புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2013


’கூட்டணியும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது’
மக்கள் முன்பு இசையமைத்த இசைஞானி!

ராஜராஜனின் போர்வாள் படத்தொடக்க விழா கரூர் பசுபதீசுவரர் கோயிலில் நேற்று(11.09.13) சித்தர் கரூவூரார் சன்னதியில் நடைபெற்றது.
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் உட்பட 200 பேர் கைது
சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் நடக்க உள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் செப்டம்பர் 12ம் திகதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் மாபெரும் போராட்டம்!- சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
16.09.2013 ஐ.நா. முன்றலில் நடைபெறவிருக்கும் மாபெரும் ஊர்வலத்திலும் கவனஈர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொள்வதுடன், எமது ஈகைப்பேரொளி செந்தில்குமரனுக்கும் வணக்கம் செலுத்தி அவன் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது.

ஆலய காணியில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றவும் : செல்வம் எம்.பி

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள சிறுத்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள சிறுத்தோப்பு ஆலயம் ஒன்றிற்குச் சொந்தமான 17 ஏக்கர் காணியில் நிலைகொண்டுள்ள

நுவரெலியாவில் கடும் மழை : இயல்பு நிலை பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழையினால் நுவரெலியா அம்பகமுவ, கொத்மலை, வலப்பனை பிரதேசங்களில் பல வீடுகள்

12 செப்., 2013

லண்டன் நகரின் அமைந்துள்ள கடையொன்றில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இலங்கைத் தமிழர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
லிவர்பூல் பிரதேசத்தின் லித்தர்லேண்ட் என்ற பகுதியில் அமைந்துள்ள கடையொன்றுக்குள் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள், கடை ஊழியரான மில்டன் தர்மலிங்கம் என்ற தமிழர் மீதே தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பள்ளிக்கூடத்தில் ரேக்கிங்: 5 மணி நேரம் கழிவறையில் அடைப்பு: 11 வயது மாணவி உயிரிழப்பு
கொல்கத்தாவில் ராகிங் காரணமாக 11 வயது மாணவி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளிக்கூட வகுப்பறைகளை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
என்றும் தமிழர்களின் தானைத் தலைவன் பிரபாகரன் மட்டுமே: ஸ்கந்தபுர மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வேட்பாளர
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களின் தொடராக கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ம.அன்ரன் டானியல் (ஒஸ்மன்) தலைமையில் மங்கள விளக்கேற்றல் மற்றும் உயிர் நீத்தோர் அகவணக்கத்துடன் நேற்று
போரின் போது ஐ.நா இலங்கையில் செயற்பட்ட விதம் தொடர்பிலான அறிக்கை ஆராயப்படுகிறது!- பர்ஹான் ஹக்
இலங்கையில் போர் நடைபெற்ற போது ஐக்கிய நாடுகள் அமைப்பு எப்படி செயற்பட்டது என்பது பற்றிய அறிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு கிடைத்துள்ளதாகவும், அந்த அறிக்கையை ஆராய்ந்து வருவதாகவும் ஐக்கிய நாடுகளின் இணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
இ.தொ.காவை சேர்ந்த 18 பேர் ஐ.தே.கட்சியில் இணைந்தனர்
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 18 பிரதேச தொழிற்சங்க தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டனர்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்! ஜெனீவாவில் இந்தியா தெரிவிப்பு
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 24வது கூட்டத் தொடரில்,  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது  இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையினை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக கூட்டத் தொடரில்

வாதுவையில் ஹோட்டலொன்றில் பதற்ற நிலை: பொலிஸார் குவிப்பு

வாதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் இரு குழுக்களிடையே முரண்பாடொன்று இடம்பெற்றுள்ளதுடன் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியதாகவும்

தமிழ் மக்களிடம் சென்று 4 ஆவது ஈழப் போருக்கான அனுமதியினை த.தே.கூ கோரி நிற்கின்றது: றிசாத்

வடமாகாண சபை தேர்தல் குறித்து மக்கள் மத்தியில் தமிழ் கூட்டமைப்பு பிழையாக  வழி நடத்திவருகின்றது.

இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு வெடிமருந்து, போதை பொருள் கடத்திய வழக்கில் 16 கடத்தல்காரர்களின் நடமாட்டம் குறித்து இந்திய உளவுப்பிரிவு பொலிசார் விசாரித்து  வருவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் போர் தீவிரமாக நடந்தபோது தமிழகத்தில் இருந்து

 கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக அழைத்து ஈ.பி.டி.பி தேர்தல் பிரச்சாரம் 
கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக பஸ்களில் ஏற்றி தேர்தல் கூட்டத்திற்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இன்று
 பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டிற்காக கொழும்பில் பாடசாலைகளிற்கு விடுமுறை 
இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டை நாடாத்துவதற்காக தலைநகர் கொழும்பில்
யாழில் முதவாவது மின் தகன மயானம் 
யாழ் மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மின் தகன இந்து மயானம் இன்று புதன்கிழமை யாழில் திறந்து வைக்கப்பட்டது.



          ""ஹலோ தலைவரே...… … ராகுல்காந்தியும் கனிமொழியும் சந்தித்தது பற்றி நம்ம நக்கீரனில் டீடெய்லா எழுதியிருந்ததைப் படிச்சிருப்பீங்க..''

""படிச்சேம்ப்பா.. தி.மு.க-காங்கிரஸ்-தே.மு.தி.க கூட்டணிக்கான முயற்சிகளையும் அதற்காக ஆ.ராசாவை கழற்றிவிடப் போவதா டெல்லி வட்டாரத்தில் ஒலிக்கும் பேச்சுகளையும் விரிவா எழுதியிருந்ததே நம்ம நக்கீரன். கலைஞர்கூட இது சம்பந்தமா பேட்டி கொடுத்திருந்தாரே..



             மிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2013-2015 ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல் பலத்த பரபரப்புடன் கடந்த 7-ந்தேதி நடந்து முடிந்திருக்கிறது. "கலைப்புலி' எஸ்.தாணு அணியை தோற் கடித்து அசுர பலத்துடன் ஜெயித்திருக் கிறது கேயார் அணி.

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இம்புட்டு பரபரப்பு ஏற்பட ஏகப்பட்ட "அரசியல்' காரணங்கள் இருந்ததுதான்
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட டெல்லி மாணவி
கொலை வழக்கு தீர்ப்பு: வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு
டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான ராம்சிங், வினய், அக்க்ஷய், முகேஷ், பவன் மற்றும் மைனர் சிறுவன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 
இலங்கையில் இயங்கும் லங்காசிறி, தமிழ்வின் இணையத்தள சேவர்கள் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டு வருகின்றன
பொதுவாக சிங்கப்பூரில் இருந்து இலங்கை செல்லும் செர்வர்கள் மீது அதிக தாக்குதல்கள் நடைபெறுகின்றன
தேர்தல் வேட்பாளர்களின் கருத்துக்கள் அடங்கிய பிரச்சாரங்கள் லங்காசிறி தமிழ்வின் ஊடகங்களில் அதிகமாக வெளிவரும் இந்நிலையில் இவ்வாறாக இலங்கையில் இணையத்தள சேர்வர்கள் மீதான தாக்குதல் நடாத்துவது தேர்தல் பிரச்சாரங்களை முடக்குவது போன்ற செயல்கள் தான்
இரவல் சின்னத்தில் போட்டியிடுவோரால் எத்தகைய அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்: வேட்பாளர் ப. அரியரத்தினம் கேள்வி - தேனிசைச் செல்லப்பா பாடல் 2 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் கரைச்சிப் பிரதேச சபையின் உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன் தலைமையில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணிக்கு நிறைவுபெற்றது.
இலங்கைத் தமிழர் செந்தூரனை திருப்பி அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் தடை
இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செந்தூரனை நாடு கடத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த முடிவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரபாகரனின் பிரசாரங்களையே கூட்டமைப்பும் முன்னெடுக்கின்றது: வவுனியா பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரசாரங்களையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று வவுனியாவில் குற்றம் சுமத்தினார்.
லண்டன் பொலிஸ் தனது இணையத்தளத்தில் பதிவேற்றியிருந்த புலிக்கொடியை நீக்கியது
லண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸ் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ் மொழிக்காக பயன்படுத்தியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியை நீக்கியுள்ளது.

11 செப்., 2013

ஜெனிவாவில் இனப்படுகொலையை விளக்கும் புகைப்படக் கண்காட்சி! தடை செய்யுமாறு இல. தூதரகம் வேண்டுகோள்
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் ஆரம் பமாகியுள்ள நிலையில் ஐ.நா. முன்றலில் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலையை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
லோகநாதன் மருதையாவினால் சேகரிக்கப்பட்ட புகைப்படங்களின் காட்சி எதிர்வரும் 15ம் திகதி வரையும், அதன் பின்னர் 23ம் திகதியிலிருந்து 27ம் திகதி வரையிலும் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நண்பனை கொண்டு காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர்
காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை வீடியோவில் பதிவுசெய்து அதனை தனது நண்பனுக்கு காட்டி, நண்பனை கொண்டும் தன் காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுவிஸில் இளம்பெண் கொடூர கொலை

சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் பல கத்திக்குத்து காயங்களுடன் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
சுவிஸில் உள்ள ஜெனிவா மற்றும் லவ்சான் 
ஐ.நாவின் நடவடிக்கைக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு
ஐக்கிய நாடுகளின மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையை பாதுகாப்பு சபையின் பிரேரணையான ஆயுத மோதலில் சிறுவர்கள் என்ற பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் கச்சாயில் தாயும் மகளும் கொலை
யாழ்ப்பாணம் கொடிகாமம் கச்சாய் பகுதியில் இன்று அதிகாலை குடும்பஸ்தர் ஒருவர் தமது மனைவியையும் மகளையும் கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமிழநாட்டில் தமிழீழ சின்னம்! திறந்து வைக்க முதல்வர் வருவாரா?

2009 நாடாளுமன்றத் தேர்தலில் புயலைக் கிளப்பிய ஈழ விவகாரம்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கப் போகிறது. இலங்கையில் போர் உக்கிரமாக வெடித்து தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட நேரத்தில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் ஜரூராக நடந்தன.
உ.பி. கலவரம்: பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கவால் கிராமத்தில் ஒரு பிரிவை சேர்ந்த பெண்ணை கடந்த மாதம் 27–ந்தேதி மற்றொரு பிரிவை சேர்ந்த ஷானவாஸ் என்பவர் கேலி கிண்டல் செய்தார்.
பாஜகவுடன் கூட்டணியா: வைகோ பதில் 
அண்ணாதுரை பிறந்தநாளைமுன்னிட்டு, செப்.,15ல், விருதுநகர் சூலக்கரையில் ம.தி.மு.க., மாநில மாநாடு நடக்கிறது.   மாநாட்டுப்பந்தலை நேற்று பார்வையிட்ட வைகோ, லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன்,

அம்மா உணவகங்களில் ரூ.3-க்கு 2 சப்பாத்தி
இதற்காக சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்களை கொள்முதல் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நூதனமான முறையில் காசைக் கறக்க ஒரு புதுவிளையாட்டு ஒன்று லண்டனில் ஆரம்பமாகியுள்ளது. ஒரு மோபைல் நபம்பரில் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும். சுமார் 2 தரம் மட்டுமே அழைப்புவிடுக்கப்படும். நீங்கள் ஆன்சர் பண்ண முன்னரே அது கட் ஆகிவிடும்
வடக்கு தேர்தலை கண்காணிக்க 5 பேரை அனுப்புகிறது இந்தியா – கோபாலசுவாமியும் வருகிறார்

வடக்கு மாகாணசபைத் தேர்தலைக் கண்காணிக்க இந்தியாவில் இருந்து 5 கண்காணிப்பாளர்கள் சிறிலங்காவுக்கு வரவுள்ளனர். 

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் அமைதியான முறையில்  மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
நேற்று ஆரம்பமான தபால் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்றும் இடம்பெற்றது.

வீதியில் தனியாக சென்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரின் மார்பகத்தை தடவி விட்டு தப்பிச் சென்ற நபரொருவரை பாணந்துறை பொலிஸார் தேடிவருகின்றனர்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 18 வயதான குறித்த யுவதி பாணந்துறை ஸ்ரீ மஹா விகாரை வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து

எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் புதிய பிரதமரிடம் நோர்வே வாழ் வெளிநாட்டுப் பெற்றோர் உருக்கம்

நோர்வே நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் ERNA SOLBERG இற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நோர்வே வாழ் வெளிநாட்டு வதிவாளர்கள் நோர்வேயின்

 தேர்தலில் இராணுவத் தலையீடு; ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசர கடிதம்! 
வட மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு சார்பான கட்சியின் வேட்பாளர்களுக்காக இராணுவம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் காணிகள் எவையும் அரசினால் சுவீகரிக்கப்படவில்லை ; அடித்துக் கூறுகிறார் பசில் 
அரசாங்கத்திற்கு தேவையானவற்றைத் தவிர மேலதிகமாக ஒரு அங்குல நிலமும் இதுவரை சுவீகரிக்கப்படவில்லை. எனினும்  அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடுகளை உரிமையாளர்களுக்கு வழங்கியே நாம் அவற்றை பயன்படுத்தி வருகின்றோம்
ஐ.நாவில் மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு எதிரான வரிசைகட்டிய அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் 
அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசுக்கு சவால்மிகுந்த இராஜதந்திரக்களமாக ஐ.நா மனித உரிமைச்சபை மாறி வரும் நிலையில்,  நடைபெற்று வரும் மனித உரிமைச்சபையின் 24வது கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான கடும் குற்றச்சாட்டுக்களை அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் பலவும் முன்வைத்துள்ளன.
அனந்தி எழிலன் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் - காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.
வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான எழிலனின் மனைவியுமான அனந்தி பயணித்த வாகனத்தின் மீது இராணுவ காடைக் கும்பல் கற்தாக்குதல் நடத்தியுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக ஜெர்மனியின் தோமஸ் பாக் (Thomas Bach )49 வாக்குகள் பெற்று தெரிவாகி உள்ளார்  .தற்போதைய பெல்ஜிய நாட்டவரனா ஜாக் ரொக்கை(Jacques Rogge ) தொடர்ந்து இவர் இந்த பதவியை வகிக்க உள்ளார் 
2014 உலக கிண்ண போட்டிக்கு ஐரோப்பிய வலயத்தில் இருந்துகுழு பீ இல்  இத்தாலியும் குழு டி  இல் ஹோலந்தும் முதலாம் இடத்தை இனி எந்த நாடும் முந்த முடியாத புள்ளிகளை பெற்று முன்கூட்டியே இன்று தகுதி பெற்றுள்ளன . 

குழு ஈ இல் இன்று இந்த நிலைய எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சுவிட்சர்லாந்து  இன்னும் ஒரு புள்ளிக்காக காத்திருக்க வேண்டி  உள்ளது .
வட மாகாண ஆளுனர் ஆளும் கட்சிக்காக பிரசாரம் செய்கின்றார்!– கீர்த்தி தென்னக்கோன்
வட மாகாண ஆளுனர் ஆளும் கட்சிக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு
தடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.  இலங்கையில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள அதி நவீன 1800 அதிர்வலை கொண்ட தொலைபேசிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி தர்மபுரத்தில் இடம்பெற்ற த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில்  தேனிசைச் செல்லப்பாவின் பாடல் வெளியிடப்படது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சி தர்மபுரப் பகுதியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் செ.புஸ்பராசா தலைமையில் நேற்று மாலை 4மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணியளவில் நிறைவு பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் இரகசிய இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அரசாங்க அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

10 செப்., 2013

தலைவர் மகன் எனது மாணவன்: மலையாளப்புரத்தில் சிறீதரன் MP காட்டம்.. - 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சி மலையாளப்புரக் கிராமத்தில் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் த.சேதுபதி தலைமையில் மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணியளவில் நிறைவு பெற்றது.
இந்தியாவின் பொதுமன்னிப்புக்காக ஏங்கித் தவிக்கிறார் அமைச்சர் டக்ளஸ்; வல்வெட்டித்துறையில் சரவணபவன் எம்.பி. 
கொலைக் குற்றவாளியாக இந்திய அரசால் தேடப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களுக்காகக் குரல்கொடுத்தால் தனக்குப் பொது மன்னிப்புக்கிடைக்கும் என்ற நப்பாசையில் நாடகமாடுகிறார்.

“புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்படுவது கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது

“இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அடிக்கடி கூறப்பட்டது. இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள்
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சிந்து  மயங்கி விழுந்தார் ( படங்கள் )
திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை சிந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.  
நடிகர் பரத் திருமண வரவேற்பு

பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பரத், இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார்.பரத்திற்கும் துபாயை சேர்ந்த ஜோஸ்வா – ஜெஸ்ஸி ஆகியோரின்
சென்னையில் இந்திய சினிமா நூற்றாண்டு பிரமாண்ட விழா :
4 மாநில முதல்வர்கள் நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்கள்
இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே, கடந்த 1913–ம் ஆண்டு மே மாதம் 3–ந் தேதி அன்று ‘ராஜா அரிச்சந்திரா’ என்ற படத்தை வெளியிட்டார்.
திண்டிவனம் : தேமுதிக –வி.சிறுத்தை கோஷ்டி மோதல்
திண்டிவனம் அருகே உள்ள முன்னூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். தே.மு.தி.க. தொண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழரசிக்கும் நேற்று முன்தினம்
ஈகப்பேரொளி செந்தில்குமரனின் இறுதி வேண்டுகோள் - (ஒலி வடிவம்)
கடந்த செப்டம்பர் 5ம் நாள் ஐ.நா முன்றலில் வீரத்தமிழ் மகன் ஈகப்பேரொளி செந்தில்குமரன் அவர்கள் தமிழினத்தின் விடுதலைக்காக தன்இன்னுயிரை ஈய்ந்தார்.
தீயில் ஆகுதியான வீரத் தமிழன் செந்தில்குமரனுக்கு சுவிஸில் இடம்பெற்ற வணக்க நிகழ்வுகள்
ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தீயினில் தன்னையே ஆகுதியாக்கிய வீரத்தமிழ் மகன் இரட்ணசிங்கம் செந்தில்குமரனன் நினைவு சுமந்த வணக்க ஒன்றுகூடல் நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் அமைந்துள்ள முருகதாசன் திடலில் நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் குறுகிய கால ஏற்பாட்டில், பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில், சுவிசின் பல பாகங்களிலிருந்தும் கனத்த இதயங்களுடன் மக்கள்
இனப்படுகொலை நடந்த இலங்கையில் கொமன்வெல்த் மாநாடா?: திருச்சியில் இருந்து சென்னைக்கு மாணவர்கள் சைக்கிள் பேரணி
“இனப்படுகொலை இலங்கையே”, “இலட்சம் தமிழரின் பிணக்குவியல் மீது கொமன்வெல்தா” என்ற முழக்கத்துடன் கொன்று குவிக்கப்பட்ட ஈழ உறவுகளுக்கும் சீரழிக்கப்பட்ட நம் சகோதரிகளிற்கும் நீதிகேட்டு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி மாணவர்கள் சைக்கிள் பேரணி நடத்த உள்ளனர்.



"அவர்களுக்கென்ன...
மகாராணிகள்!'


நடிகைகளின் வசதிகளையும், வாய்ப்பு களையும், புகழ் வெளிச் சத்தையும் பார்த்து ஈஸியாக சொல்லிவிடலாம்!



விஜய்யை வைத்து படம் தயாரித்தவர்கள் பலரும் தாணு அணியில் இருப்பதாலும், எஸ்.ஏ.சி. ஆதரிப்பதாலும் தாணு அணி "விஜய் ஆதரவு பெற்ற அணி'யாகவும், சூர்யாவின் கஸின் பிரதர் ஞானவேல்ராஜா, கேயார் அணியில்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதால் கேயார் அணி "சூர்யாவின் ஆதரவு பெற்ற அணி'யாகவும் வர்ணிக்கப்படுகிறது.

         "காய்'’ விட்டுக்கொள்ளும் சூரியன், மாம் பழம் தலைமைகள், ஒன்றுபோல ஆகி இருக் கின்றன; என்ன கதை இது? அம்மை ஆட்சியின் ஊழல் விவ(கா)ரங்களைத் தோண்டி, மக்கள் மன்றத்தில் வைக்க, கட்சியினரைத் தயார் செய்கிறது, மாம்பழத் தலைமை. இதேபோல,



               ""ஹலோ தலைவரே... பிரதமராகும் கனவில் இருக்கும் ஜெ., அதற்கு அணைபோடுற மாதிரி இருக்கிற இந்த சொத்துக் குவிப்பு வழக்கு எப்படியாவது சீக்கிரமா முடியணும்னும் தனக்கு சாதகமான தீர்ப்பு வரணும்னும் எதிர்பார்ப்போடு இருப்பதைப் பற்றி நம்ம நக்கீரனில் டீடெய்லா எழுதியிருந்ததைப் படிச்சிருப்பீங்க..''


           புதுவை மாநில ரவுடிகளின் அட்ட காசங்களைப் பற்றி ’ஆக. 31-செப் 3’ தேதியிட்ட நக்கீரனில் "ரவுடிகளுக்கு முதல்வரா?' என்ற தலைப்பில் ஹாட் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். நமது செய்தியை பார்த்த புதுவை மாநில வியாபாரிகள் அங்கங்கே கூடினர். "இந்த அரசாங்கம் நமக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும், நக்கீரன் பத்திரிகை நமக்கு


           வ்வொரு எம்.பி. தேர்தல் நெருங்கும்போதும் டெல்லியின் பார்வை தமிழகத்தின் மீது அழுத்தமாகப் பதிவது வழக்கம்தான். காங்கிரஸ் கட்சி கழுகுப் பார்வையோடு தமிழ்நாட்டைப் பார்க்கிறது என்று நம்மிடம் சொன்ன அந்த கர்நாடக எம்.பி (நடிகை குத்து ரம்யா அல்ல),


அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடித்து லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்துக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது.
திரு இரத்தினசிங்கம் செந்தில்குமரன்
பிறப்பு : 13 பெப்ரவரி 1978 — இறப்பு : 5 செப்ரெம்பர் 2013

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஈகைப்பேரொளி இரத்தினசிங்கம் செந்தில்குமரன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அன்னாரின் வீரவணக்கநிகழ்வு 11-09-2013 புதன்கிழமை அன்று மதியம் 12:00 தொடக்கம் 17:00 வரை Halle Polyvalente Rue de l’industrie 11 1964 Conthey எனும் முகவரியில் நடைபெறும்.
தகவல்
வலேதமிழ் சங்கம்
தொடர்புகளுக்கு
க.சிவலோகநாதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786629306
இலங்கைத்தீவுக்கான ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களது பயணத்தினை தொடர்ந்து இன்று தொடங்கிய ஐ.நா மனித உரிமைச்சபையின் 24வதுகூட்டத் தொடர் தமிழர்பரப்பில் பெரும் எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்திருந்தது. வீடியோ 
இன்று தொடங்கிய கூட்டத் தொடரில் தற்காலத்தில் அனைத்துலக அரசியல் அரங்கில் பேசுபொருளாகவுள்ள சிரியா மற்றும்எகிப்து ஆகிய நாடுகளின் விவகாரமே பெரும்பாலான நாடுகளின் கவனத்தினை பெற்றிருந்தாலும் , சிறிலங்கா விவகாரமும் அமெரிக்கா ஜேர்மனி ஒஸ்றியா

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளில் 107 பேர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய சமூகத்துடன் இன்று இணைக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வெலிகந்தை, பூந்தோட்டம் ஆகிய தடுப்பு முகாமில் புனர்வாழ்வு பெற்றவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தாயகத்துக்காக மரணித்த செந்தில் குமரனுக்கு விடுதலைபுலிகளின் மதிப்பளிப்பு 

ஜெனீவாவில் ஐ நா முன்றலில் இன்று மாலை நடைபெற்ற வீர வணக்க நிகழ்வில் ஈகை பேரொளி என்னும் மதிபளிக்கப்பட்டது

ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்திற்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து நீதி கிடைக்கச்செய்வதில் ஜ.நாவின் தலையீடு அவசியம் என்பதையும் சர்வதேசம் தமிழர்களிற்கான நீதியினை பெற்றுத்தரவேண்டும் என்பதனையும் வலியுறுத்தி ஈகைப்பேரொளி முருகதாசன் வழியில் செந்தில்குமரனும் தமிழினத்தின் சார்பாக தீயில் வெந்தான் என்ற வரலாறும் தமிழின விடுதலைக்கு வலுச்சேர்க்கட்டும்.
சிறீலங்கா அரசின் திட்டமிட்ட தமிழினவழிப்பால் சிறுவயதிலேயே புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்த ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்கள், அனைத்துலகம் தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தராத நிலையில்; ஐ.நா முன்னிலையிலேயே 05.09.2013 அன்று தன்னுயிரைத் தீயிட்டு ஈகம் செய்துள்ளார் .
திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தையுமான ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்கள் தமிழீழ மண்ணில் தமிழினம் விடுதலைபெற்று வாழவேண்டுமென்ற அரசியல் தெளிவோடு உறுதியான இலட்சியத்துடனவாழ்ந்தவர். அத்துடன் விடுதலையை விரைவில் வென்றெடுக்கவென  புலம்பெயர் தேச கவனயீர்ப்புப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்.
குறிப்பாக ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பக உயர் ஆணையாளர் அவர்களின் சிறீலங்கா, மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளுக்கான பயணத்தையடுத்து தன்னையே தீயிட்டுள்ளமை  என்பது ஐ.நா தன் பொறுப்பை உணரவும் இலங்கையின் சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைத் தாக்குதல்கள், மனித உரிமைகள் அழிப்புக் குற்றங்கள் குறித்து சர்வதேசம் தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரவும் வேண்டுமென்ற கருத்தையே தனது உயிர்த்தியாகத்தின் ஊடாக வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அத்துடன் தாயகத்தில் குரல்வளைகள் நசுக்கப்பட்ட நிலையில் தமிழ்மக்களின் பெருவிருப்பான தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்காக புலம்பெயர் மக்கள் உறுதியுடன் தொடர்ந்தும் போராடவேண்டும் என்ற செய்தியையும் எமக்கு  வலியுறுத்தியுள்ளார்.
இவரின் பிரிவால் துயருறும் துணைவியார், பிள்ளைகள், பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களின் துயரில் பங்கேற்று நிற்பதுடன்,தன்னின விடுதலைக்கெனத் தன்னுயிரை ஈகம் செய்த ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் “ஈகைப்பேரொளி” என மதிப்பளிக்கின்றது.
முருகதாசன் விட்டுச்சென்ற கோரிக்கைக்கு ஐ.நா நீதி வழங்காத நிலையில் செந்தில்குமரனும் தனது  கோரிக்கையையும் முன்வைத்துச் சென்ற இவ்வேளையில், மேலும் இவ்வாறான இழப்புக்கள் தொடர்வதற்கான சூழமைவு ஏற்படாதவாறு எமது செயற்பாடுகளை புத்தெழுச்சியுடன் வேகம் கொண்டு  முன்னெடுப்போம் என அனைத்துத் தமிழ்மக்களும் உறுதியெடுத்து, தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தைத்தொடர்வோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் இறுதி கிரியைகளும் மதிப்பளிப்பு  மற்றும் மரியாதையை செலுத்தலும் 

எதிர்வரும் 11-09-2013 அன்று மலை 12.00 முதல் 17.30 வரை 
சியோன் மாநிலத்தில் நடைபெறவுள்ளது 

இடம் Rue de Industrie 11.1964 conthey VS 

ஜேர்மனி வாழ் தமிழ் உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் ஆணையத்தின் கும் வேண்டுகோள்

இலங்கைத் தீவின் தமிழீழத் தாயகத்து வட புல மக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் வட மாகாண தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கைத்தீவுக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழ்கின்ற

அவுஸ்திரேலியா வாழ் தமிழ் உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் விடுக்கும் வேண்டுகோள் !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாம் தவணை அரசவை எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் திகதியுடன் தனது பணியினை நிறைவு செய்கின்ற நிலையில் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிமுகம் !

போருக்கு பிந்திய இலங்கைத்தீவின் சூழலில் தமிழர்களுக்கான சுதந்திரமான அரசியல் வெளி அற்ற நிலையில் ,இலங்கைத்தீவுக்கு வெளியே தோற்றம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் , எதிர்வரும் ஒக்ரோபர்

சோமாலியாவில் சிக்கி உள்ள ஈழதமிழர்களின் நிலை 
தயவு செய்து பகிரவும் , அவசரம்:

சோமாலியாவில் சிக்கியுள்ள ஈழ தமிழர்கள்..,

கடந்த மே மாதம் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு தஞ்சம் புக கப்பல் மூலம் சென்று காணமல் போன சிலர் சோமாலியாவில் தற்போது இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தற்பொழுது அவர்களுடைய உறவினர்களுக்கு சோமாலியா நாட்டு தொலைபேசி எண்களில் இருந்து தொடர்புகள் வருவதாகவும், எதிர் முனையில் எதையும் கேட்க இயலவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

அழைப்புகள் வந்த எண்கள்
0021-2692298064
0021-2621297906
0021-2698010610
0021-2522132284

அவர்கள் குறித்த தகவல்களை பெற சோமாலிய நாட்டு தொடர்புடைய நண்பர்களின் உதவி தேவைப்படுகிறது.

தயவுசெய்து சோமாலியாவில் நண்பர்கள் உள்ள அல்லது வணிக தொடர்புள்ள யாரேனும் நண்பர்கள் தொடர்புகொள்ளவும்.

இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக களுத்துறை மாவட்ட பாலியல் நோய்கள் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் ஹிமாலி பெரேரா தெரிவித்தார்.கடந்த வருடம் 24 ஆயிரமாக இருந்த ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை இக்காலப்பகுதியில் 37ஆயிரமாக உயர்வடைந்துள்ளதாகவும்

நான் அரசியல்வாதி இல்லை;எந்த அரசியல் கட்சியைச்சார்ந்தவனும் இல்லை: விஜய் பேட்டி
 



தலைவா திரைப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி இன்று(9.9.2013) மாலை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப் பானது. இப்படத்தில் நடித்த நடிகர் விஜய், நடிகை அமலாபால், படத்தின் இயக்குநர் விஜய், இசையமைப் பாளர் ஜி.வி.பிரகாஷ்
ரஞ்சனியை திருப்பியனுப்ப வாய்ப்பில்லை! ஏசியோவின் குற்ற அறிக்கை புறந்தள்ளப்படலாம்
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நிலையில் இன்று முக்கிய வழக்கு ஒன்றின் பங்காளியாக உள்ள ரஞ்சனி என்ற பெண், விடுதலைப்புலி உறுப்பினர் என்று அடையாளம் காணப்பட்ட போதும் அவரை திருப்பியனுப்ப வாய்ப்பில்லை என்று சட்டத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் ரஞ்சனி உட்பட் 47 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவருடன் முஸ்லிம் ஆசிரியர் ஒருவருக்கு நேற்று இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான் (28வயது) என்ற முஸ்லிம் ஆசிரியருக்கும் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி (23வயது) என்ற பெண்ணுக்கும் நேற்று ஏறாவூர் 4ம் குறிச்சி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.
விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டு, முள்ளிவாய்க்கால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜோர்தான் கப்பல், தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அக்கப்பல் தற்போது இரும்புத் தேவைக்காக வெட்டப்பட்டு வருகின்றது.
விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை கப்பலை பார்க்கச் சென்ற பெருமளவான சுற்றுலாப் பயணிகள், முள்ளிவாய்க்கால் கப்பலடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வட மாகாணத் தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்: ஈழத் தமிழர்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
இலங்கையில் இடம்பெறும் வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழத்தமிழ் உறவுகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனிதஉரிமை ஆர்வலர்கள் மீதான அச்சுறுத்தல்! இன்றைய அமர்வில் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் தேவை: இலங்கை
மனித உரிமை பாதுகாவல்கள் மீது நடத்தப்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை தரவேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் நவி.பிள்ளை சந்தித்த மக்கள் மிரட்டப்பட்டமை தொடர்பில் பல நாடுகளின் பிரதிநிதிகள் கவனம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் போது அவரை சந்தித்து பேசிய மக்கள் அச்சுறுத்தப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் பலர் தமது கவனத்தை செலுத்தியுள்ளனர்.
சரத் பொன்சேகாவை யாழ்ப்பாணத்துக்குள் வர விட்டது தவறு -ஊடகவியலாளர் மாநாட்டில் ஆனந்தி சசிதரன் 

9 செப்., 2013

அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் மறுப்பு
மக்கள் விவகாரம் மற்றும் மக்கள் தொடர்புகள் அமைச்சர் மேர்வின் சில்வா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதற்காக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சமர்ப்பித்திருந்த விசா விண்ணப்பத்தை தூதரகம் நிராகரித்துள்ளது.
தெரிவுக் குழுவில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலகல்
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம் மற்றும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலகியுள்ளது.
தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும்!- சுதர்சன நாச்சியப்பன் அதிரடி
தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் திடீரென இப்படி அதிரடியாக கூறியிருப்பது காங்கிரசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீமானை வாழ்த்தவந்த வைகோ

நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சிகள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்: தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கோவை ஏஐடியுசி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஜெனீவாவில் இன்று மனித உரிமை மாநாடு : அறிக்கையை நவநீதம்பிள்ளை சமர்பிக்கிறார்.
ஐ.நா. மனித உரிமை அமைப்பின் 24-வது கூட்டம் இன்று ஜெனிவா நகரில் நடக்கிறது. இன்று துவங்கும் மாநாடு 27-ம் தேதி வரை நடக்கிறது.இக்கூட்டத்தில் 20 நாடுகளில் நடந்த
மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டியெழுப்பி வழிபட அனுமதிக்க முடியுமா?: கீதாஞ்சலிக்கு சரவணபவன் சவால்
சிங்கள அரசினால் தரை மட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டி எழுப்பி மக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்க முடியுமா? என்று கீதாஞ்சலியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
மனிதஉரிமை ஆர்வலர்கள் மீதான அச்சுறுத்தல்! இன்றைய அமர்வில் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொலைபேசியில் அறிமுகமான பெண்ணை சந்தித்த முதல் நாளே வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது
தொலைபேசியில் உரையாடி அறிமுகமான இளம் பெண்ணை சந்தித்த முதல் நாளே அந்த பெண்ணை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட கொழும்பு வாழ் தமிழர்களுக்கு அவசர அழைப்பு
தலைவர்-கே.வீ.தவராசா (தலைவர்.கொழும்பு கிளை.தமிழரசு கட்சி )
காலம்-(11-09-2013 ) புதன்கிழமை மாலை 05.30
இடம்-அக்சயா மண்டபம்,37 வது ஒழுங்கை .வெள்ளவத்தை .கொழும்பு 
சிறப்புரை-எம்.ஏ .சுமந்திர்டன் (பா.உ )

நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடைய தலைநகர் கொழும்பில் வசிக்கும் - வாக்காளர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கலந்துரையாடல் கொழும்புக் கிளையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை 11ஆம் திகதி மாலை 5 மணிக்கு கொழும்புவெள்ளவத்தை 37வது ஒழுங்கையில் அமைந்துள்ள அக்‌ஷயா மண்டபத்தில் (செட்டிநாடு உணவக மண்டபத்தில்) நடைபெறவுள்ளது.

இக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ. சுமந்திரன் அவர்கள் பங்குபற்றி சிறப்புரையாற்றுவதுடன் விளக்கங்களையும் அளிக்கவுள்ளார்.

கொழும்பு வாழ் தமிழ் மக்களை இந் நிகழ்வில் தவறாது பங்குபற்றி ஆக்க பூர்வமான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

ad

ad