புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2013


யாழில் பத்திரிகை செய்தியாளர் மீது படைப்புலனாய்வாளர்கள் தாக்குதல்! மருத்துவமனையில் அனுமதி
யாழ்.குடாநாட்டில் ஊடகங்கள் மீது தொடரப்பட்டு வரும் வன்முறைகளில் ஒரு பகுதியாக இன்று யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்றின் செய்தியாளர் ஒருவர் இராணுவப் புலனாய்வாளர்களால் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உ. ஸ்ராலின் (வயது24) என்ற இளம் பத்திரிகையாளரே தாக்கப்பட்டுள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சர்வதேச மன்னிப்புச்சபை மன்மோகன் சிங்கிடம் மனு கையளிப்பு
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்தரமான சர்வதேச விசாரணையை வலியுறுத்துமாறுகோரி, 14 லட்சம் இந்தியர்கள் கையெழுத்திட்ட மனுவை டெல்லியில் பிரதமர்

கடலூர் மணி குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்
-----------------------------------------------------------
ஈழத் தமிழரைப் படுகொலை செய்த இராஜபக்சே அரசை எதிர்த்து மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி தீக்குளித்து இறந்த கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சார்ந்த மீனவச் சகோதரர் மணி அவர்களது இல்லத்திற்குப் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று (08.03.2013 வெள்ளிக்கிழமை காலை) சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி வீர வணக்கம் செலுத்தினார். மணி அவர்களின் துணைவியார், இரண்டு புதல்வர்கள், ஒரு புதல்வி, தாயார் உள்ளிட்ட உறவினர்களிடம் இரங்கல் தெரிவித்தார்.

கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுடன் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.இ. சத்யா, கடலூர் மாவட்டச் செயலாளர் என்.இராமலிங்கம், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் க. சோமு, தேர்தல் பணிச் செயலாளர் ந. மனோகரன், நாகை மாவட்டப் பொறுப்பாளர் ஏ.எஸ். மோகன், கடலூர் ஒன்றியச் செயலாளர் குணசீலன் மற்றும் ஏ.கே. சேகர் உள்ளிட்ட கழகத் தோழர்கள் சென்றிருந்தனர்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8கடலூர் மணி குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்

ஈழத் தமிழரைப் படுகொலை செய்த இராஜபக்சே அரசை எதிர்த்து மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி தீக்குளித்து இறந்த கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சார்ந்த மீனவச் சகோதரர் மணி அவர்களது இல்லத்திற்குப் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ

8 மார்., 2013

ஆவடி : ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 இளைஞர்கள் லாரி மோதி பலி
 
ஆவடியை அடுத்த வீராபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ரெட்டியப்பன் மகன் வெங்கடேஷ் (வயது19). தனியார் கல்லூரி பஸ்சில் கிளீனராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்தராவ் மகன் நரேஷ் (17) 10-ம் வகுப்பு மாணவர்

ஆ.ராசா எழுத்து வடிவில் பதிலளிக்க பாராளுமன்ற கூட்டு குழு அனுமதி
 மத்திய அரசுக்கு  லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெ

Sri Lanka 335/3 (80.3 ov)
Bangladesh
Sri Lanka won the toss and elected to bat

இன்று காலை முதல் சென்னை நுங்கம்பாக்கம் இலயோல கல்லூரி மாணவர்கள் அய்கப் வளாகத்தில் இலங்கை அரசை கண்டித்தும் , இந்தியாவை கண்டித்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ,
சிங்கள தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும் , இலங்கையின் மீது பொருளாதாரத் தடை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்க வேண்டும் ,
உலகத் தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு வெளியுறவுத் துறை அமைக்க வேண்டும் ,
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் செய்து கொண்டிருகிறார்கள் . இதில் 10 மாணவர்கள் இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்கள் போராட்டம் செய்யும் பகுதி இலங்கை தூதரகம் அருகில் உள்ளதால் அப்பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர் . மாணவர்களுக்கு அனைத்து கட்சித் தலைவர்களும் ஆதரவு தர வேண்டுகிறோம் . மாணவர் போராட்டம் வெல்லட்டும் .



இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம்
 

தமிழ் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் உள்ள தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் இன்று (08.03.2013) முதல் சென்னை லயோலா கல்லூரி அருகே உள்ள தேசிய அய்க்கப் அரங்கத்தில் ஜோபிரிட்டோ, திலீபன், சாஜிபாய் ஆண்டனி, லியோ, சண்முகப்பிரியன், பிரசாத், அனிஷ், பால் ஆகிய 8 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளன

போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்:
சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் இன்று (08.03.2013) உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்

அந்த 17,500 பேர் எங்கே? புலிகளின் தளபதி எழிலன் மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது!
"இதுதான் பிரபாகரன் வீடு!''  ''இது தமிழ்செல்வன் மீது பம்ப் அடிச்ச இடம்!''  ''இங்கேதான் புலிகள் கடைசியாக விழுந்தாங்க!'' - இவை எல்லாம் வன்னி நிலம்பற்றிய சிங்கள சுற்றுலாப் பயணிகளின் குறிப்புகள்.
6-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 9 அணிகளும் தங்களது இறுதி அணியை அறிவித்துள்ளன. 
2 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 பேர் கொண்ட அணியை அறிவித்து உள்ளது. 
புஜாரா மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த டோனி மனைவி
அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஐதராபாத் டெஸ்டில் இளம் வீரர் புஜாரா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.

இலங்கை விவகாரம்! சல்மான் குர்ஷித் வழக்கமான பதிலையே தந்ததால் திமுக, அதிமுக, பாஜக வெளிநடப்பு
லோக்சபாவில் இலங்கை விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வழக்கமான பதிலையே தந்ததால் கடுப்பாகிப் போன திமுக, அதிமுக என அனைத்து கட்சி தமிழக எம்.பிக்கள் கூட்டாக வெளிநடப்பு செய்தனர்.

“இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள்”- டெல்லியில் டெசோ கூட்டம் ஆரம்பம்
டெல்லியில் இன்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெசோ கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.இதில் முன்னாள் மந்திரிகள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி எம்.பி.,

சவூதி அரேபிய எஜமானர் எனது மனைவியை பணத்திற்காக விற்பனை செய்து வருவதாக மாத்தளையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
மாத்தளை ஹதுன்கமுவ பொத்தப்பிட்டியைச் சேர்ந்தவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்னதாக சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக சென்ற எனது மனைவியை, வீட்டு எஜாமானர் பணத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர்.

 
நேர்படப்பேசுதமிழருவிமணியன்டெல்லியில் நடக்கும் டெசோ மாநாட்டுக்கு தமிழின அழிப்புக்குத் துணை  நின்ற காங்கிரசை அழைத்து இருப்பது சந்தேகம் கொள்ளவைக்கிறது என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ் விவாத நிகழ்ச்சியில் தமிழருவி மணியனுடன் சுப.வீரபாண்டியன்,பாஜகவைச் சேர்ந்த

தனி ஈழம் வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார் ஆனால் தற்போது தனி ஈழம் கேட்க வில்லை. தமிழர் தாக்கப்படுவது தொடர்ந்தால் தனி ஈழம் கோரிக்கையை மீண்டும் எழுப்புவோம் என திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். 
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக மக்களவையில் விவாதம் தொடங்கியது. இலங்கை தமிழர் விவாதம்

வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்ட அமெரிக்க தூதுவராய அதிகாரியிடம் காணாமல் போன உறவுகளைத்தேடும் சங்கத்தினரால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது
. காணாமல்போனோர் உறவுகளைத் தேடும் சங்கத்தினால் காணாமல் போன உறவுகளைத் தேடித் தருமாறு கோரி கொழும்பில் நேற்று நடாத்தப்பட இருந்த

பி.ஆர்.பி. மகன் உட்பட 9 பேர் கைது
மதுரை மேலூர் மற்றும் கீழவளவு போலீசார் மதுரை எஸ்.பி. அலுவலத்தில் குவாரி சம்பந்தமான புகார் இருப்பதாக கூறி, விசாரணைக்கு அழைத்து செல்ல வந்துள்ளோம்
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை
இந்தியா ஆதரிக்கும் : குலாம் நபி ஆசாத் உறுதி


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று டெல்லியில் நடைபெற்ற டெசோ கருத்தரங்கில் உறுப்பினர்களிடம் குலாம் நபி ஆசாத் உறுதி கூறினார். 

ad

ad