புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2013

இராணுவம் நிறுத்திய வேட்பாளர்களுடன் ஹத்துருசிங்க வல்லிபுரக் கோயிலில் வழிபாடு!- ஆதாரப் புகைப்படங்கள் கசிந்தன
யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவுடன் இராணுவ வேட்பாளர்கள், வடமராட்சியிலுள்ள  வல்லிபுரக் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
வடமாகாண சபைத் தேர்தலில் அரசாங்க கட்சியில் இராணுவத்தினரால் சில வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்துவது போல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனந்தி வீட்டில் நடந்த தாக்குதலுடன் இராணுவத்திற்கு தொடர்பில்லை!- இராணுவப் பேச்சாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அனந்தி (எழிலன்) சசிதரனின் வீட்டில் இடம்பெற்ற தாக்குதலுக்கும் இராணுவத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தும் அமெரிக்கா உட்பட 5 நாடுகள் புலிகளுக்கு ஆயுதங்களை விற்றுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளன. குறிப்பாக ஐந்து நாடுகள் இவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அனந்தி சசிதரன் மீது இனவாதத் தாக்குதல்: ஈழத்தமிழரை அமெரிக்கா உடனே காப்பாற்ற வேண்டும்: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு !!!


வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், வீட்டு சின்னத்தில் இலக்கம் 1 போட்டியிடும் திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) அவர்கள் மீது இன்று அதிகாலை 12.20 மணியளவில் சிங்கள இராணுவம் மற்றும் ஈபிடிபி ஆகியோர் இணைந்து கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டார்கள்.

இது திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) அவர்கள் மீதான தாக்குதல் என்று மட்டும் பாராமல், எமது உரிமைக்காக குரல் கொடுத்தால் இப்படித்தான் தாக்குவோம் என்று சிங்கள அரசாங்கம் தமிழருக்கு மீண்டும் கூறியுள்ள செய்தியாகும்.

திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) அவர்கள் ஒரு பெண் என்றும் பார்க்காமல் இப்படியான தாக்குதல் நடபெற்றமையானது, வடகிழக்கில் போரினால் கணவரை இழந்த 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகளுக்கும், 50ஆயிரம் அநாதையாகிப்போன பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு அற்ற நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

இச்சம்பவங்கள் மூலம் ஒரு செய்தி சொல்லப்படுகின்றது. அது என்னவெனில் தேர்தல் மூலம் சிறிலங்காவில் நல்லிணக்கமும், சமாதனமும் ஏற்படும் என்று நினைப்பவர்களுக்கு எப்பவுமே தமிழனும் சிங்களவனும் ஒன்றாக வாழ முடியாது என்பதையும், அப்படி வாழ்ந்தால் தமிழன் சிங்களவனுக்கு அடிமையாக மட்டுமே வாழமுடியும் என்பதையும், உரிமைக்கு குரல் கொடுத்தால் இதுதான் விளைவு என்பதை தமிழருக்கும் சர்வதேசத்துக்கும் சொல்லாமல் செல்லியுள்ளது சிங்கள அரசு.

எனவே எனியும் இலங்கையில் ஜனநாயகம் மலரும், உரிமைகளை சிங்கள அரசாங்கம் தமிழருக்கு உரிமையை பகிர்ந்து கொடுக்கும் என்ற எண்ணத்தினை கைவிட்டு அமெரிக்க உடனடியாக நேரடியாக ஈழத்தமிழரை காப்பாற்ற வேண்டும்.

விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு ஒருவகையில் சிங்கள அரசாங்கத்திற்கு உதவிய அமெரிக்கா, புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள ஆபத்தான சூழ்நிலையில் இருந்து அவர்களை உடனடியாக காப்பாற்றுமாறு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா அவர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது.அனந்தி சசிதரன் மீது இனவாதத் தாக்குதல்: ஈழத்தமிழரை அமெரிக்கா உடனே காப்பாற்ற வேண்டும்: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு


வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், வீட்டு சின்னத்தில் இலக்கம் 1 போட்டியிடும் திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) அவர்கள் மீது இன்று அதிகாலை 12.20 மணியளவில் சிங்கள இராணுவம் மற்றும் ஈபிடிபி ஆகியோர் இணைந்து கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டார்கள்.

இது திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) அவர்கள் மீதான தாக்குதல் என்று மட்டும் பாராமல், எமது உரிமைக்காக குரல் கொடுத்தால் இப்படித்தான் தாக்குவோம் என்று சிங்கள அரசாங்கம் தமிழருக்கு மீண்டும் கூறியுள்ள செய்தியாகும்.
அனந்தி எழிலன் மீது நள்ளிரவில் ஈபிடிபியும் இராணுவமும் இணைந்து பாரிய தாக்குதல் சுழிபுரத்தில் பதட்டம்

சுழிபுரத்தில் அமைந்துள்ள அனந்தியின் வீட்டை நடுநிசியில் இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் வாள், கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் சுற்றி வளைத்ததாக அனந்தி தெரிவித்துள்ளார்.
உங்கள் ஈழத்து உறவுகளை வடமாகாண தேர்தலில் வாக்களிக்க ஊக்குவியுங்கள்-கவிஞர் பகீரதன் கனடா 

”அரசியல் ஒரு சூது”, ”அரசியல்வாதிகள் சுயநலவாதிகள்” என்கின்ற கருத்து காலம் காலமாக ஒப்புவிக்கப்பட்டு வந்தாலும், பல்வேறு சந்தர்ப்பங்களில், மேலைத்தேச-கீழைத்தேச அரசியலில் இது நிரூபணமாகியிருப்பினும், அரசியலில் இருந்து நாம் பிரிக்கமுடியாதவர்களாக உள்ளோம்
ஈபிடிபியினரும் இராணுவ புலனாய்வு பிரிவினருமே தனது வீட்டை சுற்றிவளைத்து தாக்கியதாக யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஆனந்தி எழிலன் தெரிவித்துள்ளார். 

யாழ். சுழிபுரத்தில் உள்ள ஆனந்தியின் வீடு இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளானது. Video

19 செப்., 2013

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார் பதுமன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதி பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதன் விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கீதாஞ்சலிக்காக கபே அமைப்பு தேர்தல் பரப்புரை
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிடும் கீதாஞ்சலிக்காக கபே அமைப்பு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்புக்கென இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட அரசின் புலனாய்வுப் பிரிவான கபே அமைப்பு சர்வதேசத்திற்கு தன்னையொரு நேர்மையானதும்,
தேர்தல் பிரச்சாரம் குறுந்தகவல்களின் ஊடாக தொடர்கின்றது
தேர்தல் பிரச்சாரம் குறுந்தகவல்களின் ஊடாக தொடர்வதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
கே.பி.யை அரசாங்கம் தனது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியமை பாரதூரமான குற்றம்: ஐ.தே.க
இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் அழிக்கப்பட்டத்தில் நேரடியாக பொறுப்புக் கூறவேண்டிய கே.பி. என்ற குமரன் பத்மநாதனை மக்களின் பணத்தில் அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரகராக செயற்பட இடமளித்தமை பாரதூரமா
இலங்கையின் தேர்தல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்!- பான் கீ மூன் நம்பிக்கை
இலங்கையின் நல்லிணக்கத்துக்கு எதிர்வரும் மாகாணசபை தேர்தல் நல்ல சந்தர்ப்பம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 
அண்ணா மேம்பாலத்தில் தற்கொலை செய்த பெண்ணின் காதலன் கைது

கோடம்பாக்கம் காமராஜர் கிழக்கு தெருவில் குடியிருந்தவர் அஞ்சலி (26). மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த இவர் நேற்று மாலை சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொணடார். இதையறிந்

அதிமுக எம்.எல்.ஏ. 
புத்திசந்திரன் கைது
 


சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து நீக்கம் செய்யப்பட்டவரும், நீலகிரி மாவட்ட ஊட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான புத்திசந்திரன் கைது செய்யப்பட்டார்.   அவருடன் வந்த 29 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சுவிஸ் கிராமத்தில் நடைபெற்ற விபச்சாரம்

சுவிட்சர்லாந்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் செயல்பட்டு வந்த விபச்சார ஒட்டலினை பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களின் அடையாளமே நான்: எழிலனின் மனைவி அனந்தி தெரிவிப்பு
நான் வெறுமனே விடுதலைப் புலிகளது திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த எழிலனின் மனைவி என்பதற்கப்பால் காணாமல் போயுள்ள ஆயிரமாயிரம் தமிழர்களதும் குடும்பங்களதும் அடையாளமாகவிருக்கின்றேன் என்பதே உண்மையாகும்.
ஆனால் இலங்கை அரசோ காணாமல் போனோர்களது நிலைபற்றி வாய் திறக்க மறுக்கின்ற அதே வேளை, அதற்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தி வாய்மூட வைக்க முற்படுவதாக அனந்தி சசிதரன்(எழிலன்) குற்றஞ்சாட்டியுள்ளார்.
தீவுப்பகுதி மக்களுக்கு அன்பான வேண்டுகோள் -ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் 

எதிர்வரும் 21 ஆம் திகதி வடமாகாண  சபை தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில் நீங்கள்   என்ன செய்ய போகின்றீர்கள்? காலாகாலமாக தீவுப்பகுதி மக்கள் அரசியலில் தமிழ் தேசியத்தோடு ஒருசேர இணைந்து நின்றவர்கள். ஆதி முதல் தமிழ் காங்கிரஸ்.தமிழரசு கட்சி,தமிழர் விடுதலை கூட்டணி என்பவற்றை ஆதரித்து ஜனநாயக தேர்வுகளுக்கு உறுதியோடு இறுதி வரை இருந்தவர்கள். காலத்தில் கோலமாய்  எதிரிகளோடு துரோகிகளும் சேர்ந்து துப்பாக்கி முனையில் எம்மை ஆள  வந்து குடி கொண்ட பின்னர் எமது கோட்டை சரிந்தது  இல்லை இல்லை சரியவைத்தார்கள். வன்முறை.துப்பாக்கி கலாசாரம்.தப்பான தேர்தல் நடைமுறை என எல்லாவற்றையும் பயன் படுத்தி எதிரி  வென்றுள்ளதாகவோ பெரும் பான்மை பெற்றதாகவோ கொக்கரித்தான் .சிலவேளைகளில் தேசியம் சார்ந்தவர்கள் பகிஸ்கரிப்பு செய்ததாலும் இது நடக்க வாய்ப்பு கிட்டியது . இப்போது நல்ல காலம் கை கூடி வந்துள்ளது.இப்போது கூட தீவுப்பகுதியில் எதிரியின் ஆயுத கலாசாரம் நிலவுவதால் சரியான முறையில் தேர்தல் பிரசாரமோ பரப்புரையோ செய்ய முடியாத  நிலைதானுண்டு. என்ன தான் இருந்தாலும் இந்த அரிய வாய்ப்பினை பயன் படுத்தி எத்ரியை தோற்கடிக்க முன்வாருங்கள்.எமது இனப்  பிரச்சினைஐ நா  மன்றம் வரை போயிருக்கும் இவ்வேளையில் நீங்கள் துப்பாக்கி அடக்கு முறைக்கு அச்சம் கொள்ளாதீர்கள்.ஜனநாயக வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும். வாக்களிக்கா விட்டால் கூட உங்கள் வாக்குகள் களவாடப் பட்டு எதிரி வாக்குககளாக மாறும்.எதிரி வியூகத்துக்கு அஞ்சாமல் வாக்களியுங்கள்,தேர்தல் வாக்களிப்பு முறை ரகசியமானது.எதிரிக்கு ஒரு முகத்தையும் வாக்களிப்பில் மறு முகத்தையும் காட்டி எமது தேசியத்துக்கு வழி  கோலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெல்ல வையுங்கள்.இல்லை இல்லை  அதிக பெரும்பான்மை பெற உதவுங்கள் மாற்றானை ஆதரிக்காத  எங்கள் மண் (முன்னரைபோல) என்று நிரூபியுங்கள்.எதிரி பதவிகள் பட்டங்கள் வசதிகள் செய்து தருகிறான் என்று ஏமாறாதீர்கள்.அந்த சேவைகள் எல்லாம் ஒரு அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களுக்கு செய்தே தான் ஆகவேண்டும் .அவை எல்லாம் தங்கள் சட்டைக்குள் இருந்து எடுக்கும் பணத்தின் மூலம் செய்வதில்லை.எல்லாம் பொது மக்களின் சொத்து தான்  எல்லா அமைப்புகளும் கட்சிகளும் இயக்கங்களும் எதோ ஒரு வகையில் தவறு செய்து தானுள்ளன.சந்தர்ப்பம் சூழ்நிலை  காரணமாக பிரிந்து போய் கிடந்த காலங்கள் அவை.இப்போது முதன் முறையாக அரச ஊதுகுழலான கட்சி ஒன்றை தவிர மற்றவை எல்லாம் தமக்குள்ளே ஒன்று பட்டு ஒரே குடையின் கீழ் உங்கள் முன் வந்துள்ளன.பழையவற்றை மறப்போம்.மண் ணுக்காக இனத்துக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி சின்னமான  வீட்டுக்கு புள்ளடி  இட்டு எமது இனத்தை மண்ணை காப்போமாக. இந்த வேண்டுகோளை வைக்க எங்களுக்கு உரிமையுண்டு.நாங்களும் உங்கள உறவுகள் ரத்தங்கள். பொருளாதார வளத்திலும் உங்களோடு ஒன்றாக இருப்பவர்கள் .எங்கள் இதய பூர்வமான இந்த வேண்டுகோளை ஏற்பீர்கள் என் நம்புகிறோம்  

நன்றியோடு                                                                         18.09.2013 
 ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் 
தலைமையகம் சுவிட்சர்லாந்து 
tthamil 8@gmail .com 

                                   

பாடசாலையில் பிள்ளையை அனுமதிப்பதற்காக தாயிடம் பாலியல் இலஞ்சம் பெற முயற்சித்த கொட்டாவ பகுதி பாடசாலை அதிபர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது பிரதான நீதவான் கிஹான் பலபிட்டிய அவரை பிணையில் செல்ல அனுமதித்தார்.

வீட்டில் வேலை பார்க்கும் 10 பேருக்கு சொந்த செலவிலேயே வீடுகள் கட்டி கொடுக்கிறார் நடிகர் அஜீத்
    டிகர் அஜீத்திடம் நீண்டகாலமாக சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை செய்யும் 10 ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. 


நடிகர் சங்க பொதுக்குழு
நடிகர் சங்க பொதுக் குழு சென்னையில் புதன்கிழமை கூடியது. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே பொதுக்குழுவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்து கொள்ள தகுதியுள்ள உறுப்பினர்கள் மொத்தம் 2,900 பேர் இருக்கிறார்கள். இதற்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அனுமதிக்கப்பட்டனர்.படங்கள் 



திருமணத்துக்கு காதலன் மறுப்பு:
சென்னை அண்ணா மேம்பாலத்தில்
இருந்து விழுந்து காதலி தற்கொலை

கோடம்பாக்கம் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி (26). இவர் தனது தாயார் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார். அஞ்சலி தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பிரபல அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார். 
நடிகர் சங்கத்தில் குமரிமுத்துவை மீண்டும் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும்: சரத்குமார்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில், நடிகர் குமரிமுத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறப்புரிமையைப் பறிக்க முயலும் அரசாங்கம்
அரசாங்கமும் அதன் கடும் போக்கு பங்காளிக் கட்சிகள் பலவும் 2013 செப்டெம்பர் மாதம் 3ம் திகதி யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியதால், ததேகூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்தில்
ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் நாட்டை விட்டு வெளியேறினார்
இலங்கையின் சண்டேலீடர் பத்திரிகையின் இணையாசிரியர் மந்தனா இஸ்மாயில் அபயவிக்ரம இலங்கையை விட்டு வெளியேறியிருக்கிறார்.
மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக அணிதிரளுங்கள்: வட அமெரிக்கத் தமிழ் உறவுகளுக்கு நா.க.த.அரசாங்கம் அறைகூவல்
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமெரிக்க வருகைக்கு எதிராக, அமெரிக்க மற்றும் கனேடியத் தமிழர்களை அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரை எதிர்வரும் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

18 செப்., 2013

முள்ளிவாய்க்காலில் முகவரி எழுதிச்சென்ற உறவுகளை மனதில் இருத்தி கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்: குகவரதன் கோரிக்கை
முள்ளிவாக்காலில் புதிய முகவரி எழுதிச் சென்ற உறவுகளை மனதில் இருத்தி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் மக்கள் தீர்ப்பளிக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும் கொழும்பு

இரண்டு தமிழர்கள் மற்றும் ஒரு தமிழச்சி சிங்களவர்களாக மாற்றம்!- கிளிநொச்சியில் இன்று கோலாகலம்.

சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் இரண்டு பெண்கள் மற்றும் இளைஞர் ஒருவருக்கும் இன்று இராணுவத்தின் ஏற்பாட்டில் திருமணம் நடைபெறவுள்ளது.




              முன்னெப்போதும் இல்லாத பிரம்மாண்டத்தைக் காட்ட வேண்டும் என்ற சிரத்தையோடு, தொண்டர்கள் இரண்டு லட்சம் பேர் வருவார்கள் என்னும் எதிர்பார்ப்புடன் விருதுநகரில் செப்.15-ல் மாநில மாநாட்டை நடத்தியது ம.தி.மு.க.

                லங்கையின் வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் சி.வி.விக்னேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ""எங்களது பிரச்சினைகளை தமிழக அரசியல்வாதிகள் டென்னிஸ் பந்துகளைப் போல பயன் படுத்திக்கொள்கிறார்கள். தமிழர் பிரச்சினைக்கு தனி நாடே தீர்வு என தமிழக அரசியல்வாதிகள் குறிப்பிடுவதால் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகள் அச்சமடைந்திருக்கிறார்கள்.



                ""ஹலோ தலைவரே... தேசிய அளவில் பா.ஜ.க.வும் தமிழக அளவில் அ.தி.மு.க.வும் எம்.பி. தேர்தல் வேலைகளை முன்கூட்டியே தொடங்கி வேகமா போய்க்கிட்டிருக்குது.''

""தி.மு.க சைடிலும் மா.செ.க்கள் கூட்டம் போட்டு எம்.பி. தேர்தல் பற்றி ஏற்கனவே
இலங்கை தேசிய அணியில் ஒரே பாடசாலைச் சேர்ந்த 3 தமிழ் மாணவர்கள் 
வரலாற்றில் முதல் தடவையாக வட மாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழ் பாடசாலையில் இருந்து மூன்று மாணவர்கள் இலங்கையின் தேசிய கால்பந்தாட்ட அணியில்  இடம்பிடித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இறுதி பிரசாரக் கூட்டம் பருத்தித்துறையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி பிரசாரக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு வடமராட்சி வதிரி சந்தியிலுள்ள உள்ளியன் எல்லை அம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
கூட்டமைப்பு கோருவது தமிழீழ சுயாட்சியா, சுயநிர்ணயமா?: வாசுதேவ - முஸ்ஸாமில் வாக்குவாதம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் இன்று முற்பகல் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சுற்றி வளைத்து இராணுவம் தாக்குதல்: யாழ்.மீசாலையில் பதற்றம்
யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு பகுதியில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு கூட்டமைப்பினரை சுற்றி வளைத்துள்ளனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நான் தான் ஆரம்பித்தேன்: கே.பி
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்று கிளிநொச்சியில் தெரிவித்தார்.
புலிகளின் திருகோணமலை கட்டளைத் தளபதி பதுமன் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட கட்டளைத் படைகளின் தளபதி கேணல் பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதனை திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்

சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சனீஸ்வர வழிபாடு
 (புரட்டாதி சனி நாட்கள் )
 


சுவிட்சர்லாந்து தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் எதிர்வரும் 21.28 மற்றும் ஒக்ரோபர் 5,12 ஆகிய தினங்களில் இவ்வாலயத்தில் சனீஸ்வர வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற இருப்பாதால் அடியார்கள்  சனீஸ்வரனை வேண்டி விரதம் இருந்து சனீஷ்வர தோஷ வழிபாடு செய்து உங்கள் வாழ்வை நலமாக்கி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

சனீஸ்வர பகவானுக்கு உகந்த தினங்கள் இவை என்பதால்  அடியார்கள் அவருக்கு எள்ளெண்ணை தீபம் ஏற்றி கரு நீல (குவளை) மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் சனீஸ்வர தோஷம் நீங்கப் பெற்று நல்வாழ்வு பெறுவார்கள்

சனீஸ்வர தோஷம் உள்ளவர்கள் -ராசிகள்-நட்சத்திரங்கள் 

ஏழரை சனி

கன்னி  ராசி  (உத்தரம் 2.3.4 ஆம் கால்கள் ,அத்தம் -சித்திரை 1.2 ஆம் கால்கள்  )
துலாம் ராசி (சித்திரை 1.2 ஆம் கால்கள் ,சுவாதி ,விசாகம் 1.2 ,3ஆம் கால்கள் )
விருச்சிகம் (விசாகம் 4 ஆம் கால் ,அனுஷம் ,கேட்டை )

அட்டமத்து சனி

 மீன ராசி  (பூரட்டாதி 4 ஆம் கால் .,உத்தரட்டாதி, ரேவதி )

 7 ஆம் இடத்து சனி

மேட ராசி (அஷ்வினி, பரணி. கார்த்திகை 1 ஆம் கால் )

4 ஆம் இடத்து சனி

கடக ராசி ( புனர்பூசம் 4 ஆம் கால், பூசம் ,ஆயிலியம் )
சுவிஸ் பெண்ணின் கனவை நனவாக்கிய ஷாருக்கான்

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரசிகையின் கனவை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நனவாக்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கரோலின் ஜெடர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2005ம் ஆண்டு கண் பார்வை பறிபோனது.
இரண்டு தமிழர்கள் மற்றும் ஒரு தமிழச்சி சிங்களவர்களாக மாற்றம்!- கிளிநொச்சியில் இன்று கோலாகலம்
சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் இரண்டு பெண்கள் மற்றும் இளைஞர் ஒருவருக்கும் இன்று இராணுவத்தின் ஏற்பாட்டில் திருமணம் நடைபெறவுள்ளது.
பள்ளிகளை உடைத்த அரசுக்கு வாக்களிக்காதீர்கள்: முஸ்லீம்களிடம் மொகமட் இலியாஸ் கோரிக்கை
பள்ளிவாசல்களை உடைப்பவர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவும் ஆசீர்வாதம் வழங்குகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் டாக்டர் மொகமட் இலியாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
plote.t.s-02aதமிழ்த் தேசிய அரசியல் ஒரு முக்கிய திருப்புமுனைக்கான பயணத்தில் நிலைகொண்டிருப்பதாகவே பல அரசியல் அவதானிகளும் அபிப்பிராயப்படுகின்றனர். ஒரு புறம் இலங்கை அரசின் மீதான ஜக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. பிறிதொரு புறம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றவாறன பிராந்திய அழுத்தமும் அதிகரித்திருக்கின்றது. ஏதோ ஒரு வகையில், இவற்றைச் செவிமடுக்க வேண்டிய இக்கட்டு நிலையில் ஆளும் மகிந்த அரசாங்கம் சிக்குண்டிருக்கின்றது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.
இத்தகையதொரு முக்கியமான கட்டத்தில்தா

சுயாட்சியை ஈழமாக பாற்கும் தென்னிலங்கை அரசு தமிழர்கள் ஒருவகையில் பிரிந்து செல்வதை விரும்புகிறது என சிரேஸ்ர சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சி கொழும்புக் கிழைத் தலைவருமான கே.வி.தவராசா லங்காசிறி வானெலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் கூறினார்.
சுயாட்சி ஈழமாக மாறும் என்ற பீதியில் தென்னிலங்கை! பல தகவல்களுடன்: கே.வி.தவராசா
சுயாட்சியை ஈழமாக பாற்கும் தென்னிலங்கை அரசு தமிழர்கள் ஒருவகையில் பிரிந்து செல்வதை விரும்புகிறது என சிரேஸ்ர சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சி கொழும்புக் கிழைத் தலைவருமான கே.வி.தவராசா லங்காசிறி வானெலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் கூறினார்.


ஐ.நாவில் சிறிலங்கா விவகாரம்: தவறிய பான் கீ மூனும் சுட்டிக்காட்டிய சுவிஸ் பிரதிநிதியும்
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், இன அழிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவனற்றினை தடுப்பதற்கான ஐ.நாவின் கடப்பாடுகள்

17 செப்., 2013

 ஜனாதிபதி மஹிந்தவும் என்றோ ஒருநாள் போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுவார்; ஏழாலையில் கூட்டமைப்பு எம்.பி சரவணபவன் 
மனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் எவரும் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை. இதன் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­வும் என்றோ ஒருநாள் சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் முன் நிற்க வேண்டிவரலாம்.

நரேந்திர மோடியைவிட ஜெயலலிதாவே பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்தது. அதில் பேசும்போது, ''இந்தியாவில் தற்போது பரபரப்பாக பேசிப்படும் ஒரு விஷயம் நரேந்திர மோடி தான். பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகத்தான் மோடி அறிவிக்கப்பட்டுள்ளாரே தவிர பிரதமர் ஆகவில்லை.

தமிழக பிஜேபியின் தலைவராகிறார் ரஜினி. மோடியை முன்னிறுத்தி ஜெயலலிதாவுடன் கூட்டணி. சோ மெகா திட்டம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது அவர்களின் சந்திப்பு எதனால் நடந்தது என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
சுயநிர்ணய அடிப்படையில் எமக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச பிரசாரக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் முழக்கம் !!!

த.தே.கூட்டமைப்பு வன்முறை பாதையை ஒருபோதும் விரும்பவில்லை. வன்முறைகளினால் தமிழர்களே அதிகம் பாதிக்கப்படுபவர்கள். சுயமரியாதையுடன் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் நியாயமான
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முழுமையான வெற்றிக்கு, உலக தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் !!!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி ஒன்றை பதிவு செய்வது மிகவும் முக்கியமாகும். இந்த நிலையில் புலம்பெயர்ந்த நிலையில் உள்ள இலங்கை தமிழர்கள் தங்களின் உறவினர்கள் நண்பர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வலியுறுத்த வேண்டும். இந்த தேர்தலில் யாரும் வாக்களிக்காதிருக்க கூடாது.

சுரேன் சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
உலக தமிழர் பேரவை
இலங்கையின் அநேகமான தெற்கு ஊடகங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயுத போராட்டத்தை கோருவதாக குறிப்பிடப்படுகின்றது. அநேகமான சிங்கள நாளிதழ்களில் இவ்வாறான ஓர் நிலைப்பாட்டை சித்தரிக்கக் கூடிய வகையில் செய்திகள் பிரசுரமாகின்றன.
அரசாங்கத்திற்கு சொந்தமான பத்திரிகைகள் மட்டுமன்றி தனியார் ஊடகங்களும் இதேவிதமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.

இதேவேளை, வடக்கிற்கு அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் ஆயுதம் ஏந்தி போராட நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வர


            ந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வினை மிக பிரமாண்டமாக சென்னையில் நடத்து கிறது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (ஃப்லிம் சேம்பர்). ஜனாதிபதி உட்பட தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய  4 மாநில முதல்வர்களும் கலந்து கொள்வதால் விழாவின் பிரமாண்டம் குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் இவ்விழா குறித்த சர்ச்சைகளும் ரெக்கைக் கட்டிப் பறக்கின்றன.



             ழப்பிரச்சினைகளில் ஆழமான அறிவும் விரிவான பார்வையும் கொண்டவர் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் சுதர்சனநாச்சியப்பன். சமீபத்தில்,சென்னை விமானநிலையத்தில் பத்திரிகை யாளர்களை சந்தித்த அவர், ""இலங்கை என்பது தமிழர் களின் பூமி.தமிழீழ கனவு அனைவரின் விருப்பம்'' என்று பகிர்ந்திருக்கிறார். சோனியா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவரான நாச்சியப்பனிடமிருந்தே தமிழீழம் குறித்த கருத்து வெளிப்பட்டிருப்பது தமிழ்த்தேசியவாதிகள் மற்றும் ஈழ ஆதரவாளர்களை உற்று கவனிக்க வைத்திருக்கிறது. அதேசமயம்,நாச்சியப்பனின் கருத்தை அறிந்து டெல்லி யும் அதிர்ந்துள்ளது. இந்த நிலையில், சுதர்ச்சன நாச்சியப்பனை தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.
ஐ.நா அறைகளுக்குள் பதறி ஓடும் இலங்கையின் முன்னாள் தூதுவர் தமரா குணநாயகம்: ச.வி.கிருபாகரன்
ஐ.நாவின் முன்னாள் தூதுவர் தற்போது ஒரு தூதுவர் என்ற மன நிலையில் அங்கும் இங்கும் அலைந்து உலக நாடுகளை ஏமாற்ற முயற்சிக்கிறார் என பிரான்ஸ் மனித உரிமைகள் நடுவகத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.
கொலைகாரர்களை அழிப்பதற்கு மாகாண சபையை ஆயுதமாக்குங்கள்! ஈழத்தமிழரிடம் ஐ.நா முன்றலில் அறைகூவல்
தமிழர் தாயகத்தில் ஒட்டுக் குழுக்களையும் கொலைகாரர்களையும் அழிப்பதற்கு வடமாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்வது காலத்தின் கட்டாயம் என இன அழிப்பு கண்காட்சியை நடாத்திவரும் மருதையா லோகநாதன் (கஜன்) ஜெனிவாவின் ஐ.நா முன்றலில்


            ""ஹலோ தலைவரே... நாங்க பி.எம். வேட்பாளரை அறிவிக்க ரெடி, காங்கிரஸ் ரெடியான்னு சவால்விட்ட பா.ஜ.க முகாமி லேயே நெருக்கடி உண்டாயிடிச்சே?''

பிறேசில் - ஈழத்தவர் உதைபந்தாட்ட தெரிவு அணிகள் பிரான்சில் களமாட்டம்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதுணை!!

பிரான்ஸ் வாழ் ஈழத்தவர் விளையாட்டு களத்தில் பிரான்சில் உள்ள பிறேசில் நாட்டு தெரிவு அணிக்கும் , ஈழத்தவர் தெரிவு அணிக்கும் இடையிலான உதைபந்தாட்ட ஆட்டமொன்று இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவில் - வள்ளிபுணத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சி குண்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு ஒருவர் பலி
முல்லைத்தீவில் - வள்ளிபுணத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சி குண்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு இலக்காகிய குடும்பஸ்தர் உயிரிளந்துள்ளார்.
கூட்டமைப்புக்கு எதிராக எந்த முறைப்பாடும் இல்லை – தேர்தல் ஆணையாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என்று, சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் தேர்தல் மேடைகளில் பரப்புரை செய்து வருகின்ற போதிலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் எந்த முறைப்பாட்டையும்

வம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார்.
இதற்கு வருகை தரவுள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மட்டக்களப்பிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி வக்கீல்கள் சாகும்வரை உண்ணாவிரதம்
சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி முருகன், கயல்விழி, பகத்சிங் ஆகிய 3 வக்கீல்கள் திங்கள்கிழமை சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
தேர்தலுக்கு பின் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை பயன்படுத்த கூடாது!- அரசு எச்சரிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆய்வு செய்த போது நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தும் பயணத்தை அந்த கட்சி மேற்கொண்டு வருவது தெரிவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசியத்திற்காய் போராடுபவர்களுக்கு வாக்களியுங்கள்! யாழ்.பல்கலை.மாணவர் ஒன்றிய
தமிழ் மக்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள அனைவரும் தமிழ் தேசியத்திற்காய் போராடுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கூட்டமைப்பின் வெற்றிக்கு தாயக உறவுகளை தூண்டுங்கள்: புலம்பெயர் மக்களுக்கு மாவை அறைகூவல்
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு தாயக மக்களை உந்துவதற்கு புலம்பெயர் தேசங்களில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இன்று உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என தெரிவித்தே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர  மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஐ.நா முன்றலில் பெருந்திரளான மக்களுடன் மாபெரும் கவனயீர்ப்பு
ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு எமது மக்களின் விடிவுக்காக உலகத் தமிழினம் உரிமைக்குரல் எழுப்பவேண்டும் என்னும் தலைவர் பிரபாகரன் அவர்களின் வார்த்தைக்கு இணங்க பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ஐ.நா முன்றலில் இன்று ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்துகின்றனர்.
கடும் மழையினையும் பொருட்படுத்தாது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ஐ.நா. முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு

16 செப்., 2013

நவநீதம் பிள்ளை -யார் இவர்??
தென்னாபிரிக்காவின் டேர்பன் நகர (கிளாயர்வுட் பகுதியில்) சாதாரண குடும்பமொன்றில் பிறந்து உலகின் அதியுயர் கல்வி நிறுவனமான அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை கலாநிதி பட்டம்
நல்ல உள்ளம் வாழ்க..!நடிகை ஹன்ஸிகா

பிரபலமானவர் நடிகை ஹன்ஸிகா. அடிப்படையில் இவர் ஒரு இந்தி நடிகை. தமிழ் பட படப்பிடிப்பு மதுரையில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்வதற்காக,நேற்று ஹன்சிகா மோத்வானி மும்பையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அவருடன் தாயார் மோனாவும் வந்தார். மோனா, எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர். 
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரே ஒரு தமிழ்ப் பெண் வேட்பாளர்.. 


பெயர் : திருமதி அனந்தி சசிதரன் (பிரதம முகாமைத்துவ உதவியாளர் - கிளிநொச்சி மாவட்ட செயலகம்)

சின்னம் : வீடு 

இலக்கம் : 01
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரே ஒரு தமிழ்ப் பெண் வேட்பாளர்..


பெயர் : திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணம் (ஆசிரியை - கிளி.கிராஞ்சி அ.த.க.பாடசாலை)

சின்னம் : வீடு

இலக்கம் : 04

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் நடைபவணியை மேற்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும், முன்னாள் நீதியரசருமான சி.வி.வின்னேஸ்வரன் தலைமையிலான பிரச்சாரப் பிரிவினருக்கு மக்கள் மலர் மாலைகள் அணிவித்தும், பொன்னாடைகள் போர்த்தியும் வரவேற்பு..

வடமாகாணசபை தேர்தல் 2013 இணையக் கருத்துக்கணிப்பு

இலங்கையில் வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் எதிர்வரும் 21.09.2013 அன்று நடைபெற உள்ளது.
election2013
21ம் திகதி வடமகாணசபைத்தேர்தலில் வெற்றி பெறும் சின்னம்
  • வீடு (86%, 1,078 Votes)
ஆற்காடு வீராசாமி அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தபோது.
· 
வரலாற்றுச் பிரசித்தி பெற்ற யாத்திரை தலங்களில் ஒன்றாக திகழும் சாட்டி சிந்தாத்திரை அன்னை ஆலய பெருவிழா. மிகவும் சிறப்பான முறையில் யாழ் ஆயர் வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் தலைமையில்
நடைபெற்றது.

ஆலய பெருநாளை முன்னிட்டு தீவகத்தினை நோக்கி பெருந்திரளான பக்தர்கள் வருகைதந்திருந்தனர்.kumaran
வாக்கு கொள்ளை இடம்­பெ­றா­விட்டால் வடக்கில் கூட்­ட­மைப்பு அமோக வெற்­றி­பெறும்!- சுனந்த தேசப்­பி­ரிய
வட மாகாண சபை தேர்­தலில் வாக்­குகள் கொள்ளை இடம்­பெ­றா­விட்டால் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு வெற்றி பெறு­வது உறு­தி­யா­கி­விட்­டது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வட மாகா­ணத்­தி­லுள்ள ஐந்து மாவட்­டங்­க­ளிலும் இப்­போது வெற்றி பெறும் என்­பதை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.
பொங்கு தமிழென சங்கே முழங்கு: மகிந்தவின் வருகைக்கு எதிராக அணிதிரளும் வட அமெரிக்கத் தமிழர்கள்
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமெரிக்க வருகைக்கு எதிராக அமெரிக்க மற்றும் கனேடியத் தமிழர்கள் அணிதிரளத் தயாராகி வருகின்றனர்.
சமஷ்டி பிரிவினையல்ல என்பது சட்டம் படித்த ஜனாதிபதிக்கு தெரியாதா?- சி.வி. விக்னேஸ்வரன்

சமஷ்டி என்பது பிரிவினையல்ல என்பதை சட்டம் படித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தெரிந்திருக்க வேண்டுமென்று,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை சந்தித்த சுமந்திரன், தவராசா!- சர்வதேச கண்காணிப்பாளர்களின் பணி வட மாகாணத்தில் இன்று ஆரம்பம்
நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள தெற்காசிய தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் 21 பேரும் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமி தலைமையில் மாகாண சபைத் தேர்தல்களில்
ஈழத்தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளனர். காவிரிக்காக முல்லை பெரி யாறுக்காக, கச்சத்தீவுக்காக போராடுகிறோம். நாங்களும் தத்தளித்துக் கொண்டு இருப்பதால் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா? 
ஆந்திராக்காரர்கள் போல் நாங்களும் சினிமா நூற்றாண்டு விழாவில்
 பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா? : பாரதிராஜா
சேரன் இயக்கும் புதிய படம் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’. அதில் கதாநாயகனாக சர்வானந்த், நாயகியாக நித்யாமேனன் நடிக்கிறார்கள். படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது.
இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஆர்.பார்த்திபன், ஷங்கர், சீமான், அமீர், கேயார், சமுத்திரக்கனி, சசி, பாண்டியராஜன், உட்பட பல இயக்குநர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.   நடிகர்கள் சரத்குமார், சூர்யா, சர்வானந்த், நடிகைகள் சினேகா, ரோகிணி, நித்யாமேனன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் சேரனின் மகள்கள் நிவேதா, தாமினி கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்தவர்களை தாமினி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இவ்விழாவில் பாரதிராஜா பேசியபோது, ‘’ சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. தெலுங்கானா பிரச்சனையில் தத்தளித்துக் கொண்டு இருக்கும்போது இந்த விழாவில் எப்படி பங்கேற்போம் என்று ஆந்திராக்காரர்கள் சொல்கிறார்கள். நமக்கும் பிரச்சனைகள் உள்ளன.
ஈழத்தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளனர். காவிரிக்காக முல்லை பெரி யாறுக்காக, கச்சத்தீவுக்காக போராடுகிறோம். நாங்களும் தத்தளித்துக் கொண்டு இருப்பதால் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா?
தமிழ் சினிமாவுக்கு தனி சங்கங்கள் வேண்டும். தென் இந்திய திரைப்பட வர்த்தகசபை, தென் இந்திய நடிகர் சங்கம் என்பதை விட்டு விட்டு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் வர்த்தகர் சபை தமிழ் திரைப்பட தொழிலாளர் சங்கம் என்று வரவேண்டும். அப்போது தான் நம் உரிமைகள் காக்கப் படும்’’என்றார்.
விருதுநகர் மதிமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்!
விருதுநகரில் நடைபெற்ற ம.தி.மு.க. மாநில மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 14 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அதன் விவரம்
ஜெ., - சோ : 35 நிமிடங்கள் தீவிர ஆலோசனை
துக்ளக் ஆசிரியர் சோ, இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு சென்றார். பகல் 12:00 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். பகல், 12:35 மணி வரை அதாவது, 35 நிமிடங்கள் அவர்கள் சந்திப்பு நீடித்தது. 
ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தினர் ஜெயலலிதாவை சந்திக்க முடிவு

பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை நடந்து 2 மாதம் ஆகியும் கொலையாளிகள் பற்றி துப்பு துலங்கவில்லை.

ad

ad