புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2013

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள்
தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் வாலிபன். பக்தி  இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன்.பாட்டெழுத வந்துவிட்டால்  மாயக்கண்ணன். ஸ்ரீரங்கம் தந்த தமிழ்ச் சுரங்கம் வாலியின்சீக்ரெட் சாக்லேட்ஸ்.....
திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறைவாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்குவந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார் – பொன்னம்மாளின் மகன் வாலி. படித்தது எஸ்.எஸ்.எல்.சி. பிறகுசென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு!.
வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளைசில்க்காக இருந்தால் சந்தன நிறம்இவை தவிர வேறு விருப்பம் இல்லை!
`பொய்க்கால் குதிரை, `சத்யா’, `பாத்தாலே பரசவம்’, `ஹே ராம்’, என நான்கு படங்களில் நடித்து இருக்கிறார் வாலி!.
`எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’ –கண்ணதாசன்இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!
அம்மாபொய்க்கால் குதிரைகள்நிஜ கோவிந்தம்பாண்டவர் பூமிகிருஷ்ண விஜயம்அவதார புருஷன் என 15 புத்தங்கள் எழுதி இருக்கிறார். சிறுகதை,கவிதைஉரைநடை என எல்லா வகையும் இதில் அடக்கம்!
எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கு சென்றதில்லை கவிஞர் வாலிபாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர்!
வாலியின் காதல் மனைவி ரமணத்திலகம். இந்தத் காதலை ஊக்குவித்துத் திருமணம் செய்யத் தூண்டியவர்கள்நடிகைகள் பத்மினிஈ.வி.சரோஜா இருவரும் ரமணத்திலகம்பத்மினிஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப்பிள்ளையின் மாணவிகள். சமீபத்திய வாலியின் பெரும் துயர் மனைவியின் மறைவு!
வாலி வீட்டில் தயாராகும் தோசைமிளகாய்பொடி ரொம்ப்ப் பிரபலம். `இன்று தோசைமிளகாய்ப் பொடிக்கு வழியிருக்கா’ என்று அடிக்கடி எம்.ஜி.ஆர்.வந்துவிடுவாராம்!
வாலி இது வரை திரையிசைப் பாடல்களாக 15, 000-க்கு மேல் எழுதி இருக்கிறார். தனிப்பாடல்கள் கணக்கில் அடங்காது. இன்றும்  எழுதிக் கொண்டே இருப்பதால்கணக்கு இன்னும் மேலே போதும்!
1966 –ல் வாங்கிய எம்.எஸ்.கியூ 1248 பியட்  இன்னும் ஞாபகங்களைச் சுமந்துகொண்டு நிற்கிறது. மறக்க முடியாமல்புதிதாக மாற்றிக் கொள்ளத்துணியாமல் வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறார் வாலி!
சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.செளந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே போஸ்ட்கார்டில் டி.எம்.எஸ்ஸீக்கு எழுதி அனுப்பியது தான் மிகவும் வெற்றி பெற்ற `கற்பனை என்றாலும் கற்சிலைஎன்றாலும் கந்தனே உனை மறவேன்’ பாடல் இதை அனுபவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!
ஆரம்பத்தில் தங்கச் சங்கிலிமோதிரம்ரோலக்ஸ் வாட்ச் சகிதம் இருப்பார். இப்போது எல்லாம் தவிர்த்துவிட்டுஎளிமையை அணிந்திருக்கிறார்!
17 திரைப்படஙகளுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் வாலிஅவற்றில் கலியுகக் கண்ணன். காரோட்டிக் கண்ணன்ஒரு செடியின் இரு மலர்கள். சிட்டுக் குருவி ஒரே ஒரு கிராமத்தில் இப்படி எழுதிக் கொண்டே போகலாம். மாருதிராவோடு சேர்ந்து டைரக்ட் செய்த ஒரே படம் வடை மாலை!
1966 –ல் `மணிமகுடம்’ படப்பிடிப்பின் போது எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்திய கலைஞர் நட்பு 44 வருடங்கள் தாண்டியும் தொடர்கிறது. `அவதார புருஷ்ன்விகடனில் வெளிவந்த காலங்களில் அதிகாலைகளின் முதல் தொலைபேசிஅழைப்பு கலைஞருடையது!
எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர். எம்.ஜி.ஆர்.எப்பவும்`என்ன ஆண்டவனே’ என்று அழைப்பார்.சிவாஜிக்கு வாலி `என்ன வாத்தியாரே’!
பத்மஸ்ரீபாரதி விருது முரசொலி அறக்கட்டளை விருதுகலைமாமணி விருது எனப் பல சிறப்புக்களைப் பெற்றிருக்கிறார் வாலி. செம்மொழிஉலகத்தமிழ்மாநாடு போன்றவற்றின் இவரது பங்கும் உண்டு!
ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது நெருங்கிய நண்பர்கள் பட்டாளத்தில் அகிலன்,சுகிதிருலோக சீதாராம்,ஏ.எல்.ராகவன்,ஸ்ரீரங்கம் நரசிம்மன்ராமகிருஷ்ணன்ம்பின்னாளில் சுஜாதாவான ரங்கராஜனும் அடக்கம்!
வாலி தனிமை விரும்பி அல்லஎவ்வளவு கூட்டத்தில் நண்பர்களோடு இருந்தாலும் ஒரு தாளை உருவிக் கொடுத்தால் கவிதை வந்து விடும்!
வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென நிறுத்திவிட்டார். பல வருட வெற்றிலைப் பழக்கத்தை விட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச் சொல்வார்கள்!
வாலியின் இஷ்ட தெய்வம் முருகன்எப்பவும் அவரின் உதடுகள் `முருகாஎன்று தான் உச்சரிக்கும். முருகன் பாடல்கள் என்றால் எழுதுவதற்கு முதலிடம் தரத் துடிப்பார்!
வாலி கவிதை அளவுக்கு கிரிக்கெட் பிரியர். ஒவ்வொரு விளையாட்டு வீரரின்வரலாறு அவர்களின் திறன்,ஸ்டைல் எல்லாவற்றைப் பற்றியும் விலாவாரியாகப் பேசுவார்போட்டியின் முடிவைத் தீர்மானிக்கிற வரைகூட அவரால் முடியும்!
எங்கேயிருந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டன்று வாலியைத் தேடிக் கண்டுபிடித்து,ஆசி பெற்றுவிடுவார் ஏ.ஆர்.ரஹ்மான்இன்னும் பழநி பாரதிநா.முத்துக்குமார்,பா.விஜய் நெல்லை ஜெயந்தாஎன எல்லாக் கவிஞர்களும் சங்கமமாகும் இடம் வாலியின் இல்லம்!
2005 –ல் ராஹ் டி.வி.வாலி 12,000 பாடல்கள் எழுதியதற்காக `என்றென்றும் வாலிஎன விழா எடுத்து 100 சவரன் தங்கம் பரிசு அளித்தார்கள்வராத நட்சத்திரங்களைடைரக்டர்களை எண்ணி விடலாம். திரையுலகின் பெரிய நிகழ்வு அது!
வாலியின் 50 ஆண்டு கால நண்பர் ஜெயகாந்தன். இருவருக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!
ஸ்ரீரங்கத்தில் `பேராசை பிடித்த பெரியார் என்னும் சமூக நாடகத்துக்கு`இவர்தான் பெரியார்! இவரை எவர்தான் அறியார்என்ற பாடல் எழுதி பெரியாராலே பாராட்டப்பெற்ற அனுபவம் வாலிக்கு உண்டு!
சென்னை : பிரபல திரைப்பட பாடலாசிரியர் வாலி, சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 14,ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்ந்தார் வாலி. அவருக்கு நுரையீரல் தொற்று பிரச்னை இருந்ததை கண்டறிந்த டாக்டர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். 

பிறகு அவர் உடல்நிலை மீண்டும் மோசமானதை அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.05 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. தகவல் வெளியானதும் ஏராளமான ரசிகர்களும் திரையுலகினரும் மருத்துவமனை வளாகத்தில் சோகத்துடன் குவிந்தனர். பின்னர் அவரது உடல் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம், இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கிறது. மறைந்த வாலிக்கு, பாலாஜி என்ற மகன் உள்ளார். வாலியின் மனைவி ரமணத்திலகம் ஏற்கனவே இறந்துவிட்டார். 

காவியக் கவிஞர் வாலி திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த டி.எஸ்.ரங்கராஜன், வாலியானது சினிமாவுக்காக. கவிஞர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட அவர், ஓவியரும் கூட. தமிழ்த் திரையுலகில் கண்ணதாசன் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் தானும் நுழைந்து சிறப்பான பாடல்கள் எழுதி தன்னை நிலைநிறுத்தியவர் வாலி. எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ரஜினி,கமல், விஜய்,அஜீத், தனுஷ், சிம்பு என பல தலைமுறை நடிகர்களுக்கு பாட்டு எழுதிய பெருமை கொண்டவர் வாலி. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல் எழுதியுள்ளார். 1958ல் ‘அழகர்மலை கள்ளன்’ என்ற படத்தில் பாடல் எழுத தொடங்கிய வாலி, கடைசியாக வசந்தபாலன் இயக்கும் ‘காவியத் தலைவன்‘ என்ற படத்துக்காக எழுதியுள்ளார்.

வாலியை சினிமாவுக்கு பாட்டு எழுத அழைத்து வந்தவர், சமீபத்தில் மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன். அவருக்கு தபால் கார்டில் வாலி எழுதி அனுப்பிய ‘கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும், கந்தனே உனை மறவேன்’ என்ற பாடலுக்கு டி.எம்.சவுந்தரராஜன் இசையமைத்து பாடியது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்

2007,ல் மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்தது. 1970ல் ‘எங்கள் தங்கம்’, 79ல் ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’, 89ல் ‘வருஷம் 16’ மற்றும் ‘அபூர்வ சகோதரர்கள்’, 90ல் ‘கேளடி கண்மணி’, 2008ல் ‘தசாவதாரம்’ படங்களில் பாடல்கள் எழுதியதற்காக, தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றார். தவிர, தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். ஆனால், 73ல் ‘பாரத விலாஸ்’ படத்தில் அவர் எழுதிய ‘இந்திய நாடு என்வீடு’ என்ற பாடலுக்கு மத்திய அரசு வழங்கிய தேசிய விருதை வாங்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

நூல்கள்

வாலி ஏராளமான நூல்கள் எழுதியுள்ளார். ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற சுயசரிதையை எழுதினார். ‘அவதார புருஷன்’, ‘பாண்டவர் பூமி’, ‘ராமாநுஜ காவியம்’, ‘கிருஷ்ண விஜயம்’, ‘கலைஞர் காவியம்’, ‘கிருஷ்ண பக்தன்’, ‘வாலிப வாலி’, ‘அம்மா’, ‘பொய்க்கால் குதிரைகள்’, ‘நிஜ கோவிந்தம்’ போன்ற நூல்கள் வரவேற்பு பெற்றவை. சிறுகதை, கவிதை, உரைநடை கவிதை என வாலி ஆயிரக்கணக்கான படைப்புகளை வழங்கியுள்ளார். ‘கலியுக கண்ணன்’, ‘காரோட்டி கண்ணன்’, ‘ஒரு செடியின் இரு மலர்கள்‘, ‘சிட்டுக்குருவி’, ‘ஒரே ஒரு கிராமத்தில்’ உட்பட 17 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். 

66,ல் ‘மணி மகுடம்’ படப்பிடிப்பில் கலைஞர் கருணாநிதியை சந்தித்துப் பேசியது முதல், தனது இறுதிக்காலம் வரை அவரது நெருங்கிய நண்பராக இருந்தார் வாலி. அவரை ‘என்ன ஆண்டவனே’ என்று எம்.ஜி.ஆரும், ‘என்ன வாத்தியாரே’ என்று சிவாஜியும் அன்புடன் அழைப்பார்கள். வாலி வீட்டின் தோசையும், மிளகாய்ப் பொடியும் சினிமா வட்டாரத்தில் பிரபலம். எம்.ஜி.ஆர் உட்பட பல பாடலாசிரியர்கள் அதற்கு வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். பல முன்னணி ஹீரோக்களுக்கு ‘ஓப்பனிங் சாங்’ எழுத வைப்பது பல இயக்குனர்களின் சென்டிமென்ட். இன்றைக்கும் இளமையான பாடல் வரிகளை எழுதியதால் அவர் எப்போதும் ‘வாலிபக் கவிஞர்’ என்றே அழைக்கப்பட்டார். 

பாஸ்போர்ட் இல்லா கவிஞர்

பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் பேசியிருந்தாலும், இதுவரை வாலி வெளிநாடு சென்றதில்லை. அவரை, ‘பாஸ்போர்ட் இல்லாத கவிஞர்’ என்று சொல்வார்கள். ‘இந்த சினிமா வாழ்க்கை, எம்.எஸ்.வி போட்ட பிச்சை’ என்று அடிக்கடி நன்றி மறவாமல் குறிப்பிடுவார் வாலி. ‘மன்னன்‘ படத்துக்காக வாலி எழுதிய, ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடலின் வரிகள், தாய்மையின் மேன்மையை உணர்த்துகிறது என்று பாராட்டி, திருச்சியிலுள்ள ஒரு கோவிலில் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சக்கப் போடு போடு ராஜா

சிவாஜிக்காக வாலி எழுதிய, ‘இதோ எந்தன் தெய்வம்‘, ‘கல்யாண பொண்ணு கடைபக்கம் போனா‘, ‘மகராஜா ஒரு மகராணி‘, ‘அப்பப்பா நான் அப்பனில்லடா‘, ‘சக்கப் போடு போடுராஜா‘, ‘மாதவி பொன்மயிலாள்’ உட்பட பல பாடல்கள் எப்போதும் இனிப்பவை. சமீபத்தில் வெளியான ‘ஒஸ்தி‘ படத்தில் அவர் எழுதிய, ‘கலாசலா கலசலா கல்லாசா கலசலா‘ பாடலும், ‘தடையறத் தாக்க‘ படத்தில் இடம்பெற்ற ‘பூந்தமல்லிதான் நான் புஷ்பவல்லிதான்‘ என்ற பாடலும் ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நான் ஆணையிட்டால்...

எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய பாடல்கள் புகழ்பெற்றவை. ‘நான் ஆணையிட்டால்...’, ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்’, ‘ராஜாவின் பார்வை ராணி யின்பக்கம்’, ‘நிலவு ஒரு பெண்ணாகி’, ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்’, ‘தரை மேல் பிறக்க வைத்தான்’, ‘காற்று வாங்க போனேன்’, ‘நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை’, ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ உட்பட அனைத்து பாடல்களுமே முத்துகள்.

15 ஆயிரம் பாடல்கள் 

காதல், நகைச்சுவை, வாழ்க்கை தத்துவம், கலகலப்பு, காதல் தோல்வி, பக்தி என பல்வேறு நிலைகளில் 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி சாதனை படைத்தவர் வாலி. கிட்டதட்ட அரைநூற்றாண்டு காலமாக பாடல் எழுதிய வாலி, சினிமா வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில், தொடர்ந்து ஏற்பட்ட தோல்விகளால் ஊருக்குத் திரும்ப முயன்றபோது, ‘மயக்கமா, கலக்கமா‘ என்ற பாடலைக் கேட்டு, நம்பிக்கையோடு வீடு திரும்பினார். இயக்குனர் கே.பாலசந்தரும், கமலும் கேட்டுக்கொண்டதற்காக ‘பொய்க்கால் குதிரை‘, ‘சத்யா‘, ‘பார்த்தாலே பரவசம்‘, ‘ஹே ராம்‘ ஆகிய படங்களில் நடித்த வாலி, மாருதி ராவுடன் இணைந்து ‘வடை மாலை‘ என்ற படத்தை இயக்கினார்.
இதோ எந்தன் தெய்வம்‘, ‘கல்யாண பொண்ணு கடைபக்கம் போனா‘, ‘மகராஜா ஒரு மகராணி‘, ‘அப்பப்பா நான் அப்பனில்லடா‘, ‘சக்கப் போடு போடுராஜா‘, ‘மாதவி பொன்மயிலாள்’ 
‘கலாசலா கலசலா கல்லாசா கலசலா‘ ‘தடையறத் தாக்க‘ படத்தில் இடம்பெற்ற ‘பூந்தமல்லிதான் நான் புஷ்பவல்லிதான்‘ 
நான் ஆணையிட்டால்...’, ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்’, ‘ராஜாவின் பார்வை ராணி யின்பக்கம்’, ‘நிலவு ஒரு பெண்ணாகி’, ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்’, ‘தரை மேல் பிறக்க வைத்தான்’, ‘காற்று வாங்க போனேன்’, ‘நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை’, ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ 
வாழ்க்கை என்றால் ஆயிரம் இரூக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஒடுவதி ல்லை ----உனக்கு கீழே இருப்பவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு -வாலி 
வாலியின் வார்த்தை ஜாலங்களுக்கு ஓர் முத்திரை எனக்கு எல்லா வகையிலும் பிடித்த ஓர் பாடல்
சூரியகாந்தி படத்தில் முத்துராமன் ஜெயலலிதா நடித்த எம் எஸ் வி இசையில் வாலி எழுதி என் உயர் பாடகர் எஸ் பீ பாலாவோடு ஜெயலிலத இணைந்து பாடிய அபூர்வமான பாடல் இது .பாடல் வரிகள் இசை பாடகர்கள் இனிமை அற்புதமான நடிப்பு கதை இயக்கம் என அனைத்தும் ஒன்றிணைந்த பாடல்
வாலியின் வார்த்தை ஜாலங்களுக்கு ஓர் உத்முத்திரை எனக்கு எல்லா வகையிலும் பிடித்த ஓர் பாடல் சூரியகாந்தி படத்தில் முத்துராமன் ஜெயலலிதா நடித்த எம் எஸ் வி இசையில் வாலி எழுதி என் உயர் பாடகர் எஸ் பீ பாலாவோடு ஜெயலிலத இணைந்து பாடிய அபூர்வமான பாடல் இது .பாடல் வரிகள் இசை பாடகர்கள் இனிமை அற்புதமான நடிப்பு கதை இயக்கம் என அனைத்தும் ஒன்றிணைந்த பாடல்

பெண்கள் யூரோ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிக்குப் பிரான்ஸ் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. 
பெரு மதிப்புப் பெற்ற விக்னேஸ்வரன் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர்; ஆதரிக்குமாறு தமிழ்க் கூட்டமைப்பு வேண்டுகோள் 
வட மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசரும் சமூகத்தின் பெருமதிப்பைப் பெற்றவருமான
நான் இந்தியாவின் தெரிவு அல்ல; விக்னேஸ்வரன் கூறுகிறார்

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கியமைக்கு இந்தியாவே பின்னணியில் இருப்பதாக வெளியான செய்திகளை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
“பத்திரிகைகளில் வெளியான செய்திகளை நானும் பார்த்திருக்கிறேன். அவற்றில் எந்த உண்மையும் இல்லை. இந்தியாவிலிருந்து எவரும் இது தொடர்பாக கதைத்திருக்கவில்லை.நானும் அங்குள்ளவர்களிடம் இது பற்றிப் பேசியிருக்கவில்லை’ என்று நேத் எப்.எம்.வானொலிக்கு நீதியரசர் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நியமித்திருக்கிறது.

நீதியரசர்  விக்னேஸ்வரனின் தெரிவு இன்னொரு யுத்தத்திற்கான ஆரம்பம்; அமைச்சர் சம்பிக்க
தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் வட மாகாண முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது

ஏற்காடு எம்.எல்.ஏ. சி. மரணம்: முதல்வர் நேரில் அஞ்சலt

ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சி.பெருமாள் மரணம்: முதல்வர் நேரில் அஞ்சலி.
 1/1 
சேலம் ஜூலை.19 - சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சி.பெருமாள் நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அதிமுகவின் தீவிர விசுவாசியான அவருக்கு தமிழக முதல்வர்  ஜெயலலிதா அவரது சொந்த ஊரான பாப்பநாயக்கன்பட்டி கிராமத்திற்கு நேற்று மாலை நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கச்சத் தீவு விவகாரத்தில் கருணாநிதியின் துரோகங்கள்: பட்டியலிட்டமுதல்வர் கடும் விமர்சனம்

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி தன் ஆட்சிக் காலத்தில் நடந்த கச்சத்தீவு தாரை வார்ப்பைத் தடுக்காமல் தவறவிட்டு, இப்போது நீதிமன்றத்தை நாடியிருப்பதாகச் சொல்வது மக்களை ஏமாற்றும் செயல் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர்

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: சேரன்மகாதேவியில் தேமுதிகவினர் 143 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் போலீஸ் தடையை மீறி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் 143 பே
“விமானத்தின் இறக்கைகளும் அழுதன..” பிரபாகரனின் தாயாருக்காக கசிந்துருகிய வாலி! -வைகோ இரங்கல்!
கவிஞர் வாலி மறைவையொட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
கவிஞர் வாலியின் இல்லம் - இளமைக்காலங்களை நினைவூட்டம் படங்கள்

மறைந்த கவிஞர் வாலியின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி!
பிரபல கவிஞர் வாலி சென்னையில் உடல்நலக் குறைவால் 18.07.2013 வியாழன் மாலை காலமானார். 
மறைந்த வாலியின் உடல் சென்னை, எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வாலியின் மறைவை கேட்டு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். 
திரைப்பட இயக்குநர் பாலச்சந்தர், கேமரா மேன் ஸ்ரீராம், இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கைஅமரன், சங்கர் கணேஷ், இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா உட்பட திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அவரது இறுதிசடங்கு 19.07.2013 வெள்ளிக்கிழமை சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவிஞர் வாலியின் உடல் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு
 

பிரபல கவிஞர் வாலி சென்னையில் உடல்நலக் குறைவால் 18.07.2013 வியாழன் மாலை காலமானார். 
காவியக் கவிஞர் வாலி (1931 - 2013) முற்றுப்புள்ளி அல்ல காற்புள்ளி! 
 

‘ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்’
-இது 1950-களில் கவிஞர் வாலி எழுதி, டி.எம்.எஸ். அவர்கள் மனமுருகப் பாடிய முருகப்பெருமானைப் பற்றிய பாடல்.

கவிஞர் வாலி உடலுக்கு சங்கர்,
வெங்கட் பிரவு, பவதாரணி அஞ்சலி 

18 ஜூலை, 2013

பிரபாகரன் இருக்கிறானா? இல்லையா? வாலி 
ஒரு
புலிப் போந்தை ஈன்று
புறந்தந்து -
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?

கவிஞர் வாலி காலமானதாக செய்தி ஒன்று கூறுகிறது 

கடற் புலிகளின் நீர்மூழ்கி சாதனங்களை கண்டு அச்சத்தில் உறைந்த கடற்படை

LTTE_scooter22கடற் புலிகளின் நீர்மூழ்கி சாதனங்கள்! கடற்புலிகளால் நீருக்கு அடியில் நீச்சல் போட பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், நீர் மூழ்கி உடைகள் ஆகியவற்றின் புகைப்படங்கள் இவை. 
பெருமாள் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துகிறார் ஜெ., :
கொடநாட்டில் இருந்து புறப்பட்டார்
மறைந்த அதிமுக எம்.எல்.ஏ. பெருமாள் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த கொடநாட்டில் இருந்து  பாப்பநாயக்கன் பட்டிக்கு புறப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா.
கடலூர்: மதிய உணவு சாப்பிட்ட 152 மாணவிகள் வாந்தி மயக்கம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 300 பேர் 18.07.2013 விழாயன் அன்று மதிய உணவு சாப்பிட்டனர். சாதம் மற்றும் முட்டை சாப்பிட்டுள்ளனர், மதிய உணவு சாப்பிட்ட 152 மாணவிகளுக்கு சிறிது நேரத்தில்
சென்னையில் பிரபல ரவுடி மர்மமான முறையில் படுகொலை
சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜன்(வயது 28).  குன்றத்தூர், போரூர், முகலிவாக்கம் மற்றும் வளசரவாக்கம் காவல்நிலையங்களில் இவர் மீது வழிப்பறி,

புங்குடுதீவு கண்ணகைபுரம் சிறி இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய மகாசபைக் கூட்டம்

அண்மைக் காலமாக பாரிய சர்ச்சைக்குளாகி இருக்கும் நிர்வாக,மற்றும் உபயகாரர்கள்,பரம்பரை வழிபாட்டினர்களுக்கிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி ஒரு புதிய நிர்வாகம் தெரிவாகும் எண்ணத்திலா  அல்லது வேறு வகையான எதிர்கால வழி கோலல்களுக்காகவா என்று அறிய முடியாத நிலையில் இந்த கூட்டம் அறிவிக்கப் படுலதாக அறிய வருகிறது  புங்குடுதீவு கண்ணகைபுரம் சிறி இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய மகாசபைக் கூட்டம் எதிர்வரும் 22ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு இந்து சமய கலாசார திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது இக்கூட்டத்தில் நடப்பு வருடத்துக்கான புதிய நிர்வாகசபை தர்மகர்த்தாசபை தெரிவுகள் இடம்பெறவிருப்பதால் அங்கத்தவர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு தர்மகர்த்தாசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அனைவரதும் கருத்துக்கள் விமர்சனங்கள் பிரசுரமாகும் 
 பிரபல வில்லிசை கலைஞர் சின்னமணியின் வாரிசுளின் வல்லிசை அரங்கேற்றம்

பாகிஸ்தானில், கிராமமொன்றில் ஊர்த் தடையை மீறி கையடக்கத்தொலைபேசி வைத்திருந்தமைக்காக இரு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர்  கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவது,
அந்நாட்டின் தேரா காசி  கான் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆரிபா என்ற பெண் ஒருவர்

இந்தியாவின் பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக்குழந்தைகள் 22 பேரின் மரணத்திற்கு, பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்ததே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பீகார் மாநிலம் சாப்ரா அருகில் உள்ள தரம்சதி கிராமத்தில் உள்ள அரச பாடசாலையில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுத்து மயங்கி

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியின் போது, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் ஆயிரம் டொலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முத்தரப்பு கிரிக்கெட் தொடர் போட்டி மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றது. இதன் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்து

தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் இலங்கை அணியின் தலைவராக வீரர் தினேஸ் சண்டிமல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உப தலைவராக லஹிரு திரிமன்னே நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

விக்னேஸ்வரன் பாலசிங்கம் என்றால் தாயா மாஸ்டர் சம்பிக்கவா : அசாத் சாலி கேள்வி

விடுதலைப் புலிகளின் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன்

இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை தடுக்கவும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தவும் புலிகள் முயற்சி - பீரிஸ்

உலகம் பூராகவும் வியாபித்துள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் தம் வசமுள்ள பலகோடி ரூபாய்களை செலவு செய்து இலங்கையில் பொதுநலவாய மாநாடு இடம்பெறுவதைத்

கிழக்கு மாகாண சபைப் பிரச்சினைக்கு சந்திரகாந்தனே காரணம்
கிழக்கு மாகாண முதலமைச்சர், ஆளுனர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையின் பின்னால், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரவன்ச ஆடை அணிந்து வாழ்பவர் என்றால் இந்நேரம் இராஜினாமா செய்திருக்க வேண்டும்: மனோ கணேசன்
ஆடை அணிந்து வாழும் சுரணை உள்ளவர் என்றால் விமல் வீரவன்ச இந்நேரத்துக்குள் தனது பதவியை இராஜினாமா செய்து, அரசாங்கத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு நிபந்தனைகளை அரசாங்கம் நிராகரிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியினால் முன்வைக்கப்பட்ட இரண்டு நிபந்தனைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பிள்ளையுடன் பிச்சையெடு​த்த தாய் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்ப​ட்டுள்ளார்
யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் குழந்தைப் பிள்ளையுடன் பிச்சையெடுத்த தாய் யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்களினால் பஸ் நிலையப் பகுதியில் வைத்து பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ்



          நாடும் நாடாளுமன்றமும் வியந்து போற்றிய அண்ணா, குடியரசுத்தலைவர் ஆன ஆர்.வெங்கட்ராமன் என இருவரும் எம்.பி.யாக இருந்த வரலாறு கொண்டது, தென்சென்னை தொகுதி. ஆற்றல்வாய்ந்த நாடாளுமன்றவாதியான இரா. செழியனையும் ஆலடி



              காதலும் பரபரப்பு... அந்த காதல் தந்த பரிசான மரணமும் பரபரப்பு... மரணத்தின் பின் விளைந்த சந்தேகத் தால் "அடக்கமாக' வேண்டிய இறுதி கட்டத்திலும் பரபரப்பு... ஆக ஒட்டு மொத்த தமிழகத்தையே அடுத்தது என்ன என்ற கேள்விக்குரியவர்களாக்கி




              ஜூலை 1. அம்பிகாபதி திரைப்படத்தின் நைட் ஷோவிற்கு கிளம்பிக்கொண்டிருந்தேன். செல் போனில் ஒரு அழைப்பு வந்தது "இளவரசன்' என்ற பெயரில்.

திருமாவளவனுக்கு அனுமதி மறுப்பு : தடையை மீறிவிடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில், தர்மபுரி இளவரசன்  மர ணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், கவுரவ கொலைகளை

கவிஞர் வாலி கவலைக்கிடம்
 

பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வாலி ( வயது 82) நுரையீரல் தொற்றுநோய் காரணமாக  கடந்த 30 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

17 ஜூலை, 2013


முன்னாள் அமைச்சரின் மகளை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைவரும், நடிகருமான சீமான் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்
நடிகர் நந்தா திருமணம்: 17-ந்தேதி வரவேற்பு
நடிகர் நந்தா திருமணம்: 17-ந்தேதி வரவேற்பு
மவுனம் பேசியதே படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நந்தா. கோடம்பாக்கம், புன்னகை பூவே, அகரம், அனந்தபுரத்துவீடு, வேலூர் மாவட்டம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் தெரிவானமையால் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் - முபாறக்
வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதும்

வங்கி ஊழியராக நடித்து வாடிக்கையாளரிடம் கொள்ளை

அட்டனில் அமைந்துள்ள மக்கள் வங்கிக் கிளையில் வங்கி ஊழியர் போல் நடித்து வாடிக்கையாளரை ஏமாற்றி பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை

பேனையும் பென்சிலும் ஏந்த வேண்டிய வேளையில் பிரபாகரனால் துப்பாக்கியை ஏந்த வேண்டி ஏற்பட்டது - பந்துல

தமிழ் மாணவர்கள் பேனையும் பென்சிலும் ஏந்த வேண்டிய சந்தர்ப்பத்தில் பிரபாகரனால் துப்பாக்கி ஏந்த வேண்டி ஏற்பட்டது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன

நடைபெறவிருக்கும் தேர்தலில் ஐ.தே. க.வுக்கு வாக்களித்து உரிமைகளை உறுதிப்படுத்துங்கள் - சச்சிதானந்தம்

நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களில் சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்து வாக்களித்து சிறுபான்மை மக்களின்

நிர்வாண போஸ் : சர்ச்சையை ஏற்படுத்திய டென்னிஸ் வீராங்கனை
 டென்னிஸ் வீராங்கனையான போலந்து நாட்டைச் சேர்ந்த அக்னீஸ்கா ராத்வான்ஸ்கா விம்பிள்டனில் அரை இறுதி வரை முன்னேறி இருந்தார். இந்த நிலையில் அவர்



             ரண்டாவது வாரமாகத் தொடர்கிறது, என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்!

மூன்றாயிரம் போலீசாரைக் குவித்து, வாகனங்களுக்கு டீசல், பெட்ரோல் அடித்துக் கொடுத்து,



          ""ஹலோ தலைவரே... இந்திய சுதந்திரப் போராட்டம் நடந் தப்ப ஆசாத் இந்தியான்னு வெளிநாட்டில்  படை திரட்டியபடியே நாடு கடந்த சுதந் திர இந்தியாவை சுபாஷ் சந்திர போஸ் அறிவிச் சாரு.''’’



         ர்மபுரி மாவட்டத்தையே கலவரக் காடாக்கிய இளவரசன்- திவ்யா காதல் திருமண விவகாரம், எதிர்பாராத விதமாய் டிராஜிடி திசைக்குத் திரும்ப, காதல் தம்பதிகள் பிரிக்கப்பட்டனர்
நடிகர் நந்தா திருமண வரவேற்பு
நடிகர் நந்தாவுக்கும் கோவையை சேர்ந்த வித்யா ரூபாவுக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்கள் திருமணம் கோவையில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா
எங்கள் உயிருக்கு ஆபத்து: தஞ்சையில் ஒரு
கலப்பு காதல் திருமண ஜோடி

 


தர்மபுரி மாவட்டத்தில் இளவரசன் என்ற கல்லூரி மாணவரும், திவ்யா என்ற நர்சிங் கல்லூரி மாணவியும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.
தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பு(டெசோ)
 கூட்டத்தின் 5 தீர்மானங்கள

16-7-2013 அன்று  காலை  10 மணியளவில்  சென்னை -  அண்ணா அறிவாலயத்தில்  தமிழ் ஈழம் ஆதரவா ளர்கள் அமைப்பின் (டெசோ) கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பி னர்களான தமிழர் தலைவர் கி. வீரமணி,  விடுதலை
மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழ் இனம் தயாராக வேண்டும் : சீமான்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கன்னியாகுமரி மாவட்டம், விளவங் கோட்டிற்குட்பட்ட ஒரு கிராமத்தில் தான் கட்டியுள்ள வீட்டிற்கு திட்ட அனுமதி அளிக்க கருங்கல் கிராம பஞ்சாயத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவில்,
வடமாகாண தேர்தல்! டி.எம்.சுவாமிநாதன் ஐதேக வின் முதன்மை வேட்பாளராகலாம்! இன்று முடிவு தெரியும்!
வட மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம்.சுவாமிநாதன் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நடிகை விடுதலை
பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பிரபல சிங்கள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

16 ஜூலை, 2013

நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிலநாட்களுக்கு முன் ராய்ட்டர் செய்தி
என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
நெய்வேலி என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதையடுத்து என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பாளை சிறையில் இருக்கும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன்
கடந்த சனிக்கிழமை மதுரை கிழக்கு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏவும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான வேலுச்சாமி கைது செய்யப்பட்டார். குவாரி
அனைத்து சாதியினரும், பெண்களும் அர்ச்சகராக வேண்டும்: தி.கழகம் போராட்டத்தில் பங்கேற்பு: திருமாவளவன் 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தீண்டாமை என்பது சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டுவிட்டாலும்

என்.எல்.சி. 5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு வழங்க ஒப்புதல்: தொழிலாளர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
முதல் அமைச்சர் ஜெயலலிதா 15.07.2013 திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
இந்திய நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கினை வகிப்பதும், தர மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை
அனுமதி பெற்ற எல்லா செய்தியாளர்களுக்கும் இலங்கை வீசா கொடுக்க வேண்டும்!- பிரிட்டன் தெரிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்ல கொமன்வெல்த் செயலகத்தின் அனுமதியை பெறுகின்ற எல்லா வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் இலங்கை அரசாங்கம் வீசா அனுமதி கொடுக்க வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பொது வேட்பாளராக ஏகமனதாக அறிவித்ததால் ஒப்புதல் அளித்தேன்: சி.வி. விக்னேஸ்வரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் பொது வேட்பாளராக தன்னை அறிவித்ததால், வட மாகாணத்துக்கான முதல்வர் பதவிக்கான, கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான்

திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியை லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வாகன பிணக்கு தொடர்பான முறைப்பாட்டை நீதிமன்றிற்கு அறிவிக்காது தாமே தீர்ப்பதற்காக குறித்த பொலிஸ் அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளார்.
சட்டமா அதிபரின் அசமந்த போக்கிற்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா நீதிமன்றத்தில் காட்டம்
2008ம் ஆண்டிலிருந்து வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதியான கந்தையா விஜயகுமாரை விடுதலை செய்யும்படி சட்டமா அதிபரினால் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னரும் தொடர்ந்தும் தடுத்து வைப்பது

வட­மா­கா­ண­சபைத் தேர்­தலில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்­னணி ஆத­ரவு வழங்­க­வேண்டும் என்று ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் பிர­தித்­த­லை­வரும் மேல் மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான ந. கும­ர­கு­ரு­பரன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­­வது:-
எதிர்­வரும் வடக்கு மாகா­ண­ச­பைத் தேர்தல் தமி­ழர்­க­ளுக்கு பலம் சேர்ப்­ப­தாக இருக்­க­வேண்­டுமே தவிர தமி­ழர்­களின் பலத்தை இழக்கச் செய்­வ­தாக அமைந்­து­வி­டக்­கூ­டாது.

அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றோம் என்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் எவரும் கை வைக்க இடமளிக்கமாட்டோம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தல் மிகவும் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது என கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராமத்தில் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் எம்.எஸ்.அபுல் ஹஸன் தலைமையில் நடைபெற்ற சமுர்த்திப் பயனாளிகளின் நூறு குடும்ப அங்கத்தவர்களுக்கு குடிநீர் இணைப்புக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும்

15 ஜூலை, 2013

முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன்!: த.தே.கூட்டமைப்பு தலைவர் அறிவிப்பு
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை நிறுத்துவதற்கு இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
விஜயகாந்த் நடந்து கொண்ட முறை சரியில்லை! நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி கருத்து!
நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்களை அடுத்து நாகர்கோவில் கோட்டாறில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் விஜயகாந்துக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.
கொழும்பில் சொகுசு வாகனத்தில் விபசாரம்: நான்கு அழகிகள் உட்பட ஐவர் கைது-சொகுசு வாகனமொன்றில் நான்கு அழகிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பயணம் செய்தவாறு அழகிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய
புங்டுதீவு மான்மியம் நூலின் வெளியீட்டு விழா இன்று காலை 9 மணிக்கு யாழ் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது  

கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினால் உருவாக்கம் செய்யபட்ட புங்குடுதீவு மான்மியம் நூலின் வெளியீட்டு விழா இன்று காலை 9 மணிக்கு யாழ் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் கா.பாலசுந்தரம்பிள்ளை (முன்னாள் பல்கலை கழக துணை வேந்தர்)அவர்கள் தலைமையில் வெகுசிறப்பாக நடந்தேறியது .முன்னாள் புங்குடுதீவு மகா வித்தியாலய அதிபர் ந.தர்மபாலன்அவர்களின்  நூல் அறிமுக உரையுடன் ஆரம்பமான இவ்விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் வாழ்த்துரை யை  பேராசிரியர் வி.சிவசாமிஅவர்களும்  ,விரிவுரையாளர் ந.பேரின்பநாதன் அவர்களும் நிகழ்த்த முதல் பிரதி யை திரு சிவா நற்குண சங்கர்அவர்கள் பெற்றுக் கொண்டார் .பல  முன்னாள் அரச உத்தியோகத்தர்களும் அதிபர்கள் ஆசிரியர்களும் உரையாற்றி சிறப்பித்தார்கள்

நன்றியுரையை  தர்மகுனசிங்கம் (முன்னாள் அதிபர் புங் ம வி) நிகழ்த்த விழா இனிதே நிறைவுற்றது .விழாவினை கனடாவில் தற்போது வாழ்ந்து வரும் நூலின் ஆசிரியற்குழுவை சேர்ந்த ந.தர்மபாலன் அவர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் தாயகம்  வந்து வெகு சிறப்பாக  நிறைவேற்றி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது




யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புங்குடுதீவு மான்மியம் நூல் வெளியீட்டு விழா படங்கள் 
படங்கள் ந.தர்மபாலன்
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஆஷஸ் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து

இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரென்ட்பிரிட்ஜ் நகரில் கடந்த 10ம் திகதி தொடங்கியது.
யாழ்.மாநகரசபையின் ஆளும் கட்சி  உறுப்பினர் விஜயகாந்த் செய்ததாக கூறப்படும் மோசடிகள் தொடர்பினில்  பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென எதிர்க்கட்சியான கூட்டமைப்பு கோரியுள்ளது.இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தினில் இடம்பெற்ற பத்திரிiகாயாளர் மாநாட்டினில் கூட்டமைப்பின் சார்பினில் அதன் மாநகரசபை அங்கத்தவர்களான விந்தன் கனகரட்ணம்இ பரஞ்சோதி மற்றும் ராஜதேவன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
புங்குடுதீவு காளிகாபரமேஸ்வரி ஆலய திருவிழாக் காட்சிகள்

14 ஜூலை, 2013

சுவிட்சர்லாந்து நபரை கடுமையாக தாக்கிய தமிழர்களால் பரபரப்பு

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒருவர் சூரிச்சில் 10 முதல் 15 தமிழர்களால் மிகக் கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.
தனித் தமிழீழத்துக்காக சர்வதேச கருத்துக் கணிப்பு நடத்தவேண்டும்- ஜெயலலிதா
இலங்கை தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியல் சட்டத்தின் 13-வது பிரிவை நீர்த்து போக செய்யவோ, அல்லது ரத்து செய்ய வழிவகை செய்யும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இறுதி கட்ட போரில் பலரை
புங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோவில் மன்டாலாபிசெகமும் சங்கபிசெகமும்


இன்று யாழ்ப்பாணத்தில் இந்துக் கல்லூரியில்  புங்குடுதீவு மான்மியம் நூல் வெளியீட்டு விழா 

கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினால் உருவாக்கம் செய்யபட்ட புங்குடுதீவு மான்மியம் நூலின் வெளியீட்டு விழா இன்று காலை 9 மணிக்கு யாழ் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நிகழ உள்ளது

தலைவர் .கா.பாலசுந்தரம்பிள்ளை முன்னாள் பல்கலை கழக துணை வேந்தர்

நூல் அறிமுக உரை .ந.தர்மபாலன் முன்னாள் அதிபர் புங்.ம.வி

வாழ்த்துரை  பேராசிரியர் வி.சிவசாமி ,விரிவுரையாளர் ந.பேரின்பநாதன்
முதல் பிரதி பெறுவோர் திரு சிவா நற்குண சங்கர்

நன்றியுரை தர்மகுனசிங்கம் முன்னாள் அதிபர் புங் ம வி

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

காணாமல் போனோர் காணோமல் போனவர்களே! புதிய அரசியல்வாதி தயாமாஸ்டர்!!முன்னதாக அவர் பணியாற்றி வந்த தொலைக்காட்சி குழுமத்தினில் இருந்து அரசியல் நடவடிக்கைகளிற்காக வெளியேறுவதாக அதன் பணிப்பாளர் எஸ்.குகநாதன் அறிவிப்பை விடுத்திருந்தார்.

கனடா கொமன்வெல்த் மாநாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்!- கனடிய பா.உ. ராதிகா சிற்சபேசன்

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டுக்கு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் செல்லாமல் அங்கு அரச தூதுக் குழுவை மட்டும் அனுப்பும் தீர்மானம் நாட்டின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கு முரணானது என்று கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது.

யேர்மனி மத்தியமாநிலத் தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013யேர்மனியில் நடைபெற்றுவரும்  மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாக,  கடந்த 07.07.2013 அன்று willich நகரில் மத்திய மாநிலத்திற்கான விளையாட்டுப்  போட்டிகள் நடைபெற்றன.

இலங்கைத் தலைவர்கள் இருவரையும் யுத்த நீதிமன்றத்தில் நிறுத்திய பின்னரே எனக்கு நித்திரை வரும்! ‘சனல்4’ பணிப்பாளர் மெக்ரே கனடாவில் தெரிவிப்பு
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் யுத்த நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்திய பின்னரே எனக்கு நித்திரை வரும் என ‘சனல் 4’ தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார் என இலங்கைக்கு
நாமல் மீது கோத்தபாயவிற்கு கொலைவெறி! 400 மில்லியன் பணத்தை தனியாக சுருட்டிக்கொண்ட நாமல்!
400 மில்லியன் ரூபாய் லஞ்சப் பணத்தை தனியாக நாமல் தனியாக சுருட்டிக் கொண்ட விவகாரத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாப ராஜபக்ஷ கொலைவெறியுடன் இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி
 புங்குடுதீவு காளி அம்மன் கோவில்  திருவிழா
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஆராய மீண்டும் கூடுகிறது உயர்மட்டக்க
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் குறித்த தீர்மானம் இன்னமும் எடுக்கப்படாத நிலையில் கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு எதிர்வரும் திங்கள் கிழமை மீளவும் கூடி
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அமைச்சர் டக்ளஸ்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடக்கு மாகாண முதலமைச்சராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிறுத்தப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad