புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2013

முல்லைத்தீவில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், நேற்று மாலை 6.05 மணியளவில் ஈகைச்சுடரேற்றி மாவீர்களுக்கு வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் தங்கள் உறவுகளை இழந்த பொது மக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.


மறவர்கள் சிந்திய ரத்தம் எங்கள் கடல் நீரில் கலந்தே இருக்கிறது. அந்த நீரைப் பருகுகிற மீன்களைத் தான் எம் மக்கள் உண்கிறார்கள். அவர்களின் உடல்கள் எம் மண்ணுடன் கலந்து விதையாயிருக்கின்றன. அங்கே முளைக்கும் தாவரங்களைத்தான் நாம் உண்கிறோம். அவர்களின் எண்ண அலைகள் இன்றும் எம் பிரபஞ்சத்திலே நிறைந்தே இருக்கின்றன. அவற்றைத்தான் எம் மக்களின் எண்ணங்கள் ஈர்க்கின்றன. இப்படிக் காற்றிலும் கடலிலும் விண்ணிலும் நிறைந்து, உணவிலும் நீரிலும் எண்ணத்திலும் எம்மக்களோடும் எம் மண்ணோடும் இரண்டறக்கலந்த மாவீரர்களை எம்மிடம் இருந்து எப்படிப் பிரிப்பது?

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது, உலகின் அடிப்படை மனித நாகரீகம். அந்த பொது நாகரீகத்தையே எம் மக்கள் இன்று நிலை நிறுத்தியிருக்கிறார்கள். இனியும் நிலை நிறுத்துவார்கள் என்றார்.

து.ரவிகரன்,
வடமாகாணசபை உறுப்பினர்
முல்லைத்தீவு மாவட்டம்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறீஸ்கந்தராசா ஸ்ரீரஞ்சனின் மீசாலையிலுள்ள இல்லத்தின் மீது நேற்று (27.11.13) அதிகாலை 1.30 அளவில் ஆறு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதந்தாங்கிய 12க்கும் மேற்பட்ட நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இது போன்ற நடவடிக்கைகள் மூலம் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும். தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் இலங்கை அரசும் அதன் படைகளும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுமானால் அது பாரிய பின் விழைவுகளை தோற்றுவிக்கும்.

பிரச்சாரப் பிரிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
28/11/2013
மதுரை ஆதீனம் மீது 750 கோடி மோசடி புகார்
பல ரூபாய் மோசடி செய்ததாக மதுரை ஆதீனத்தின் மீது இந்து மக்கள் கட்சி நிர்வாகி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார்.   இன்று காலை 11 மணி அளவில் மதுரை போலீஸ் கமிசனர் சஞ்சய் மாத்தூரை
ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை ஆனது எப்படி?
சங்கரராமன் கொலை வழக்கில், அவரது குடும்பத்தினரின் பிறழ் சாட்சியமே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையானதற்கு காரணம் என்று அரசு தரப்பு வழக்குரைஞர் தேவதாஸ் கூறியுள்ளார்.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை : சங்கரராமன் மகன் ஆனந்த் அதிர்ச்சி

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 23 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் புதுச்சேரி அமர்வு நீதிமன்றம் இன்று இந்த மிக மிக பரப்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்
பிரான்ஸ் மக்கள் கடலலையென திரண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்
போரில் இரு தரப்பினராவும் சாவடைந்த மக்களுக்காகவும் மாவீரர்கனளுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் நாள் ஆரம்பமாகியது.
லண்டனில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் [ பி.பி.சி ]
லண்டனில் இலங்கைப் போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூர்வதற்கான ''மாவீரர் தின நிகழ்வுகள்'' எக்ஸ்சல் மண்டபத்தில் நடந்தது.
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் றெக்சீன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்! பிரேத பரிசோதனையில் அம்பலம்
நெடுந்தீவு பிரதேச சபை தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்சீன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவரின் சடலத்தை பிரதே பரிசோதனைக்கு உட்படுத்திய போது சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.
பிரதே பரிசோதனை சட்டவைத்திய அதிகாரியான சின்னையா சிவரூபன் முன்னிலையில் நடத்தப்பட்டது.
சுவிட்சலாந்து நாட்டின் எழுச்சியுடன் பல்லாயிரம் மக்கள் புடை சூழ மாவீரர் தினம்
சுவிட்சலாந்து நாட்டில் பல்லாயிரம் மக்கள் புடை சூழ மாவீரர் தினம் எழுச்சியுடன் ஆரம்பமானது.அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் களைப் பெறுப்பாளர் ரகுபதி ஏற்றி வைத்தார்.

27 நவ., 2013

மாவீரர் நாளினை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம் உதயன் பணிமனை வளாகத்தில் நடைபெற்ற மரம் நடுகை நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், வடமாகாண சபை உறுப்பினர் ஆனல்ட், வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் மற்றும் உதயன் நிறுவனம் சார்பில் எஸ்.அனுராஜ் ஆகியோர் மரங்களை நாட்டி வைத்தனர்.

நன்றி : உதயன்
உரிமைகளுக்காக உயிர் நீத்த மக்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்திய யோகேஸ்வரன் எம்.பி
போரின் போது உரிமைகளுக்காக போராடிய தமிழர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அஞ்சலி செலுத்தியது.நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
விதையாய் வீழ்ந்த நம் வீரர்களின் நினைவோடு விடுதலைக்காக மூன்று பெரும் பரிமாணங்களில் செயலாற்ற உறுதி கொள்வோம்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
விடுதலை, சுதந்திரம் என்ற உலகப் பெருவிழுமியங்களை தம் இதயத்தில் சுமந்து நின்று களமாடிக் காவியமாகி விட்ட நம் கார்த்திகைப்பூக்களின் நினைவு நாளில் விடுதலையினை வென்றெடுக்க மூன்று பெரும் பரிமாணங்களில் நாம் அனைவரும் செயலாற்ற உறுதி கொள்வோம்
தடைகளை தாண்டி மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை நாட்டினார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
யாழ்.குடாநாட்டில் தமிழீழ மாவீரர் தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை இன்றும் நாட்டியுள்ளதுடன், இன்றைய நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டு மரக்கன்று நாட்டியுள்ளார்.
மருதானையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!- மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது
கொழும்பு, மருதானை, சங்கராஜ மாவத்தையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை பாணந்துறை வலான மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் சுற்றிவளைத்தனர்.
வவுனியா அட்டமஸ்கட மதகுருவுக்கு எதிராக 12 வயது சிறுவன் ஒருவன் இன்றும்(26) நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Vasamalar2
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்றதாக சிறுவர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து அதன் முகாமையாளரான விகாராதிபதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ். யுவதிகளுடன் கொழும்பில் ரூம் போடும் வங்கியாளர்!

வடமரட்சியில் நெல்லியடி வங்கிக் கிளை முகாமையாளரின் மன்மத லீலைகள் குறித்து கலாசாரம் பேணும் இளைஞர்கள் தளத்துக்கு முறையிட்டு உள்ளார்கள்.
விவசாய கடன் போன்ற கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றமைக்கு பிரதி உபகாரமாக பயனாளி யுவதிகளிடம் இருந்து இவர் செக்ஸ் இலஞ்சம் பெற்று வருகின்றார் என்பதற்கு புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றுடனான ஆதாரங்களும் எமக்குக் கிடைக்கப் பெற்று உள்ளன.

வடமராட்சியில் வெகு சிறப்பாக புலிகளின் தலைவரின் பிறந்தநாள்! படையினர் சீற்றத்தில்

ltte_leader02தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனது 59வது பிறந்த தினம் படைத்தரப்பினது கெடுபிடி முற்றுகைகளை தாண்டி இன்று அவரது சொந்த மண்ணான வடமராட்சியினில் மகிழ்வுடன்
 நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சடலமாக மீட்பு
news
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்சிசன் ( வயது 47) அவரது வீட்டிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இடிந்தரையில் நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டம்! 5 பேர் பலி! போலீசார் விசாரணை
நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் உள்ள சுனாமி காலணியில் செவ்வாய்க்கிழமை மாலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டதாகவும், வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள்
இலங்கை தமிழர் படுகொலை பற்றி நம்பகமான விசாரணை: டேவிட் கேமரூன் கோரிக்கை
தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான, ஒளிவுமறைவற்ற, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டேவிட் கேமரூன் கூறியுள்ளார். 
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், லண்டன் பத்திரிகை

 யாழ்.பல்கலைக்கழக சூழல் இராணுவத்தால் முற்றுகை! பொலிஸ் குவித்து ரோந்து பணிகள் தீவிரம்!- கடும் பதற்றத்தில் மக்கள்
மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி பெருமளவான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு சோதனைகளுகம் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.
ஈபிடிபியின் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சீன் மரணம்
ஈபிடிபியின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் தானியேல் ரெக்சீன்(ரஜீப்) இன்று மாலை அகால மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாயில் இரத்தம் வெளியிட்ட நிலையில் அவர் மரணமானதாக ஈபிடிபி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தானியேலின் சடலம் தற்போது புங்குடுதீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
கவிஞர் ஜெயபாலன் நாடு கடத்தப்பட்டார்!
வவுனியா, மாங்குளம் பகுதியில் தனது தாயாரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்ட நோர்வே பிரஜையும் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் இன்று இரவு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் இன்று நாடுகடத்தப்பட்டார்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மாவீரர் நாள் அனுசரிக்க தடை: சின்னங்களை இடித்து அகற்றிய காவல்துறை
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க காவல் துறையினர் தடைவிதித்துள்ளனர்.செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் ஆண்டுதோறும் மாவீரர் நாளில் போரில் இறந்த
மாகாணசபை அதிகாரங்கள் ஜனாதிபதி போடும் பிச்சை அல்ல! அதிகாரம் ஆளுநருக்கா? முதல்வருக்கா?- சுரேஷ் எம்.பி.
மாகாணசபைக்கு வழங்கும் அதிகாரங்கள் ஜனாதிபதி தமிழ் மக்களைப் பாவம் பார்த்துப் போடும் பிச்சையல்ல. 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு என்ன அதிகாரங்கள் என்பதையும், அதிகாரம் ஆளுநருக்கா அல்லது முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்குமா
பிரபாகரனுக்கு இலங்கை பாராளுமன்றில் புகழாரம் சூட்டிய ஸ்ரீதரன் எம்.பி.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், பாராளுமன்றில் புகழாரம் சூட்டியுள்ளார்.
சுவிஸின் பாசல் கழகம் பலம் மிக்க செல்சீயை இரண்டாவது முறையாகவும் வென்று சாதனை 
இன்றைய  பரபரப்பான ஐரோப்பிய சாம்பியன் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தின் பல மில்லியன் பெறுமதி மிக்க பெரிய கழகமான செல்சீயை சுவிசின் எப் சி பாசல் கழகம் 1-0 என்ற ரீதியில் வென்று வரலாறு படைத்துள்ளது .முதல் விளையாடடிலும் செல்சீ மைதானத்தில் வைத்தே 2-1 என்ற ரீதியில் வென்றிருந்த பாசல் இன்றும் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது ஒரு சாதனையாகும் முதல் பா தி வேளையில் தனது அதி உச்ச திறமையை காடடிய பாசல் இரண்டாம் பாதி வேளையில் சற்று குறைந்து பின்னர் இறுதி நேர விடாமுயற்சியில் சலா  அடித்த அற்புதமான கோலின் முன்னே  சாதனை பந்துக் காப்பாளரான செக் கொட்டை விட்டார் . செல்சீ 2011இல் சாம்பியன் லீக் கிண்ணத்தை பேரன் மியூனிச்சை  எதிர்த்தாடி வென்றமை குறிப்பிடத் தக்கது 

நாளை தேசமெங்கிலும் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்படவுள்ளது மாவீரர் தினம்

26 நவ., 2013

யாழ். யுவதிகளுடன் கொழும்பில் ரூம் போடும் வங்கியாளர்!

வடமராட்சியில் நெல்லியடி வங்கிக் கிளை முகாமையாளரின் மன்மத லீலைகள் குறித்து கலாசாரம் பேணும் இளைஞர்கள் தளத்துக்கு முறையிட்டு உள்ளார்கள்.
விடுதலைப் பேரழகு 


ஈழவேட்கையின் தீரா ஊற்றாகி,
காலவேள்வியில் சூறாவளியாகி,


உச்சரிக்கும் போதெல்லாம்
உணர்வுகள் ஒளிகொள்ளும்
ஒற்றைச் சொல்லாகி 
எமையாளும் பெருந்தகையே!

வாழ்;த்துகின்றறோம்!

முன்னவனே!
மூபத்து ஆண்டுகளுக்குள்
மூத்தகுடி அவலத்தை
உலகறியச் செய்தவனே!

போற்றுகின்றோம்!

உணர்வுகளின்
அடிமைத் தோலுரித்து
ஐநூறு ஆண்டு கடந்து
விடுதலைப் பேரழகைத்
தரிசிக்கச் செய்த தலைவா!

நீயெம்
வரலாற்றுப் பேரெழில்.

உலகம் 
புரிந்து கொள்ள முடியாத புத்தகம்.

அற்புத மேய்ப்பனே!

இரு பகல்களின்
இடையிட்ட இரவு இது.

எம் தூரத்து நட்சத்திரங்களைக் கூட
கயவர் களவாடி விட்ட காலம். 

‘ஒளி தரவெனச் சூரியன் இனி வரான்’ 
என்பதாய்ச் சூழ்ச்சிகள் சூத்திரம்
கூறுகின்றன.

கூண்டுக்கிளிகளின்
தந்திரச் சாத்திரங்களில்
சிக்கிக் கிடக்கின்றன
சின்னச் சிந்தனைகள்.

உன்னருவைப் பச்சை குத்தி
பவ்வியமாய் வலம் வருகின்றன
சில பச்சோந்திகள்.

கார்த்திகை 27இல்
நெய்விளக்கேற்றி
நெஞ்சுருகிப் பின்
உன்னுரை கேட்ட
உலகம் உயிர்திருக்குமே.

கடந்த தடங்களை அறிவாக்கி
கடக்கும் கணங்களை நேர்த்தியாக்கி
வரும்காலத்தை நெறியாக்கி
வழிகாட்டிய 
உங்கள் உரைக்கு நிகர்
உலகிலேது?

வெற்றுவெளி கண்டு
இடையிட்டு எழுந்த
சில ஒலிகள்
பிரபாகரத்தின்
‘பிரதிகள்’ ஆக முயல்கின்றன.

உன் வெள்ளாட்டு மந்தைக்குள்
உருமாறி உலா வந்த
கருப்பாடுகள் சாயம் வெளிறிச்
சாத்தான்களாகித் திரிகின்றன. 

உயிரைச் சுற்றிக்கிடக்கும்
ஒற்றைச்சொல் மந்திரமே!

முள்ளிமுனை முற்றுப்புள்ளியல்லவென,
உன் பெயர் ஓதி உயிர்த்திருக்கும்
பிள்ளைகள் அறிவர்.

தோலுக்கு வரி பூசி போலிக்குப் புலியாகி
கூலிக்கு மாரடிக்கும் கூனர் கும்பல்
கூடி முயன்றாலும்,

உன் விழியேறிய தழல்
ஒருபோதும் அணையாது. 

பிறந்தோர் உருவிலும்
பிறப்போர் கருவிலும்
இணைந்தே இருக்கும். 

விடுதலைத் தீ.

ஸ்ருதிஹாசனை தாக்கிய நபர் ஜெயிலில் கதறல்; உண்மையை மறைத்த போலீஸ்

பிரபல நடிகருடன் இரவில் தூங்கிக்கொண்டிருந்த ஸ்ருதிஹாசனை விடிந்ததும் காலை 9,30 மணி அளவில் அசோக் சங்கர் என்ற நபர் ஸ்ருதிஹாசனை தாக்கினார். இவர் புரோடக்சன் கம்பெனியில் எடுபிடி

ஆருஷி வழக்கு: பெற்றோருக்கு ஆயுள் தண்டனை அளித்து காசியாபாத் கோர்ட் தீர்ப்பு
 
இளம்பெண் ஆருஷி மற்றும் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ் தல்வார்- நுபுல் தல்வார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு உண்மை புலப்பட்டுவிட்டது; நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது  : வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால், நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது” என்பதுதான் உலகமெல்லாம் ஜனநாயகத்தில் நீதித்துறை
கொலை, வழிப்பறி, பலாத்காரம்: 38 ரவுடிகளை கைது செய்து விசாரணை
 

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொலை, வழிப்பறி, பலாத்காரம் என கொடூரமான சம்பவங்கள் நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் பெருத்த


ஆளுநர் ரோசைய்யாவுடன் ஜெயலலிதா சந்திப்பு
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரோசைய்யாவை முதல் அமைச்சர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வறிக்கையை ஜெயலலிதா வழங்கினார். தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் ஜெயலலிதா விளக்கினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு! மூவரின் தூக்குத் தண்டனை ரத்தாக வேண்டும்!- வைகோ அறிக்கை
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது, மேலும் அநீதி நிகழாமல் மூவரின் தூக்குத் தண்டனை ரத்தாக வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரபாகரன் பிறந்த நாள்! யாழில் இராணுவம் குவிக்கப்பட்டு சோதனைகள் தீவிரம்!
யாழ். நகர் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் நேற்று மாலை முதல் பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
மன்னாரில் பறக்கவிடப்பட்ட புலிக்கொடியால் பெரும் பரபரப்பு: கடும் சோதனை நடவடிக்கையில் இராணுவத்தினர்
மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின், தேசிய கொடி ஏற்றப்பட்ட சம்பவத்தினைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமும் சோதனை நடவடிக்கைளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு இராணுவ ஆளுநருக்கும் மாகாண சபைக்கும் முறுகல் வெடித்தது! ஆளுநரின் சர்வாதிகாரம் என குற்றச்சாட்ட
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணங்கிச் செயற்படாமல் மாகாண சபை விடயங்களில் இராணுவ ஆளுநர் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு வருவதால் அவருக்கும் மாகாண சபைக்கும் இடையேயான முறுகல் நிலை நேற்று வெளிப்படையாக வெடித்தது.
மாவீரர்களுக்கு கரவெட்டி பிரதேச சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது! அஞ்சலி செலுத்திய விஜேநேசன் கைது
மாவீரர்களுக்கான அஞ்சலி கரவெட்டி பிரதேச சபையில் இன்று திங்கட்கிழமை செலுத்தப்பட்டுள்ளது.அனைத்துலக பெண்கள் கொடுமை தினமான இன்று அதனை அனுஷ்டிப்பதற்கான நிகழ்வு பிரதேச சபை தவிசாளர் சு.வியாகேசு தலைமையில் கரவெட்டி பிரதேச சபை

யாழில் இருந்து வேலணைப்பாலம் ஊடாக பயணம் செய்வதில் சிரமம்!

புங்குடுதீவு வேலணைப் பாலம் கடந்த பல வருட காலமாக புனரமைக்கப்படாமலுள்ளதால் இந்தப் பாலத்தினூடாகப் போக்குவரத்துச் செய்கின்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். (படங்கள்)

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சென்னை மாணவர்கள்!



 
 தமிழீழ தேசிய் தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்த நாளினை தமிழர்கள் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் விடுதியில் மாணவர்கள் கேக் வெட்டி மாணவர்களுடன் பரிமாறி கொண்டாடியுள்ளார்கள்.
சிறிலங்கா குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை – குத்துக்கரணம் அடித்தது சீனா

சிறிலங்கா தொடர்பான தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது என்று சீனா கூறியுள்ளது.
அண்மையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளிவகார அமைச்சின் பேச்சாளர், மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், சிறிலங்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 
இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை தடுக்க முடியாது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் மக்கள் மாவீரர் நாளை நினைவு கூருவதை தடுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாவீரர் நாளை நினைவு கூருவது சட்டவிரோதமானது என்று சிறிலங்கா அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து கருத்து
மாவீரர்களை நினைவு கூருவதற்கு சிறிலங்கா இராணுவம் தடை

விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு சிறிலங்கா இராணுவம் தடைவிதித்துள்ளது. நாளை மாவீரர் நாள் நினைவு கூரப்படவுள்ள நிலையில், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி தாயார் அற்புதம்மாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனு!
பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
<iframe width="560" height="315" src="//www.youtube.com/embed/kfO3HhWSlZU" frameborder="0" allowfullscreen></iframe>
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 59ஆவது பிறந்த நாள் நிகழ்வுகளில் தாயக, புலம்பெயர் மற்றும் தமிழக மக்கள் சிறப்புறக்கொண்டாடி வருகின்றனர்.
கேக் வெட்டி, சிற்றுண்டிகளைப் பரிமாறியும், பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்தும் தலைவர் பிரபாகரன் அவர்களுக்காக வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வுகள் கடந்த நள்ளிரவு 12.00 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் கேக் வெட்டி, சிற்றுண்டிகளைப் பரிமாறி தேசியத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
thalaivar
1481128_550416425041915_1182745309_n

25 நவ., 2013

மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முத்தையாக முரளிதரன் தெரிவாவாரா ?அவரது சகோதரர் ஒருவர் சிறைச் செல்வதை தடுப்பதற்காவே முரளி அரசுடன் கைகோர்க்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
எதிர்வரும் மேல் மாகாண சபைத்தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைக்கும் நோக்கத்தில் ஜனாதிபதி தேடிய பிரபலமான நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் : மதுரை ஆதீனத்தின் உதவியாளர் வைஷ்ணவி கமிஷனரிடம் புகார்
மதுரை ஆதீனத்தின் தனி உதவியாளர் வைஷ்ணவி. கடந்த ஓராண்டுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடபெற்றது.  திருமணத்திற்கும் பிறகும் உதவியாளராக நீடித்து வருகிறார்.
சென்னையில் 8வது மாடியில் இருந்து குதித்து பெண் மரணம்சென்னையில் பரபரப்பான மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கட்டிடத்தில் 8வது மாடியில் இருந்து குதித்த பெண் ஊழியர் ராஜலட்சுமி பலியானார்.     பட்டதாரியான இவர் அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர்.  உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 15 தமிழக  மீனவர்கள் விடுதலை
புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி இலங்கை கடற்படை யினால் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட 15 மீனவரையும் விடுதலை செய்தது ஊர்க்காவல் நீதிமன்றம்.இதையடுத்து இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்து  மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
சுவிசின் நெடுஞ்சாலை கட்டணம் உயராது -தேர்தலில் வாக்களிப்பு 

இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் சுவிசின் அதி வேக நெடுஞ்சாலை கட்டணம் வருடத்துக்கு 40 இல் இருந்து 100 பிராங்காக உயர்த்தும் சட்டத்துக்கு மக்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.ஐரோப்பாவிலும் சுவிசிலும் ஜெர்மனியிலும் நெடுஞ்சாலைகளுக்கு தூரங்களுக்கான கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இருந்தாலும் சுவிசில் வருடம் ஒன்றுக்கு 40 பிரான்க் அறவிடப்பட்டு வருகிறது 

சுவிட்சர்லாந்தில் சர்வதேச மன்னிப்புச்சபை காண்பித்து வரும் சனல் 4 ஆவணப்படம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதி கோரி, சர்வதேச மன்னிப்புச் சபை உலகளாவிய ரீதியில் நடாத்திவரும் தொடர் பரப்புரையின் ஒரு அங்கமாக சுவிஸ் நாட்டில் சனல்- 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட
போர்முலா ஒன்று கார் பந்தய சாம்பியனாக இந்த அவருடம் விட்டல் தெரிவாகி உள்ளார் .இந்த வருடம் நடை பெற்ற இருபது சுற்றுக்களில் இவர் பதின்மூன்று சுற்றுக்களில் முதலாம் இடத்து உள்ளார் . இறுதியாக நடந்த ஒன்பது போட்டிளில் தொடர்ந்து முதலாம் இடத்தை  அடைந்ததனால் 2004இல் சூமாக்கர் சாதித்த சாதனையை எட்டி பிடித்துள்ளார் இவரது வாகனமான ரெட் புல் உம வாகன சம்பியனானது .இன்றைய பிரேசில் சாவோ பாலோ சுற்றி வென்றுள்ளார் .
டேவிஸ் கோப்பை: செக் குடியரசு அணி மீண்டும் சாம்பியன்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் செக் குடி யரசு அணி 3-2 என்ற புள் ளிக் கணக்கில் செர்பி யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தது.
புதிய உலக சாம்பியன் கார்ல்ஸென்
சென்னை, நவ.23-  அய்ந்து முறை உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை அவரது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, புதிய உலக சாம்பியனாகியுள்ளார். நார்வேயின் கார்ல் ஸென்.
பெய்ரூட், நவ. 24- சிரியாவின் மிகப்பெரிய நகரமான அலெப்போ நகருக்கு அருகில் போராளிகள் வசமுள்ள இரண்டு மாவட்டங்களில் அதிபர் ஆசாத்தின் போர் விமானங்கள் நேற்று குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் மூன்று முறையாக நடத்தப்பட்டன. இதில் அல் பாப் பகுதிகளில் ஜெட் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர் என்று பிரிட்டன் மனித உரிமை அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ad

ad