புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2013

இடிந்தரையில் நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டம்! 5 பேர் பலி! போலீசார் விசாரணை
நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் உள்ள சுனாமி காலணியில் செவ்வாய்க்கிழமை மாலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டதாகவும், வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள்
இலங்கை தமிழர் படுகொலை பற்றி நம்பகமான விசாரணை: டேவிட் கேமரூன் கோரிக்கை
தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான, ஒளிவுமறைவற்ற, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டேவிட் கேமரூன் கூறியுள்ளார். 
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், லண்டன் பத்திரிகை

 யாழ்.பல்கலைக்கழக சூழல் இராணுவத்தால் முற்றுகை! பொலிஸ் குவித்து ரோந்து பணிகள் தீவிரம்!- கடும் பதற்றத்தில் மக்கள்
மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி பெருமளவான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு சோதனைகளுகம் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.
ஈபிடிபியின் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சீன் மரணம்
ஈபிடிபியின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் தானியேல் ரெக்சீன்(ரஜீப்) இன்று மாலை அகால மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாயில் இரத்தம் வெளியிட்ட நிலையில் அவர் மரணமானதாக ஈபிடிபி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தானியேலின் சடலம் தற்போது புங்குடுதீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
கவிஞர் ஜெயபாலன் நாடு கடத்தப்பட்டார்!
வவுனியா, மாங்குளம் பகுதியில் தனது தாயாரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்ட நோர்வே பிரஜையும் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் இன்று இரவு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் இன்று நாடுகடத்தப்பட்டார்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மாவீரர் நாள் அனுசரிக்க தடை: சின்னங்களை இடித்து அகற்றிய காவல்துறை
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க காவல் துறையினர் தடைவிதித்துள்ளனர்.செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் ஆண்டுதோறும் மாவீரர் நாளில் போரில் இறந்த
மாகாணசபை அதிகாரங்கள் ஜனாதிபதி போடும் பிச்சை அல்ல! அதிகாரம் ஆளுநருக்கா? முதல்வருக்கா?- சுரேஷ் எம்.பி.
மாகாணசபைக்கு வழங்கும் அதிகாரங்கள் ஜனாதிபதி தமிழ் மக்களைப் பாவம் பார்த்துப் போடும் பிச்சையல்ல. 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு என்ன அதிகாரங்கள் என்பதையும், அதிகாரம் ஆளுநருக்கா அல்லது முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்குமா
பிரபாகரனுக்கு இலங்கை பாராளுமன்றில் புகழாரம் சூட்டிய ஸ்ரீதரன் எம்.பி.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், பாராளுமன்றில் புகழாரம் சூட்டியுள்ளார்.
சுவிஸின் பாசல் கழகம் பலம் மிக்க செல்சீயை இரண்டாவது முறையாகவும் வென்று சாதனை 
இன்றைய  பரபரப்பான ஐரோப்பிய சாம்பியன் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தின் பல மில்லியன் பெறுமதி மிக்க பெரிய கழகமான செல்சீயை சுவிசின் எப் சி பாசல் கழகம் 1-0 என்ற ரீதியில் வென்று வரலாறு படைத்துள்ளது .முதல் விளையாடடிலும் செல்சீ மைதானத்தில் வைத்தே 2-1 என்ற ரீதியில் வென்றிருந்த பாசல் இன்றும் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது ஒரு சாதனையாகும் முதல் பா தி வேளையில் தனது அதி உச்ச திறமையை காடடிய பாசல் இரண்டாம் பாதி வேளையில் சற்று குறைந்து பின்னர் இறுதி நேர விடாமுயற்சியில் சலா  அடித்த அற்புதமான கோலின் முன்னே  சாதனை பந்துக் காப்பாளரான செக் கொட்டை விட்டார் . செல்சீ 2011இல் சாம்பியன் லீக் கிண்ணத்தை பேரன் மியூனிச்சை  எதிர்த்தாடி வென்றமை குறிப்பிடத் தக்கது 

நாளை தேசமெங்கிலும் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்படவுள்ளது மாவீரர் தினம்

26 நவ., 2013

யாழ். யுவதிகளுடன் கொழும்பில் ரூம் போடும் வங்கியாளர்!

வடமராட்சியில் நெல்லியடி வங்கிக் கிளை முகாமையாளரின் மன்மத லீலைகள் குறித்து கலாசாரம் பேணும் இளைஞர்கள் தளத்துக்கு முறையிட்டு உள்ளார்கள்.
விடுதலைப் பேரழகு 


ஈழவேட்கையின் தீரா ஊற்றாகி,
காலவேள்வியில் சூறாவளியாகி,


உச்சரிக்கும் போதெல்லாம்
உணர்வுகள் ஒளிகொள்ளும்
ஒற்றைச் சொல்லாகி 
எமையாளும் பெருந்தகையே!

வாழ்;த்துகின்றறோம்!

முன்னவனே!
மூபத்து ஆண்டுகளுக்குள்
மூத்தகுடி அவலத்தை
உலகறியச் செய்தவனே!

போற்றுகின்றோம்!

உணர்வுகளின்
அடிமைத் தோலுரித்து
ஐநூறு ஆண்டு கடந்து
விடுதலைப் பேரழகைத்
தரிசிக்கச் செய்த தலைவா!

நீயெம்
வரலாற்றுப் பேரெழில்.

உலகம் 
புரிந்து கொள்ள முடியாத புத்தகம்.

அற்புத மேய்ப்பனே!

இரு பகல்களின்
இடையிட்ட இரவு இது.

எம் தூரத்து நட்சத்திரங்களைக் கூட
கயவர் களவாடி விட்ட காலம். 

‘ஒளி தரவெனச் சூரியன் இனி வரான்’ 
என்பதாய்ச் சூழ்ச்சிகள் சூத்திரம்
கூறுகின்றன.

கூண்டுக்கிளிகளின்
தந்திரச் சாத்திரங்களில்
சிக்கிக் கிடக்கின்றன
சின்னச் சிந்தனைகள்.

உன்னருவைப் பச்சை குத்தி
பவ்வியமாய் வலம் வருகின்றன
சில பச்சோந்திகள்.

கார்த்திகை 27இல்
நெய்விளக்கேற்றி
நெஞ்சுருகிப் பின்
உன்னுரை கேட்ட
உலகம் உயிர்திருக்குமே.

கடந்த தடங்களை அறிவாக்கி
கடக்கும் கணங்களை நேர்த்தியாக்கி
வரும்காலத்தை நெறியாக்கி
வழிகாட்டிய 
உங்கள் உரைக்கு நிகர்
உலகிலேது?

வெற்றுவெளி கண்டு
இடையிட்டு எழுந்த
சில ஒலிகள்
பிரபாகரத்தின்
‘பிரதிகள்’ ஆக முயல்கின்றன.

உன் வெள்ளாட்டு மந்தைக்குள்
உருமாறி உலா வந்த
கருப்பாடுகள் சாயம் வெளிறிச்
சாத்தான்களாகித் திரிகின்றன. 

உயிரைச் சுற்றிக்கிடக்கும்
ஒற்றைச்சொல் மந்திரமே!

முள்ளிமுனை முற்றுப்புள்ளியல்லவென,
உன் பெயர் ஓதி உயிர்த்திருக்கும்
பிள்ளைகள் அறிவர்.

தோலுக்கு வரி பூசி போலிக்குப் புலியாகி
கூலிக்கு மாரடிக்கும் கூனர் கும்பல்
கூடி முயன்றாலும்,

உன் விழியேறிய தழல்
ஒருபோதும் அணையாது. 

பிறந்தோர் உருவிலும்
பிறப்போர் கருவிலும்
இணைந்தே இருக்கும். 

விடுதலைத் தீ.

ஸ்ருதிஹாசனை தாக்கிய நபர் ஜெயிலில் கதறல்; உண்மையை மறைத்த போலீஸ்

பிரபல நடிகருடன் இரவில் தூங்கிக்கொண்டிருந்த ஸ்ருதிஹாசனை விடிந்ததும் காலை 9,30 மணி அளவில் அசோக் சங்கர் என்ற நபர் ஸ்ருதிஹாசனை தாக்கினார். இவர் புரோடக்சன் கம்பெனியில் எடுபிடி

ஆருஷி வழக்கு: பெற்றோருக்கு ஆயுள் தண்டனை அளித்து காசியாபாத் கோர்ட் தீர்ப்பு
 
இளம்பெண் ஆருஷி மற்றும் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ் தல்வார்- நுபுல் தல்வார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு உண்மை புலப்பட்டுவிட்டது; நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது  : வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால், நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது” என்பதுதான் உலகமெல்லாம் ஜனநாயகத்தில் நீதித்துறை
கொலை, வழிப்பறி, பலாத்காரம்: 38 ரவுடிகளை கைது செய்து விசாரணை
 

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொலை, வழிப்பறி, பலாத்காரம் என கொடூரமான சம்பவங்கள் நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் பெருத்த


ஆளுநர் ரோசைய்யாவுடன் ஜெயலலிதா சந்திப்பு
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரோசைய்யாவை முதல் அமைச்சர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வறிக்கையை ஜெயலலிதா வழங்கினார். தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் ஜெயலலிதா விளக்கினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு! மூவரின் தூக்குத் தண்டனை ரத்தாக வேண்டும்!- வைகோ அறிக்கை
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது, மேலும் அநீதி நிகழாமல் மூவரின் தூக்குத் தண்டனை ரத்தாக வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரபாகரன் பிறந்த நாள்! யாழில் இராணுவம் குவிக்கப்பட்டு சோதனைகள் தீவிரம்!
யாழ். நகர் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் நேற்று மாலை முதல் பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
மன்னாரில் பறக்கவிடப்பட்ட புலிக்கொடியால் பெரும் பரபரப்பு: கடும் சோதனை நடவடிக்கையில் இராணுவத்தினர்
மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின், தேசிய கொடி ஏற்றப்பட்ட சம்பவத்தினைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமும் சோதனை நடவடிக்கைளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad