புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2013


டுபாய் ஈழத்தமிழ் அகதிகள் விவகாரம்: 19 தமிழர்களின் நாடுகடத்தல் நிறுத்தப்பட்டது! 11 பேரை அமெரிக்கா உள்வாங்கியது!
டுபாயில் தஞ்சமடைந்திருந்த ஈழத்தமிழ் அகதிகளில் 19 பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவர் என்ற நிலையில் தற்போது அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கம்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமானwww.news.lk  இனந்தெரியாத நபர்களினாலேயே சற்று முன்னர் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் கடந்த 3ம் திகதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட 9 அணிகள் விளையாடி வருகிறது.
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத் தேர்த்திருவிழா   மற்றும் தீர்த்த திருவிழா வைபவங்கள் இன்று 24  புதன் ,25 வியாழன் காலை இலங்கை நேரம் 9 க்கு நேரடி ஒளிபரப்பாகவுள்ளன.கண்டு களியுங்கள் 
www .sivantv .com 
Europe Champion Leage  Semi Final 1 st Round

Bayaern münchen -Barcelona 4-0
புனே வாரியர்ஸ் அணியை பந்தாடியது ராயல் சேலஞ்சர்ஸ்: 130 ரன்களில் அபார வெற்றி
ஐ.பி.எல். போட்டியில் இன்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், உள்ளூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற புனே அணி பந்துவீச முடிவு செய்தது.

Royal Challengers Bangalore won by 130 runs

ஊடகவியலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய அரசாங்கம் இலங்கையிடம் கோரியுள்ளது.
ஊடகவியலாளர் பாதுகாப்பு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியாக உன்னிப்பாக

திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
 

    நாகை மாவட்டம் பூம்புகாரில் காவல் நிலையத்திலேயே ரவி, ராஜேந்திரன் ஆகிய தலித் இளைஞர்கள் இருவர் படுகொலையில் மைய புலனாய்வுத்துறை (சி.பி.அய்)

லாரி அதிபர் படுகொலை: சென்னை ராயபுரத்தில் பரபரப்பு
சென்னை திருவெற்றியூர் கல்யாணசெட்டி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வின்செண்ட் (46). தொழிலதிபர். இவரது தந்தை அற்புதராஜ். வின்செண்ட் திருவெற்றியூரில் இவிபி என்ற பெயரில் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வந்தார். இவரிடம் ஏராளமான

சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுத்த 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நவ சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திராவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சரத் மனமேந்திராவிற்கு எதிராக பிடி விராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சரத் மனமேந்திரா தற்போது வெலிக்கடை பொலிஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.நாளைய தினம் சரத் மனமேந்திராவை, நீதிமன்றில் ஆஜர் செய்ய உள்ளதாக பொலிஸ் ஊடகக் காரியாலயம் அறிவித்துள்ளது.

தீர்வு காண விருப்பம்! ஆனால் துரோகிப் பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் பேச்சுக்கு வர மறுக்கிறார்!- ஜனாதிபதி
பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விரும்புகின்றார். ஆனால் அவரால் பேச்சுக்கு வர முடியவில்லை. அரசாங்கத்துடன் அவர் ஏதாவது ஒரு வகையில் இணக்கம் கண்டால் அவருக்கு துரோகிப் பட்டம் கட்டி விடுவார்கள். இதனால் தான் அவர் பேச்சுக்கு வர அஞ்சுகின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இரட்டைக் கொலை: ஸ்தம்பிதமடைந்த பாடசாலையை வழமைக்கு கொண்டு வரமுயற்சி!- கல்விப்பணிப்பாளர் பொதுமகன் மீது தாக்குதல்
செங்கலடியில் இடம் பெற்ற இரட்டைக் கொலையுடன் செங்கலடி மத்திய கல்லூரியைச் சோந்த நான்கு மாணவர்கள் சம்பந்தப்பட்டார்கள் என்பதற்காக முழுப் பாடசாலையையும் குற்றம் சாட்ட முடியாது என கிழக்கு மாகாண முன்னாள் முதுலமைச்சரும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

23 ஏப்., 2013


கெய்ல் சாதனை சதம்: பெங்களூர் அணி 263 ரன்கள் குவிப்பு


அடுத்த தேர்தலில் ஜெயலலிதா அதிகாரத்தில்
 இருக்க மாட்டார் : விஜயகாந்த் ஆவேசம்
நிலஅபகரிப்பு தொடர்பாக, திருத்தணி தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க, விஜயகாந்த், நேற்று காலை, 11:30 மணிக்கு, சிறைக்கு வந்தார். அவரது கார், சிறை

இறுதிச்சடங்கின் போது எழுந்து உட்கார்ந்த பிணம் :
உறவினர்கள் அதிர்ச்சியில் ஓட்டம்
திருமங்கலம் அருகே ஆஸ்பத்திரியில் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறப்பட்டவர், வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி சடங்கு செய்தபோது, பிழைத்து எழுந்தார்.

நடிகை அஞ்சலி படப்பிடிப்பு : உறவினர்களுக்கு தடை
 நடிகை அஞ்சலி நடிக்கும், தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. காமெடி காட்சியில் நடித்தார். படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு, அஞ்சலி அனுமதியின்றி, உறவினர்கள் வரக்கூடாது' என, தடை போடப்பட்டுள்ளது. 

பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை இலங்கை தடுக்கவேண்டும்!- மனித உரிமை கண்காணிப்பகம்
பர்மா - அரகான் மாநிலத்தில் இடம்பெறுகின்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளை உடனடியாக நிறுத்துவதற்கு இலங்கை வலியுறுத்த வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது

இத்தாலியில் இலங்கைப் பெண் ஒருவர் எரியுண்டு மரணம்!- கணவர் சந்தேகத்தில் கைது செய்யப்படவுள்ளார்!
இத்தாலியில் இலங்கைப் பெண் ஒருவரின் மரணம் தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்படவுள்ளார்.
னித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்தத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அது குறித்து விசாரணை நடாத்தத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலத்திரனியல் ஊடகப் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பிரபல பொருளியல் பாட ஆசிரியருமான எச்.எம்.எம்.பாக்கீர் மாணவியொருவரை பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்ததாக அம் மாணவி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த குறித்த மாணவி காத்தான்குடியிலுள்ள பாக்கீர் ஆசிரியரின் மதினியின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் துபாயிலிருந்து திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் – வைகோவிற்கு மன்மோகன்சிங் பதில்!

இது தொடர்பாக, ஏப்ரல் 6ம் திகதி, பிரதமரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வைகோ பேசினார். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக வைகோவிடம் பிரதமர் உறுதி அளித்தார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்,

வடமாகாண சபை தேர்தலில் டக்ளஸ் தனித்துப் போட்டி; தயா மாஸ்டரை வேட்பாளராக நிறுத்துகிறது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி!

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சி பெரும்பாலும் தனித்துப் போட்டியிடக் கூடும் என்று கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி

வுவனியா நெழுக்குளகத்தில் விறகுவெட்ட சென்ற மாணவியே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தோட்ட வித்தியாலயத்தில் கல்வி கற்றும் 17 அகவை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நேற்று விறகு வெட்ட சென்ற

இராணுவ புலனாய்வு பிரிவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து சதி முயற்சி!

மாநகர சபை அரசாங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இயங்கியது. கடந்த மார்ச் 17ம் திகதியுடன் இச்சபைகள் கலைக்கப்பட்டு அதன் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை ஜாகுலின் பெர்ணான்டஸ் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியில் இயக்கி வரும் “ராமைய்யா வொஸ் தாவைய்யா” என்ற படத்தில் தான் ஜாகுலின் பெர்ணான்டசை ஒப்பந்தம் செய்துள்ளார். 
ஹசியின் அபார ஆட்டத்தால் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஐ.பி.எல். போட்டியின் 30-வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் உள்ளூர் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

நடிகை ரேவதி - சுரேஷ் மேனன்
விவாகரத்து பெற்றனர்!
நடிகை ரேவதியும், டைரக்டர் சுரேஷ் மேனனும் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.
நடிகை ரேவதிக்கும், கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனனுக்கும், 1986ல் திருமணம் நடந்தது. இருவரும் சேர்ந்து, புதியமுகம் எனும் ஒரு படத்திலும் நடித்துள்ளனர். 

வயலின் மேதை லால்குடி ஜெயராமன் காலமானார்
 


பிரபல வயலின் மேதையும், இசையமைப்பாளருமான லால்குடி ஜெயராமன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82.

பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றவர். சிருங்காரம் எனும் தமிழ் படத்திற்கு இசையமைத்ததற்காக தேசிய விருது கிடைத்தது. வாத்திய சங்கீத கலாரத்னா விருது வழங்கியது பாரதி சொசைட்டி நியூயார்க்.

இலங்கையில் மாநாடு நடத்தக் கூடாது: காமன்வெல்த் நடவடிக்கை குழுவுக்கு கலைஞர் வேண்டுகோள்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை ராணுவத்தினரிடமிருந்து தப்பித்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்து கடல் கடக்கும் ஈழத் தமிழர்கள் பல நாட்டு ராணுவத்தினரிடம் பிடிபடுகிறார்கள்.
கள்ளக்காதலி வீட்டில் சிக்கிய போலீஸ்காரர்
 
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கும், சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள கே.வி.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

வெளிநாட்டு பணத்திற்கு ஆசைப்பட்டு முதியோர் இல்லத்திருந்தவரை சகோதரி என அழைத்துச் சென்ற பெண்
யாழ்ப்பாணம் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த வயோதிபப் பெண் ஒருவரை அவரது சகோதரி எனக் கூறி அடையாளப்படுத்திய மற்றொரு வயோதிப மாது, அவரை அழைத்துச் சென்று இரண்டு நாட்களின் பின்னர் மீண்டும் வயோதிபர் இல்லத்திலேயே அவரைக் கூட்டி வந்து விட்டுச் சென்றுள்ளார்.

'கண் பார்வை இருப்பதற்குள், எனக்கு சக்தி இருப்பதற்குள் என் மகனைத் திரும்பக் கொடுங்கள்"!- பேரறிவாளனின் தாய் கதறல்
“எனக்கு கண் பார்வை இருப்பதற்குள், என் உடம்பில் சக்தி இருப்பதற்குள் என் மகனைத் திரும்பக் கொடுங்கள். அவன் வாழ வேண்டியவன்” என ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதியான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கண்ணீரோடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வன்னிப் போரில் கொன்றது போல எல்லாத் தமிழர்களையும் கொல்ல வேண்டும்!- வவுனியா வைத்தியசாலையில் இராணுவச் சிப்பாய் அட்டகாசம்
வன்னியில் நடைபெற்ற போரில் தமிழர்களை கொன்றது போல எல்லாத் தமிழர்களையும் கொல்ல வேண்டும் என பொது மக்கள் மத்தியில் மிக மோசமாக சிங்கள இனவாதத்தைக் கக்கிய இராணுவச் சிப்பாய் ஒருவர் வைத்தியர் உட்பட மூவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

22 ஏப்., 2013



முன்னாள் மகளீர் அரசியல் துறைப் பெறுப்பாளர் தமிழினியும் முன்னாள் புலிகளின்


மருதானை பகுதியில் விடுதிகள் முற்றுகை: 6 பெண்கள் கைது
மருதானை பகுதியில் இரண்டு விடுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பெண்களை கைது செய்துள்ளனர்.
சிறைத்தண்டனைக்கு பதில் சமையல் பயிற்சி: புதிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி

சுவிட்சர்லாந்திலுள்ள பெர்ன் நீதிபதி கொள்ளை, திருட்டு, அடிதடி, வழிப்பறி போன்ற 39 குற்றங்களைச் செய்த ஒருவருக்குச் சிறைத்தண்டனை வழங்காமல் சமையல் பயிற்சி பெறுமாறு தண்டித்துள்ளார்.

“பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் உளவுத்துறை FBI செட்டப்” போட்டு உடைக்கிறார் தாயார்!

பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் இருவரும் செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து சிறு வயதில் கஸகஸ்தான் நாட்டுக்கு குடிபெயர்ந்து, பின்னர்

ஐ.பி.எல். இல் அதிக விக்கெட் : மலிங்கவை சமன் செய்தார் மிஸ்ரா

லசித் மலிங்க 59 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்​… தமிழீழ பெண்கள்”!காணொளி


இவ் ஆவணப்படத்தில் 2009ன் பின்னர் தமிழீழம் சென்று வந்த ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஆகியோரின் பேட்டிகளும், சிங்களக் கொடுங்கோல் முகாமிலிருந்து

திமுகவில் விஸ்வரூபமெடுக்கும் மு.க.ஸ்டாலின்!அதிருப்தியில் கருணாநிதி?

திமுகவின் அடுத்த தலைவராக மு.க. ஸ்டாலினை முன்மொழிவேன் என்று அறிவித்தாலும் அண்மைக்காலமாக ஸ்டாலின் அதிரடியாக எடுத்து வரும் முடிவுகளை கருணாநிதி விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. மு.க.ஸ்டாலினை தலைவராக வழிமொழிவேன்

மனோ கணேசன் அனுதாப அரசியல் செய்ய முயற்சிக்கிறார்!- கணபதி கனகராஜ்
மனோ கணேசன் அனுதாப அரசியல் செய்ய முயற்சிக்கிறார் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உதவிச் செயலாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அரசாங்கம் நழுவ முடியாது! எம்ரிவி- எம்பிசி ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து ஸ்ரீரங்கா
தொடர்ந்தும் அரசாங்கம் நழுவல் போக்கை மேற்கொள்ள முடியாது. இவ்வாறு எம்ரிவி- எம்பிசி நிறுவன ஊடகவியலாளர்கள் மீது விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்கா


இத்தாலியின் ஜனாதிபதியாக மீண்டும் ஜோர்ஜியோ நெப்போலிட்டானோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
 அவரது பதவிக்காலம் எதிர்வரும் மே 15 உடன் முடிவடையவிருந்த நிலையில் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.இத்தாலியில் அதிகரித்துவரும் அரசியல்

சந்திரிகா தொடர்பில் கடும் அச்சத்தில் அரசு

 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள்  ஜனாதிபதி 
சுவிட்சர்லாந்  பேர்ண்  மாநகரில் த்ரிஷா  ஜீவா பங்குபற்றும்  படப்பிடிப்பு 

ஜீவா ,த்ரிஷா நடிக்கும் என்றென்றும் புன்னகை என்ற படத்துக்கான படபிடிப்பு இன்று சுவிஸ் பேர்ண்  நகரில் அமைந்துள்ள டிஸ்கோ கடை ஒன்றில் நடைபெற்றது ஏராளமான  தமிழர்கள் நடிகர்களை காண குவிந்திருந்தனர் நடன இயக்குனர் ராஜு சுந்தரத்தின் குழுவினர் காட்சிகளை ஒழுங்கமைத்து படமாக்கினர் 

9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
 
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 28வது ஆட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெற்றது. ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்

இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பதா? :இந்திய அரசுக்கு திருமாவளவன் கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,
’’நாள்தோறும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகின்றனர்.

மனோ கணேசன் மீது தாக்குதல்!மூவர் காயம்!- பாஸ்க்கரா - குமரகுருபரன் - குகவரதன் கண்டனம்
கொட்டகலை, பத்தனை சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன் கலந்து கொண்டபோது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முள்ளிவளையில் தமிழ் மக்களின் வீடுகள் தீக்கிரை: அமைச்சர் றிசாட்டின் அடியாட்கள் அடாவடித்தனம்
முள்ளிவளை மத்தியில் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மக்களின் வீடுகளை தீக்கிரையாக்கி அமைச்சர் றிசாட் தன்னுடைய கோரத்தாண்டவத்தை இன்று அதிகாலை ஆடியுள்ள நிலையில், முள்ளியவளையிலிருந்து தமிழர்களை விரட்டியடிக்கும்

21 ஏப்., 2013



கலைஞர் - விஜயகாந்த் திடீர் சந்திப்பு


தி.மு.க., தலைவர் கலைஞரும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது, பரஸ்பரம் நலம் விசாரித்தும் கொண்டனர்.

இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த திருநங்கை: முதலிரவில் மோசடி அம்பலமானது என எஸ்.பியிடம் புகார்
காட்பாடி தாலுகா அசோக் நகரை சேர்ந்த பெண் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- 

இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த திருநங்கை: முதலிரவில் மோசடி அம்பலமானது என எஸ்.பியிடம் புகார்
காட்பாடி தாலுகா அசோக் நகரை சேர்ந்த பெண் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- 

முஷாரப் பாகிஸ்தானில் நீதிபதிகளை விரட்டி, தற்போது பிடிபட்டது போன்று இலங்கையிலும்......
 பி.பி.சி 
பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் முஷாரப், எத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டுள்ளார் என்று பாருங்கள், அவர் நீதிபதிகளை விரட்டி ஏதேச்சாதிகாரியாக செயற்பட்டதற்கு இன்று பொறுப்புக் கூற

அமெரிக்க அழைப்பை நிராகரிக்க மீண்டும் வெளியிடப்பட்ட அறிக்கை!
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு, அரச படையினர் காரணமல்ல என்று இராணுவ நீதிமன்ற விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக, கடந்த 10ம் திகதி இராணுவத் தலைமையகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தீர்மானம்?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தயா மாஸ்டர் வடமாகாண தேர்தலில் களமிறங்கக் கூடிய சாத்தியம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் களமிறங்கக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

20 ஏப்., 2013



சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் 
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம் பாலஸ்தானம் செய்யப் பட்டு முற்றுமுழுதாக நிர்மாணிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த தே .அத்தோடு புதிய ராஜகோபுரமும் அமைக்கப்பட்டும் வருகின்றது .இந்த ஆலயத்தின் திருபணிக்கென சுவிசில் ஏராளமான  தமிழ் நெஞ்சங்கள் நிதிப் பங்களிப்பை செய்து வருகின்றார்கள்.பெரிய நகரங்களில் உங்களை நாம்  அணுகி இந்த நிதிப் பங்களிப்பை பெற்றுக் கொண்டாலும் ஏனைய நகரங்களில் உங்கள் இல்லங்களுக்கு வர முடியாத கஷ்டமான சூழலில் நாம் இருக்கிறோம் .எமது இயந்திரமயமான  வாழ்க்கை முறையில் இது சாத்தியபப்படாத விசயமும் கூட.ஆதலால் இந்த திருப்பணிக்கு உதவ  நீங்களாகவே  வந்து தொடர்பு கொண்டு பங்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் ,மேற்படி திருப்பணி வேலைகள்  யாவும் அண்மையில் கனடாவில் இருந்து தாயகம் திரும்பி நகேயே வாழும் அ .சண்முகநாதன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் நடைபெறுகின்றன.

தொடர்புகளுக்கு

அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை ) 031 951 33 81

www .madathuveli .net
www .pungudutivuswiss .com


ஜெயலலிதாவை எச்சரிக்கை செய்த மத்திய அரசு. ஈழப்பிரச்சனையின் நிலை குறித்து அதிருப்தி.


ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மத்திய அரசுக்குக் கடுமையான சினத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் செய்திகள் பரவிக்​கிடக்கிறது. அதற்கு அடிப்படையான சில விஷயங்களை டெல்லியில் இருந்து பட்டியல் போடுகிறார்கள்.''

இன்று காலை மறைந்த திரு.சிவந்தி ஆதித்தனார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு இல்லத்திற்கு செல்லும்போது தே.மு.தி.க தலைவர் திரு.விஜயகாந்த் என்னை நலம் விசாரித்தபோது.
இன்று காலை மறைந்த திரு.சிவந்தி ஆதித்தனார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு இல்லத்திற்கு செல்லும்போது தே.மு.தி.க தலைவர் திரு.விஜயகாந்த் என்னை நலம் விசாரித்தபோது.


தினத்தந்தி’ அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் வாழ்க்கை குறிப்பு

 

‘தினத்தந்தி’ அதிபரும், விளையாட்டுத் துறையில் அகில இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவருமான டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள

தினத்தந்தி அதிபர்
சிவந்தி ஆதித்தன் காலமானார்
 

தினத்தந்தி அதிபர் சிவந்தி பா.சிவந்தி ஆதித்தன் (76) சென்னையில் இன்று காலமானார்.  கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிர் பிரிந்தது.
சென்னை பெசண்ட் நகரில் சிவந்தியின் இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் நடக்கிறது.
1958ம் ஆண்டு முதல் பத்திரிகை துறையில் பணியாற்றியவர் சிவந்தி ஆதித்தன்.   இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியும் வகித்தார் சிவந்திஆதித்தன்.  

பாரிய அகதிகள் படகொன்று அவுஸ்திரேலியாவில் தஞ்சம்
பாரிய அகதிகளை ஏற்றிய  படகொன்று அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவி

36 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு
பயங்கரவாத நடவடிக்கைகள், போலி காணி உறுதி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 36 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊசி ஏற்றப்பட்டு அரை மணி நேரத்தில் உயிரிழந்தார் தாய்!- யாழ். போதனா வைத்தியசாலையில் சம்பவம்!இந்தச் சம்பவத்தில் புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த விஜயரட்ணம் நிர்மலாதேவி (வயது 37) என்பவரே உயிரிழந்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் ஊசி ஏற்றச் சென்ற இளம் தாய் ஊசி ஏற்றப்பட்டு அரை மணிநேரத்தில் உயிரிழந்தார். ஊசி போடப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார்

சுரேஷ் எம்பியிடம் இரண்டு மணி நேரம் கடும் விசாரணை! (2ஆம் இணைப்பு)

இலங்கை இராணுவம் தொடர்பில் நாம் ஏதாவது கருத்துக்களை தெரிவித்தால் விசாரணைகளுக்கு உட்படும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின்

சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது!

 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சங்கானையைச் சேர்ந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.நாவற்குழிப்பகுதியில்

பெண்கள், சிறுமியர் இல்லங்களில் ஆண்கள் பணிக்கு வேண்டாம் – யாழ்.அரச அதிபர்!யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் சிறுமியர்களைக் கொண்டு இயங்கும் இல்லங்கள், நிறுவனங்களில் ஆண்களைப் பணிக்கு அமர்த்த வேண்டாம் என யாழ் மாவட்ட அரசாங்க


BRAEKING NEWS

பொஸ்டன் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டாவது குற்றவாளி சுற்றிவளைப்புக்குள் (2ஆம் இணைப்பு)

 
zhokhaar304
அமெரிக்காவில் பாஸ்டன் மராத்தன் போட்டியின்போது குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவர் பதுங்கியுள்ளதாக நம்பப்படும் கட்டிடத்தை அமெரிக்க காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
பிடிபடாமல் இருந்துவருபவர் ஸோகார் சர்னயேவ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் செச்சன்ய இனத்தைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. இவர் ஆயுதம் ஏந்தியிருக்கலாம் என்றும், அப்பகுதியில் வாழ்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் பொலிசார் எச்சரித்திருந்தனர்.

www.thedipaar.com
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் 44 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அலுத்கம கந்தேவிஹார பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை 2 மணியளவில் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

19 ஏப்., 2013




குருவி அயன் போன்ற சினிமா படங்களை பார்த்து கொலைக்கான திட்டத்தை வகுத்து கொண்டனர்.14 வயது முதலேதனது 14 வயது  காதலனுடன் இரண்டு வருடங்களாக உடலுறவு கொண்டு வந்த பின்னர் சொந்த தி தகப்பனை   கொலை செய்த அரக்கி  தக்ஷனா இவர் தான் 

மட்டக்களப்பு – செங்கலடி நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் மேலும் பல தகவல்களை தெரிவித்துள்ளனர்.  குருவி மற்றும் அயன் போன்ற சினிமா படங்களைப் பார்த்து இந்த கொலைக்கான முன்மாதிரியை அறிந்துகொண்டதாக கைது செய்யப்பட்ட செங்கலடி மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரகு தம்பதியினரை மர்மமான முறையில் கொலை செய்வதற்கு ஏற்கனவே இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 27 ஆந் திகதி தூக்க மாத்திரையை உட்கொள்ளச்செய்துவிட்டு தலையணையால் அமுக்கி கொலை செய்த பின்னர் தகப்பனை கிணற்றுக்குள் போட்டு கொலை செய்வதாக திட்டம் ஒன்றை அவர்களது மகள் தக்ஸிகா மேற்கொண்டிருந்தார்.
அப்போது ரகு தனது மனைவியைக் கொன்றுவிட்டு தான் தற்கொலை செய்துவிட்டார் என தகவல் வெளியாகும் இதன் மூலம் தாம் தப்பிக்கொள்ளலாம். தமது காதலும் சிரமமின்றி நிறைவேறும் என இவர்கள் எண்ணியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அத்திட்டம் வெற்றியளிக்காததால் அவர்களை வெட்டி கொலை செய்வதென காதலர்கள் இருவரும் முடிவு செய்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கிறது.
தற்போது இடம்பெற்றுள்ள திட்டங்கள் செங்கலடி மத்திய கல்லூரி மற்றும் பிரைட் ரியுசன் சென்றரிலும் வகுக்கப்பட்டது. கொலை செய்வதற்கான நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக இணையத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்று சித்திரை மாதம் 7 ஆந் திகதி நள்ளிரவு செங்கலடி – பதுளை வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் வர்த்தகர்களையும் அந்த பிரதேசத்தையும் சோகத்துக்குள்ளாக்கியதோடு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
தனது சுய முயற்சியினால் வர்த்தகத்தில் முன்னேற்றமடைந்து வந்த 47 வயதான சிவகுரு ரகு மற்றும் 41 வயதுடைய அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா கூரிய ஆயுதங்களினால் படுக்கையறையில் வெட்டியும் குத்தியும் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
 செங்கலடி நகரைப் பொறுத்தவரை 24 மணி நேரமும் பொலிஸாரின் ரோந்து கண்காணிப்புக்குரிய நகர் என்று கூறமுடியும். அப்படியிருந்தும் இந்த படுகொலைச் சம்பவம் பாதுகாப்புத் தரப்பினரின் கண்களுக்குப் புலப்படாமல் இடம்பெற்றுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட வர்த்தகரான சிவகுரு ரகு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்தவர். செங்கலடியைச் சேர்ந்த விப்ராவை விரும்பி திருமணம் செய்தவர். இவர்களுக்கு வைஷ்னவி (வயது 21) தலக்ஷனா (வயது 16) என இரு புதல்விகள் உள்ளனர். இந்த இரு பிள்ளைகளையும் மிகவும் அன்போடு வளர்த்து வந்தார்கள்.
ஆரம்பத்தில் சிறியளவில் வர்த்தகத்தை ஆரம்பித்த அவர் தனது மனைவியின் பக்கபலத்துடன் பொருளாதரத்தை வளப்படுத்திக் கொண்டார். இவரது குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரு மகிழ்ச்சிகரமான சூழலைக் கொண்டது.
வர்த்தகரும் மனைவியும் படுக்கையறையில் கொடூரமாக கொல்லப்பட்டனர். பொலிஸார் சற்று நேரத்திலேயே இவ்விடத்திற்கு விரைந்த போதிலும் கொலையாளிகள் தொடர்பான எந்தவொறு தடயங்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் இக்கொலைகள் முன்மாதிரியைப் பின்பற்றி நன்கு திட்டமிடப்பட்ட முறையில் இடம்பெற்றிருப்பதை உணரமுடிந்தது.
எனினும் குடும்ப உறவினர்களில் ஒத்துழைப்பின்றி இக்கொலைகள் செய்திருக்க முடியாது என்ற ஒரேயோரு துடுப்பு மாத்திரமே புலனாய்வுத் துறையினருக்கு எஞ்சியிருந்தது. அந்த அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கிழக்குப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் அதிகாலை வேளையிலேயே அவ்விடத்திற்கு வந்தனர். அதையடுத்து இராணுவம் மற்றும் பொலிஸ் பலனாய்வுப் பிரிவினரும் மோப்ப நாய்கள் சகிதம் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கொலையாளிகளின் தடயங்களைத் தேடினார்கள் தடயங்கள் கிடைக்கவில்லை நாய்களை மோப்பம் பிடிக்க விட்டார்கள் அந்த நாய்கள் கொலையாளிகளைத் தேடி ஓடின ஆனாலும் சம்பவ இடத்திலிருந்து 250 மீற்றரைக் கூட தாண்டவில்லை மோப்ப நாய்களால் கூட கொலையாளிகள் சென்ற பாதை மற்றும் மறைந்துள்ள இடத்தை கூட துல்லியமாக அறிய முடியவில்லை.
எவ்வாறிருப்பினும் பொலிஸார் முதலில் குடும்ப உறுப்பினரர்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர் அதன் மூலமேனும் பொலிஸாருக்கு துப்புத் துலங்கவில்லை. பின்னர் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் சிஐடி யினர் கொழும்பிலிருந்து வருகை தந்து புலனாய்வுப் பணிகளை முடுக்கிவிட்டார்கள். ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஞ்சன கொடகொம்பர தலைமையில் பொலிஸ் பரிசோதகர் கிரான் செனவிரெடன, சார்ஜனட்களான நஜிமுடீன், சறுக், ரபிக் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களான தாஹிர், அனுராத, புருசோத்மன், நலிம், வன்னிநாயக, கிஸ்ஸானாயக்க மற்றும் விதான ஆகியோரைக் கொண்ட விஷேட பொலிஸ் குழுவொன்றும் விசாரணையில் ஈடுபட்டது அதனையடுத்து ஓரிரு நாட்கள் கடந்த பின்னர் இளய மகளின் காதல் விவகாரம் கசியத் தொடங்கியது.
இதையடுத்து சந்தேகப்பட்ட காதலனின் தொலைபேசி அழைப்புகள் கண்கணிக்கப்படன அதன் மூலமாக கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனொருவன் கைது செய்யப்படார். அதனைத் தொடர்ந்து காதலன் மற்றும் அவரது நண்பரும் கைதுசெய்யப்பட்டனர். இர்கள் அனைவரும் செங்கலடி மத்திய கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விபயிலும் 16 வயதுடைய மாணவர்கள் என்பது மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
கொல்லப்பட்டவர்களது இளய மகள் ரகு தலக்ஷனா அவரது காதலன் சிவநேசராசா அஜந் அவரது நண்பர்களான புவனேந்திரன் சுமன் மற்றும் குமாரசிங்கம் நிலக்சன் ஆகியோரே சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டனர்
பொலிஸ் விசாரணையையடுத்து ஏறாவூர் சுற்றுலா நீதி மன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதியின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச் சாலையில் (பாடசாலை மாணவர்கள் என்ற காரணத்தினால்) தனியான அறையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் மூலம் பல்வேறு திகிலூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகளின் காதல் விவகாரத்தை விரும்பாத தந்தை ரகு பலமுறை எச்சரிக்கை செய்ததுடன் காதலனை தாக்கியுள்ளார். இதையடுத்து காதலுக்கு பெற்றோர் இடையூறாகவேயிருப்பார்கள் என்று முடிவு செய்த இவர்கள் வஞ்சந்தீர்க்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வந்துள்ளனர். பாடசாலையிலும் ரியுசன் வகுப்பறையிலும் பழிதீர்க்கும் திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.
கடந்த சித்திரை மாதம் 7 ஆந் திகதி மாலை ரகு தனது மனைவி மக்களுடன் புத்தாண்டு உடு துணிகள் வாங்குவதற்காக மட்டக்களப்பு நகருக்குச் சென்றனர் அந்த நேரம் தொடக்கம் இளைய மகள் தனது கையடக்கத் தொலைபேசி ஊடாக எஸ்எம்எஸ் மூலம் தனது காதலனுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
காதலனும் நண்பர்களும் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று தங்களுக்கு தூக்கம் குறைவாக இருப்பதாகக் கூறி பெரும் எண்ணிக்கையிலான தூக்க மாத்திரைகளைப் பெற்று இடித்துத் தூளாக்கி கைவசம் வைத்திருந்தனர்.
ரகு தனது குடும்பத்தாருடன் புத்தாண்டுக்குத் தேவையான உடு துணிகள் வாங்கவதற்குச் சென்ற பின்னர் மகள் தலக்ஷனா காதலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை அறிவித்திருக்கிறார்.
வீட்டின் திறப்பு சமையலறை யன்னல் ஓரத்தில் உள்ளது நீங்கள் வீட்டிற்குச் சென்று குசினியில் மீன்கறி கட்டியில் தூக்க மாத்திரைத் தூளைக் கலந்துவிடுமாறு கூறியிருக்கிறாள். காரியம் கச்சிதமாக மூடிந்திருக்கிறது.
அன்றிரவு 7 மணிக்குப் பின்னர் வீடு ரகுவின் குடும்பத்தினர் திரும்பியிருக்கிறார்கள்;. வழமை போல் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். ஆனால் தங்களின் இளைய மகள் காதலனுடன் சேர்ந்து தங்களுக்கு எதிராக செய்திருந்த சூழ்ச்சிணை அறிந்திருக்க வில்லை.
சம்பவ தினம் இரவு ரகுவின் மூத்த மகள் வைஷ்னவி வழக்கம் போல அம்மம்மாவின் வீட்டிற்குச் தூங்கியிருக்கிறாள் தாய் விப்ரா மூத்த மகளுக்கு இரவு சாப்பாடு எடுத்துச் சென்றிருக்கிறார்;. மூத்த மகள் அதில் ஒரு கவளத்தை வாயில் வைத்து விட்டு’கசக்கிறது அம்மா’ என்று உணவைத் துப்பியுள்;ளார். தாயார் ‘உனக்கு சாப்பிட விருப்பம் இல்லாட்டி இப்படித்தான் சொல்ர’என்று கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் தந்தை ரகுவும் உணவை உண்ட போது ஏதோ ஒரு கசப்பு தன்மை காணப்படுவதை உணர்ந்தார்.
அன்றிரவு ரகுவும் மனைவியும் வழமை போல்; ஓர் அறையிலும் இளைய மகள் மற்றைய அறையிலும் உறக்கத்திற்குச் சென்று விட்டார்கள். அத்தினம் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக அளைய மகள் தொலைபேசி மூலம் தனது காதலனுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அவர்களை அழைத்து வீட்டின் முன் கதவை திறந்து ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறாள் கொலையாளிகளி உள்ளே நுழைந்து படுக்கையறைக்குள் சென்று கைத்தொலைபேசி வெளிச்சத்தின் உதவியுடன் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த விப்ராவை அடையாளங்கண்டு தாக்கி கழுத்தை அறுத்துள்ளனர். இச்சமயம் அருகில் படுத்திருந்த ரகு எழுந்து கொலையாளிகளுடன் போராடியுள்ளார். கொலையாளியிலாருவர் ரகுவின் வாயை பொத்தியுள்ளார் அந்தநேரம் ரகு கொலையாளியின் கையைக்கடித்து காயப்படுத்தியுள்ளார். கொலையாளிகள் ரகுவை பொல்லால் கடுமையாகத் தாக்கி கழுத்தையும் அறுத்துள்ளார்கள். அச்சமயம்; தாக்கும் சத்தம்கேட்டு விப்ராவின் தந்தை சுந்தரமூர்த்தி மகளின் வீட்டிற்கு வந்தபோது படுக்கையறையில் மின்விளக்கு வெளிச்சத்தில் ரகுவை பொல்லால் அடிப்பதை அவதானித்தார்.
அதனைக் கண்டதும் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. செய்வதறியாது தடுமாறினார் உடனடியாக திரும்பி தனது வீட்டிற்குச் சென்று மருந்து உட்கொண்டுவிட்டு மீணடும் வந்தபோது நபரொருவர் ஒடுவதை அவதானித்திருக்கிறார். அப்போது மகளின் வீட்டுக்கதவின் குறுக்குப் பொல்லு விழுந்த சத்தமும் கேட்டது. அவ்வேளை வீட்டில் படுத்திருந்த தலக்ஷனா ‘அம்மா அம்மா’ என்று கூப்பிடும் சத்தம் கேட்டதும் சுந்தரமூர்த்தி ‘சத்தம் போட வேண்டாம் மகள் வந்து குசினி பக்க கதவ திற’ என்றார் உள்ளே வந்து பார்த்தபோது மகளும் மருமகனும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ணுற்றார்.
அயல் வீட்டாரை அழைத்தார் எவருமே வரவில்லை வீட்டின் முன்னால் இருந்த செங்கலடி பிரதேச வைத்திய சாலைக்குச் சென்று நிலைமையைக் கூறினார். அங்கு செங்கலடி சந்தியில் பொலிஸாரிடம் கூறுமாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பொலிஸார் வந்து பார்வையிடடனர்.;
இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக மக்கள் மத்தில் பல்வேறு ஊகங்கள உலாவின. முன்னாள் ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் யாராவது சம்மந்தப்பட்டிருக்கலாம்? குடுத்பத்தில் யாராவது பின்னணியிலிருந்திருக்கலாம்? வர்த்தகப் போட்டியாக இருக்கலாம் என்று சந்தேகம் நிலவின. இருந்தபோதிலும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான இளைய மகள் தலக்ஷனாவின் நடவடிக்கைகள் முகபாவங்களைக் கண்டு மரணச் சடங்கிற்கு வந்த பலரும் அவளின் மீது சந்தேகப்பட்டு கண்புருவங்களைச் சுருக்கிப் பார்த்தனர். ஏதேதோ பேசிக்கொண்டனர்.
இது தொடர்பான மரண விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் நடைபெற்றது.
கொல்லப்பட்டவர்களின் இரண்டாவது மகள் தலக்ஷனா (தற்போது சந்தேக நபர்களில் ஒருவர்) சாட்சியமளிக்கையில்,
‘ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணியளவில் நான், அப்பா, அம்மா, அக்கா அனைவரும் சித்திரரைப் புத்தாண்டிற்காக உடுப்பு எடுக்க மட்டக்களப்பிற்குச் சென்று அன்றிரவு 7 மணிக்கு பின்பு வீட்டிற்கு வந்தோம்.
அக்கா அம்மம்மாவின் வீட்டில் உறங்கச் சென்றார். எங்கள் அம்மா அக்காவுக்கு இரவுச் சாப்பாடு எடுத்துச் சென்றார். அக்கா கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு கறி கசக்கிறது என்றார். அதற்கு அம்மா ‘உனக்கு இதுதான் கத’ என்று சொன்னார். அப்பாவும் கறியைச் சாப்பிட்டுவிட்டு ‘ஓம் கசக்கிறதுதான்’ என்றதும் அக்கறியை வீசிவிட்டோம். அதன் பிறகு அம்மம்மாவின் வீட்டில் சமைத்த ஆட்டிறைச்சி கறியை சாப்பிட்டோம்.
அத்தினம் நள்ளிரவு வேளையில் அலரல் சத்தம் கேட்டது நுளம்பு வலைக்குளிருந்தவாறு அம்மாவைக் கூப்பிடடேன் அப்போது வாசலில் நின்று அம்மப்பா என்னைக் கூப்பிட்டு குசினி கதவை திறக்குமாறு கேட்டார் திறந்தேன் அதன் பின்னர் படுக்கையறையை அவதானித்தேன் அம்மா கட்டிலிலும் அப்பா நிலத்திலும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டனர்’ என்றார்.
இது தொடர்பான மரண விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை பொன்னுத்துரை சுந்தரமூர்த்தி சாட்சியமளிக்கையில்
‘சம்பவ தினம் நள்ளிரவு வேளையில் அடிக்கும் சத்தம் கேட்டது எழுந்து முன்னால் இருந்த மகளின் வீட்டைப் பார்த்தேன். ஆள் அலரும் சத்தமும் வந்தது உடனே குசினி பக்கம் சென்றேன் கதவுகள் மூடிய நிலையிலேயே இருந்தன. யுன்னல் ஊடாக படுக்கையறையைப் பார்த்தேன். மருமகனுக்கு ஒருவன் அடித்துக் கொண்டிருந்தான். மின்விளக்கு எரிந்த போதிலும் யன்னலின் சிறிய துவாரத்தினால் அங்கு அடித்துக்கொண்டிருந்த நபரை அடையாளங்காண முடியவில்லை நான் அதிர்த்தியடைந்து செய்வதறியாது அங்குமிங்கும் ஓடினேன். அப்படியிருக்க கதவு மூடும் பொல் தடியொன்று விழும் சத்தம் கேட்டது அதையடுத்து ஒரு நபர் ஓடிச் செல்வதை காண முடிந்தது.
நான் மகளின் வீட்டிற்குச் சென்று தம்பி தம்பி என்று மருமகனைக் கூப்பிட்டேன் எந்த பதிலம் கிடைக்கவில்லை பின்னர் மகள் மகள் என்று கூப்பிடடேன் பதில் எதுவும் இல்லை அப்படியிருக்க அவ்வீட்டில் உறங்கிய பேத்தி எழுந்து வந்து கூப்பிட்டாள். நான் சத்தமிட்டு குசினிப் பக்கக் கதவைத் திறக்கச் சொன்னேன. திறந்து ‘ என்ன அம்மப்பா’ என்று கேட்டாள் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு மகளின் படுக்கையறைக்குச் சென்றேன் அங்கு மகளும் மருமகனும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தவர்களை அழைத்தேன். எவரும் எழுந்துவரவிலலை முன்னால் உள்ள ஆஸ்பித்திரிக்குச் சென்று நிலைமையைக் கூறினேன். ஆங்கு பொலிஸாருக்கு அறிவிக்கும்படி தெரிவித்தார்களள் ஓடோடிச் சென்று செங்கலடி சந்தியில் கடமையிலிருந்த பொலிஸாரிடம் சம்பவத்தைக் கூறினேன் விரைந்து வந்து பார்த்தார்கள் இவ்வளவுதான் என்னால் கூற முடியும்’என்றார்
மரண விசாரணை சாட்சியங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கiயின் படி இரண்டு மரணங்களும் கொலை என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பொலிஸார் உறவினர்கள், அயலவர்கள் பாடசாலை சமூகம் மற்றும் சக மாணவர்கள் என பலரையும் விசாரணைக்குட்படுத்தியதாகவும் இருவர் இரகசியப் பொலிஸாரினால் விசாரணைக்கென கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
இந்த விசாரணைகளின் படி பொலிஸாருக்கு கிடைத்த இரசிய தகவலின் பிரகாரம் புத்தாண்டிற்கு முதல் நாள்; 13 ஆந் திகதி குமாரசிங்கம் நிலக்சன் என்பவர் செங்கலடி – பதுளை வீதியிலுள்ள கித்துள் பிரதேசத்தில் அவரது வீட்டிலிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் இளைய மகள் அவரது காதலன் மற்றும் நண்பர் என சந்தேக நபர்கள் புதுவருட தினமன்று கைது செய்யப்பட்hர்கள். இவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியதாக பொலிஸார் கூறினர்.
இக்கொலை தொடர்பாக பொலிஸ் தரப்பு தகவல்கள் மூலம் தெரிய வருவதாவது:
கொலையாளிகள் அஜந்தின் வீட்டிலிருந்த கத்திகள் மற்றும் கோடரிப்பிடி முகமூடி கையுறை காலுறை தூக்கமாத்திரை மற்றும் மிளகாய்த்தூள் போன்றவற்றை பாடசாலை பையில் எடுத்துக் கொண்டு செங்கலடி பிள்ளையார் கோவில் பகுதியில் மறைத்து வைத்துள்ளனர். அதன் பின்னர் சந்தை வீதியிலுள்ள சுமனின் வீட்டிற்குச் சென்று பிறந்தநாள் வைபவ வீடொன்றில் சோடனை செய்வதற்காக செல்வதாக கூறி அவரையும் அழைத்துக் கொண்டு பிள்ளையார் கோவில் மதில் பகுதியில் பதுங்கியிருந்து தக்ஷனாவுடன் எஸ்எம்எஸ் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.
‘பெற்றோர் உறங்கிவிட்டனர் வரலாம்’ என எஸ்எம்எஸ் வந்தவுடன் இவர்கள் மூவரும் ஆயுதங்களுடன் வீட்டில் முன் மதிலால் பாய்ந்து வளவிற்குள் சென்றதும் தலக்ஷனா முன் வாசல் கதவை திறந்து உள்ளே வரவழைத்து பெற்றோரின படுக்கையறையை திறந்து விட்டுள்ளார். இந்த நேரம் ரகுவின் வீட்டு நாய் குசினி கதவருகில் நின்று குரைத்துக் கொண்டிருந்தது. தலக்ஷனா நாயை கட்டுப்படுத்தியுள்ளார்.
கொலையாளிகள் வெளியேறிய பின்னர் கையுறைகள் முகமூடிகள் கொலை சம்பவத்தின் போது இவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அம்மன்புரம் ஆற்றோரம் பிரம்பு புதருக்குள் புதைக்;கப்பட்டிருந்தன.
இவர்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வர்த்தகரின் மகள் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை பயன்படுத்தி வெள்வேறு இலக்கங்களில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாக அறிய முடிகிறது.
தலக்ஷனா சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பின்பு பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்
நான் அஜந் என்பவரை காதலித்தது உண்மை. முகமூடி அணிந்து அவர்களை மிரட்;டுவதற்காகவே அவர்களை வர சொன்னனே தவிர கொலை செய்யும் நோக்கத்திற்காக அல்ல. இவர்களது நடமாட்டத்தை கண்டு நாய் குரைத்ததும் வெளியே வந்து நாயைக் கலைத்து விட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்து பார்த்த போது அம்மா இறந்து கிடந்தார் அப்பாவை அஜந் அடித்துக் கொண்டிருந்தார் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டனார் வந்த வேளை மூவரையும் அனுப்பிவிட்டு நான் பயத்தினால் எனது அறையை பூட்டிவிட்டு தூங்கிவிட்டேன். என தெரிவித்துள்ளார்.

நர்சு புகார்: போலீஸ் நிலையத்தில் பாதிரியார் சரண்
வியாசர்பாடி சாஸ்திரி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ஜோசப் (31). மாதவரத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் பாதிரியராக இருந்தார். இவரது

பாடசாலைகளில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பாவிப்பதற்கு தடை
பாடசாலைகளில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பாவிப்பதை முற்றாக தடைசெய்யுமாறு கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
பழம்பெரும் திரை இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னர்களில் ஒருவருமான டி.கே. ராமமூர்த்தி மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில்

நஞ்சு வைத்தோம், பலிக்கவில்லை, பின்னர் பெற்றோரை வெட்டிக்கொன்றோம்-கொல்லப்பட்டவர்களின் மகளான தக்ஸிகா பின்வருமாறு கூறியுள்ளார்.

நான் அஜந்தனை காதலித்து வந்தேன். பெற்றோர் கடைக்கு சென்ற பின் வீட்டில் தனிமையில் இருவரும் சந்திப்போம். இரு வருடங்களாக ( 14வயதிலிருந்து) அஜந்தனுடன் உடலுறவு கொண்டு வந்தேன், மகளின் வாக்கு மூலம்


சிங்களவர் ஒருவரைத் தாக்கியமைக்காக இரண்டு தமிழர்களுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை

சிங்களவர் என்ற காரணத்தினால் குறித்த தமிழர்கள் அவரைத் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 30 வயதான அன்ஜலோ லாசரஸ் மற்றும் 32 வயதான சேதுலிங்கம்
சிரியாவின் முக்கிய ராணுவத்தளம் போராளிகளின் வசம் வீழ்கிறது
சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராளிகள் இரண்டு வருடங்களுக்கு மேலாக சண்டையிட்டு வருகின்றனர். இதில் அதிபரின் படை பின்னடைவை சந்தித்து வருகிறது. 

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை நசுக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 24-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் தொடங்கியது. இப்போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.


         சாமுவேலுவை திருமணம் செய்து ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு  பஞ்சம் பிழைக்க சேலம் வந்த 27 வயது பெண் லட்சுமி. பெயரில் மட்டுமே லட்சுமி இருக்க வாழ்க்கையோ நேரெதிர்.

வயிற்றை திங்கும் வறுமை எனும் கோர பசிக்கு ஏழ்மையை  தருவதை தவிர வே



           ""ஹலோ தலைவரே... இலங்கை சங்கதிகளோடு லைனில் வந்திருக்கேன்.'' 

""ராஜபக்சேவுக்கு இந்தியஅரசு ஆதரவா இருக்கிறதாலதான், போர்க்குற்றங்களிலிருந்தும் இனப்படுகொலையிலிருந்தும் அவர் தப்பிச்சிக்கிட்டிருக்காருன்னு தமிழர்கள் குமுறிக் கிட்டிருக்காங் களே.''…



         ருணை மனு மீது குடி யரசுத் தலைவர் எடுக்கும் காலதாம தத்தை காரணம் காட்டி "தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது' என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள தீர்ப்பு, பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டவர்களின்

கர்நாடகம்: 71 டி.எஸ்.பி.க்கள் உள்பட 362 போலீசார் அதிரடி மாற்றம்
 
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 5–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 


மதுவிலக்கு நடைப்பயணத்தில் வைகோ!

“முழு மதுவிலக்கே நமது” எனும் குறிக்கோளை வலியுறுத்தி மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பொள்ளாச்சி முதல் ஈரோடு வரை  மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் திவாகரன் அனுமதி
    சிகலா தம்பி திவாகரன் மற்றும் ரிஷியூர் ஊராட்சிமன்றத் தலைவர் கிருஷ்ணமேனன், அதே ஊரைச் சேர்ந்த ராசேந்திரன் ஆகியோர் தி.மு.க முன்னால் ஊராட்சி தலைவர் தமிழார்வனை கொலை செய்யும் நோக்கத்தோடு மிரட்டியதாக தமிழார்வன் கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் பதிவு


பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்க வேண்டும் : கலைஞர்

ராஜீவ்காந்தி வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தண்டனையை பரிசீல னை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் வலியுறுத்தியுள்ளார்.

Chennai Super Kings 169/4 (20/20 ov)
Delhi Daredevils 83 (17.3/20 ov)
Chennai Super Kings won by 86 runs

18 ஏப்., 2013


Chennai Super Kings 169/4 (20/20 ov)
Delhi Daredevils 83 (17.3/20 ov)
Chennai Super Kings won by 86 runs

வடகொரியாவில் அமெரிக்க விமானம் வீழ்ந்தது !
சற்று முன்னர் வடகொரியாவின் எல்லைப் பகுதியில், அமெரிக்க ஹெலிகாப்ட்டர் ஒன்று விழுந்து நொருக்கியுள்ளது. இது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது என ரூய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து

கனடாவில் மார்ச் மாதம் 10 ம் திகதி நடைபெற்ற காலமான கமலாம்பிகை அதிபர் இராசதுரை அவர்களின் மறைவையொட்டிய கனடா ஐயப்பன் ஆலயத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வு

ad

ad