புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2012

<iframe width="350" height="270" src="http://www.youtube.com/embed/-B9T2ODFpJQ" frameborder="0" allowfullscreen></iframe>

Australia won by an innings and 201 runs

India 192/5 (20/20 ov)
Pakistan 181/7 (20.0/20 ov)
India won by 11 runs

எஸ். செல்வசேகரன்

ஒரு காலத்தில் இலங்கை நாடக உலகில் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த நகைச்சுவை மன்னர்களில் ஒருவரான 'உபாலி' எஸ்.செல்வசேகரன் அவர்கள் இன்று (28.12.2012) வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் மாரடைப்பால் காலமானார். 
அன்னாரது குடும்பத்தினருக்கு எது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கோள்கிறேன்.



அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8விக்கெட் இழப்புக்கு 440 ஓட்டங்களைப்பெற்று 284 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.


கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களில்அனைத்துக் குளங்களும் நிரம்பி வழிகின்றன. ஆறுகள் பெருக்கெடுத்துப் பாய்கின்றன. 
இதனால் வீதிப்போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டுள்ளது. நேற்றிரவு தகவல்களின் படி சில குளங்களின் நீர்மட்டமும் அவற்றில் இருந்து வெளியேறும் நீர் மட்டமும் வருமாறு.. கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன்குள நீர்மட்டம் 26 அடி 2 அடி வான் பாய்கிறது.

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்‌ஷவின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயற்படும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை விசாரணை ஒன்றுக்கு ஆஜராகுமாறு அவசர அழைப்பாணை ஒன்றை அனுப்பிவைத்திருக்கின்றது.
கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகத்தில் நாளை சனிக்கிழமை ஆஜராகுமாறு இந்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியவந்திருக்கின்றது. கொழும்பிலுள்ள கஜேந்திரகுமாரின் இல்லத்தில் இந்த அழைப்பாணை நேற்று வியாழக்கிழமை மாலை கையளிக்கப்பட்ட
இலங்கை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரித்தானிய குடியுரிமை கொண்ட தமிழரை பிரித்தானிய சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போதே பிரித்தானிய குடியுரிமை கொண்ட தமிழரை பிரித்தானிய சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில்; பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 

சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் தொடர்பில் சரியான தீர்வை முன்வைக்கத் தவறினால், மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளின் அல்லது அவர்களைப் பின்பற்றுபவர்களின் ஆட்சேர்ப்பு முகவராக மாறும் நிலை ஏற்படும். இவ்வாறு எச்சரித்துள்ளார் பி.பி.சி. முன்னாள் செய்தியாளர் பிரான்ஸிஸ் ஹரிசன்.

“தி ஏசியன் ஏஜ்” ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாலியல் தேடலில் இலங்கையர்களுக்கு முதலிடம்
கூகுல் இணைய தளத்தில் பாலியல் தொடர்பான தேடலில் அதிகம் ஈடுபடுவோர் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

"பிரபாகரன் படத்தை வைத்திருக்கவில்லை" ! ஹத்துருசிங்கவின் குற்றச்சாட்டை கைதாகியுள்ள மாணவர்கள் மறுப்பு
மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை வைத்திருந்ததுடன், அந்த அமைப்பை மீண்டும் உருவாக்கும் வகையில் செயற்பட்டதாகவும் யாழ். இராணுவ தளபதி ஹத்துருசிங்க பீடாதிபதிகளிடம் கூறியிருந்த குற்றச்சாட்டை கைதாகியுள்ள மாணவர்கள் மறுத்துள்ளனர்.


‘கைய்ய கால உடைச்சுடுவேன்’
-ராமதாஸ் கூட்டத்தில் பத்திரிக்கையாளருக்கு மிரட்டல்

 

 சேலம் எல்.ஆர்.என் ஹோட்டல் அரங்கத்தில் ராமதாஸ் தலைமையில் 'அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை' ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதில் பல்வேறு அமைப்பினரும் பங்கேற்க செய்தி சேகரிக்கவும்,புகைப்படம் எடுக்கவும் பத்திரிக்கையாளர்கள் சென்றனர்.

மாணவி புனிதாவை கற்பழித்து கொன்ற ரவுடி சுப்பையா
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகள் புனிதா (வயது 13). பள்ளி மாணவியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரவுடி சுப்பையாவால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.


அழகிரி மகனிடம் 100 கேள்விகள் கேட்டுஅதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை 
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

27 டிச., 2012


வைகோவின் தலைமையில் எழுச்சிமிகு போராட்டம்


தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 12.12.2012 அன்று தமிழகத்தின் கடலோர கிராமங்களில் ஒன்றான உவரியில் இருந்து மதுரையை

பொலிஸ் மீது முன் நாள் இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச் சூடு: தானும் தற்கொலை செய்தார் 
காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் இராணுவப் படை சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அறியப்படுகிறது. அரலகங்வில சிறிபுர பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ரி56 துப்பாக்கியைப்

புனர்வாழ்வுபெற்ற 28 முன்னாள் போராளிகள் வடமராட்சியில் கடந்த வாரம் மீண்டும் கைது! – பதற்றத்தில் உறவினர்கள்
யாழ். வடமராட்சி பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முன்னாள் போராளிகள் 28 பேர் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில்  கடல் கொந்தளிப்பாக இருக்கின்றது. அலையின் வேகமும் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். 
யாழ் கடலில் பரவலாக எல்லா இடங்களிலும் இத்தகையை கொந்தளிப்பு நிலை காணப்படுகின்றது கடந்த சில நாட்களாகவே யாழ் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளமையால் யாழ்ப்பாணத்தில் கரையோரங்களைச்சேர்ந்தவர்கள் கடலையே இன்றுக்காலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவுஸ்திரேலியா மெல்பர்ன் கிரிக்கட் மைதானத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் உணர்வார்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். யுத்தக் குற்றச் செயல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அரசாங்கத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டோர் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் மஹகெலேகம சுதர்சனாராம விகாரையைச் சேர்ந்த பிக்குவை அடுத்தமாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 15 வயதான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்குட்பட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ad

ad