புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2013

டீ விற்றவர் தான் இந்தியாவின் பிரதமராவார் என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்: ராஜ்நாத்சிங்
பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜகவின் இந்தியாவை வெல்லசெய்வோம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜகவின் தேசியத்தலைவர்
 மாவீரர்கள் எமது இரத்த உறவு என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்; அமைச்சர் பொ.ஐங்கரநேசன்
அரசுக்கு பயங்கரவாதிகளாக தெரிபவர்கள் எமக்கு மாவீரர்கள். அவர்கள் எங்களுடைய இரத்த உறவுகள் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என  வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
 பிரித்தானிய பிரதமர் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார் – முரளீதரன்
news
பிரித்தானிய பிரதமரை சிலர் பிழையாக வழிநடத்தி வருவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். 
 
குறித்த விடயம் தொடர்பில் கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்ததாவது,
 
என்னைப் பொருத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்து வந்தன. அதிலிருந்து அகல முடியவில்லை யாராலும். போர்க்காலத்தில் ஐநா பிரதிநிதிகளுடன் நானும் அந்தப் பகுதியைப் பார்த்திருக்கிறேன்.ஆனாலும் வசதிகள் வேண்டும். இப்போது சாலைகள் போடப்பட்டுள்ளன, பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன.வர்த்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. வடக்கு முன்னேறி வருகிறது.
 
வடக்கு கிழக்கு நிலைமைகளை நேரில் பார்வையிடாது சிலரது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 
 
பிரித்தானிய பிரதமர் சரி அல்லது பிழை என எமக்கு குறிப்பிட முடியாது. பிரதமர் கமரூன் ஒரு நாள் மட்டுமே வடக்கிற்கு விஜயம் செய்துள்ளார் என்றார்.

சுற்றலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடர் சமநிலையில் நிறைவு பெற்றது.
தம்புள்ளை ரங்கிரிய விளையாட்டு மைதானத்தில்  நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டி மழை காரணமாக இடைக்கிடையே பாதிப்புக்கு உள்ளானது.
 
இந்த நிலையில், போட்டி 33 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 33 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 211 ஓட்டங்களை பெற்றது.
கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நாளை திங்கட்கிழமை காலை உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார்.
 
இதன்போது சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கல்முனைக்குடி ஜும்ஆப் பள்ளியில் இருந்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு- கல்முனை மாநகரசபையில் அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
 
இதற்கான ஏற்பாடுகளை கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள் போன்றவை மேற்கொண்டுள்ளன.
வவுனியாவில் இடம்பெறும் தீப்பந்த போராட்டம் 
வவுனியா பிரஜைகள் குழுவினரின் ஏற்பாட்டில் மாபெரும் தீப்பந்த போராட்டம் பெருந்திரளான மக்கள் பங்களிப்புடன் மிகவும் எழுச்சியாக நடைபெற்று வருகிறது.
சவேந்திர சில்வாவுடனான விவாதத்துக்கு எந்த நேரத்திலும் தயார்: கலும் மக்ரே
சனல்4 விவரண தயாரிப்பாளர் கலம் மெக்ரேயுடன் விவாதத்துக்கு தாம் தயார் என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்கே?": தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்கே, கொலைகார பூமியில் கொமன்வெல்த் மாநாடா, சர்வதேச விசாரணை தேவை , காணாமல் போனவர்கள் தொடர்பில் பதில்சொல், , எங்கள் வீடுகளை எம்மிடம் தா,

17 நவ., 2013

ரஷ்யாவில் விமான விபத்து: 44 பேர் பலி
ரஷ்யாவில் போயிங் விமானம் நொறுங்கி விழுந்து 44 பேர் உயிரிழந்தனர். கஸôன் விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தை தரை இறங்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கறுப்புப் பட்டியலில் 300 வெளிநாட்டுப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 300 வெளிநாட்டுப் பிரஜைகள் கறுப்புப் பட்டியலிடப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளை திருப்திப்படுத்தும் விதத்தில் கமரூன் செயற்படுகிறார்: கோத்தபாய குற்றச்சாட்டு
விடுதலைப்புலிகளை திருப்திபடுத்தும் முகமாகவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பில் செயற்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை விசாரிக்காவிட்டால் ஐநா மன்ற விசாரணை கோருவோம்--கேமரன் BBC

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கை மார்ச் மாதத்துக்குள் சுயாதீனமான ஒரு விசாரணையை அமைக்காவிட்டால், பிரிட்டன், இது தொடர்பாகhttp://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131116_cameronvideo.shtml ஒரு சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐநா மன்றத்திடம் கோரும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் எச்சரித்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது: மத்திய அரசு முடிவு
கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் புரிந்த சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய விளையாட்டுத்துறை
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்
படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்கு அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பழ.நெடுமாறன் உட்பட 83 பேரை விடுதலை செய்யுமாறு கோரியும்

16 நவ., 2013



மொறிசியசுக்கு அழுத்தம் கொடுத்த சர்மா – அடுத்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பை உதறினார் பிரதமர் ராம்கூலம்

சிறிலங்கா மாநாட்டைப் புறக்கணிக்க மொறிசியஸ் பிரதமர் எடுத்த முடிவினால், அடுத்த கொமன்வெல்த் உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழந்துள்ளது. 



            தற்கான தீர்ப்பு கிடைத்துவிட்டது. நியாயத் தீர்ப்பாகவே அமைந்துவிட்டது. ஆனாலும் தாமதமாகக் கிடைக் கும் நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பார்களே அதுபோலத்தான் ஆகிவிட்டது. உற்சாகம் பொங்க வேண்டிய நேரத்திலும் ஊமைக் காயத்துடன் இருக்கிறது சரவணப்பெருமாள் வட்டாரம்.

சரவணப்பெருமாள்?

           ட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என இரண்டாவது தீர்மானத்தை நிறைவேற்றினாலும் ஜெ.அரசின் முதன்மையான கவனம் மணல் விவகாரத்தின் மீதுதான் இருக்கிறது. உயர்நீதிமன்றத்திற்கு சென்ற மணல் பிரச்சினை  தொடர்பாக தனது ஆட்சிக்கு எதிராக சி.பி.ஐ விசாரணை

           ""ஹலோ தலைவரே... …  ஒரு பெண் வக்கீல் சட்டம் சம்பந்தமான பத்திரிகையில் எழுதிய கட்டுரை உச்சநீதிமன்றம் வரை கவனத்திற்குப் போய் இந்தியா வையே கிடுகிடுக்க வச்சிருக்கு.''

            மிழீழத்தில் நடந்த இனப்படுகொலை நினைவாகவும் போரில் கொல்லப்பட்ட போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாகவும் தஞ்சை விளாரில் உருவாக்கப்பட்டிருக்கிறது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம். அதன் சுற்றுச்சுவரையும் பூங்காவையும் அரக்கத்தனமாக இடித்துத் தள்ளியிருக்கிறது ஜெயலலிதா அரசு. 
விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும்! மதிமுக மாநாட்டில் கோரிக்கை
விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும் என ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் பிரதமரின் கோரிக்கையை இலங்கை நிராகரித்தது
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கையின் மூத்த அமைச்சர் ஒருவர் நிராகரித்துள்ளார்.
டேவிட் கமரூன் - முத்தையா முரளிதரனை சந்தித்தார்! கிரிக்கெட் பயிற்சியிலும் ஈடுபட்டார்
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் கெமரூன் இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் இராணுவமயப்படுத்தல் தொடர்கிறது! பிபிசி ஊடகம்
இலங்கையில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் அங்கு சகல இடங்களும் இராணுவமயப்படுத்தப்பட்டு வருவதாக பி.பி.சி வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும்! மதிமுக மாநாட்டில் கோரிக்கை!
விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும் என ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டை அவமானப்படுத்தும் திரைப்படங்களை தயாரிக்க நாடு முழுவதும் படப்பிடிப்புகளை நடத்தும் சனல்4 குழுவினர்: பாதுகாப்பு தரப்பினர்
இலங்கை வந்துள்ள சனல்4 தொலைக்காட்சியின் ஊடக குழுவினர், இலங்கை அவமானத்திற்கு ஏற்படுத்தும் வகையில் மேலும் பல ஆவணப்படங்களை தயாரிப்பதற்கு நாடு முழுவதும் ஒளிப்பதிவுகளை செய்துள்ளமை தமக்கு தெரியவந்துள்ளதாக அரச பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.
பிரதமர் கமரூன் தனது கௌவரத்தை தற்காத்து கொள்ளவேண்டும்: மிரட்டுகிறார் அமைச்சர் கெஹெலிய
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை அரசாங்கம் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கே அழைத்தது எனவும் அவர் தனது கௌவரத்தை தற்காத்து கொண்டு இருக்க வேண்டும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்பு: 2015 மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழந்த மொரீசியஸ்
இலங்கையில் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணித்த மொரீசியஸ் நாடு எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழந்துள்ளது.
இலங்கையின் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து கமரூன், மஹிந்தவிடம் உறுதியான பேச்சு
ஜனாதிபதி மகிந்தவுடனான சந்திப்பின் போது இலங்கையில் தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் அழுத்தம் கொடுத்துள்ளார்.
புறக்கணிப்பு மூலம் மன்மோகன் சிங், மஹிந்தவுக்கு கடும் செய்தியை சொல்லியுள்ளார்!- சர்வதேச மன்னிப்புச்சபை
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணித்தமையின் மூலம், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும கடும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.
முற்றம் குற்றம்.. யுத்தம்! நடராஜன் மீது கோபம் இருந்தால், அதனை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீதா காட்டவேண்டும் [ விகடன் ]
இது நவம்பர் மாதம். ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்​களின் நினைவைப் போற்றும் மாவீரர் தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் மாதம். அப்படிப்பட்ட மாதத்தில்,

23 ஆவது பொதுநலவாய உச்சி மாநாடு கோலாகல ஆரம்பம்

கலாசார பாரம்பரியங்களுடன் தலைவர்கள் வரவேற்பு
பொதுநலவாய அரச தலைவர்களின் 23வது உச்சி மாநாடு நேற்று கோலா கலமாக கொழும்பில் ஆரம்பமானது. உச்சி மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ அரங்கிலும் அரச தலைவர்கள் கலந்து கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ அமர்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும்
பிரித்தானிய பிரதமருக்கு நிகராக சனல் 4 வை நம்பும் யாழ்ப்பாண மக்கள்
யாழ்ப்பாணத்துக்கு நேற்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் சென்றிருந்த போது அவரை காண காட்டிய அதே அக்கறையை பொதுமக்கள் சனல் 4 ஊடகத்தினர் மீதும் காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை மிகப் பெரிய மயான பூமி!- சனல் 4 ஊடகம்!- பிரி. பிரதமருக்கு நிகராக சனல் 4 ஐ நம்பும் யாழ்.மக்கள்
இலங்கை மிகப் பெரிய மயான பூமி என சனல் 4 தொலைக்காட்சி நேற்றிரவு பிரசாரங்களை ஆரம்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டில் 23 நாடுகளின் தலைவர்களே பங்கேற்பு – வாக்குறுதி அளித்த பலர் நழுவல்
சிறிலங்காவில் இன்று காலை கோலாகலமாக ஆரம்பித்த கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில், பாதிக்கும் குறைந்த உறுப்பு நாடுகளின் தலைவர்களே பங்கேற்றுள்ளனர். 

வயதான தாயாரை சப்பாத்துக் கால்களால் தாக்கிய பொலிஸார்: கண் கலங்கிய சனல் 4 ஊடகவியலாளர்கள்

தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய , உறவுகளைத் தொலைத்த மக்கள் மீது, தாக்குதல் நடத்தியது மாபெரும் குற்றமாகும். இச் சம்பவம் உட்பட தமிழர்கள் மேல் புரியப்பட்ட அனைத்து குற்றங்கள்
w1








இலங்கைக்கு எதிராக லண்டனில் மீண்டும் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டம் 

இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாட்டினை அங்கு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச மட்டத்தில் போராட்டங்கள் வலு பெற்றிருக்கும் நிலையில் தொடர்ச்சியான போராட்டங்களை
வேடிக்கையான பேச்சாக இருக்கிறது இளவரசர் சார்ள்ஸின் பொறுப்பற்ற பேச்சு. "உலகில் உள்ள பிரச்சினைகளை நினைவுபடுத்திக்கொண்டிருக்க தேவையில்லை எனவும் மாறாக அவற்றுக்கு தீர்வினை பெற பொதுநலவாய அமைப்பு முயற்சிக்க வேண்டும்" எனவும் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளமையானது ஆழமற்ற சிந்தனையாகவே தோன்றுகின்றது. நினைவுபடுத்தாமல் எப்படி தீர்வு தேடுவீர்கள் இளவரசரே? தீர்வைப்பற்றி நீங்கள் முன்வைக்கும் போதே எதற்கான தீர்வு என்று சொல்ல வேண்டும் அல்லவா? அத்தோடு உங்கள் மனசாட்சிக்கே தெரிகிறது இங்கே மருந்து தேவைப்படும் காயங்கள் இருக்கின்றன என்று அதனால் தான் தீர்வு பற்றி மேலோட்டமாக சொல்கிறீர்கள்! கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை. வலி சுமந்த மனிதர்களுக்கு தான் தெரியும் வலி என்றால் என்ன என்று...இல்லையேல் நெஞ்சில் துளியாகவேனும் ஈரம் இருக்க வேண்டும்...உங்களுக்கு எங்கே புரியும் எம் இனத்தின் கொடும் துயரம் பற்றி?
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tamilcnn.org%2Farchives%2F217234.html&h=TAQEnycAX




இலங்கையில் சனல் 4- ன் இயக்குனர் கல்லாம் மேக்ரோ-வை கொலை செய்ய அரசின் சதி அம்பலம் வீடியோ 

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதால் பல்வேறு நாட்டிலிருந்தும் தொலைக்காட்சி சேனல்கள் இலங்கையில் தஞ்சம் அடைந்துள்ளன. இதில் முக்கியமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சேனல்-4, இலங்கையின் இனவெறி செயல்களை உலகறிய செய்த சேனல். இந்த சேனல் அலைவரிசைக்கு தடைவிதித்தால் மேலும் பெரிய பிரச்சனை எழும் என்பதால் இலங்கை அரசு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
லண்டனில் இருந்து கொண்டே இலங்கைக்கு பெரிய
பொல்லு கொடுத்து அடி வாங்க போகும் இலங்கை ஜனாதிபதி 
பொதுநலவாய மாநாடு நடத்தி தன்மீதான குற்றச் சாட்டுகளை மறைக்கலாம் அல்லது மறுக்கலாம் என கனவு கண்ட மஹிந்த பொல்லு கொடுத்து அடி வாங்கிய கதை ஆரம்பிகிறது .வந்திருந்த அனைத்து தலைவர்களும் ஊடகங் களும் வடக்கு நோக்கி செல்வதையே முக்கிய நோக்காக கொண்டுள்ளன . அரசோ தனது கட்டுபாட்டை இழந்து  தவிக்கிறது  இங்கிலாந்து பிரதமர்  ஒருவர் 48 வருடங்களின் பின்னர் விஷயம் போன கமரூன் தமிழரின் நலன்புரி நிலையத்தின் சிறிய தகர கொட்டகைகளில் காண பாடும் கா ட்சிகள் அவரின் மனித காருண்யத்தை விளக்குகின்றன தான் எதற்காக போகிறேன் என்று சொன்னவர் செய்து காட் டுகிறார் சிறிய நாட்டின் ஜனாதிபதி மகிந்த பெரியபலமான நாடான  இங்கிலாத்தில் இறங்க முடியாத நிலை.பெரிய நாடான இங்கிலாந்தின் பிரதமர் தகர கொட்டகையில் என்ன வித்தியாசம் 

யாழில் பொலிசார் கிறிஸ்தவப் பாதிரியார்களைத் தாக்கும் அதிர்ச்சிக் காட்சிகள்

போலிசாரின் தடை உடைத்து ஓடும் வானில் பிரித்தானியப் பிரதமரிடம்! மகஜர் வழங்கிய அனந்தி..

யாழ். பொதுநூலகத்திற்கு முன்னால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து அதனை முன்னணியில் நின்று நடத்தியவர் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி எழிலன்.
பிரி. பிரதமர் வருகையை எதிர்த்து சிங்களவர்கள் சுன்னாகத்தில் போராட்டம்!- மாவிட்டபுரம் போராட்ட மக்களை சந்திக்காமல் பிரதமர் கொழும்பு திரும்பினார்
சுன்னாகம் பகுதியில் சிங்கள மக்களால் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு வருகை தந்த பிரிட்டிஷ் பிரதமர் அந்த நிகழ்வுடன் மீளவும் கொழும்பு திரும்பியுள்ளார்.
சனல்- 4 ஊடகவியலாளர்களையே கண்ணீல் மல்க வைத்தது மக்களின் அழுகுரல்! சர்வதேச விசாரணை தேவையென்கிறார் ரவிகரன்
தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய உறவுகளைத் தொலைத்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியது மாபெரும் குற்றமாகும். இச்சம்பவம் உட்பட தமிழர்கள் மேல் புரியப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பிலும் சுயாதீன சர்வதேச விசாரணையை முன்னெடுக்க ச
பிரித்தானிய பிரதமர் கமரூன் யாழ். நலன்புரி நிலையத்திர்கு விஜயம். - ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார்
யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

15 நவ., 2013

 பிரத்தானிய பிரதமர் உதயனுக்கு விஜயம்
யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்று உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு வருகை தந்திருந்தார்.
தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை நிறுத்தக் கோரும் கையொப்பங்கள் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சிடம் கையளிப்பு
 [ சண்தவராசா ]
சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கு எதிராக பக்கச் சார்பற்ற நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும், தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திச் சேகரிக்கப்பட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய படிவங்கள் வியாழன் பிற்பகல் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

ஜெயலலிதா மற்றும் விஜயதாரணியை அசிங்கமாக திட்டிய தமிழ்தாசன் கைது

சத்தியம் டிவியில் சத்யம் சாத்தியம் என்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டது தொடர்பாக சில தினங்களுக்கு முன் விவாதம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதாரணியும், பாஜக சார்பில்
போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த மக்கள் மீது கழிவொயில், கல்வீச்சு தாக்குதல்: இராணுவத்தினர் அட்டகாசம்
வலி.வடக்கில் மேற்கொள்ளப்படும் நில மீட்புப் போராட்டத்தில் பங்குபற்றுவதற்கென யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட மக்கள் மீது இராணுவத்தினர் ஒயில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு பல இடங்களில் வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
23வது பொதுநலவாய மாநாடு அங்குரார்ப்பணம்!: நாட்டின் மனித உரிமையுடன் வாழும் நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: ஜனாதிபதி
பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் 23வது மாநாட்டை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
விசேட விமானத்தில் யாழ். சென்ற பிரி. பிரதமர் கமரூன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தார்
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகைதந்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் யாழ்ப்பாணத்திற்கு சற்று முன்னர் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். நூலகத்திற்கு முன்பாக பதற்றம் - அனைத்துலக பிரசன்னத்தின் முன் கண்ணீர் மல்க காத்திருந்த மக்கள் மீது காட்டுமிராண்டித்தனம்!

அனைத்துலககத்தின் பிரச்சன்னத்தை வெளியேற்றி விட்டு சாட்சியமற்ற போரினை தமிழர்கள் மீது நடத்திய சிங்களம், தற்போது அனைத்துலகத்தின் பிரசன்னத்தின் முன்னேயே தமிழர்கள் மீதான காட்டுமிராண்டித்தனத்தை யாழ் மண்ணில் காட்டியுள்ளது.
வடக்கில் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதை நிறுத்துங்கள்! எச்சரிக்கும் இராணுவம்
இலங்கையில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் வடக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள் தமிழர்களை ஆத்திரமடைய செய்துள்ளதாக சர்வதேச செய்தி சேவை ஒன்று தெரிவித்துள்ளது.
கே.பியிடம் விசாரணை நடத்த இலங்கையிடம் உத்தியோகபூர்வ பதிலை எதிர்பார்த்திருக்கும் சி.பி.ஐ!- இந்துஸ்தான் டைம்ஸ்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடனான தொடர்புகள் பற்றி கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடம் முறையான விசாரணைகளை நடத்த இந்திய மத்திய விசாரணை பிரிவினர் (சி.பி.ஐ) இலங்கையின் உத்தியோகபூர்வமான பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ்
எனது தனிப்பட்ட பார்வையில் நல்ல  கவி வீச்சு ,கரு ப்பொருள்,  கோர்ப்பு ,பொருள் கூறல் ,பா வம் ,காலத்துக்கு ஏற்ற படைப்பு போன்ற அம்சங்கள் இருந்தும் எனக்கு பிடிக்காத ஊடக நாகரீகம் குறைவாக இருக்கிறது.விதிவிலக்காக இந்த கவிஞனின் ஆற்றலுக்கு மதிப்பளித்து சேர்த்துக் கொள்கிறேன் 

முள்ளிவாய்க்கால் முற்றம் அதிலென்ன குற்றம்!

ஆக்கம்: அ.பகீரதன்

இடித்தவன் தலையில்
இடி வீழாதோ-சிறை
பிடித்தவன் அரசின்
முடி தாழாதோ?

படைத்தவன் இல்லையோ-இல்லை
பார்ப்பனர் தொல்லையோ
உடைத்தவன் உதிரத்தை
குடித்தால் தகுமோ?

அம்மா..
முற்றத்தை இடித்தாயோ–உன்
முகத்திரையை கிழித்தாயோ?
சுற்றத்தை வெறுத்தாயோ-உன்
சுகத்தை நினைத்தாயோ?

முந்தானை விரித்து-அரசியலில்
முன்னுக்கு வந்தவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
மு.க.வின் மாளிகையா?

பல் இளித்து பாவாடை குறுக்கி
சினிமாவில் வென்றவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
சினிமா செற்றா

அம்மா
வாஸ்த்து பார்த்தீரோ
வைகோவை வாயடைக்கப் பார்த்தீரோ
நுனிநாக்கால் தீர்மானம் போட்டுவிட்டு
சனிநாக்கால் தமிழ்மானம் கெடுத்தீரோ

பார்ப்பனரே…
பல்லக்கில் பவனிவந்த
தமிழன் இன்று
உங்கள் சொல்கேட்டு
பள்ளத்தில் வீழ்ந்தானே

முல்லைக்குத் தேர் கொடுத்த
தமிழ் வம்சத்துப் பெண்பிள்ளைக்கு
முள்ளிவாய்க்காலில் மூடிமறைக்க
ஒருதுண்டு துணியில்லை

வாழ வழியின்றி வந்தேறு குடிகளிற்கு
வீடுநிலமும் விதைநிலமும்
கொடுத்த தமிழனுக்கு
நினைவுக்கல் நாட்ட நிலமில்லை

நன்றி.
அ.பகீரதன்

மனித உரிமை மீறல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கையை நிர்ப்பந்திக்க வேண்டும்: கொமன்வெல்த் நாடுகளுக்கு வலியுறுத்து
இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டை கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் நிர்ப்பந்திக்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 
இலங்கையில் பாலியல் வன்கொடுமை! இராணுவத்தினர் மீது குறித்து விசாரணை நடத்த பிரிட்டன் வலியுறுத்தல்
இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் வலியுறுத்தியுள்ளார்.
நவநீதம்பிள்ளை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு பாராட்டு தெரிவித்து கடிதம்
இலங்கையின் மொழி உரிமைகள் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மனப்பூர்வமான ஈடுபாட்டை பாராட்டி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை செயலருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு
வடக்கு மாகாணத் தேர்தலுக்கு பிறகு இலங்கைத் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் அதிகாரங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  நேற்று  வியாழக்கிழமை சந்தித்து வருத்தம் தெரிவித்தனர்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டை முன்னிட்டு கெழும்பு நகரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 
பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த குறித்த தடையுத்தரவு இன்றும் நாளையும் விதிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அரசின் ஏற்பாடுகளுக்கு பொதுநலவாய அமைப்பின் செயலகம் எதிர்ப்பு

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளும் அரச தலைவர்களை தனித்தனியாக அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளுக்கு பொதுநலவாய
மதிப்புக்குரிய ஆறுமுகம் அரியரத்தினம் அவர்களின்,70வது பிறந்த தினத்தை புங்குடுதீவு மடத்துவெளி சனசமுகநிலையம்-கனடா கிளை வாழ்த்திக் கௌரவித்தது.

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டேன் : முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு அழைப்புக் கிடைத்தாலும் செல்லமாட்டேன் என வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நேற்றுத் தெரிவித்தார்.

மெக்ரேயை மங்கள சந்தித்தமையானது டி.எஸ்.சேனநாயக்கவின் கன்னத்தில் அறைந்ததுக்கு சமம்: அரசாங்கம்

இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக பிரசாரம் செய்யும் கெலும் மெக்ரேயை ஐ.தே.கட்சி எம்.பி மங்கள சமரவீர அக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் சந்தித்தமையானது தேசப்பற்று கொண்ட டி.எஸ்.சேனநாயக்கவின் 'கன்னத்தில் அறையும்" செயலாகும்

செனல் - 4 ஊடகக் குழுவினர் பணத்தை செலுத்தவில்லையென வாடகை வாகன சாரதி பொலிஸில் முறைப்பாடு

செனல் - 4 ஊடகக் குழுவினர் தமது வாடகை பணத்தை செலுத்தாது சென்றுவிட்டதாக வாடகை வாகனத்தின் சாரதி எஸ். கே. சஞ்ஜீவ டி சில்வா கொம்பனித்தொரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
West Indies 182
India 157/2 (34.0 ov)
சூடுபிடிக்கும் பொதுநலவாய விவகாரம்: வட அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டம்
பொதுநலவாய மாநாட்டு விவகாரத்தில் சிறிலங்கா அனைத்துலக அரங்கில் விவாதப்பொருளாக மாறியுள்ள சமகாலத்தில், அதனையொட்டிய மக்கள் போராட்டங்கள் தாயகத்திலும் வெளியிலும் இடம்பெற்று வருகின்றன.

14 நவ., 2013

மும்பை டெஸ்ட்: ரசிகர்கள் ஆரவாரத்துடன் களமிறங்கிய சச்சின்!
மும்பையில்  இன்று நடந்த மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்தது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் களம் இறங்கி 38 ரன்களுடன் ஆட்டம் இழக்கமால் உள்ளார். 
 20 ஆண்டுகளில் இந்தியாவில் கிரிக்கெட், ஒரே ஒருவரால்தான் அதிகம் நேசிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒருவர்... சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். இவரின் கிரிக்கெட் சகாப்தம் இதோ முடிவுக்கு வருகிறது! 
தெற்காசிய இளைஞர் மெய்வல்லுநர் போட்டி:

பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம் இலங்கைக்கு இரண்டாம் இடம்

2015 இளைஞர் விளையாட்டு விழா இலங்கையில்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான இளைஞர் மெய்வல்லுநர் போட்டியில் 52 பதக்கங்களைக் குவித்து இந்தியா முதலிடம் பிடித்தது

டெண்டுல்கரின் 200 வது டெஸ்ட்;  மும்பையில் இன்று தொடக்கம்

இந்தியா- மே.தீவு மோதும் 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. கொல்கத்தா மைதானத்தில் தனது 199 வது டெஸ்ட்டை

ஆட்டோ 300 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: 3 பேர் பலி இருவர் காயம்
 

பண்டாரவளை, கும்பல்வெல அஸபுவ சந்தியில் இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் மூவர் உயிரிழந்துள் ளதோடு, இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித் தனர்.

 
பொதுநலவாய உச்சிமாநாட்டிற்கு தயார் நிலையிலுள்ள கொழும்பு ‘மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாகம்’ கலையரங்கின் தோற்றம். 
தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் ...

நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தமிழ்நாடு உதவ வேண்டும்

இலங்கைத் தமிழ் மக்கள் மீது தமிழ்நாட்டுக்கு உண்மையான அக்கறை இருப் பின் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் நேர்மையான நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு உதவ வேண்டும். அதைவிடுத்து இங்கு தனிநாடொன்றை உருவாக்க

செனல் 4 தயாரிப்பாளரை நாட்டுக்குள் அனுமதித்தது ஊடக சுதந்திரத்தின் உச்சகட்டம்

மனச்சாட்சிப்படி செயற்படின் உண்மைகளை உணர்வார்; விரோதமாக செயற்பட்டால் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு மறைக்க முயற்சி ; சர்வதேச மன்னிப்பு சபை
பொது சமூகத்தில் காணப்படுகின்ற அச்சுறுத்தல்களை நீக்கி அதனை முடிவுக்கு கொண்டு வர பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.
மீளக்குடியமர்த்த கோரி மூன்றாம் நாளாக தொடர்கிறது போராட்டம்
தம்மை மீளக்குடியமர்த்தக் கோரி வலி.வடக்கு மக்கள்  ஆரம்பித்துள்ள தொடர் உணவு விடுப்பு போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் ஆரம்பமாகியுள்ளது
நடிகர் குள்ளமணி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

சென்னை கே.கே.நகரில் உள்ள அண்ணாநகரில் வசித்து வருபவர் நடிகர் குள்ளமணி (வயது 61). இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் சுப்பிரமணி. நடிப்புத்துறையில்
 ரஜினியின் ‘கோச்சடையான்’ ஜனவரி 10ம் தேதி ரிலீஸ்
ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10 ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு இடைத்தேர்தல் : சேலம் மாவட்டத்தில் 63 லட்சம் பறிமுதல்
ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 4ந்தேதி நடக்கிறது. தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. தேர்தல் பிரச்சாரம்
சென்னை அருகே புயல் சின்னம் தீவிரம்
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது.
 பாஜகவுடன் பாமக கூட்டணி
 


வரும் நாடாளுமன்றத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிடுவோம் என கடந்த இரண்டு ஆண்டுகளாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் கூறிவந்தனர்.
போலீசாரின் அடக்குமுறை : இலங்கைக்கு எதிராககுமரியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் சந்தித்த கொடுமைகள்! 
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது. மீறி நடந்தால் காமன்வெல்த்கூட்டமைப்பில் இருந் து இந்தயா வெளியேற வேண்டும். இந்தியா வெளியேற மறுக்கும் பட்சத்தில் அனைத்து
இலங்கையின் மாநாட்டில் குறைந்த எண்ணிக்கை தலைவர்கள்!- கனடா மகிழ்ச்சி
இலங்கையின் பொதுநலவாய நாடுகள் அமர்வுக்கு ஆகக்குறைந்த தலைவர்களே பங்கேற்பது குறித்து கனடா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. 
சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக இன்று வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் - கலும் மக்ரேவிற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆவணப் படத்தினை வெளியிட்ட சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக வவுனியாவில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் இன்று மாலை 4.20 அளவில் சிறப்பு விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தார்.
இளவரசர் சார்ள்ஸ் அவரது மனைவி கமிலா பாக்கர் ஆகியோருடன் 56 அரச பிரதிநிதிகளும் இலங்கை வந்துள்ளனர் என எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
1973 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சகல பொதுநலவாய நாடுகளின் மாநாடும் பிரித்தானிய மகா ராணி இரண்டாவது எலிச பெத் தலைமையிலேயே நடைபெற்றன. அவர் கலந்து கொள்ளாத முதல் மாநாடு கொழும்பில் நடைபெறும் மாநாடாகும்.
மூன்று நாள் அரச முறை பயணமாக இலங்கை வந்துள்ள இளவரசர் சார்ள்ஸ், பிரித்தானிய மகா ராணிக்கு பதிலாக பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தங்கியிருக்கும் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கண்டி, நுவரெலியா ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
அத்துடன் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளும் சில தலைவர்களை சந்திக்க உள்ள இளவரசர் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.
அதேவேளை கொழும்பில் உள்ள தேசிய அரும்பொருட் காட்சியகம், பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியவற்றும் இளவரசர் தம்பதி விஜயம் செய்ய உள்ளது.
நெடுந்தீவின் விவசாய, சூழற் பாதிப்புக்கள் குறித்து அமைச்சர் பொ.ஐங்கரநேசன் களஆய்வு
நெடுந்தீவின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் இவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் அறிந்து கொள்ளும் நோக்குடன் மேற்படி துறைகளுக்குப் பொறுப்பான வடக்கு மாகாண அமைச்சர் பொ.ஜங்கரநேசன் இன்று நெடுந்தீவில் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்துக்
காமன்வெல்த் மாநாட்டுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசியின் வீடியொ செய்தியாளர் குழு, அங்கு படம்பிடிப்பதில் சிக்கல்களைச் சந்தித்துள்ளது.

மாநாட்டு வைபவத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை படம்பிடிக்க அவர்கள் அருகில் செல்ல முயல, இலங்கை அதிகாரிகள் எமது செய்தியாளர் குழுவை தடுத்துள்ளார்கள்.

எங்கள் ஊடக சுதந்திரத்தில் ஏன் தலையிடுகின்றீர்கள் என்று எமது செய்தியாளரான ஜேம்ஸ் றொபின்ஸ் திரும்பத் திரும்பக் கேட்டும் இலங்கை அதிகாரிகள் அவர்களை தடுத்துள்ளார்கள்.

இது குறித்த காணொளியை நேயர்கள் இங்கு காணலாம்.

இன்றைய மூன்றாம் நாள் போராட்டத்திலும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தாண்டி நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன், சித்தார்த்தன், ஆகியோரும் , பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செ.கஜேந்திரன் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ad

ad