-
18 மே, 2013
இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.BBC
பிரிட்டிஷ் தமிழர் பேரவையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லண்டனின் மையப்பகுதியில் ''மார்பிள் ஆர்ச்'' பகுதியில் ஆரம்பித்த இந்த ஊர்வலம் ''பிக்காடிலி சர்க்கஸ்'' வரை தொடர்ந்தது.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக, கடலூரில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால், பேரணி நடத்த கோர்ட்டு தடை விதித்தது. இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் போலீசார் திடீர் தடை விதித்தனர். இருந்தாலும், திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கடலூரில் உள்ள் திருமண மண்டபத்தில் வைத்து 11 மணி முதல் தற்போது வரை இன்டோர் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் சீமான். அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காத்திருக்கிறது போலீஸ்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)