புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2013


நெஞ்சைப் பதற வைக்கும் “நோ பயர் சோன்” காட்சிகள்: டெல்லியில் வெளியிடப்பட்ட காட்சிகள்
இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சனல் 4 தொலைக்காட்சியின் “நோ பயர் சோன்” என்கிற ஆவணப்படம் முதன்முறையாக டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.

தமிழீழ சுதந்திர சாசனம்- உலகப் பரப்பெங்கும் முரசறைவுக்கான அறிமுக அரங்கங்கள்: நாடு கடந்த தமிழீழ அரசாங்க
தாயகம் - தேசிய - தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் பெருவிருப்பினை முரசறையும் தமிழீழ சுதந்திர சாசன வரைவிற்கான அறிமுக அரங்கில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.


பிரபாகரனின் மகன் கொலை விவகாரத்தை விவாதிக்க அனுமதி மறுத்ததால், நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. இதனால், சபை மதியம் 12 வரை ஒத்தி வைக்கப்பட்டது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 14 வயது மகன் பாலசந்திரன் சிங்கள இராணுவத்தினரால் பிடித்து வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட தகவலை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது.

South Africa 131/3 (34.2 ov)
Pakistan
South Africa won the toss and elected to bat
இன்றைய இந்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் 88 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை வீழ்த்தி தமிழ் வீரர் அஷ்வின் சாதனை படைத்துள்ளார் சென்னை மண்ணிலே .பாராட்டுக்கள் .முழு விபரம் கீழே காணலாம் 

Australia 316/7 (95.0 ov)
India
Australia won the toss and elected to bat




          சில ஆண்டுகளுக்கு முன்பு குஷ்பு, திருமணத்திற்கு அப்பாற் பட்ட ஆண்-பெண் உறவுகள் பற்றி கூறிய சில கருத்துக்களுக்காக இங்குள்ள சில அரசியல் இயக்கங்கள் அவர்  தமிழ்ப் பண்பாட்டின் எதிரி என்று கூறி கடுமையாகத் தாக்கியதுபோது





         "ஹலோ தலைவரே... சிறுதாவூரில் ஜெ. தங்கிருப்பதை போன முறையே நாம பேசியிருந்தோம். சசிகலாவும் அங்கேதான் இருக்கிறார்.''-நக்கீரன் 
 அப்பா மகள் உறவு தான் -குஷ்பு -நக்கீரனுக்கு பேட்டி 
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தொனிக்கும் வகையில்  பேட்டியளித்ததற்காக ஸ்டாலின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார் குஷ்பு. தாக்கியவர்களின் செயலை

கோத்தபாய உத்தரவின்படி பாபாலச்சந்திரன் தலைவர் பிரபகாரனின் மகன் என்பதனால் எதிர்காலத்தில் விடுதலை புலிகளின் தலைவராக வரக்கூடும், சிறுவன் என்பதனால் நீதிமன்றத்தால் தண்டனைகள் கொடுக்கமுடியாத சாத்தியங்கள் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதே சரியான முடிவும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு, முரளிதரன் விநாயகமூர்த்தி கூறியுள்ளார்.லசந்திரன் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் கொல்லப்பட்டுள்ளார்-
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில்

போர்க்குற்ற ஆதாரங்கள்! இந்திய அரசு மகிந்தவை காப்பாற்றப் போகிறதா?- இனியும் ஏன் தயக்கம்: தினமணி
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள ஆவணப் படங்கள், சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அவை பத்திரிகைகளிலும் பிரசுரமாகி, உலகமெங்கும்

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: மன்மோகன் சிங் உறுதி
சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று காலை சந்தித்தனர்.

சனல் 4 தொலைக்காட்சிக்கு ஆதாரங்களை வழங்கியது யார்?

இந்தநிலையில், தமக்கான ஆதாரங்களை இலங்கையில் சனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka) என்ற அமைப்பே வழங்கியதாக சனல் 4 ன் பணியாளரும், நோ பயர் சூன் (No Fire Zone)என வெளிவர இருக்கும்

மலேசிய நாடாளுமன்ற கூட்டமைப்பு இலங்கைக்கு எதிராக போர்க்கொடி!
இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வட்டமேசை கூட்டத்தில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானங்களை நாடாளுமன்ற கூட்டமைப்பு நிறைவேற்றியதின்வழி சிறீலங்கா மீதா

புலிகள் ஜெனீவாவை ஆக்கிரமித்து விட்டார்கள்: ரோகான் குணரட்ண !
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஜெனீவாவை ஆக்கிரமித்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார் ரோகான் குணரட்ண. சிங்கப்பூரில் இருந்து இயங்கிவரும் கற்கை மையத்தின் தலைவரும், மகிந்தரின் ஆலோசகருமான ரோகான் குணரட்ண , விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் ஜெனிவாவை முற்றுகையிட்டு விட்டதாகவும், அதற்கான கடுமையான பரப்புரைகளில் அவர்கள் இறங்கிவிட்டதாகவும்
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் பங்கேற்கும் குழுவில் இருந்து, மனிதஉரிமை விவகாரங்களுக்கான சிறிலங்கா அதிபரின் சிறப்புத் தூதுவரான, அமைச்சர் மகிந்த சமரசிங்க கழற்றி விடப்பட்டுள்ளார். 
கடந்த பல ஆண்டுகளாக ஜெனிவா கூட்டத்தொடர்களில் சிறிலங்கா குழுவுக்குத் தலைமை தாங்கி வந்த, அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே,
போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை, போர் வலயத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற முற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு அடியோடு நிராகரித்துள்ளது. 
அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் சிறிலங்காவுக்கான தலைமைப் பிரதிநிதி வைவ்ஸ் ஜுவன்னோனி இது குறித்து கருத்து வெளியிடுகையில்,

மனைவியை கொன்றுவிட்டு சிறை சென்று திரும்பியவர் தாயை கொன்று எரித்தார்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த கோவிலாங்குளம் பெரியகரிசல்குளத்தை சேர்ந்தவர் அழகம்மாள், 65. இவரது மகன் கண்ணன், 35. மனநிலை பாதிக்கப்பட்டவர். 

“நோ பயர் சோன்” இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நாளை திரையிடப்படுகிறது
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள “நோ பயர் சோன்” என்ற ஆவணப்படம் முதல் முறையாக நாளை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் திரையிட்டு
ஐதராபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு, 50 பேர் காயம், மீட்புகுழு விரைவு

ஐதராபாத்தில் 5 இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடித்ததில் 22 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

Photo: இலங்கை வீரர்கள் பங்கேற்பு - ஆசிய தடகளப் போட்டியை தமிழக அரசு நடத்தாது: ஜெ. அதிரடி
பிப் 21, 2013
    
1

இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 20-வது ஆசிய தடகளப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டிகளில் 44 நாடுகளின் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ரூ40 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்தது.

இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயதே ஆன சிறுவன் பாலச்சந்திரனை கைது செய்து இலங்கை அரசு கோரமாகப் படுகொலை செய்திருக்கிற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இது இலங்கையின் அப்பட்டமான போர்க் குற்றம் என்று நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும் இது ஒரு இனப்படுகொலை என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதன் எதிரொலியாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை நாட்டு வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இதனால் தமிழக அரசால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த முடியாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

சர்வதேச போட்டிகளில் இனவெறி கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை அமைந்திருப்பதாகவே கூறப்படுகிறது.
இலங்கை வீரர்கள் பங்கேற்பு - ஆசிய தடகளப் போட்டியை தமிழக அரசு நடத்தாது: ஜெ. அதிரடி -சர்வதேச போட்டிகளில் இனவெறி கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை அமைந்திருப்பதாகவே கூறப்படுகிறது.

இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.

21 பிப்., 2013

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் நடத்தப்பட்டு வரும் மாவட்ட  கழகங்களுக்கிடையிலான போட்டியில் அம்பாறை மாவட்ட அணி அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
திருகோணமலை நகரசபை மைதானத்தில் நடைபெற்ற  அரை இறுதி நுழைவுக்கான போட்டியில் திருகோணமலை மாவட்ட அணியை நான்கிற்கு மூன்று என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற இருக்கும் மனித உரிமை கவுன்சில் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக விசாரணையை அமெரிக்கா கொண்டு வருவதுநிச்சயமாகிவிட்டது. 
இலங்கைக்கு வந்த அமெரிக்க இராஜதந்திரக் குழு இலங்கையில் வைத்தே அதனைக் கூறிவிட்டது. பொறுப்புக்கூறல் தொடர்பான நடவடிக்கை முறை பற்றியே பிரேரணையில் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப் பிரேரணை மூலம் மேலும் ஒரு வருட கால
மிலன் அணிக்கெதிரான சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி தோல்வியடைந்தது.
உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் 58 ஆவது சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகரங்களில் நடக்கிறது

நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் இந்தியா, பிஜி அணிகள் மோதின. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் மழை பொழிந்த இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 16-0 என்று வெற்றி பெற்றது.
உலக ஹொக்கி லீக் போட்டியில் இந்திய அணி, பிஜியை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. சர்வதேச ஹொக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.,) சார்பில் உலக ஹொக்கி லீக் தொடர் நடத்தப்படுகிறது.

தமிழகக் கட்சிகளின் கடும் அழுத்தத்தில் சிக்கியிருக்கும் டில்லி


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான மகன் பாலச்சந்திரன் பதுங்கு குழிக்குள் தடுத்து வைக்கப்பட்டு அதன் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பான புகைப் படங்களை பிரிட்டனின் சனல் 4 வெளியிட்டதையடுத்து தமிழக கட்சிகள் ஆளும் ஐக்கிய முற்போக்குக்

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தட களப் போட்டியின் 19 வயதுப் பிரிவு பெண்களுக்கான குண்டெறிதலில் வெண்கலப்பதக்கத்தையும்,தட்டெறி தலில் வர்ண விருதினையும் பெற்ற இராஜமனோகர் தர்சிகா வவுனியா மாவட்டத்திற்கும், வடமாகாணத் திற்கும் பெருமை சேர்த்தார்.
அயராத முயற்சியும், நேரம் தவறாத பயிற்சியும், பெற்றோரின் ஊக்குவிப்பும் இருந்தால் எதிலும் எவரும் சாதிக்கலாம். அந்த வகையில் பாடசாலை
அவுஸ்ரேலியாவில் உயரம் பாய்தல் யாழ்.இந்துவீரன் இரண்டாமிடம்.

அவுஸ்ரேலியா அல்பேட் பார்க்கில் நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டியில் யாழ். இந் துக்கல்லூரி வீரன் இரத்தின சிங்கம் செந்தூரன் 16 வயதுக் குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் நிகழ்வில் 1.95 மீற்றரைக் கடந்து இரண்டாமிடத் தைத்தட்டிக்கொண்டார்.

நேற்று மாலை இப்போட்டி நடை பெற்றது. இவர் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 1.92 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனை முறியடிப்புச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வடக்கில் இருந்து சென்ற ஒரே ஒரு வீரர் இவர் ஆவார்.
இவரது இந்த வெற்றிக்குக் கல்லூரி அதிபர், விளையாட் டுத்துறைப் பொறுப்பாசிரியர் சுவாமிநாதன் மற்றும் பயிற்சியாளர் செ.றமணன் ஆகியோர் வழி அமைத்துக் கொடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மாத்தளையில் கோயில் கொண்டு எமையாளும் அன்னை முத்துமாரி
 

பாலச்சந்திரன் மே 19 இல் படுகொலை; தடய ஆய்வில் புதிய தகவல்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் 2009 மே 19ஆம் திகதி நண்பகல் அளவில் கொல்லப்பட்டுள்ளதாக தடயவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

திருச்சியில் சிங்கள எம்.பிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : நாம் தமிழர் 12 பேர் கைது
சிங்கள எம்பி ஆர்.கே.பி. கேமேஜ்,  சீர்காழி அருகே உள்ள திருக்கடையூரில் ஆலய தரிசனம் செய்ய வந்தார்.  அப்போது அவர் ஆலய விடுதியில் தங்கியிருந்தார்.

இறுதிபோரில் வெறியாட்டம்: சானல்-4 ன் புதிய வீடியோ ஆதாரம்

பிரபாகரன் மகன் பாலசந்திரனை சிங்கள ராணுவத்தினர் பிடித்து வைத்து கொன்ற வீடியோ ஆதாராத்தை இங்கிலாந்து டி.வி.யான சானல்-4 வெளியிட்டது.

பாலச்சந்திரனின் படுகொலைப் புகைப்படம், காணொளி குறித்து கருத்துக் கூற முடியாது நாங்கள் அந்த காணொளி மற்றும் புகைப்படங்களை பார்த்தோம். அது தொடர்பான அறிக்கையும் எமக்கு கிடைத்துள்ளது. ஆனால் அது குறித்து இப்போதைக்கு கருத்து கூற முடியாது. எ: பான் கீ மூனின் பேச்சாளர்
இலங்கை குறித்து ஐநாவின் உள்ளக குழு மூன்று அறிக்கை தயாரித்துள்ளது. இது இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்களை ஆராய்வதற்கு அல்ல. அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதற்

இலங்கை வீரர்கள் பங்கேற்றால் ஆசிய தடகள போட்டியை தமிழகத்தில் நடத்த விடமாட்டேன்: ஜெயலலிதா-துணிச்சலான முடிவு மதிய அரசுக்கே சவாலான நடவடிக்கை 
சென்னையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் 20வது ஆசிய தடகள போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால், தமிழர்களின் மனம் புண்படும் என்பதால் தமிழகத்தில் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், 20வது ஆசிய தடகள போட்டிகளை சென்னையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில், இலங்கைவாழ் தமிழர்கள் சுயமரியாதையுடனும் சம உரிமையுடனும் கௌரவத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு எப்போதும் உறுதியாக உள்ளது.
இலங்கை இராணுவ வீரர்களுக்கு தமிழகம் உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி பிரதமருக்கு பல கடிதங்களை எழுதியுள்ளேன்.
இந்த சூழ்நிலையில், பிரபாகரனின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக 12 வயது சிறுவன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் சுட்டுத் தள்ளிய கோர காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இது மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும்.
இவற்றை எல்லாம் பார்க்கும்போது, ஜெர்மனியில் ஹிட்லர் நிகழ்த்திய இனப் படுகொலையை விஞ்சும் அளவுக்கு இலங்கையில் இனப் படுகொலை நடந்து இருப்பது தெரிய வருகிறது.
இலங்கை அரசு, அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, வரும் ஜூலை மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் 20வது ஆசிய தடகள போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துவிடும்.
இலங்கை வீரர்கள் 20வது ஆசிய தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இதை இலங்கை அரசுக்கு உரிய முறையில் தெரிவிக்குமாறும் சிங்கப்பூரில் உள்ள ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலாளருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் கடிதம் எழுதப்பட்டது. அதன் நகல்கள் மத்திய அரசின் வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் விளையாட்டுத் துறை செயலாளருக்கும் அனுப்பப்பட்டன. இருப்பினும், இதுநாள் வரை ஆசிய தடகள கழகத்திடம் இருந்து எந்த பதிலும், தகவலும் தமிழக அரசுக்கு வரவில்லை.
ஆசிய தடகள கழகத்திடம் இருந்து எந்த சாதகமான பதிலும் வராத சூழ்நிலையில், இலங்கை நாடு பங்கேற்கும் ஆசிய தடகள போட்டிகளை தமிழகத்தில் நடத்துவது என்பதை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவுள்ள 20வது ஆசிய தடகளப் போட்டிகள் தமிழக அரசால் நடத்தப்படாது.
இந்தப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என்பதால் வேறு எங்கேனும் நடத்திக் கொள்ளுமாறு ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலாளர் தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்படுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம்: இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழக கட்சிகள் முடிவு! நாடாளுமன்றத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் முழக்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று இன்று ஆரம்பமாகவுள்ள இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரச்சினை எழுப்ப திமுக, அதிமுக,


எச்சரிக்கை 
அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த தகவலை வெளியிட்டார். ஆக புலம்பெயர் தமிழர் யாராக இருந்தாலும் வெளிநாடொன்றில் குடியுரிமை பெற்று இருந்தால் அவர்கள் சொத்துக்களை இலங்கையில் வாங்க முடியாது.விரைவில் வெளிநாட்டில் உள்ளோரின் சொத்துக்களை கூட கையக படுத்தும் சட்டமூலம்  வர இருப்பதாக அற்கிறோம் . வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் கனி வீடு போன்ற சொத்துகளை வாங்கவோ விற்கவோ வைத்திருக்கவோ முடியாத நிலை உருவாகும் 


பிரித்தானியக் குடியுரிமை பெற்ற யாழ்ப்பாணத்து நபர் கடந்த 10ம் திகதி கொழும்பில் காணாமல் போயுள்ளார் என்று யாழ். பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்தவரும் யாழ்.ஈச்சமோட்டைப் பகுதியில் வசித்தவருமான ஆறுமுகம் யோகேஸ்வரன் (வயது37) என்பவரே காணாமல் போயுள்ளதாக யாழ். பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழர்களால் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட தமிழ் ஆர்வலர் டி ஆர் ஜனார்த்தனம் இன்று சென்னையில் காலமானர்.
அவருக்கு வயது 75. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
1965 ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்ற அவர், அண்ணாவின் நாடகங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில், தடையை மீறி அவர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போதுதான், 9 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விடுமுறையை கழிக்க தங்கியுள்ள இடத்தில் தடையை மீறிப் பறந்த விமானங்கள் கட்டாயமாக தரையிறக்கப்பட்டன!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விடுமுறையை கழிக்க தங்கியுள்ள புளோரிடா மாநிலம் பாம் சிட்டி ரெசார்ட் பகுதியின் மேல், தடையை மீறிப் பறந்த மொத்தம் 3 விமானங்கள், போர் விமானங்களால் சூழப்பட்டு


சென்னை டெஸ்ட்: சேவாக்குடன் தொடக்க வீரராக களம் இறங்குவது யார்?
மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி வருகிற 22-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில்

இலங்கைக்கு எதிரான பிரேரணைகளைத் தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கத் தயார்!- ரஷ்ய தூதுவர்
ஜெனிவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் அனைத்து பிரேரணைகளையும் தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான ரஷ்யாவின் புதிய தூதுவர் அலெக்ஸாண்டர் ஏ. கர்ச்சாவா தெரிவித்துள்ளார்.


இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் - பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் இலங்கை விடயம் தொடர்பில் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கான மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர், நேற்று மன்மோகன் சிங்கை சந்திதத போது, இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இதில் தமிழர்கள் தொடர்பாக பேசிக் கொள்ளப்பட்ட விரிவான விடயங்கள் தொடர்பில் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சனல்- 4 இன் புதிய வெளியீடு 'நோ பயர் சோன்': அடுத்த மாதம் ஐநா பேரவையில் வெளியிடப்படும்
“இலங்கையின் கொலைக்களம்” என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கெல்லம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

20 பிப்., 2013


பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரூசெல்ஸ் விமான நிலையத்தில் 50மில்லியன் டொலர் டைமன் வைரக்கற்கள் கொள்ளை

 ப்ரூசெல்ஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் எயர் பயணிகள் விமானத்திலிருந்து பெறுமதியான டைமன் வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் நேற்று மாலை 7.47மணியளவில் இடம்பெற்றது. ஆயுதம் தாங்கிய எட்டுப்பேர்

 தமிழ் வளர்ச்சித் துறைக்கான இணையதளம் 
தமிழ் வளர்ச்சித் துறைக்காக உருவாக்கப்பட்ட www.tamilvalarchithurai.org என்ற புதிய வலைதளத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.


புதிய தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற அனுமதி
தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலகத்தை அரசு மருத்துவமனையாக மாற்றலாம் என்று பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.   மேலும்,  பசுமை தீர்ப்பாயத்தில் மருத்துவமனைக்கு எதிராக  வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
JAYALAITHA SPEECH
<iframe width="853" height="480" src="http://www.youtube.com/embed/l7X_1qJiPKs" frameborder="0" allowfullscreen></iframe>

சனல்4ன்ஆவணப் படத்தின் ஒரு பகுதி தமிழில் விளக்கங்களுடன் காணொளி


ஈழத்தில்
நடந்தது இனப் படுகொலையே என்பதை தமிழில் மொழிமாற்றி புதியதலைமுறை தொலைக்காட்சி தமிழகத்தில் ஒளிபரப்பிய காணொளி அனைவரும் இதனை பார்க்க வேண்டும் சனல் 4 ன் ஆவணப் படத்தினையே வெளியீட்டுள்ளது ….தமிழன் நிமிராத வரை இதை விட மிகப் பெரிய படுகொலைக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்

2013 ஆம் வருடத்திற்கான வேலணை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.PHOTOS

ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவைக்கு மன்னார் ஆயர் கடிதம்

ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் கடந்த 19 ஆவது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையிலும் பார்க்க பொறுப்பு கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விடயங்களில் நடவடிக்கையுடன் கூடிய


பிரபாகரன் மகன் படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை: சல்மான் குர்சித்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படையினரால் உயிருடன் பிடித்து வைத்துக் கொல்லப்பட்ட ஒளிப்படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று இந்திய வெளிவிவகார



மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பாலச்சந்திரனின் விவகாரம் கொண்டு வரப்படும்

இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த பிரபாகரனின்

இலங்கை அரசை எதிர்த்து கண்டன அறப்போர்: வைகோ

இலங்கை அரசை எதிர்த்து மார்ச் 4ம் தேதி தமிழகமெங்கும் கண்டன அறப்போராட்டமும், இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தெல்லிப்பழைக்கும், ஜெனீவாவுக்கும் இந்த அரசு ஒரே மாதிரியான பதிலை சொல்லி தப்ப பார்க்கிறது!- மனோ கணேசன
தெல்லிப்பழை அமைதி ஆர்ப்பாட்டத்தில் உள்நுழைந்து குழப்பம் விளைவித்த சட்டவிரோதிகளை நான் என் கண்களால் கண்டேன். இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் இவர்களது படங்கள் இணையதளம் மூலம் உலகம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டன.
பாலச்சந்திரன் படுகொலை படங்கள்! இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன், இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும்

பாலச்சந்திரன் படுகொலை படங்கள்! இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன், இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித

இலங்கை மீது பொருளாதாரத் தடையை அமுல்படுத்து! இல்லையேல் இலங்கை நிறுவனங்களை நிரந்தரமாக அப்புறப்படுத்துவோம்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது இளைய மகனான 12 வயது பாலகன் பாலச்சந்திரனை மிகக் கோரமான முறையில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசை மிகவும் வன்மையான குரலில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கண்டித்திருப்பது
65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்வர் துவக்கி வைத்தார் (படம்)




மீண்டும் அதிமுகவில் சேருவதற்காக கடிதம் எழுதியிருக்கிறேன் : எஸ்.வி.சேகர் 
நடிகர் எஸ்.வி. சேகர் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியானது
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, கர்நாடகாவின் பல்வேறு 
எதிர்ப்புகளையும் மீறி இன்று அரசிதழில் வெளியானது.


பிரபாகரன் மகன் கொலை: நெருக்கடியில் சிக்கிய இலங்கை அரசு 
 

இலங்கை இறுதிகட்ட போரின் போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இளைய மகன் பாலசந்திரன் இறந்ததாக இலங்கை அரசு தெரிவித்து வந்தது. ஆனால் அது உண்மையல்ல  பொய் என சேனல் - 4 ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது. 

ஜெயலலிதாவைப் பற்றிய அவதூறு : தடுத்து நிறுத்தினார் கனிமொழி!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி தி.மு.க நிர்வாகி ஒருவர் மிகவும் தரக்குறைவாக பேசியபோது அதை உடனே நிறுத்த உத்தரவிட்டார் தி.மு.க எம்.பி கனிமொழி.


பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மன்னிக்கவே முடியாத போர்க் குற்றம்: ஜெயலலிதா கண்டனம்

பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மன்னிக்கவே முடியாத போர்க் குற்றம்: ஜெயலலிதா கண்டனம

இலங்கை அரசை கண்டித்து மார்ச் 4ல் அதிமுக சார்பில் அறப்போராட்டம் நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 
உலகின் பாரிய தேடுதல் தளமான விக்கிபீடியா வில் கட்டுரை களை எழுதத்  தொடங்கியதையிட்டு எனக்கு வந்த நன்றி கடிதம் எனது முதல் கட்டுரையே புங்குடுதீவு என்பதாகும் 
சிவ-சந்திரபாலன் 


நன்றி

வணக்கம் சிவா சந்திரபாலன், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். புங்குடுதீவு கட்டுரையில் பல தகவல்களைச் சேர்த்து வருவதற்கு நன்றி. பிரபலமான நூல்கள் என்ற உப தலைப்பில் சேர்த்த பட்டியல்கள் அனைத்தும் தலைப்புக்குப் பொருத்தமில்லாதவை. அவை புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் எழுதிய பிரபலமான நூல்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் அவை புங்குடுதீவைப் பற்றியவை அன்று. இதனால் அவற்றை நீக்கியிருக்கிறேன். புங்குடுதீவு பற்றி எழுதப்பட்ட நூல்களின் விபரங்கள் உங்களிடம் இருந்தால் அவற்றைச் சேருங்கள். நூலகத்தில் இருக்கும் இரண்டு நூல்களைப் பறிய விபரங்களை வெளி இணைப்புகளாகத் தந்திருக்கிறேன். மேலும் விளக்கம் தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 00:30, 21 அக்டோபர் 2012 (UTC)

[தொகு]சில கருத்துகள்

வணக்கம் சிவா-சந்திரபாலன். பார்க்க மடத்துவெளி சனசமூக நிலையம் மற்றும் எஸ். கே. மகேந்திரன். ஆங்கிலத்தில் கட்டுரைகளுக்கு தலைப்பிடுவதில்லை ஆதலால் தமிழில் மாற்றப்பட்டுள்ளது, மேலும் அக்கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் மற்ற வலைத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன, இதுவிக்கிப்பீடியா:பதிப்புரிமை மீறலாகும், இது குறித்து உங்கள் விளக்ககளை இங்கேயோ, கட்டுரை பேச்சுப் பக்கத்திலோ தெரிவிக்கவும், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு)02:17, 27 அக்டோபர் 2012 (UTC)

[தொகு]பயனர் பக்கம்

வணக்கம், Siva-sandrabalan! உங்களைப் பற்றிய விவரங்களை உங்களுடைய பயனர் பக்கத்தின் கொடுத்தால் பிற விக்கிப்பீடியர்களும் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும். ஏதேனும் சந்தேகம் எழுந்தால் என்னுடைய பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:48, 28 அக்டோபர் 2012 (UTC)

[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ள ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோவை, அந்த வழியாக சென்ற முதல்வர் ஜெயலலிதா திடீரென சந்தித்தமை அரசியல் களத்தில் மாற்றம் ஏற்பட வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் முழுமையாக மது விலக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ம.தி.முக பொதுசெயலர் வைகோ கோவளத்தில்

சிறிலங்காவிற்கு ஐ.நா மனிதஉரிமை சபை இராஜதந்திரக்களமாக மாறியுள்ளது: வி.உருத்திரகுமாரன்

ஐ.நா மனித உரிமை சபைக்கூட்டத் தொடர் சிங்கள அரசுக்கு இராஜதந்திரப் போர்களமாக மாறியுள்ளதோடு, ஐ.நா மனித உரிமைச் ஆணையாளர் நவநீதிம்பிள்ளையினால் வெளியிடப்படும் கண்டனங்கள் சிங்கள அரசுக்கு தூக்குக்கயிறாகவும் மாறிவருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்

இலங்கை அரசை கடுமையாகச் சாடியுள்ள நவநீதம்பிள்ளை! ஜெனீவாவில் நெருக்கடி நிலை: சனல்4 ஊடகம்
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பரான் சவுகரலி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

19 பிப்., 2013

ஒரு சுவாரஸ்மான கட்டுரை படித்து ரசியுங்கள் 
தமிழகம் பல கேவலங்களைச் சந்தித்திருக்கிறது… பல கேவலமான தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இந்த வழக்கு கேவலமானதல்ல. கேவலத்திலும் கேவலமானது.. இது பற்றிப் பேசும்நான் மனிதனும் அல்ல. இந்திய அரசியலிலே உள்ள பல கேவலமான மனிதர்களை போலத்தான் நானும்.
இன்றைய புதிய தலைமுறை நிகழ்சிகளில் ஏராளமான ஒளிபரப்புகள் வருகின்றன பார்க்கத் தவறாதீர்கள் 
www.puthiyathalaimurai.tv

இப்போது ஒளிபரப்பாகிறது  பார்க்கலாம் 

பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பாக வெளியிட்ட புகைப்படம் உண்மையானது! சனல் 4 இயக்குனர் உறுதி!! இரவு 8மணிக்கு பார்க்கவும்!!!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்பட ஆதாரத்தை சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள நிலையில் அதனை ஆதாரமற்றதாக சிறிலங்கா அரசுதரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பப்பட்டுவரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி சனல்4 இயக்குனரை நேரடியாக தொடர்புகொண்டுள்ளது. இந்த உரையாடல் இன்னும் சற்று நேரத்தில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் 8 மணியளவில் உளிபரப்பாக உள்ளது. 

பாலச்சந்திரனின் புகைப்பட ஆதாரத்தை மறுப்பது சிறிலங்கா அரசின் முட்டாளத்தனம் - கெலன் மெக்ரே!!!

சனல்4 தொலைக்காட்சியால் வெளியடப்பட்டுள்ள பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவை உண்மைக்கு புறம்பானவை என சிறிலங்கா அரசுதரப்பில் தெரிவித்ததை மறுத்துள்ளார் கெலன் மெக்ரே.

சனல்4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனரான கெலன் மெக்ரே புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய நர்கானலில் இதனை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதாக முன்னர் வெளியான புகைப்படமும் தற்போது வெளியடப்பட்டுள்ள புகைப்படங்களும் ஒரே புகைப்பட கருவியால் படம்பிடிக்கப்பட்டுள்ளதாக உலகப்பிரபல்யம் பெற்ற தடயவியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டடுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது திட்டமிட்ட படுகொலை எனத் தெரிவத்த கெலன் மெக்ரே இதனை பொய்யானதென சிறிலங்கா அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு முயற்சிப்பது சிறிலங்கா அரசின் முட்டாள்த்தனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதாக கெலன் மெக்ரே மேலும் தெரிவித்துள்ளார்.
 


http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-balachchandran%20(2).jpg

ஸ்ரீ கருடாழ்வான் என்றவரின் முக நூலில் இருந்து நன்றி 
முகப்புத்தகம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும், அன்னை சோனியாவை அரக்கியாகவும், ராகுல் காந்திக்கு இது போல் நடக்க வேண்டும் என்று சாபம் கொடுத்தும் தங்கள் தமிழ் பற்றை காட்டிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

சந்தடி சாக்கில் நாம் சில விஷயங்களை மறக்கக் கூடாது.

வன்னி மக்களது அவலக்கதைகளால் திக்குமுக்காடிப்போயினர் எதிரணி கூட்டமைப்பினர்

வன்னி மக்களது அவலக்கதைகளால் திக்குமுக்காடிப்போயினர் எதிரணி கூட்டமைப்பினர்.குறிப்பாக இக்குழுவினில் அடங்கியிருந்த எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மக்களது கேள்விக்கணைகளால் அதிர்ந்து

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,மீண்டும் ஏகமனதாகத் தெரிவு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளராக செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளராக வி.மணிவண்ணன் ஆகியோர் மீண்டும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்படடுள்ளனர்.

பிஸ்கட் சாப்பிடக் கொடுத்துவிட்டு சுட்டுக் கொலை

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவேளை, அவரை ஒரு பகுதுங்கு குழிக்கு ஓராமாக அமரச்சொல்லியுள்ளது இராணுவம். பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் பக்கட் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அவர் உண்ணும்போது, அவர் பிறிதொரு இடத்தை

பாலச்சந்திரன் காணொளிக்காக காத்திருக்கும் ஜெயலலிதா
விடுதல‌ை‌ப்பு‌லிக‌ள் அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் ‌பிரபாகரன் மக‌ன் ‌வீடியோவை பா‌ர்‌த்த ‌பி‌றகு கரு‌த்து தெ‌ரி‌வி‌‌ப்பதாக முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா இன்று கூ‌றியு‌ள்ளா‌ர். விடுதல‌ை‌ப்பு‌லிக‌ள் அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் ‌பிரபாகர‌‌னி‌ன் இளையமக‌னான
வைகோவுடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நடைபயணம் மேற்கொண்டு வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வை முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.
சென்னையில் மலிவு விலை உணவகங்களை ஜெ. இன்று திறந்து வைத்தார்


சென்னை நகரில் முதலில் 200 வார்டுகளிலும் தலா ஒரு உணவகம் வீதம் 200 உணவகங்கள் திறக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு உணவகம் வீதம் 15 உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகங்களில் இட்லி, தயிர்சாதம், சாம்பார் சாதம் ஆகியவை விற்கப்படுகிறது. காலை 7 மணிமுதல் 10 மணி வரை இட்லி விற்கப்படும். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தயிர்சாதமும், சாம்பார் சாதமும் விற்கப்படும். இந்த உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று மதியம் 12.05 மணியளவில் சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அருகிலுள்ள மாநகராட்சி கட்டிடத்தில் தொடங்கி வைத்தார்.

ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. உணவகத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 15 உணவகங்களுக்கான கல்வெட்டுகளையும் திறந்து வைத்தார். 


அதன் பிறகு உணவு கூடத்துக்குள் சென்று இட்லி, சாம்பார் மற்றும் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை தயாரிக்கப்பட்டு இருப்பதை பார்வையிட்டார். உணவகத்தை நிர்வகிக்கும் சுயஉதவி குழு பெண்களிடம் எப்படி உணவு தயாரிக்கிறீர்கள் என்று விசாரித்தார். உணவகத்தை நல்லபடியாக நடத்துங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

தொடக்க விழாவையொட்டி இன்று வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக ரவா கேசரி வழங்கப்பட்டது. இங்கு தொடங்கி வைக்கப்பட்ட அதே நேரத்தில் மற்ற 14 இடங்களிலும் மலிவு விலை உணவகங்கள் செயல்படத் தொடங்கின. 

இன்று திறக்கப்பட்ட 15 உணவகங்கள் அமைந்துள்ள பகுதிகள் : 

      
திருவொற்றியூர் மண்டலம், 11வது வார்டு, மாநகராட்சி வணிக வளாகம் டி.எச்.சாலை.


மணலி மண்டலம், 19 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், 29-வது தெரு, மாத்தூர்.

மாதவரம் மண்டலம், 24 வது வார்டு, சமுதாய கூடம், சூரப்பட்டு. 

தண்டையார் பேட்டை மண்டலம், 48 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பொம்மி சிவராமுலுதெரு, வண்ணாரப்பேட்டை. 

ராயபுரம் மண்டலம், 55 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், நாட்டுபிள்ளையார் கோவில் தெரு, மண்ணடி. 

திரு.வி.க.நகர் மண்டலம், 79வது வார்டு, பழைய மண்டல அலுவலகம், அம்பேத்கர் சாலை, புளியந்தோப்பு 

அம்பத்தூர் மண்டலம், 73வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், கட்டபொம்மன் தெரு, ஒரகடம்.

அண்ணாநகர் மண்டலம், 103வது வார்டு, பழைய மண்டல அலுவலகம், டெய்லர்ஸ் ரோடு, கீழ்ப்பாக்கம். 

தேனாம்பேட்டை மண்டலம், 126வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், சாந்தோம் நெடுஞ்சாலை. 

கோடம்பாக்கம் மண்டலம், 136வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், சிவஞானம் சாலை, தி.நகர். 

வளசரவாக்கம் மண்டலம், 146 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பூந்தமல்லி ரோடு, வடக்குமாடவீதி அருகில், மதுரவாயல். 

ஆலந்தூர் மண்டலம், 166 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், நேரு நெடுஞ்சாலை, நங்கநல்லூர். 

அடையாறு மண்டலம், 181வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பி.ஜி.இ. காலனி, குப்பம் கடற்கரை சாலை, திருவான்மியூர். 

பெருங்குடி மண்டலம், 184 வது வார்டு, வணிக வளாகம், அண்ணா நெடுஞ்சாலை. 

சோழிங்க நல்லூர் மண்டலம், 195வது வார்டு, குடிசை மாற்று வாரிய தொழிற்பயிற்சி கூடம், கண்ணகி  நகர் 2-வது பிரதானசாலை, துரைப்பாக்கம்.



பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்: உயிரோடு பிடிக்கப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளான்! - தெ இன்டிப்பென்டன்ட் பத்திரிகை
முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளால் உலகமே அதிர்ச்சியுற்றிருக்கையில், இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என The Independent  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெர்மானிய நாஜிகள் நடத்திய படுகொலைகளைவிட, சிங்களவன் செய்த தமிழ் இனக்கொலைகள், அதிலும் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஈவு இரக்கம் இன்றிக் கொன்றுகுவித்த பின்னும், இன்னுமா மனிதகுலத்தின் மனசாட்சி விழிக்கவில்லை? உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? இப்படி எத்தனை எத்தனை பாலச்சந்திரன்கள் சிங்களவனால் கொல்லப்பட்டனர்?வைகோ,

இன்னுமா மனிதகுலத்தின் மனசாட்சி விழிக்கவில்லை? உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? இப்படி எத்தனை எத்தனை பாலச்சந்திரன்கள் சிங்களவனால் கொல்லப்பட்டனர்? என்று மதிமுக பொதுச் செயலாளர்  பாலச்சந்திரனின் கொடூரக் கொலை குறித்து ஆதங்கத்துடன்

மருதானையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு: 13 பெண்கள் கைது
கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குட்பட்ட பிரபல பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் செயற்பட்டு வந்த விபசார விடுதியொன்று நேற்று திங்கட்கிழமை பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டது.

இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துமாறுகோரி 132 கிறிஸ்தவ குருமார் ஐ.நாவுக்கு கடிதம்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என கோரி மன்னார் ஆயர் உட்பட வடக்கு, கிழக்கை சேர்ந்த 132 கிறிஸ்தவ குருமார் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தீபம் தொலைக்காட்சியை விடுதலைப்புலிகள் விலைக்கு வாங்கியுள்ளனர்- தினக்கதிர் 


லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் விலைக்கு வாங்கியுள்ளனர்.  நோர்வேயில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் மக்களவையை சேர்ந்தவர்களே இதனை வாங்கியுள்ளனர்.  தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளர் துரை பத்மநாதன் நிதிமோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது காவல்துறையினர் சட்டநடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து தீபம் தொலைக்காட்சி நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. இந்நிலையில் அத்தொலைக்காட்சியை வாங்குவதற்கு பலரும் முயற்சி செய்த போதிலும் அதிக பணத்தை நோர்வேயில் உள்ள இத்தமிழர்கள் கொடுத்ததால் தீபம் தொலைக்காட்சி கைமாறி உள்ளது.
தீபம் தொலைக்காட்சி நோர்வேயில் உள்ள விடுதலைப்புலிகளால் வாங்கப்பட்டுள்ளதால் ஒரு சிலர் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் முக்கியமான ஒருவர் தீபம் தொலைக்காட்சியின் முக்கிய நபராக கருதப்படும் அனாஸ். அனாஸ் ஒரு நல்ல அறிவிப்பாளர், ஊடகவியலாளர், ஆனால் தீபம் தொலைக்காட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டுமாக இருந்தால் சில விடயங்களை அவர் செய்ய வேண்டி ஏற்படலாம்.------------


-தணிக்கை செய்துள்ளோம் முழுவதையும் பிரசுரிக்க முடியவில்லை மன்னிக்கவும் 

கள்ளக் காதலனோடு சேர்ந்து கட்டிய கணவன் தலையில்  கல்லை போட்டு கொன்ற பெண்ணை சின்னஞ்சிறிய பெற்ற பிள்ளைகளே  கேள்வி கேட்கும் அதிசயம் பாரீர் 
குதிரையிறைச்சியில் கலப்படம்
சுவிட்சர்லாந்தின் போஆப் என்ற தகவல் தொடர்பாளி அளித்தபேட்டியில் கோமிகல் என்ற பிரான்ஸ் நிறுவனம் தயாரித்த லாசாக்னா என்ற உறைந்த இறைச்சியில் மாட்டிறைச்சியோடு குதிரையிறைச்சியும் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

ad

ad