: வாட்டாள் நாகராஜ் கைது

காவிரியில் நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று நிகழ்ந்த முழு அடைப்புப் போராட்டத்தில், வன்முறை ஆங்காங்கே தலைதூக்கியது. மேலும், கர்நாடக முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தப்பட்டது.
கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள்
16 சிக்சர் அடித்து முதலிடம்: உலக கோப்பையை வெல்வோம்- கெய்ல் நம்பிக்கை
20 ஓவர் உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக இருந்தது.
நாளை இறுதிப்போட்டி: கோப்பையை வெல்வது யார்?- இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் பலப்பரீட்சை
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் வங்காளதேசம், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான்
கர்நாடகத்தை சேர்ந்த மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை தடுத்து நிறுத்துங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. போராட்டம் உச்சகட்டத்தை


இன்று காலை பொன்முடி வந்தார். அப்போது கலைஞர் அறிவாலயத்திற்குள் நுழைந்த போலீசார், அவரை கைது செய்தனர்.
வானூர் அருகே பூத்துறையில் குவாரியில் அனுமதித்த அளவைவிட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாக, திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும்

அதிமுக தலைமை கழகத்தின் புதிய கட்டளை:அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு
 அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை சார்பில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும்,
சானியா-நூரியா ஜோடி 2-ம் இடம் பிடித்தது
 சீனாவில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி 2-ம் இடம் பிடித்தது. இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் இறுதிப்போட்டியில்


"உலகக் கிண்ணம் எங்களுடையது, இலங்கையர்கள் மன்னிக்க வேண்டும்"கிறிஸ் கெய்ல்
 




இலங்கையிலிருந்து செக்குடியரசிற்கு இரண்டு யானைக் குட்டிகள்
இலங்கையிலிருந்து செக்குடியரசிற்கு இரண்டு யானைக் குட்டிகள் இன்று காலை 6.15 மணியளவில் அனுப்பிவைக்கப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

புலிகளின் முன்னாள் போராளிகளில் போர்க்குற்றம் புரிந்த 60 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து மிகவும் தீவிரமான முறையில் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக 60 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ள

யாழ். விஜயம் செய்த ஐ.நா துணைச்செயலாளர்! பூட்டப்பட்ட அறைக்குள் இரகசிய சந்திப்புக்கள் நடைபெற்றன

ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ் சென்ற ஐ.நா துணைச் செயலாளர் அஜய் சில்பர் அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
அங்கு சென்ற ஐ.நா துணைச்செயலாளர் சில்பர், யுத்தத்தின் பின்னரான நிலைமைகள்

வன்னியில் அவலப்படும் தமிழ் பெண்களின் துன்பங்களை மறந்துவிட்டு எவரும் பெண்ணுரிமை பற்றி பேச முடியாது! ஜமமு
போரினால் சொல்லொணா துன்பங்களை அடைந்து இன்று வன்னியில் நிர்க்கதியாக வாழும் தமிழ் பெண் சகோதரிகளின் துன்பங்களை கணக்கில் எடுக்காமல்,  இந்த நாட்டில் எந்தவிடத்திலும் எவரும் பெண்ணுரிமை

தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவின் மனு மீதான விசாரணை 12ம் திகதி ஆரம்பம்!
இலங்கையின் பாரம்பரிய கைத்தொழில்கள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கடந்த 1986ம் ஆண்டு சென்னையில் இருந்தபோது, ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் மகன் விபத்தில் பலி: இருவர் படுகாயம்
மன்னார், தலைமன்னார் பிரதான வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் என்பவர் உயிரிழந்ததோடு இளைஞனொருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக

தமிழர்கள் எந்த ஆயுதங்களை கையிலெடுக்க வேண்டுமென சர்வதேசமே தீர்மானிக்க வேண்டும்: ஐ.நா உதவிச் செயலரிடம் வலியுறுத்தல்
தமிழர்களின் விடுதலைக்கான போராட்டம் இன்னமும் முடிவுபெறவில்லை. அவர்களின் ஆயுதங்களே மௌனிக்கப்பட்டுள்ளன.

தமிழர்களை கொன்று குவித்த சிங்கள நாட்டு அணிக்கு ஆதரவா? அஸ்வினுக்கு குவியும் கண்டனங்கள்!
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழர். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு தமிழர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருப்பதைக் கண்டு தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள்

ad

ad