புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2013



நடிகர் சங்க பொதுக்குழு
நடிகர் சங்க பொதுக் குழு சென்னையில் புதன்கிழமை கூடியது. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே பொதுக்குழுவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்து கொள்ள தகுதியுள்ள உறுப்பினர்கள் மொத்தம் 2,900 பேர் இருக்கிறார்கள். இதற்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அனுமதிக்கப்பட்டனர்.படங்கள் 



திருமணத்துக்கு காதலன் மறுப்பு:
சென்னை அண்ணா மேம்பாலத்தில்
இருந்து விழுந்து காதலி தற்கொலை

கோடம்பாக்கம் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி (26). இவர் தனது தாயார் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார். அஞ்சலி தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பிரபல அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார். 
நடிகர் சங்கத்தில் குமரிமுத்துவை மீண்டும் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும்: சரத்குமார்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில், நடிகர் குமரிமுத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறப்புரிமையைப் பறிக்க முயலும் அரசாங்கம்
அரசாங்கமும் அதன் கடும் போக்கு பங்காளிக் கட்சிகள் பலவும் 2013 செப்டெம்பர் மாதம் 3ம் திகதி யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியதால், ததேகூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்தில்
ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் நாட்டை விட்டு வெளியேறினார்
இலங்கையின் சண்டேலீடர் பத்திரிகையின் இணையாசிரியர் மந்தனா இஸ்மாயில் அபயவிக்ரம இலங்கையை விட்டு வெளியேறியிருக்கிறார்.
மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக அணிதிரளுங்கள்: வட அமெரிக்கத் தமிழ் உறவுகளுக்கு நா.க.த.அரசாங்கம் அறைகூவல்
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமெரிக்க வருகைக்கு எதிராக, அமெரிக்க மற்றும் கனேடியத் தமிழர்களை அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரை எதிர்வரும் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

18 செப்., 2013

முள்ளிவாய்க்காலில் முகவரி எழுதிச்சென்ற உறவுகளை மனதில் இருத்தி கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்: குகவரதன் கோரிக்கை
முள்ளிவாக்காலில் புதிய முகவரி எழுதிச் சென்ற உறவுகளை மனதில் இருத்தி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் மக்கள் தீர்ப்பளிக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும் கொழும்பு

இரண்டு தமிழர்கள் மற்றும் ஒரு தமிழச்சி சிங்களவர்களாக மாற்றம்!- கிளிநொச்சியில் இன்று கோலாகலம்.

சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் இரண்டு பெண்கள் மற்றும் இளைஞர் ஒருவருக்கும் இன்று இராணுவத்தின் ஏற்பாட்டில் திருமணம் நடைபெறவுள்ளது.




              முன்னெப்போதும் இல்லாத பிரம்மாண்டத்தைக் காட்ட வேண்டும் என்ற சிரத்தையோடு, தொண்டர்கள் இரண்டு லட்சம் பேர் வருவார்கள் என்னும் எதிர்பார்ப்புடன் விருதுநகரில் செப்.15-ல் மாநில மாநாட்டை நடத்தியது ம.தி.மு.க.

                லங்கையின் வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் சி.வி.விக்னேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ""எங்களது பிரச்சினைகளை தமிழக அரசியல்வாதிகள் டென்னிஸ் பந்துகளைப் போல பயன் படுத்திக்கொள்கிறார்கள். தமிழர் பிரச்சினைக்கு தனி நாடே தீர்வு என தமிழக அரசியல்வாதிகள் குறிப்பிடுவதால் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகள் அச்சமடைந்திருக்கிறார்கள்.



                ""ஹலோ தலைவரே... தேசிய அளவில் பா.ஜ.க.வும் தமிழக அளவில் அ.தி.மு.க.வும் எம்.பி. தேர்தல் வேலைகளை முன்கூட்டியே தொடங்கி வேகமா போய்க்கிட்டிருக்குது.''

""தி.மு.க சைடிலும் மா.செ.க்கள் கூட்டம் போட்டு எம்.பி. தேர்தல் பற்றி ஏற்கனவே
இலங்கை தேசிய அணியில் ஒரே பாடசாலைச் சேர்ந்த 3 தமிழ் மாணவர்கள் 
வரலாற்றில் முதல் தடவையாக வட மாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழ் பாடசாலையில் இருந்து மூன்று மாணவர்கள் இலங்கையின் தேசிய கால்பந்தாட்ட அணியில்  இடம்பிடித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இறுதி பிரசாரக் கூட்டம் பருத்தித்துறையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி பிரசாரக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு வடமராட்சி வதிரி சந்தியிலுள்ள உள்ளியன் எல்லை அம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
கூட்டமைப்பு கோருவது தமிழீழ சுயாட்சியா, சுயநிர்ணயமா?: வாசுதேவ - முஸ்ஸாமில் வாக்குவாதம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் இன்று முற்பகல் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சுற்றி வளைத்து இராணுவம் தாக்குதல்: யாழ்.மீசாலையில் பதற்றம்
யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு பகுதியில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு கூட்டமைப்பினரை சுற்றி வளைத்துள்ளனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நான் தான் ஆரம்பித்தேன்: கே.பி
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்று கிளிநொச்சியில் தெரிவித்தார்.
புலிகளின் திருகோணமலை கட்டளைத் தளபதி பதுமன் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட கட்டளைத் படைகளின் தளபதி கேணல் பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதனை திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்

சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சனீஸ்வர வழிபாடு
 (புரட்டாதி சனி நாட்கள் )
 


சுவிட்சர்லாந்து தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் எதிர்வரும் 21.28 மற்றும் ஒக்ரோபர் 5,12 ஆகிய தினங்களில் இவ்வாலயத்தில் சனீஸ்வர வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற இருப்பாதால் அடியார்கள்  சனீஸ்வரனை வேண்டி விரதம் இருந்து சனீஷ்வர தோஷ வழிபாடு செய்து உங்கள் வாழ்வை நலமாக்கி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

சனீஸ்வர பகவானுக்கு உகந்த தினங்கள் இவை என்பதால்  அடியார்கள் அவருக்கு எள்ளெண்ணை தீபம் ஏற்றி கரு நீல (குவளை) மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் சனீஸ்வர தோஷம் நீங்கப் பெற்று நல்வாழ்வு பெறுவார்கள்

சனீஸ்வர தோஷம் உள்ளவர்கள் -ராசிகள்-நட்சத்திரங்கள் 

ஏழரை சனி

கன்னி  ராசி  (உத்தரம் 2.3.4 ஆம் கால்கள் ,அத்தம் -சித்திரை 1.2 ஆம் கால்கள்  )
துலாம் ராசி (சித்திரை 1.2 ஆம் கால்கள் ,சுவாதி ,விசாகம் 1.2 ,3ஆம் கால்கள் )
விருச்சிகம் (விசாகம் 4 ஆம் கால் ,அனுஷம் ,கேட்டை )

அட்டமத்து சனி

 மீன ராசி  (பூரட்டாதி 4 ஆம் கால் .,உத்தரட்டாதி, ரேவதி )

 7 ஆம் இடத்து சனி

மேட ராசி (அஷ்வினி, பரணி. கார்த்திகை 1 ஆம் கால் )

4 ஆம் இடத்து சனி

கடக ராசி ( புனர்பூசம் 4 ஆம் கால், பூசம் ,ஆயிலியம் )
சுவிஸ் பெண்ணின் கனவை நனவாக்கிய ஷாருக்கான்

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரசிகையின் கனவை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நனவாக்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கரோலின் ஜெடர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2005ம் ஆண்டு கண் பார்வை பறிபோனது.
இரண்டு தமிழர்கள் மற்றும் ஒரு தமிழச்சி சிங்களவர்களாக மாற்றம்!- கிளிநொச்சியில் இன்று கோலாகலம்
சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் இரண்டு பெண்கள் மற்றும் இளைஞர் ஒருவருக்கும் இன்று இராணுவத்தின் ஏற்பாட்டில் திருமணம் நடைபெறவுள்ளது.
பள்ளிகளை உடைத்த அரசுக்கு வாக்களிக்காதீர்கள்: முஸ்லீம்களிடம் மொகமட் இலியாஸ் கோரிக்கை
பள்ளிவாசல்களை உடைப்பவர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவும் ஆசீர்வாதம் வழங்குகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் டாக்டர் மொகமட் இலியாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
plote.t.s-02aதமிழ்த் தேசிய அரசியல் ஒரு முக்கிய திருப்புமுனைக்கான பயணத்தில் நிலைகொண்டிருப்பதாகவே பல அரசியல் அவதானிகளும் அபிப்பிராயப்படுகின்றனர். ஒரு புறம் இலங்கை அரசின் மீதான ஜக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. பிறிதொரு புறம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றவாறன பிராந்திய அழுத்தமும் அதிகரித்திருக்கின்றது. ஏதோ ஒரு வகையில், இவற்றைச் செவிமடுக்க வேண்டிய இக்கட்டு நிலையில் ஆளும் மகிந்த அரசாங்கம் சிக்குண்டிருக்கின்றது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.
இத்தகையதொரு முக்கியமான கட்டத்தில்தா

சுயாட்சியை ஈழமாக பாற்கும் தென்னிலங்கை அரசு தமிழர்கள் ஒருவகையில் பிரிந்து செல்வதை விரும்புகிறது என சிரேஸ்ர சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சி கொழும்புக் கிழைத் தலைவருமான கே.வி.தவராசா லங்காசிறி வானெலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் கூறினார்.
சுயாட்சி ஈழமாக மாறும் என்ற பீதியில் தென்னிலங்கை! பல தகவல்களுடன்: கே.வி.தவராசா
சுயாட்சியை ஈழமாக பாற்கும் தென்னிலங்கை அரசு தமிழர்கள் ஒருவகையில் பிரிந்து செல்வதை விரும்புகிறது என சிரேஸ்ர சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சி கொழும்புக் கிழைத் தலைவருமான கே.வி.தவராசா லங்காசிறி வானெலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் கூறினார்.


ஐ.நாவில் சிறிலங்கா விவகாரம்: தவறிய பான் கீ மூனும் சுட்டிக்காட்டிய சுவிஸ் பிரதிநிதியும்
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், இன அழிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவனற்றினை தடுப்பதற்கான ஐ.நாவின் கடப்பாடுகள்

17 செப்., 2013

 ஜனாதிபதி மஹிந்தவும் என்றோ ஒருநாள் போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுவார்; ஏழாலையில் கூட்டமைப்பு எம்.பி சரவணபவன் 
மனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் எவரும் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை. இதன் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­வும் என்றோ ஒருநாள் சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் முன் நிற்க வேண்டிவரலாம்.

நரேந்திர மோடியைவிட ஜெயலலிதாவே பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்தது. அதில் பேசும்போது, ''இந்தியாவில் தற்போது பரபரப்பாக பேசிப்படும் ஒரு விஷயம் நரேந்திர மோடி தான். பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகத்தான் மோடி அறிவிக்கப்பட்டுள்ளாரே தவிர பிரதமர் ஆகவில்லை.

தமிழக பிஜேபியின் தலைவராகிறார் ரஜினி. மோடியை முன்னிறுத்தி ஜெயலலிதாவுடன் கூட்டணி. சோ மெகா திட்டம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது அவர்களின் சந்திப்பு எதனால் நடந்தது என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
சுயநிர்ணய அடிப்படையில் எமக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச பிரசாரக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் முழக்கம் !!!

த.தே.கூட்டமைப்பு வன்முறை பாதையை ஒருபோதும் விரும்பவில்லை. வன்முறைகளினால் தமிழர்களே அதிகம் பாதிக்கப்படுபவர்கள். சுயமரியாதையுடன் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் நியாயமான
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முழுமையான வெற்றிக்கு, உலக தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் !!!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி ஒன்றை பதிவு செய்வது மிகவும் முக்கியமாகும். இந்த நிலையில் புலம்பெயர்ந்த நிலையில் உள்ள இலங்கை தமிழர்கள் தங்களின் உறவினர்கள் நண்பர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வலியுறுத்த வேண்டும். இந்த தேர்தலில் யாரும் வாக்களிக்காதிருக்க கூடாது.

சுரேன் சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
உலக தமிழர் பேரவை
இலங்கையின் அநேகமான தெற்கு ஊடகங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயுத போராட்டத்தை கோருவதாக குறிப்பிடப்படுகின்றது. அநேகமான சிங்கள நாளிதழ்களில் இவ்வாறான ஓர் நிலைப்பாட்டை சித்தரிக்கக் கூடிய வகையில் செய்திகள் பிரசுரமாகின்றன.
அரசாங்கத்திற்கு சொந்தமான பத்திரிகைகள் மட்டுமன்றி தனியார் ஊடகங்களும் இதேவிதமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.

இதேவேளை, வடக்கிற்கு அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் ஆயுதம் ஏந்தி போராட நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வர


            ந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வினை மிக பிரமாண்டமாக சென்னையில் நடத்து கிறது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (ஃப்லிம் சேம்பர்). ஜனாதிபதி உட்பட தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய  4 மாநில முதல்வர்களும் கலந்து கொள்வதால் விழாவின் பிரமாண்டம் குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் இவ்விழா குறித்த சர்ச்சைகளும் ரெக்கைக் கட்டிப் பறக்கின்றன.



             ழப்பிரச்சினைகளில் ஆழமான அறிவும் விரிவான பார்வையும் கொண்டவர் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் சுதர்சனநாச்சியப்பன். சமீபத்தில்,சென்னை விமானநிலையத்தில் பத்திரிகை யாளர்களை சந்தித்த அவர், ""இலங்கை என்பது தமிழர் களின் பூமி.தமிழீழ கனவு அனைவரின் விருப்பம்'' என்று பகிர்ந்திருக்கிறார். சோனியா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவரான நாச்சியப்பனிடமிருந்தே தமிழீழம் குறித்த கருத்து வெளிப்பட்டிருப்பது தமிழ்த்தேசியவாதிகள் மற்றும் ஈழ ஆதரவாளர்களை உற்று கவனிக்க வைத்திருக்கிறது. அதேசமயம்,நாச்சியப்பனின் கருத்தை அறிந்து டெல்லி யும் அதிர்ந்துள்ளது. இந்த நிலையில், சுதர்ச்சன நாச்சியப்பனை தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.
ஐ.நா அறைகளுக்குள் பதறி ஓடும் இலங்கையின் முன்னாள் தூதுவர் தமரா குணநாயகம்: ச.வி.கிருபாகரன்
ஐ.நாவின் முன்னாள் தூதுவர் தற்போது ஒரு தூதுவர் என்ற மன நிலையில் அங்கும் இங்கும் அலைந்து உலக நாடுகளை ஏமாற்ற முயற்சிக்கிறார் என பிரான்ஸ் மனித உரிமைகள் நடுவகத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.
கொலைகாரர்களை அழிப்பதற்கு மாகாண சபையை ஆயுதமாக்குங்கள்! ஈழத்தமிழரிடம் ஐ.நா முன்றலில் அறைகூவல்
தமிழர் தாயகத்தில் ஒட்டுக் குழுக்களையும் கொலைகாரர்களையும் அழிப்பதற்கு வடமாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்வது காலத்தின் கட்டாயம் என இன அழிப்பு கண்காட்சியை நடாத்திவரும் மருதையா லோகநாதன் (கஜன்) ஜெனிவாவின் ஐ.நா முன்றலில்


            ""ஹலோ தலைவரே... நாங்க பி.எம். வேட்பாளரை அறிவிக்க ரெடி, காங்கிரஸ் ரெடியான்னு சவால்விட்ட பா.ஜ.க முகாமி லேயே நெருக்கடி உண்டாயிடிச்சே?''

பிறேசில் - ஈழத்தவர் உதைபந்தாட்ட தெரிவு அணிகள் பிரான்சில் களமாட்டம்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதுணை!!

பிரான்ஸ் வாழ் ஈழத்தவர் விளையாட்டு களத்தில் பிரான்சில் உள்ள பிறேசில் நாட்டு தெரிவு அணிக்கும் , ஈழத்தவர் தெரிவு அணிக்கும் இடையிலான உதைபந்தாட்ட ஆட்டமொன்று இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவில் - வள்ளிபுணத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சி குண்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு ஒருவர் பலி
முல்லைத்தீவில் - வள்ளிபுணத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சி குண்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு இலக்காகிய குடும்பஸ்தர் உயிரிளந்துள்ளார்.
கூட்டமைப்புக்கு எதிராக எந்த முறைப்பாடும் இல்லை – தேர்தல் ஆணையாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என்று, சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் தேர்தல் மேடைகளில் பரப்புரை செய்து வருகின்ற போதிலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் எந்த முறைப்பாட்டையும்

வம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார்.
இதற்கு வருகை தரவுள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மட்டக்களப்பிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி வக்கீல்கள் சாகும்வரை உண்ணாவிரதம்
சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி முருகன், கயல்விழி, பகத்சிங் ஆகிய 3 வக்கீல்கள் திங்கள்கிழமை சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
தேர்தலுக்கு பின் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை பயன்படுத்த கூடாது!- அரசு எச்சரிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆய்வு செய்த போது நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தும் பயணத்தை அந்த கட்சி மேற்கொண்டு வருவது தெரிவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசியத்திற்காய் போராடுபவர்களுக்கு வாக்களியுங்கள்! யாழ்.பல்கலை.மாணவர் ஒன்றிய
தமிழ் மக்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள அனைவரும் தமிழ் தேசியத்திற்காய் போராடுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கூட்டமைப்பின் வெற்றிக்கு தாயக உறவுகளை தூண்டுங்கள்: புலம்பெயர் மக்களுக்கு மாவை அறைகூவல்
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு தாயக மக்களை உந்துவதற்கு புலம்பெயர் தேசங்களில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இன்று உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என தெரிவித்தே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர  மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஐ.நா முன்றலில் பெருந்திரளான மக்களுடன் மாபெரும் கவனயீர்ப்பு
ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு எமது மக்களின் விடிவுக்காக உலகத் தமிழினம் உரிமைக்குரல் எழுப்பவேண்டும் என்னும் தலைவர் பிரபாகரன் அவர்களின் வார்த்தைக்கு இணங்க பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ஐ.நா முன்றலில் இன்று ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்துகின்றனர்.
கடும் மழையினையும் பொருட்படுத்தாது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ஐ.நா. முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு

16 செப்., 2013

நவநீதம் பிள்ளை -யார் இவர்??
தென்னாபிரிக்காவின் டேர்பன் நகர (கிளாயர்வுட் பகுதியில்) சாதாரண குடும்பமொன்றில் பிறந்து உலகின் அதியுயர் கல்வி நிறுவனமான அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை கலாநிதி பட்டம்
நல்ல உள்ளம் வாழ்க..!நடிகை ஹன்ஸிகா

பிரபலமானவர் நடிகை ஹன்ஸிகா. அடிப்படையில் இவர் ஒரு இந்தி நடிகை. தமிழ் பட படப்பிடிப்பு மதுரையில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்வதற்காக,நேற்று ஹன்சிகா மோத்வானி மும்பையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அவருடன் தாயார் மோனாவும் வந்தார். மோனா, எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர். 
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரே ஒரு தமிழ்ப் பெண் வேட்பாளர்.. 


பெயர் : திருமதி அனந்தி சசிதரன் (பிரதம முகாமைத்துவ உதவியாளர் - கிளிநொச்சி மாவட்ட செயலகம்)

சின்னம் : வீடு 

இலக்கம் : 01
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரே ஒரு தமிழ்ப் பெண் வேட்பாளர்..


பெயர் : திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணம் (ஆசிரியை - கிளி.கிராஞ்சி அ.த.க.பாடசாலை)

சின்னம் : வீடு

இலக்கம் : 04

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் நடைபவணியை மேற்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும், முன்னாள் நீதியரசருமான சி.வி.வின்னேஸ்வரன் தலைமையிலான பிரச்சாரப் பிரிவினருக்கு மக்கள் மலர் மாலைகள் அணிவித்தும், பொன்னாடைகள் போர்த்தியும் வரவேற்பு..

வடமாகாணசபை தேர்தல் 2013 இணையக் கருத்துக்கணிப்பு

இலங்கையில் வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் எதிர்வரும் 21.09.2013 அன்று நடைபெற உள்ளது.
election2013
21ம் திகதி வடமகாணசபைத்தேர்தலில் வெற்றி பெறும் சின்னம்
  • வீடு (86%, 1,078 Votes)
ஆற்காடு வீராசாமி அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தபோது.
· 
வரலாற்றுச் பிரசித்தி பெற்ற யாத்திரை தலங்களில் ஒன்றாக திகழும் சாட்டி சிந்தாத்திரை அன்னை ஆலய பெருவிழா. மிகவும் சிறப்பான முறையில் யாழ் ஆயர் வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் தலைமையில்
நடைபெற்றது.

ஆலய பெருநாளை முன்னிட்டு தீவகத்தினை நோக்கி பெருந்திரளான பக்தர்கள் வருகைதந்திருந்தனர்.kumaran
வாக்கு கொள்ளை இடம்­பெ­றா­விட்டால் வடக்கில் கூட்­ட­மைப்பு அமோக வெற்­றி­பெறும்!- சுனந்த தேசப்­பி­ரிய
வட மாகாண சபை தேர்­தலில் வாக்­குகள் கொள்ளை இடம்­பெ­றா­விட்டால் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு வெற்றி பெறு­வது உறு­தி­யா­கி­விட்­டது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வட மாகா­ணத்­தி­லுள்ள ஐந்து மாவட்­டங்­க­ளிலும் இப்­போது வெற்றி பெறும் என்­பதை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.
பொங்கு தமிழென சங்கே முழங்கு: மகிந்தவின் வருகைக்கு எதிராக அணிதிரளும் வட அமெரிக்கத் தமிழர்கள்
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமெரிக்க வருகைக்கு எதிராக அமெரிக்க மற்றும் கனேடியத் தமிழர்கள் அணிதிரளத் தயாராகி வருகின்றனர்.
சமஷ்டி பிரிவினையல்ல என்பது சட்டம் படித்த ஜனாதிபதிக்கு தெரியாதா?- சி.வி. விக்னேஸ்வரன்

சமஷ்டி என்பது பிரிவினையல்ல என்பதை சட்டம் படித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தெரிந்திருக்க வேண்டுமென்று,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை சந்தித்த சுமந்திரன், தவராசா!- சர்வதேச கண்காணிப்பாளர்களின் பணி வட மாகாணத்தில் இன்று ஆரம்பம்
நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள தெற்காசிய தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் 21 பேரும் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமி தலைமையில் மாகாண சபைத் தேர்தல்களில்
ஈழத்தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளனர். காவிரிக்காக முல்லை பெரி யாறுக்காக, கச்சத்தீவுக்காக போராடுகிறோம். நாங்களும் தத்தளித்துக் கொண்டு இருப்பதால் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா? 
ஆந்திராக்காரர்கள் போல் நாங்களும் சினிமா நூற்றாண்டு விழாவில்
 பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா? : பாரதிராஜா
சேரன் இயக்கும் புதிய படம் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’. அதில் கதாநாயகனாக சர்வானந்த், நாயகியாக நித்யாமேனன் நடிக்கிறார்கள். படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது.
இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஆர்.பார்த்திபன், ஷங்கர், சீமான், அமீர், கேயார், சமுத்திரக்கனி, சசி, பாண்டியராஜன், உட்பட பல இயக்குநர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.   நடிகர்கள் சரத்குமார், சூர்யா, சர்வானந்த், நடிகைகள் சினேகா, ரோகிணி, நித்யாமேனன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் சேரனின் மகள்கள் நிவேதா, தாமினி கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்தவர்களை தாமினி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இவ்விழாவில் பாரதிராஜா பேசியபோது, ‘’ சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. தெலுங்கானா பிரச்சனையில் தத்தளித்துக் கொண்டு இருக்கும்போது இந்த விழாவில் எப்படி பங்கேற்போம் என்று ஆந்திராக்காரர்கள் சொல்கிறார்கள். நமக்கும் பிரச்சனைகள் உள்ளன.
ஈழத்தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளனர். காவிரிக்காக முல்லை பெரி யாறுக்காக, கச்சத்தீவுக்காக போராடுகிறோம். நாங்களும் தத்தளித்துக் கொண்டு இருப்பதால் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா?
தமிழ் சினிமாவுக்கு தனி சங்கங்கள் வேண்டும். தென் இந்திய திரைப்பட வர்த்தகசபை, தென் இந்திய நடிகர் சங்கம் என்பதை விட்டு விட்டு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் வர்த்தகர் சபை தமிழ் திரைப்பட தொழிலாளர் சங்கம் என்று வரவேண்டும். அப்போது தான் நம் உரிமைகள் காக்கப் படும்’’என்றார்.
விருதுநகர் மதிமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்!
விருதுநகரில் நடைபெற்ற ம.தி.மு.க. மாநில மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 14 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அதன் விவரம்
ஜெ., - சோ : 35 நிமிடங்கள் தீவிர ஆலோசனை
துக்ளக் ஆசிரியர் சோ, இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு சென்றார். பகல் 12:00 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். பகல், 12:35 மணி வரை அதாவது, 35 நிமிடங்கள் அவர்கள் சந்திப்பு நீடித்தது. 
ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தினர் ஜெயலலிதாவை சந்திக்க முடிவு

பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை நடந்து 2 மாதம் ஆகியும் கொலையாளிகள் பற்றி துப்பு துலங்கவில்லை.

14 செப்., 2013

தென்மராட்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளபட்ட மோசமான தாக்குதல்
சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய கும்பலொன்று சிங்களத்தில் கத்தியவாறு இரும்புக் கம்பிகளுடன் ஓடிவந்து தமது வாகனத்தை இடைமறித்து தாக்கியதாகவும் தாங்கள் பாதுகாப்பு தேடி
தென்மராட்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளபட்ட மோசமான தாக்குதல் 
தென்மராட்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளபட்ட மோசமான தாக்குதலில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய கும்பலொன்று சிங்களத்தில் கத்தியவாறு இரும்புக் கம்பிகளுடன் ஓடிவந்து தமது வாகனத்தை இடைமறித்து தாக்கியதாகவும் தாங்கள் பாதுகாப்பு தேடி ஒடியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் காயடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஐந்து மணியளவில் நாவற்குழியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டவர்கள் மீதே இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்தச் சம்பவத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஞா.கிஸோர் (வயது-24), மற்றும் நுணாவில் கிழக்கைச் சேர்ந்த ஆர்.றஜிந்தன் (வயது-19) ஆகியோரே காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஏழு பேர் டெமோ வாகனம் ஒன்றில் சென்று நேற்று பிற்பகல் வேளை தனங்களப்பில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இவர்கள் நாவற்குழியை நோக்கி வந்துகொண்டிருந்தபோது தச்சன்தோப்பு சந்தியிலுள்ள இராணுவத்தினர் தங்களை மறித்து எங்கே போகின்றீhகள் என்று விசாரித்தாகவும் தாங்கள் நாவற்குழி சந்திக்கு செல்கின்றோம் என்று கூறியபோது நாவற்குழி சந்திக்கு செல்வீர்களா என்று பல தடவைகள் கேட்டதாகவும் மேற்படி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படையினர் இவ்வாறு திருப்பத் திருப்பக் கேட்டமையானது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் தாங்கள் அச்சமடைந்து நாவற்குழி சந்திக்கு மாற்றுப் பாதையூடாக செல்ல முற்பட்டதாகவும் இதன்போது திடீரென்று எங்கிருந்தோ வந்த வெள்ளை நிற வாகனமொன்று தங்களைப் பின்தொடர்ந்ததாகவும் இவர்கள் தெரிவித்தனர். குறித்த வாகனத்தைக் கண்டதும் நாங்கள் அச்சமடைந்து எமது வாகனத்தை மீண்டும் வந்த பாதையாகிய கேரதீவு வீதிக்கு திருப்பினோம். அந்த வாகனம் எங்கள் வாகனத்தை பின்தொடர்ந்தது. நாங்கள் நாவற்குழி மகா வித்தியாலயத்திற்கு அண்மையில் எமது வாகனத்தை நிறுத்தினோம். அந்த வாகனம் எங்களைக் கடந்து சென்றது. அதனால் நாங்கள் மீண்டும் நாவற்குழியை நோக்கிப் பயணித்த போது சடுதியான வேகத்தில் எங்களைத் துரத்தி வந்த அந்த வாகனம் எங்கள் வானத்திற்கு குறுக்கே நிறுத்தப்பட்டது.

அந்த வாகனத்தில் இருந்து இறங்கி வந்த எட்டு வரையான இளைஞர்கள் சிங்களத்தில் கத்தியவாறு எமது வாகனத்தை நோக்கி ஒடி வந்து இரும்புக் கம்பிகளால் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் நாங்கள் ஓடினோம். ஆனாலும் இருவர் காயமடைந்தனர். பின்னர் ஒருவாறு எமது சாரதி புத்திசாதுரியமாக செயற்பட்டு வாகத்தை திருப்பிக்கொண்டு ஓடியதால் நாங்கள் தப்பித்தோம் என்று காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தெரிவித்தனர். தங்களைத் தாக்கிய அனைவரும் கட்டைக் காற்சட்டையும் ரீ-சேர்ட்  அணிந்திருந்தாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞானப்பிரகாசம் கிஷோர் (24) மற்றும் ராஜ்குமார் ராஜிந்தன் (19)ஆகியோர் படுகாயமடைந்தனர்.
சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய கும்பலொன்று சிங்களத்தில் கத்தியவாறு இரும்புக் கம்பிகளுடன் ஓடிவந்து தமது வாகனத்தை இடைமறித்து தாக்கியதாகவும் தாங்கள் பாதுகாப்பு தேடி ஒடியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் காயடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஐந்து மணியளவில் நாவற்குழியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டவர்கள் மீதே இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஞா.கிஸோர் (வயது-24), மற்றும் நுணாவில் கிழக்கைச் சேர்ந்த ஆர்.றஜிந்தன் (வயது-19) ஆகியோரே காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் மேலும்
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை கோரும் யோசனை முன்வைக்கப்பட உள்ளது?
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற யோசனை ஒன்று ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச விசாரணையை கோரும் இந்த யோசனை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த யோசனையுடன் சம்பந்தப்பட்ட சில விடயங்களை எதிர்வரும் 25 ஆம் திகதி ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்க உள்ள வாய்மொழி மூலமான அறிக்கையில் வெளியிட தயாராக இருப்பதாக தெரியவருகிறது.
அதேவேளை சர்வதேச விசாரணையை கோரும் குறித்த யோசனை அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் உதவியுடன் முன்வைக்கப்பட உள்ளதாகவும் அதற்கு மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் பூரண ஆதரவை வழங்குவார் என்றும் ராஜதந்திர வட்டாரங்களின் அந்த தகவல்கள் கூறியுள்ளன.
இலங்கைக்கு எதிராக கடந்த மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட யோசனையின் தொடர்ச்சியாக இருந்த யோசனை முன்வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
23 வருடங்களின் பின் யாழ்தேவி இன்று கிளிநொச்சி செல்கிறது! ஜனாதிபதியும் பயணிக்கிறார்


ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையிலான ரயில் சேவை, கிளிநொச்சி ரயில் நிலையம், சுன்னாகம் உப மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடையும் ஜனாதிபதி அவர்கள், ரயில் நிலையத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக் கூட்டத்திலும் அவர்
கிளிநொச்சியை அழிப்பதில் ஈபிடிபி கங்கணங்கட்டி அலைகிறது! அதற்கு எம் தலைமைகள் அனுமதிக்காது: பசுபதிப்பிள்ளை காட்டம்
கிளிநொச்சியின் அபிவிருத்தி என்பது பிரதானம், அதனை ஈபிடிபி தடுத்து பித்தலாட்டம் செய்கிறது. இது அரசின் பணமல்ல, உலக நாடுகளுடையது என தனது மண்ணிற்கு ஏற்பட்ட அநீதியை லங்காசிறி FMக்கு வழங்கிய செவ்வியில் உணர்வுடன் உச்சரிக்கிறார் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் கிராமசேவையாளருமான திரு.சு.பசுபதிப்பிள்ளை.
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க இந்தியா நிபந்தனை விதித்துள்ளது
கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சில நிபந்தனைகளை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலைக்கேங்கும் மக்கள் கருத்தால் முரசறையும் போர்க்களம்!


மாவை சேனாதி அவர்களின் முகநூலில் இருந்து 
முள்ளிவாய்க்காலில், தமிழ் மக்களை கொத்துக்கொத்தாய்க் கொன்று குவித்து, ஒரு இனஅழிப்பை நடத்தி முடித்த சிங்களம், அழித்துச் சிதைக்கப்பட்ட தமிழினம், சிங்களத்தின் ஆட்சியதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு, கீழ்ப்பட்டு நிற்கும் ஒரு புதியதொரு காலத்தையே எதிர்பார்த்து நின்றது.ஆனால், சிங்களத்தின்
கிளிநொச்சி இராணுவ முகாமிற்குள் தேர்தல் சுவரொட்டிகள்! கண்காணிப்பு அமைப்பு குற்றச்சாட்டு
வட மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய ஒரு தொகை சுவரொட்டிகளை ஏற்றிய பாரஊர்தி ஒன்று கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றினுள் அவற்றை கையளித்துள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐநா மாநாட்டில் உரையாற்ற மகிந்த ராஜபக்ச 23ம் திகதி நியூயோர்க் பயணம்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை நியூயோர்க் பயணமாகவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
rain_keleசுமார் 24 வருடங்களுக்குப் பின்னர் யாழ்தேவி புகையிரதத்தின் கிளிநொச்சி வரையிலான மீள் பயணம் 15.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை 10 மணியளவில் கிளி நொச்சி 155ம் கட்டைப் பகுதியில் பரீட்சார்த்த பயணத்தில் ஈடுபட்டிருந்த புகையிரத்தத்தினால் முதலாவது பொதுமகன் பலியெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் காலப் பகுதிக்குள் இப்புகையிரத நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் கிளிநொச்சி நகரிற்கிடையிலான புகையிரதப் பாதுகாப்புப் கடவைகள் பூர்த்தியாக்கப்படாத நிலையில் பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளது…..ஏற்கனவே பல கால்நடைகள் இப் பரீட்சார்த்த புகையிரதப் பயணத்தின் போது கொல்லப்பட்ட நிலையில் முதலாவது மனிதப் பலியெடுப்பு இன்று நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்டவர் கிளிநொச்சி தொண்டைமான் நகர் பகுதியினைச் சேர்ந்த 70 வயது முதியவரான முத்தப்பா எனத் தெரிய வருகிறது.

வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை: மூன்று பெண்கள் கைது

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் ஹெவலொக் வீதி 287ம் இலக்க முகவரியில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

ad

ad