புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2013

யாழ். புடவைக்கடைகளில் பாரிய தீ விபத்து- கட்டுப்படுத்த முடியாமல் திணறிய யாழ்.மாநகர சபை

யாழ்.மின்சார வீதியிலுள்ள புடைவை கடைகளில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
திரு சிவராஜா வீரகத்தி (Switzerland) அவர்களின் நிதி பங்களிப்பின் மூலம் இருப்பிட்டி உப தபால் அலுவலகம்
 புங்குடுதீவு நலன்விரும்பி திரு சிவராஜா வீரகத்தி அவர்களின் நிதி பங்களிப்பின் மூலம் புதிதாக அமைக்கப்பட்டு இன்று (05.10.2013 ) திறப்புவிழா நடைபெற்றுள்ளது.
புங்குடுதீவில் வெடித்தது பசுமைப் புரட்சி – அணிதிரளும் மாணவர் திரட்சி
கண்ணகை புரம் முதல் நாகேஸ்வரம் வரையுள்ள கடற்கரை கரையோர பிரதேசத்தில் 10,000 பனம் விதைகள் புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களால் நடுகை செய்யப்பட்டன. தொடர்ச்சியாக இப்பணியை முன்னெடுப்பதன் மூலம் வினைதிறன் மிக்க பொருளாதார வளம் ஒன்றினை உருவாக்கி எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்க வேண்டியது எமது கடமை என்றார் பன்னிரெண்டாம் ஆண்டு பயிலும் தனுஜன்.

எனினும் சில வருடங்களில் புங்குடுதீவை சுற்றியுள்ள கரையோர பிரதேசம் முழுமையும் பனம் கூடலாக ஆக்கப்படும். அதற்காக யுத்த சூழலால் செயல் இழந்து போன சூழகம் (சூழலியல் மேம்பாட்டு அமைவனம்) அமைப்பினை பாடசாலை மட்டத்தில் மீண்டும் உயிரூட்டி இயக்கி எமது இலக்கினை அடையும் செயல்பாட்டில் இறங்கியுள்ளோம். விரைவில் அனைத்து பாடசாலை மாணவர்களையும் சூழகம் அமைப்பின் கீழ் ஒருங்கிணைத்து பனை நடுகை மட்டும் இன்றி பயன் தரு மரங்களையும், நிழல் மரங்களையும் ஊர் முழுவதும் நடுகை செய்யவுள்ளோம் என்று சூழக செயற்பாட்டாளர்களான குகதாஸ், கவியரசன், மோகன், விஜய்ராகுலண் எனப் பலரும் தெரிவித்தனர்.

அது மட்டும் இன்றி , புங்குடுதீவு மகா வித்தியாலய பிரதேசம் பசும் சோலையாய் மாற்றம் பெற இருக்கிறது என்று மாணவர்களிடம் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உள்ளூர் விதைகளைக் கொண்டு மாபெரும் நாற்று மேடை ஓன்று பள்ளி வளாகத்தினுள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.

ஹரி ஆனந்தசங்கரி எதிர்வரும் பாராளுமன்றத் தர்தலில் போட்டியிட முடிவு!

ஹரி ஆனந்தசங்கரி எதிர்வரும் பாராளுமன்றத் தர்தலில் போட்டியிட முடிவு!
திரு ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் எதிர்வரும் கனடிய பாராளுமன்றத்
தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்கு போட்டியிடத்
தீர்மானித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.
கடந்த புரட்டாதி மாத இறுதியில் கனடியத் தேர்தல் ஆணையத்தினால் புதி

8 அக்., 2013

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடந்த சத்திரசிகிச்சை: உலகில் நடத்த முதல் அதிசயம்-குறித்த நபரே ஆணுறுப்பை துண்டித்துக் கொண்டதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உலக சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மீடியா நண்பர்களுடன் படம் பார்த்து நானில்லை டூப் என்று சொல்ல தயாரா? நஸ்ரியாவுக்கு சற்குணம் சவால்?
 

நய்யாண்டி படத்தில் என் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியில், நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்தேன். எனக்குப்பதில் ஒரு டூப் நடிகையை பயன்படுத்தி, அந்த பாடல் காட்சியை படுகவர்ச்சியாக டைரக்டர் சற்குணம்
வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் தொடர்பான விபரம்

வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்பட்ட போதிலும், தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தோழர் தியாகுவைக் காவல்துறைக் கட்டாயப்படுத்தி 7வது நாளான இன்று ராயப்பேட்டை பொது மருத்துவமனைக்கு வள்ளுவர் கோட்டம் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்துச் சென்றது. அவர் நலமுடன் இருக்கிறார், உணவு மருந்து மறுப்பு என்பதில் பின்வாங்காமல் பட்டினப்போரை மருத்துவமனையில் இருந்தபடியேத் தொடர்கிறார்.

நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்! இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசைப் பங்கேற்கவிடாமல் தடுக்க வேண்டும் எனும் அவரது முக்கியக் கோரிக்கையை மக்களிடன், நண்பர்களிடம், மாணவர்களிடம் எடுத்துச் சென்று அதைத் தமிழகத்தின் ஒருமித்தக் கோரிக்கை ஆக்குவது...

இந்தக் கோரிக்கையை வென்று தோழர் தியாகுவின் உயிரைக் காப்போம்...
L· 


தென்னிந்திய நடிகர் சங்கத்தில் டைரக்டர் சற்குணம் மீது நடிகை நஸ்ரியா புகார்

‘‘நய்யாண்டி படத்தில் என் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியில், நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்தேன். எனக்குப்பதில் ஒரு ‘டூப்’ நடிகையை பயன்படுத்தி, அந்த பாடல் காட்சியை படுகவர்ச்சியாக டைரக்டர் சற்குணம் படமாக்கியிருக்கிறார்’’ என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா புகார் செய்து இருக்கிறார்.
புகார்
தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘நய்யாண்டி.’ இந்த படத்தில், தனுஷ் ஜோடியாக நஸ்ரியா நடித்து இருக்கிறார். சற்குணம் டைரக்டு செய்திருக்கிறார். கதிரேசன் தயாரித்துள்ளார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்த நிலையில், டைரக்டர் சற்குணம் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா ஒரு புகார் கொடுத்து இருக்கிறார். அதில், ‘‘நான் நடிக்க மறுத்த காட்சியில், ‘டூப்’ நடிகையை நடிக்க வைத்து படுகவர்ச்சியாக டைரக்டர் சற்குணம் படமாக்கி இருக்கிறார்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
பேட்டி
இதுபற்றி ‘தினத்தந்தி’ நிருபரிடம் நடிகை நஸ்ரியா கூறியதாவது:–
‘நய்யாண்டி’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில், கதாநாயகன் என் வயிற்றை தடவுவது போலவும், நான் உணர்ச்சிவசப்படுவது போலவும் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சற்குணம் என்னிடம் கேட்டார். அந்த காட்சியில் நடிக்க நான் மறுத்து விட்டேன்.படப்பிடிப்பு முடிந்து நான் போன பிறகு எனக்கு தெரியாமல், ஒரு ‘டூப்’ நடிகையை அந்த காட்சியில் நடிக்க வைத்து இருக்கிறார்கள். படத்தின் ‘டிரைலரை’ பார்த்தபோதுதான் இதை கண்டுபிடித்தேன். நான் அணிந்திருந்த அதே சேலையை அந்த ‘டூப்’ நடிகை அணிந்திருக்கிறார். அவர் வயிற்றை கதாநாயகன் தடவுவது போலவும், அந்த ‘டூப்’ நடிகை கையினால் ஒரு ‘மைக்’கை பிடிப்பது போலவும் படுகவர்ச்சியாக அந்த காட்சியை படமாக்கி இருக்கிறார்கள்.
மன உளைச்சல்
இதுபற்றி டைரக்டர் சற்குணத்திடம் கேட்டபோது, ‘‘அந்த காட்சியில் நீ நடிக்க மறுத்ததால், டூப் நடிகையை நடிக்க வைத்தேன்’’ என்று கூறினார்.கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் எல்லோரும் பார்க்கிற மாதிரி நாகரீகமாகவே நடித்து வருகிறேன். என்னை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள்.நான் நடிக்காத ஒரு காட்சியில், என் அனுமதி இல்லாமல், ‘டூப்’ நடிகையை பயன்படுத்தி நான் நடித்தது போல் காட்டுவது, மிகப்பெரிய மோசடி. என்னையும் ஏமாற்றி, ரசிகர்களையும் ஏமாற்றுவது போல் ஆகும். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
நீக்க வேண்டும்
டிரைலரிலேயே இந்த அளவுக்கு ஆபாசமாக இருந்தால், படத்தில் அந்த காட்சி எந்த அளவுக்கு இருக்கும்? என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.‘டூப்’ நடிகையை பயன்படுத்தி எடுத்த அந்த படுகவர்ச்சியான காட்சியை படத்தில் இருந்து நீக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் புகார் செய்திருக்கிறேன்.’’இவ்வாறு நஸ்ரியா கூறினார்.
ஆஸி. செல்லவிருந்த 46 பேர் பேருவளை பொலிஸாரால் கைது 
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல தயாரார் நிலையில் இருந்த 46 பேரை பேருவளை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

7 அக்., 2013

அண்ணாநகரில் பட்ட பகலில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை

¨சென்னை அண்ணாநகரில் சாலையில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென பைக்கில் இருந்து

யாழ்.மாவட்டத்தில் மூன்று இடங்களில் கொள்ளை! பல லட்சம் ரூபா பணம், நகைகள் அபகரிப்பு!- அச்சத்தில் மக்கள்
யாழ்.மாவட்டத்தில் மூன்று பிரதேசங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களில் பல லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராஜினாமா செய்யும் யோசனையை கைவிட்டார் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைமைப் பதவியை இராஜினாமா செய்யும் யோசனையை பலருடைய வேண்டுகோள்களுக்கு அமைய கைவிடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அரசோடு ஒத்துழைத்தால் உதவி நிச்சயம்!- ஜனாதிபதி மகிந்த
அரசாங்கத்தோடு ஒத்துழைத்து செயற்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரென்றால் வடக்கின் அபிவிருத்தி, மேம்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க நாம் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிழக்கில் முஸ்லிம் மக்களின் காணி பிரச்சினை தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மு.காங்கிரஸ்
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்
வட மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தமிழ் மொழி மூலம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
நவிபிள்ளையின் யோசனைக்கு அமைய மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளுக்கு மனித உரிமை கல்வித்திட்டம்
மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான கல்வித்திட்டம் ஒன்றை நடத்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வடமாகாண முதலமைசரின் விசேட அறிக்கை !!!

என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்று காலை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டேன். 
இணையத்தளங்கள் வெளியிடும் செய்தியில் உண்மையில்லை!

இணையத்தளங்கள் சில “அனந்தி, முதலமைச்சர் விக்னேஸ்வரன்அவர்கள் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய மாட்டேன் என கூறியதாகவும் அனந்தி 12ஆம் திகதி சமாதான நீதவான் அல்லது சத்தியபிரமாண ஆணையாளர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய இருப்பதாகவும் மாகாணசபையில் கலந்து கொள்ளும் முதலாவது கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்க இருப்பதாகவும்” என விசமத்தனமான பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆகவே இந்த செய்தியில் உன்மை இல்லை என்பதனை எமது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்..

தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் அமரர் ரவிவர்மாவுக்கு புளொட் அமைப்பு தனது அஞ்சலி தெரிவித்துள்ளது.
அவ் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தினக்குரல் பத்திரிகையின் பிரபல ஊடகவியலாளர் ரவிவர்மன் என்கின்ற பரமகுட்டி மகேந்திரராஜா மரணமடைந்த செய்தி எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.

ad

ad