புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2013

புங்டுதீவு மான்மியம் நூலின் வெளியீட்டு விழா இன்று காலை 9 மணிக்கு யாழ் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது  

கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினால் உருவாக்கம் செய்யபட்ட புங்குடுதீவு மான்மியம் நூலின் வெளியீட்டு விழா இன்று காலை 9 மணிக்கு யாழ் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் கா.பாலசுந்தரம்பிள்ளை (முன்னாள் பல்கலை கழக துணை வேந்தர்)அவர்கள் தலைமையில் வெகுசிறப்பாக நடந்தேறியது .முன்னாள் புங்குடுதீவு மகா வித்தியாலய அதிபர் ந.தர்மபாலன்அவர்களின்  நூல் அறிமுக உரையுடன் ஆரம்பமான இவ்விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் வாழ்த்துரை யை  பேராசிரியர் வி.சிவசாமிஅவர்களும்  ,விரிவுரையாளர் ந.பேரின்பநாதன் அவர்களும் நிகழ்த்த முதல் பிரதி யை திரு சிவா நற்குண சங்கர்அவர்கள் பெற்றுக் கொண்டார் .பல  முன்னாள் அரச உத்தியோகத்தர்களும் அதிபர்கள் ஆசிரியர்களும் உரையாற்றி சிறப்பித்தார்கள்

நன்றியுரையை  தர்மகுனசிங்கம் (முன்னாள் அதிபர் புங் ம வி) நிகழ்த்த விழா இனிதே நிறைவுற்றது .விழாவினை கனடாவில் தற்போது வாழ்ந்து வரும் நூலின் ஆசிரியற்குழுவை சேர்ந்த ந.தர்மபாலன் அவர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் தாயகம்  வந்து வெகு சிறப்பாக  நிறைவேற்றி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது




யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புங்குடுதீவு மான்மியம் நூல் வெளியீட்டு விழா படங்கள் 
படங்கள் ந.தர்மபாலன்
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஆஷஸ் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து

இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரென்ட்பிரிட்ஜ் நகரில் கடந்த 10ம் திகதி தொடங்கியது.
யாழ்.மாநகரசபையின் ஆளும் கட்சி  உறுப்பினர் விஜயகாந்த் செய்ததாக கூறப்படும் மோசடிகள் தொடர்பினில்  பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென எதிர்க்கட்சியான கூட்டமைப்பு கோரியுள்ளது.இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தினில் இடம்பெற்ற பத்திரிiகாயாளர் மாநாட்டினில் கூட்டமைப்பின் சார்பினில் அதன் மாநகரசபை அங்கத்தவர்களான விந்தன் கனகரட்ணம்இ பரஞ்சோதி மற்றும் ராஜதேவன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
புங்குடுதீவு காளிகாபரமேஸ்வரி ஆலய திருவிழாக் காட்சிகள்

14 ஜூலை, 2013

சுவிட்சர்லாந்து நபரை கடுமையாக தாக்கிய தமிழர்களால் பரபரப்பு

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒருவர் சூரிச்சில் 10 முதல் 15 தமிழர்களால் மிகக் கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.
தனித் தமிழீழத்துக்காக சர்வதேச கருத்துக் கணிப்பு நடத்தவேண்டும்- ஜெயலலிதா
இலங்கை தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியல் சட்டத்தின் 13-வது பிரிவை நீர்த்து போக செய்யவோ, அல்லது ரத்து செய்ய வழிவகை செய்யும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இறுதி கட்ட போரில் பலரை
புங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோவில் மன்டாலாபிசெகமும் சங்கபிசெகமும்


இன்று யாழ்ப்பாணத்தில் இந்துக் கல்லூரியில்  புங்குடுதீவு மான்மியம் நூல் வெளியீட்டு விழா 

கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினால் உருவாக்கம் செய்யபட்ட புங்குடுதீவு மான்மியம் நூலின் வெளியீட்டு விழா இன்று காலை 9 மணிக்கு யாழ் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நிகழ உள்ளது

தலைவர் .கா.பாலசுந்தரம்பிள்ளை முன்னாள் பல்கலை கழக துணை வேந்தர்

நூல் அறிமுக உரை .ந.தர்மபாலன் முன்னாள் அதிபர் புங்.ம.வி

வாழ்த்துரை  பேராசிரியர் வி.சிவசாமி ,விரிவுரையாளர் ந.பேரின்பநாதன்
முதல் பிரதி பெறுவோர் திரு சிவா நற்குண சங்கர்

நன்றியுரை தர்மகுனசிங்கம் முன்னாள் அதிபர் புங் ம வி

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

காணாமல் போனோர் காணோமல் போனவர்களே! புதிய அரசியல்வாதி தயாமாஸ்டர்!!முன்னதாக அவர் பணியாற்றி வந்த தொலைக்காட்சி குழுமத்தினில் இருந்து அரசியல் நடவடிக்கைகளிற்காக வெளியேறுவதாக அதன் பணிப்பாளர் எஸ்.குகநாதன் அறிவிப்பை விடுத்திருந்தார்.

கனடா கொமன்வெல்த் மாநாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்!- கனடிய பா.உ. ராதிகா சிற்சபேசன்

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டுக்கு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் செல்லாமல் அங்கு அரச தூதுக் குழுவை மட்டும் அனுப்பும் தீர்மானம் நாட்டின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கு முரணானது என்று கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது.

யேர்மனி மத்தியமாநிலத் தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013யேர்மனியில் நடைபெற்றுவரும்  மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாக,  கடந்த 07.07.2013 அன்று willich நகரில் மத்திய மாநிலத்திற்கான விளையாட்டுப்  போட்டிகள் நடைபெற்றன.

இலங்கைத் தலைவர்கள் இருவரையும் யுத்த நீதிமன்றத்தில் நிறுத்திய பின்னரே எனக்கு நித்திரை வரும்! ‘சனல்4’ பணிப்பாளர் மெக்ரே கனடாவில் தெரிவிப்பு
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் யுத்த நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்திய பின்னரே எனக்கு நித்திரை வரும் என ‘சனல் 4’ தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார் என இலங்கைக்கு
நாமல் மீது கோத்தபாயவிற்கு கொலைவெறி! 400 மில்லியன் பணத்தை தனியாக சுருட்டிக்கொண்ட நாமல்!
400 மில்லியன் ரூபாய் லஞ்சப் பணத்தை தனியாக நாமல் தனியாக சுருட்டிக் கொண்ட விவகாரத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாப ராஜபக்ஷ கொலைவெறியுடன் இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி
 புங்குடுதீவு காளி அம்மன் கோவில்  திருவிழா
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஆராய மீண்டும் கூடுகிறது உயர்மட்டக்க
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் குறித்த தீர்மானம் இன்னமும் எடுக்கப்படாத நிலையில் கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு எதிர்வரும் திங்கள் கிழமை மீளவும் கூடி
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அமைச்சர் டக்ளஸ்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடக்கு மாகாண முதலமைச்சராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிறுத்தப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

13 ஜூலை, 2013

குழந்தையைப் பெற்று உயிரோடு புதைத்துவிட்டு தாய் தலைமறைவு: வவுனியாவில் சம்பவம்
வவுனியாவில் தான் பெற்றெடுத்த குழந்தையை தாய் மண்ணுக்குள் புதைத்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
சவூதியில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட மனைவி: மொனராகலையில் கணவன் உண்ணாவிரதம்
சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக அனுப்பப்பட்ட தனது மனைவி அங்கு விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்து மொனராகலையில் ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

ad

ad