புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2013

அண்மைய கிசு கிசு


பெர்சனல்!

நயன்தாராவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார் அவரின் மேக்-அப் மேன் ராஜு. நயனுடன் பிரபுதேவா லிங்க் ஆன பிறகு மேக்-அப்மேனின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. மீண்டும் ஸிங்கிள் ஆன நயன் மேக்-அப்மேனை பெர்சனல் மேனேஜராகவும் ஆக்கிக்கொண்டிருக்கிறாராம்.



             ந்திய அரசியல்வாதிகள்மேல் கேளிக்கை வரி விதிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் அவர்களது சொல்லும் செயலும் எவ்வளவு துயரத்திலும் மக்களை மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன. எதற்கும் துணிந்துவிட்ட அவர்களது  பேச்சுக்கள் மக்களை முடிவற்ற கேளிக்கைகளுக்குள் ஆட் படுத்திக்கொண்டிருக்கின்றன. போன வாரத்தின் உச்சக்கட்ட காமெடி தேர்தல் சின்னங்கள் தொடர்பானவை. 

           நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய காய் நகர்த்தல்கள் விறுவிறுப்பு அடைய... காங்கிரஸ்-வி.சி.க. இடையே லேசாக அல்ல, கடும் உரசல். கடலூர் மாவட்டத்தில், அதுவும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி.யாக உள்ள சிதம்பரம் தொகுதியில்.

இரு தரப்பினரும் அடுத்தவர் பேனர்களைக் கிழிப்ப தும், கொடிக்கம்பங்களைச் சாய்ப்பதும், மோதிக்கொள் வதும், போலீசில் புகார் கொடுப்பதுமாக இருந்துவரு கிறார்கள். இவ்வளவுக்கும் மையமாக இருப்பது, ஒரே ஒரு நபர்தான். அவர் அனுபவமான அரசியல்வாதியும் அல்ல. 
நிற்க... 



            காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே என்ற கோரிக்கை, கடந்த பல வாரங்களாகவே, தமிழகத்தில் சூட்டைக் கிளப்பிவருகிறது! 

கடந்தவாரத்தில், சென்னையிலும் சேலத்திலும் மத்திய அரசு அலுவலகங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டன. இது தொடர்பாக, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உள்பட அந்த அமைப்பைச் சேர்ந்த 8 பேரை கைதுசெய்துள்ளது, போலீஸ். 



            ""ஹலோ தலைவரே...  தீபாவளிக்கு பல தலைவர்களும் வாழ்த்துச் சொல்லியிருந்தாலும், திராவிட இயக்க அரசியல் தலைவர்களான கலைஞர், வைகோ போன்றவங்க வாழ்த்துவது வழக்கமில்லை. அப்படிப்பட்ட கலைஞரையே நேரில் சந்திச்சி, தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு வந்திருக்காரே ப.சிதம்பரம்... கவனிச்சீங்களா?''

""தீபாவளிக்கு தி.மு.க மா.செ.க்களோ அறிவாலயத்தில் உள்ள நிர்வாகிகளோகூட கலைஞருக்கு வாழ்த்து சொல்லமாட்டாங்க. சொந்தக் கட்சிக்காரங்களே சும்மா இருக்கிற நேரத்தில், ப.சி எதற்கு கலைஞரை சந்திச்சி தீபாவளி வாழ்த்து சொன்னாராம், அப்படி என்ன வாழ்த்தாம் அது?''நன்றி நக்கீரன் 

யாழ்ப்பாணம் போனால் உதயன் பத்திரிகை அலுவலத்திற்கும் போவேன் - டேவிட் கமரூன்,
பிரித்தானிய பிரதமர்.பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவில் மாற்றமில்லை. சனல் 4 வெளியிட்ட காணொளியை நான் பார்த்திருக்கின்றேன். அது தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணையை நடத்த இலங்கை மகாநாட்டில் வலியுறுத்துவேன் - டேவிட் கமரூன், 
இலங்கை போர்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்த பொதுநலவாய மகாநாட்டில் கோரப்போவதாக பிரித்தானிய பிரதமர் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவார் என நம்பவில்லை - சுரேன் சுரேந்திரன், பேச்சாளர், உலக தமிழர் பேரவை




           தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாக... கடந்த 31-ந் தேதி கோலிவுட்டில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினார்கள். அஜீத்தின் "ஆரம்பம்' படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம், விஜய்யின் "ஜில்லா' படத்தை தயாரித்துவரும் ஆர்.பி.சௌத்ரி, கார்த்தியின் "அழகு ராஜா' படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் ரெய்டு நடந்தது.


           ராஜபக்சேவின் ராணுவம் தமிழீழத்தில் நடத்திய போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை, "நோ ஃப்யர் ஸோன்' என்கிற தலைப்பில் வெளியிட்டு வருகிறது சேனல் 4.   சிங்கள ராணுவத்தின் கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளாகி சுட்டுக் கொல்லப் பட்ட இசைப்பிரியாவின் உடல், ஆடைகள் அகற்றப் பட்டும் வெள்ளைத்துணி போர்த்தப்பட்டும் கிடந்த காட்சி ஏற்கனவே வெளி யானபோது தமிழகமும் உலகத் தமிழினமும் அதிர்ந்துபோனது.  "யுத்தத்தில் அவர் கொல்லப் ட்டார்' என்று சொல்லி வீடியோவை மறுத்தது இலங்கை அரசு. 

(அதிர்ச்சிப் படங்கள் & வீடியோ) பிரசவித்த குழந்தையை கொன்று புதைத்த தாய்: வவுனியாவில் தாயின் கொடூரம்
பிறந்தவுடனேயே கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ஆண் சிசுவொன்றின் சடலத்தினை வவுனியாவின் கல்மடு, பூம்புகார் கிராமத்தில் பொலிஸார் தோண்டி எடுத்துள்ளனர்.

7 நவ., 2013

சென்னையில் பிரபல ஓட்டலுக்கு சீல் ( படங்கள் )
அ.தி.மு.க. வழக்கறிஞர்களை வெளியேற்றிய புதிய நீதிபதி!
    பெங்களூரு சிறப்பு கோர்ட் நீதிபதியாக வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு ஜான் மைக்கேல் டிகுன்ஹா பதவியேற்றுக்கொண்டார். அவரிடம் நீதிபதி முடிகவுடர் பொறுப்புக்களை ஒப்படைத்தார். 
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இல்லாத நேரங்களில்
காமன்வெல்த்: இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: சென்னையில் மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் 3 கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

திருவாரூரில் மமகவினர் 500 பேர் கைது
 திருவாரூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி - திருவாரூர் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது  செய்யப்பட்டனர். 
ஆனந்த விகடனில் கிட்லர் ராஜபக்ஷ என்ற தலைப்பில்  வந்த  படம் 

யாழில் காதலியோடு உல்லாசமாக இருந்த ஆபாச புகைப்படங்களை முகநூலில் (பேஸ்புக) வெளியிட்ட காதலன் கைது
காதலியோடு உல்லாசமாக இருந்த ஆபாச புகைப்படங்களை முகநூலில் (பேஸ்புக்) வெளியிட்ட காதலனை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.
யாழில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் கைது
யாழ்.நகரப் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் பொறியியலாளராக பணிபுரியும் மகனை பார்க்க விரும்பும் கைதடி முதியோர் இல்ல தாய்
லண்டனில் பொறியியலாளராக பணிபுரியும் தன் மகனை பார்க்க விரும்பும் யாழ்ப்பாணம், கைதடி முதியோர் இல்லத்திலுள்ள தாயொருவர் முதியோர் இல்ல அதிகாரிகள் மற்றும் உறவினர்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
பொலிஸ் நிலையங்களில் சித்திரவதை; ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு 
இலங்கையில் உள்ள பொலிஸ் நிலையங்களில்      சித்திரவதைகள் தொடர்வாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 சிறிலங்காவிற்கு தலையிடி; அன்சாரியும் வரமாட்டார்? 
சிறிலங்காவில் நடக்கவுள்ள பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்க இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் முடிவெடுத்தால், இந்தியக் குழுவுக்கு துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியும் தலைமையேற்றுச் செல்லமாட்டார் என இந்தியன் எக்ஸ்பிரஸ்
 பொதுநலவாய வர்த்தக பேரவை மாநாட்டைப் புறக்கணிக்கிறது பிரித்தானியா 
கொழும்பில் நடக்கவுள்ள பொதுநலவாய  உச்சி மாநாட்டுக்கு பிரித்தானியாவில் இருந்து வர்த்தகப் பிரதிநிதிகள் குழு அனுப்பப்படாது என பிரித்தானிய, நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ad

ad