புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2012

த.தே.கூ வின் மூன்று பிரதிநிதிகள் திங்களன்று சீனாவுக்கு பயணம்
சீன அரசின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்று நாளைமறுதினம் சீனாவுக்கு பத்து நாள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என விளக்கமளிக்க வேண்டும்; தருஸ்மன் வலியுறுத்து
சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 40 ஆயிரம் பேர் தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் தலைவரும் இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா
இலங்கை நீதித் துறை மீதான அழுத்தங்கள் தொடர்பில் அமெரிக்கா கவனம்
இலங்கை நீதித் துறைக் கட்டமைப்பு மீதான அழுத்தங்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நுலண்ட் அம்மையார் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்
வாக்குறுதி தவறினால் அபாயப்பொறி நிச்சயம்; இலங்கையைப் பகிரங்கமாகக் கண்டித்தது அமெரிக்கா
ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இராஜதந்திரச் சமரில் இலங்கையை மண்டியிட வைத்த அமெரிக்க வல்லரசு,  தற்போது ஜெனிவாவில் நடைபெறும் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரிலும் இலங்கைக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வருகின்றது.

இலண்டனில் மாபெரும் உலகத்தமிழர் மாநாடு: தமிழ் மக்களின் ஆதரவினை வேண்டி நிற்கும் பிரித்தானிய தமிழர் பேரவை
சிங்கள பேரினவாத அரசுகளால் தமிழ் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட யுத்தம் தொடர்பிலான சர்வதேச சுயாதீன விசாரணை' மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி பிரித்தானியாவில் மகாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் செயல்பட்டு வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது தீர்ப்பாயம்.

பிரிவார்களா? இணைவார்களா? எப்போது முடியும் வைகோ, நாஞ்சில் சம்பத் விவகாரம்!


வைகோ, நாஞ்சில் சம்பத் பிரிவார்களா? இணைவார்களா? என கடந்த ஒன்னரை மாதங்களாக நடக்கும் இந்த கசமுசாவின் முடிவு எப்போது என காத்திருக்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

ஈழத்தமிழர்களுக்கு விடிவு காலம் ஏற்பட ஐ.நா. சபை முயற்சி எடுக்க வேண்டும்: கலைஞர் பேட்டி
தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-டெசோ மாநாட்டு தீர்மானங்களையும், தி.மு.க.வின் கருத்துக்களும் அடங்கிய விரிவான மனுவை `ரத்தம் வழியில் இதயத் துடிப்பு' என்ற தலைப்பில் ஐ.நா. மன்றத்தில் மு.க.ஸ்டாலின்,

சிங்களவர்களின் கபட நாடகத்தை ஐ.நா. புரிந்து கொண்டது: கலைஞ

இலங்கையில் ஆளும் சிங்களவர்களின் கபட நாடகத்தை ஐ.நா. புரிந்து கொண்டுள்ளது என்று திமுக தலைவகலைஞர் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி: ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஒபாமாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னியும் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிபர் ஒபாமா ஒகியோவிலும், மிட்ரோம்னி விஸ்பான்சின் நகரிலும் பிரசாரம் மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு திரட்டினார். 

அப்போது, ஒபாமா தனது ஆட்சி காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டார் மோசமான நிலையில் இருந்த அமெரிக்க பொருளாதாரம் சீரமைக்கப்பட்டுள்ளது. பல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஈராக் போர் முடிவுக்கு வந்து ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். 
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா-மிட்ரோம்னி இறுதிகட்ட பிரசாரம்
அமெரிக்காவையும், உலக நாடுகளையும் மிரட்டிய தீவிரவாதி பின்லேடன் கொல்லப்பட்டான் என தெரிவித்தார். மேலும் குறைந்த செலவில் கல்வி வழங்குதல், வரி மாற்றம் செய்தல், ஏழை எளிய, மக்கள் மற்றும் மூத்த குடிமகன்கள்


பாரிஸ் ஓபன் டென்னிஸ் : பூபதி-போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரிஸ் ஓபன் டென்னிஸ் : பூபதி-போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு 
முன்னேற்றம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிஎன்பி பரிபாஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் மகேஷ் பூபதி-  ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் இந்த ஜோடி, போலந்தின் மரியுஸ்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணியுடன், இங்கிலாந்து லெவன் அணி மோதியது. இப்போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 2-வது பயிற்சி ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் மும்பை ஏ அணியுடன், இங்கிலாந்து லெவன் அணி மோதியது.டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டநேர முடிவில்
றக்பியில் சீனாவை வீழ்த்தி இலங்கை சம்பியன்
சிங்கப்பூரில் நடைபெற்ற அணிக்கு 7பேர் கொண்ட றக்பி போட்டியில் இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
இப்போட்டியில் இலங்கையணி சீனாவை எதிர் கொண்டு 25-5 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி கொண்டு கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
 
அழகியாக நமீதா தெரிவானதற்கு நடிகைகள் எதிர்ப்பு
ஜப்பான் நாட்டின் டோக்கியோ ரி.வி. நமீதாவின் புகைப்படத்தை வைத்து இந்திய அழகியாகத் தெரிவு செய்திருப்பதற்கு தென்னிந்திய நடிகைகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஹொலிவூட்டின் பிரபல நடிகைகள் கருத்துத் தெரிவிக்கையில்,அழகி என்றால் அதற்கென்று சில முக்கிய அம்சங்கள்
சட்டவிரோதமாக அமெரிக்க டொலர்களைக் கடத்திய இருவர் கைது
சட்டவிரோதமாக அமெரிக்க டொலர்களை கடத்திச் செல்ல முற்பட்ட பொரளை மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.மாலைத் தீவுக்குச் செல்வதற்காக வந்த இவர்களது பையில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவின் சிறந்த உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபை ஈசன் தெரிவு
 இவ் ஆண்டுக்கான கனடாவின் சிறந்த உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக கனடியத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபை ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கனடாவின் டொரன்ரோவிலிருந்து வாராந்தம் வெளிவரும் ‘நௌ’ சஞ்சிகை, ‘ரொரன்ரோவில் சிறந்தது’ என்ற பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.



இந்நிலையில், 2012ன் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபை ஈசன் தெரியப்பட்டுள்ளார். அவருக்கான அவ் விருதை 'நவ்' சஞ்சிகை வழங்கி கௌரவித்துள்ளது.

கனடாவில் தமிழ் மாணவி மாயம்!
கனடாவில் தமிழ் மாணவி ஒருவர் காணாமற் போயுள்ளார்.
ஸ்காபரோ நகரில் வசிக்கும் 16 வயதான காயத்திரி வைத்திலிங்கம் என்ற மாணவியே நேற்று முன்தினம் காணாமற் போயுள்ளார். 
 

 
இது குறித்து டொரொண்டோ பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செல்வம் எம்.பி.யின் மைத்துனர் கொலை: சந்தேக நபர் கைது
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சின்னத்துரை இந்திரேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.புறக்கோட்டை பகுதியில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி வீரகேசரிக்குத் தெரிவித்தார்.

3 நவ., 2012


செட்டியார் தெருவில் பதற்றம்
 
ம்பு செட்டியார் தெருவில் நகை விற்பனைத் தரகராக தொழில்புரிந்து வந்த சின்னத்துரை இந்திரேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து செட்டியார் தெருவில் பதற்றம் நிலவுவதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்

கதறி அழுத சின்மயி


கல்லூரி பேராசிரியரான என்.சி.ஷியாமளனின் இயக்கத்தில் சிவாஜியின் பேரன் சிவாஜிராவ், நடிகை மித்ரா குரியன் ஜோடியாக நடிக்கும் படம் ‘நந்தனம்’. நந்தனம் படத்திற்கு இசையமைக்க மலையாள இசையமைப்பாளாரான கோபி சந்தர் என்பவரை இறக்குமதி செய்திருக்கிறார் ஷியாமளன்.
சமீபத்தில் வெளிவந்த உஸ்தாத் தோட்டம் என்ற படத்திற்கு கோபி சந்தர் தான் இசையமைப்பாளர். உஸ்தாத் தோட்டம் படம் பாடல்களுக்காகவே ரசிகர்களை இழுக்கும் அளவிற்கு ஹிட் ஆனதால் கோபி சந்தரின் இசையை கேட்க பலரும் ஆவலாக இருந்த நிலையில் பிண்ணனி பாடகி சின்மயி கோபி சந்தரின் இசையில் நந்தனம் படத்திற்காக பாடல் பாடும் போது அழுதுகொண்டே பாடினாராம்.
இது என்ன வலியோ’ என்ற பாடல் வரிகளை கோபி சந்தரின் இசையுடன் சேர்த்து பாடும் போது உண்டான தாக்கத்தால் கதறி அழுதாராம் சின்மயி.

ad

ad