புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2013


உண்ணாவிரதத்தை கைவிட்டார் தியாகு
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த தமிழ்


நய்யாண்டி படத்தில் ஒரு காட்சியை தடை செய்யக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜக பிரமுகர் புகார்
தனுஷ் நடித்து வெளியான நய்யாண்டி படத்தில் ஒரு காட்சியை தடை செய்யக்கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

காதல் தோல்வி? வாலிபருடன் இளம்பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!
கொச்சியில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 5.15 மணிக்கு சென்னை அருகே திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் தலையிட கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நேரடியாக தலையிடுமாறு கோரி பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இன்றும் 33 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றவர்களில் மேலும் 33 பேர் நாடு திரும்பியுள்ளனர். பண்டாரநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகவே அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியுள்ளனர்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வழிசெய்து தருமாறு வடமாகாண சபையிடம் கோரிக்கை!
போரில் உயிர் நீத்தவர்களுக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கும், அவர்களுடைய உறவினர்களும் உரித்துடையவர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு வடக்கு மாகாண சபை வழி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாலியல் தொழிலாளிகளை நாடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வுத் தகவல்
இலங்கையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆண்கள் நாள் தோறும் பாலியல் தொழிலாளிகளை நாடுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகளுக்கு உதவியதாக கூறப்பட்டு விளக்க மறியலில் இருந்த தாய்வீடு நிறுவனர் சுவிஸ் பிரசை கருணாகரன்  ,சட்டத்தரணி கே.வி. தவராசாவின் கடும் வாதத்தால் கொழும்பில் விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக சுவிஸ் பிரஜை நடராஜா கருணாகரன் மீது  குற்றம் சாட்டப்பட்டு, சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உலக கிண்ண தகுதி காண் போட்டிகள் 
ஐரோப்பிய வலயத்தில் இருந்து உலகைன்ன போட்டிகளுக்கு தகுதி பெற்ற நாடுகளாக சுவிட்சர்லாந்த் ,இத்தாலி .ஜெர்மனி .ஸ்பெயின் ,ஹோல்லாந்து , இங்கிலாந்த் ,பொஸ்னியா/ஹெர்சகோவினா ,ரஷ்யா ,பெல்ஜியம் ஆகிய ஒன்பது நாடுகளும் தங்களது குழுக்களில் முதலாம் இடத்தை அடைந்து தகுதியை பெற்று விட்டன. ஐரோப்பாவில் இன்னும் நான்கு நாடுகள் தெரிவாக வேண்டும் . ஒவ்வூறு குழுவிலும் இரண்டாம் இடத்தை அடைந்த நாடுகளில் புள்ளி சராசரி வீத கணிப்பின்படி பலவீனமான கடைசி நாட்டை தவிர்த்து மீதமுள்ள எட்டு நாடுகளும் இன்னும் ஒரு ப்ளே ஓப்ஸ் முறை போட்டிகளில் விளையாடும் .வெல்லுகின்ற நான்கு நாடுகள்தகுதியை பெற முடியும் . இந்த வகையில் அடுத்த சுற்றுக்கு விளையாட பிரான்ஸ்,க்ரோசியா , ருமேனியா ,போர்த்துக்கல் ஐஸ்லாந் ,ஸ்வீடன் ,கிரீஸ் ,உக்ரைன் ஆகிய நடுகல் அதிஸ்ட சீட்டிழுப்பின் மூலம் ஜோடிகள் ஆக்கபட்டு இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ளன

14 அக்., 2013

ஆஸி’யுடனான முதல் ஒருநாள் போட்டி: இந்தியா தோல்வி
புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க அசோஷியேசன் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியா வுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 
சிறிலங்காவில் ஐ.நாவின் முயற்சிகள் தோல்வி – பான் கீ மூனின் பேச்சாளர்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கவும், போரை இடைநிறுத்தவும் ஐ.நா வலியுறுத்திய போதிலும், அந்த திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ஐ.நா பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
முல்லைத்தீவில் புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களை த.தே.கூட்டமைப்பினர் சந்திப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பைலின் புயலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களையும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
சனல் 4 ஊடகவியலாளரா; தேடுதல் வேட்டை 
சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர், இலங்கைக்கு வந்துள்ளதாகத் கிடைத்த தகவலையடுத்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.
UNP யின் ஒற்றுமையை ஏற்படுத்த பொருத்தமானவர் விக்னேஸ்வரனே! - அஸ்வர் எம்.பி. புகழாரம் 
ஐக்கியம் சீர் குலைந்து பொல்லுகளுடனும் தடிகளுடனும் கற்களுடனும் திரியும் ஐக்கிய தேசி யக் கட்சியில் சமாதானத்தை ஏற்படுத்த பொருத்தமானவர் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனே, என ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாடு முடியட்டும்; கனடாவிற்கு இலங்கை எச்சரிக்கை 
கனேடிய பிரதமர் மற்றும் வெளிநாட்டமைச்சர் ஆகியோர் அண்மையில் இலங்கை தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து கனேடிய இராஜதந்திரியை அழைத்து விளக்கம் கோரும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளாது என்று தெரிவிக்கின்றது

13 அக்., 2013

ltte_podo_jvpnews2


மறைக்கப்பட்ட அதிசக்தி வாய்ந்த புலிகளின் ஆயுதங்கள்! படையினர் வசம்..

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த ஒவ்வொரு பகுதியையும் கைவிட்டு பின்வாங்கியபோது, தமது ஆயுதங்களில் சிலவற்றை மறைத்தோ, புதைத்தோ வைத்தது குறித்து அடிக்கடி இடம்பெறுவதை
கொழும்பு வந்த சனல் 4 ஊடகவியலாளரால் கிலிகொண்ட சிறிலங்கா பாதுகாப்புத்தரப்பு

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர், சிறிலங்கா வந்துள்ளதாகத் கிடைத்த தகவலை அடுத்து, கடந்தவாரம் பாதுகாப்பு அதிகாரிகள், உச்சக்கட்ட விழிப்பு நிலையில் இருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
சிறிலங்காவின் வடக்கில் பலர் பாலியல் தொழிலாளிகளாக மாறுகின்றார்களா?

"சிறிலங்காவின் வடக்கில் இராணுவத்தினரின் நிலைகொள்ளல் அதிகரித்துள்ளமை, தெற்கிலிருந்து வடக்கில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதற்காக தொழிலாளர்கள் கொண்டுவரப்படுதல் போன்றன வடக்கில் பாலியல் தொழில் அதிகரிப்பதற்கான பொதுவான காரணங்களாகக் காணப்படுகின்றன" 
மன்னார் ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க வடமாகாணசபையின் ஒன்பது அங்கத்தவர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு ஒத்திவைப்பு
மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நாளை முல்லைத்தீவில் நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது உறுப்பினர்களதும் பதவியேற்பு வைபவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்


இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ad

ad