புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2013

திருப்பதி கோவிலில் அஜீத் மொட்டை போட்டார் ( படம் )
 

அஜீத் நடித்த வீரம் படம் அடுத்த மாதம் 10–ந்தேதி பொங்கலையொட்டி ரிலீசாகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்றது. 
ஜெயலலிதா உட்பட யார் பிரதமராக வந்தாலும் வரவேற்போம்: திருச்சியில் தேவகவுடா பேட்டி
ஜெயலலிதா உட்பட யார் பிரதமராக வந்தாலும் வரவேற்போம் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
பிறந்த 4 நாளில் பெண் குழந்தை கடலில் வீச்சு: சென்னையில் கொடூரம்
சென்னை காசிமேடு பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலையில் சில மீனவர்கள் படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடலில் ஒரு பச்சிளம் குழந்தையின் பிணம் மிதப்பதை கண்டனர்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பசில்! இன்ப அதிர்ச்சியில் நாமல்
மகிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷ புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது அமெரிக்காவின்
Houston மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.
வரவு-செலவுத் திட்டங்கள் தோல்வி: 8 உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் பதவி இழப்பு
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைந்ததன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் 8 உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் பதவிகளை இழந்துள்ளனர்.
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் அமெரிக்கா 
ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் ராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளை புறக்கணித்து விட்டு, தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், இலங்கை எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்க மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.
கசினோவில் 150 மில்லியன் முதலீடு செய்துள்ள அமைச்சர் வீரவன்சவின் மனைவி
தேசப்பற்றாளர் என தன்னை அடையாளப்படுத்தி அரசியல் நடத்திவரும் தேசிய சுதந்திர முன்னிணயின் தலைவரும், வீடமைப்புத்துறை அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச, 150 மில்லியன் ரூபா பணத்தை கசினோ சூதாட்ட மையத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள்

  • தீவகப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்ட கஜதீபன்
  • இன்று 13.12.2013 வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மண்டைதீவு சந்திப்பகுதியில் கடற்படையினரால் சுமார் அரை மணிநேரம்
 இனி வரும்காலங்களில் பல சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ளப் போகின்றோம்; வடக்கு முதல்வர்
சட்ட திட்டங்களைக் குறைகூறிக்கொண்டு பதவிகளைப் பாதுகாக்க நாங்கள் ஆட்சிப்பீடம் வரவில்லை வடமாகாண மக்கள் என்ற முறையில் எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவே வந்துள்ளோம்.
கணவனைக் கொலை செய்து மலசலக் குளியில் போட்ட மனைவிக்கு மரண தண்டனை!
கணவனைத் தாக்கி கத்தியால் குத்திக் கொன்று அவரது உடலை மலசலக் குளியில் வீசிய மனைவி மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆணொருவருக்கும் கேகாலை மேல்நீதிமன்ற
 வடக்கில் சகல நடவடிக்கைகளிலிருந்தும் இராணுவம் விலகிக்கொள்ள வேண்டும்; சலோகா பெயானி
சிறிலங்காவின் வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் மிகவும் ஆபத்தான நிலையிலேயே வாழ்ந்து வருவதாக இடம்பெயர்ந்தோர் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான

டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கெஜ்ரிவாலின் கட்சிக்கு துணைநிலை ஆளுநர் அழைப்பு
70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லி மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 36 எம்எல்ஏக்களின் பலம் வேண்டும். பாஜக கூட்டணிக்கு 32 இடங்கள். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்கள். காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள், சுயேட்சைக்கு 2 இடங்கள் கிடைத்தன. 
சட்டமன்றத்தில் மிகப் பெரும் கட்சி என்ற நிலையில் இருக்கும் பாஜகவை ஆட்சியமைக்க அல்லது நிலவும் தேக்க நிலையை மாற்ற பாஜக முயலவேண்டும் என்று கூறி துணை நிலை ஆளுநர்
வங்காளதேச போர்க்குற்றவாளி அப்துல் காதர் மொல்லா தூக்கில் போடப்பட்டார்
பங்களாதேஷ் பாகிஸ்தானிடமிருந்து 1971 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற நடத்திய போரில், மானுட குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்ட, இஸ்லாமிய எதிர்க்கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவரான அப்துல் காதர் முல்லா சற்று முன்னர் தூக்கிலிடப்பட்டார். இவர் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமையே தூக்கிலிடப்படவிருந்தார். ஆனால் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இவருக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனை சரியானதே என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த பின்னணியில் இவர் சற்றுமுன்னர் தூக்கிலிடப்பட்டதாக, வங்கதேசத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை அவர் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னர், அவர் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் விசாரணையை நடத்த உதவ, அவரது தூக்கு தண்டனை பரபரப்பான வகையில் நிறுத்திவைக்கப்பட்டது. முல்லாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையின் மீது நீதிமன்ற மேல் முறையீட்டை செய்ய அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமல் அவர் தூக்கிலிடப்பட்டால், அது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என்று மனித உரிமைக் குழுக்கள் எச்சரித்திருந்தன. போர்க்குற்றங்களுக்காக ஒரு அரசியல் தலைவர் தூக்கில் போடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

12 டிச., 2013

வன்னியில் பால் கறக்கும் படையினர் கொழும்பு நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்கின்றனர்
"நிலங்களை மட்டுமல்லாது மாடுகளையும் அபகரித்து வைத்திருக்கின்றனர்": ஐங்கரநேசன்
வன்னியில் பால் கறக்கும் படையினர் கொழும்பு நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்கின்றனர்:-
வன்னியில் நிலங்களை மட்டுமல்லாது மாடுகளையும் அபகரித்து வைத்திருக்கும்
மஹிந்தவின் அழைப்பு! நானும் பிள்ளையும் வேண்டாமா? அரசியலுக்கு போகலாம் என்கிறார் மனைவி! - குழப்பத்தில் முரளிதரன்!
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதனை அரசியலுக்குள் இழுப்பதற்கு மகிந்த ராஜபக்‌ஷ, அண்மைக் காலமாக பலத்த பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காதலியின் தாயிடம் அடிவாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்: யாழில் சம்பவம்
யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காதல் விவகாரம் காரணமாக அடிவாங்கிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டனி வெளியேற்றப்பட்டுவிட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளும் கட்சி சாரா உறுப்பினர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்! இந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
ஓரினச்சேர்க்கையாளர்கள் சம்மதத்துடன் அந்தரங்கத்தில் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால் குற்றம் அல்ல என்று, டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2009–ம் ஆண்டு பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து
புங்குடுதீவு மடத்துவெளி சனசமூக நிலையத்தின் முன் பள்ளி  சிறப்பான முறையில் புனரமைப்பு செய்யப் பட்டு திறப்பு விழா செய்யப்பட்டது .இந்த  அரிய பணிகளை அ.சண்முகநாதன் என்னும் கண்ணாடி அவர்கள் முன்னின்று சீராக கவனித்து செய்து முடித்துள்ளார் . திறப்பு விழாவில் பாலசுப்பிரமணிய ஆலயக் குருக்கள்,ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும் சமூக சேவகருமான சிவலிங்கம் .ஊடகவியலாளர் சதீபன் உட்பட ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர் (படங்கள் )


ஈழத்தமிழர் எல்லாம் பெருமை அடையும் வண்ணம். 2014 இம் முறைசீனாவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கனடாவை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில். கனடா டொரோன்டோவில் வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம் கரவெட்டியை சொந்த இடமாக கொண்ட ஆன்ட்ரியா ஜெரோம் வரதராஜா என்ற முதல் தமிழ் இளம்பெண் TAEKWONDO எனும் விளையாடில் கனிஷட்ட பிரிவில் கலந்து கொள்ள இருக்கிறார். தமிழ்ர் என்ற ரீதீயில் பெருமை அடைவதுடன் அவர் வெற்றி பெற உலகத்தமிழ்ர் சார்பில் வாழ்த்துகின்றோம்……
சாத்வீகப் போர் மீண்டும் வெடிக்கும்; யசூசி அகாஷியிடம் சம்பந்தன் தெரிவிப்பு
"தமிழர் தாயகப் பகுதிகளில் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்கு முறைகளை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நிறுத்தாவிடின் தமிழ் மக்களை அணிதிரட்டி மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். இதை எவரா லும் தடுத்துநிறுத்த முடியாது." 
 
இவ்வாறு இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷியிடம் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்.
 
இலங்கையில் போரின் பின்னரான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராய்வதற்காகக் கொழும்பு வந்துள்ள இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமி
இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது; வைகோ 
சிறிலங்காவில்  இடம்பெற்றது இனப் படுகொலைதான் என ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. எனவே, இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது என ம.தி.முக. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

11 டிச., 2013

டிசம்பர் மாத ராசிபலன்கள்

மேஷம்


இந்த மாதம் கோட்சார கிரக அமைப்பு உங்களுக்கு மிகமிக சாதகமாக இருப்பதால், உங்களுடைய எண்ணங்களும் திட்டங்களும் நீங்கள் விரும்பியபடியே நிறைவேறும். சில நேரங்களில் சில தடைகளும் குறுக்கீடுகளும் தென்பட்டாலும், அவற்றையெல்லாம் கடந்து உங்கள் வெற்றிப்பயணம் தொடரும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்களும்



            ம்பள விஷயத்தில் "2சி' என்பதில் பட்டம் நடிகை ஸ்ட்ராங்காக நிற்பதை கடந்த இதழில் சொல்லியிருந்தோம். "வம்பு'க்காக அவரின் டாடி... போன்போட்டு பட்டத்திடம் பேசியபோதும் அதே பதில்தான் கிடைத்ததாம்! அதனால் "வேறு ஹீரோயின் வச்சுக்கலாம்' என டாடி சொல்ல... டைரக்டர் பாண்டியும் ஓ.கே. மனநிலையில் இருக்க... "வம்பு' மட்டும் "பட்டம் தான் வேணும்' என பிடிவாதமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது!

லயனுக்கு சீயான் என்றால் ஆகாது! அது சொந்த விவகாரம். இந்த கதைக்குத் தேவையில்லாத விவகாரமும்கூட!




"இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலை யும்' என்கிற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் பேசிய ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும் கடலூர் எம்.பி.யுமான கே.எஸ். அழகிரி, ஈழத்தில் நடந்த யுத்தத்தை நிறுத்த சிதம்பரம் கடும் முயற்சி எடுத்ததாகப் பதிவு செய்தார். இந்த நிலையில், கே.எஸ்.அழகிரி யை தொடர்புகொண்டு சில கேள்விகளைக் கேட்டோம்.
தமிழ்த்தேசிய உறவுகளே! ஊடகவியலாளர்களை அவமதிக்கும் வடக்கு மாகாண சபை? - சுகபோகங்கள்அம்பலப்படாமல் விடுவதற்கான நடவடிக்கையா? வடக்கு மாகாண சபையின் அமர்வுகளில் இடையில் மதிய போசனத்தில் தம்முடன் இணைந்து ஊடகவியலாளர்கள் பங்கெடுப்பதனால் தமக்கு இடையூறு ஏற்படுவதாக தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் சபை நிதியில் பரிமாறப்படும் உணவு மற்றும் தேனீர்


             ""ஹலோ தலைவரே... …  இந்தியாவின் செமி ஃபைனல்ஸ் தேர்தல்னு சொல்லப்பட்ட 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க லம்ப்பா ஜெயித்திருப்பதால ஃபைனல்ஸ் தேர்தலான எம்.பி. தேர்தலிலும் இதே மாதிரியான ரிசல்ட்டுகள்தான் வருமோன்னு தமிழக கட்சிகளிடம் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்குது.''


"இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலை யும்' என்கிற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் பேசிய ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும் கடலூர் எம்.பி.யுமான கே.எஸ். அழகிரி, ஈழத்தில் நடந்த யுத்தத்தை நிறுத்த சிதம்பரம் கடும் முயற்சி எடுத்ததாகப் பதிவு செய்தார். இந்த நிலையில், கே.எஸ்.அழகிரி யை தொடர்புகொண்டு சில கேள்விகளைக் கேட்டோம்.


            நான்கு மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வை உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளது. தமிழக பா.ஜ.க. அலுவலகத்திற்குள் நுழைபவர்கள் எல்லாம் ஒரு ஸ்வீட் பாக்சோடுதான் நுழைகிறார்கள். ஸ்வீட் சாப்பிட்டு... சாப்பிட்டு சுகர் அதிகமாகிவிட்டது என சில தலைவர்கள் வருத்தப்படும் அளவிற்கு அங்கே உற்சாகம் கரை புரண்டோடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கிடையே கடமையே கண்ணாக தமிழகம் முழுவதும் கட்சி நடத்தும் பாத யாத்திரைக்கு தயாராகிக் கொண்டிருந்தார் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரை சந்தித்தோம்.

நான்கு மாநில தேர்தல் முடிவுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

பிரித் ஓதி முஸ்லிம் வியா­பா­ரியை மன்­னிப்பு கோரச் செய்த தேரர்கள்

கட்­டு­நா­யக்க சுதந்­திர வர்த்தக வல­யத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒரு­வ­ருக்கு சொந்த­மான அழ­கு­சா­தனப் பொருட்­களை விற்­பனை செய்யும் கடையில் புத்­தரின் உருவ சித்­திரம் கொண்ட கையு­றை­களை விற்­ப­னைக்­கா
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்பாக காணாமல் போனோரது உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோயிலுக்கு சென்ற பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பூசகர் கைது

பூசாரி ஒருவர் இன்று கைது செ

வட மாகாணசபையின் மூன்றாவது அமர்வில் கவனவீர்ப்பு போராட்டம்
வட மாகாண சபையின் மூன்றாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் கைதடியில் அமைந்துள்ள கட்டடத்தில் ஆரம்பமாகியது.
 வடக்கு மாகாண வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பும்; சபை நடவடிக்கைகளும்
வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் சபையில் இன்று முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐ. நா பிரதிநிதிகளை இலங்கைக்கு விஜயம் செய்ய அரசாங்கம் கூடுதல் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்; ஐரோப்பிய ஒன்றியம்
ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய அரசாங்கம் கூடுதல் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என   ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
2009ம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்றது மனித படுகொலையே!: நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்
2009ம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்றது, மனித படுகொலையே என ரோம் நகரை தலைமையமாகக் கொண்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
சிங்களவர்களை எங்கே குடியேற்றுவது?: வட மாகாண சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி
வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது போல் சிங்கள மக்களும் யாழ்ப்பாணத்தில் குடியேற முடியாதா?. முடியாதாயின் சிங்கள மக்களை நாங்கள் எங்கே குடியேற்றுவது  என வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன எ.டி.தர்மபால கேள்வி எழுப்பினார்.

எதிர்வரும் Dec 28 அன்று சுவிஸ் பெர்ன் நகரில் இடம்பெறும் கரோலின் இசைக்குழுவின் மாபெரும் நிகழ்ச்சி

நெல்சன் மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி
தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு நினைவு பிரார்த்தனை, ஜோகன்னஸ்பர்க் அருகில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா வழங்கியதில் இந்தியா பெருமைப்படுகிறது: பிரணாப் முகர்ஜி

மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ஜோகன்ஸ்பர்க்கில் மண்டேலாவிற்கு அஞ்சலி பிரார்த்தனை நடைபெற்று
டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 25 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்கு

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 31 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்களும், காங்கிரசுக்கு 8 இடங்களும் கிடைத்தன.
மண்டேலாவுக்கு ஒபாமா அஞ்சலி
மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ஜோகன்ஸ்பர்க்கில் மண்டேலாவிற்கு அஞ்சலி பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் முதல்வராக வசுந்தரா ராஜே சிந்தியா 13ந்தேதி பதவி ஏற்பு
அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றது. மாநிலத்தில் உள்ள 200 சட்டசபைத் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் ஒருவர் இறந்ததை அடுத்து 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 
இதில், பாரதீய ஜனதா 162 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் வசுந்தரா ராஜே சிந்தியா முதல்–மந்திரியாக
சத்தீஸ்கர் முதல் அமைச்சராக ராமன் சிங் 12ஆம் தேதி பதவியேற்பு

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. அங்கு மீண்டும் முதல் அமைச்சராக ராமன்சிங் வரும் 12ஆம் தேதி பதவியேற்க உள்ளார். ராயப்பூர், போலீஸ் மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விழாவில் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
வடமாகாண சபைக்கான செங்கோல் தயாரிப்பு! தலைவர் கந்தையா சிவஞானம்
வட மாகாண சபைக்கான செங்கோல் தயாரிக்கப்பட்டு வருவதாக சபையின் அவைத்தலைவர் கந்தையா சிவஞானம் தெரிவித்தார்.
மனித உரிமைகளைப் பேணுவதில் சமநிலை இன்மையே எமது இன்றைய நிலைக்கு காரணம்!- கிளிநொச்சியில் ஹான்ஸ் போவர்
மனித உரிமைகளைப் பேணுவதிலும் அதனை உத்தரவாதப்படுத்துவதிலும் உலகில் சமநிலை காணப்படாமையே எமது இன்றையநிலைக்கு காரணமாகும்  என கிளிநொச்சியில் நடைபெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றிய அருட்தந்தை மரியாம்பிள்ளை
தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை சிறப்புடன் நிறைவடைந்தது!
சுதந்திர தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஓய்ந்தது போரேயன்றி போராட்டமல்ல என்பதனை உலகிற்கு முரசறைந்து முகிழ்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சிறப்புடன் நிறைவடைந்தது.
இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பில்
ஆக்கங்களை படைக்க முனைவேன்! -
கவிஞர் வைரமுத்து
10 டிசெம்பர் 2013,

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அடுத்த ஆண்டில், இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான ஆக்கங்களை படைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய ஊடகமான விகடனில் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றுக்கு அழகிய தமிழ்ச் சொற்களை கோர்த்து கவிதை நயத்தோடு பதில்களை அளித்த கவிஞர் வைரமுத்து அவர்களிடம் இறுதியாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதாவது,

அடுத்த ஆண்டு என்ன செய்வதாக உத்தேசம்?

இதற்குப் பதிலளித்த கவிஞர்,

நமது இசை, நாட்டிய, சிற்ப மரபுகள் எல்லாம் பெரும்பாலும் மத வழிப்பட்டவை. இல்லாத கதை மாந்தர்களே பெரும்பாலும் கலைகளுக்குக் கருப்பொருளாகி இருக்கிறார்கள்.

இலங்கையில் நடந்த இனப் படுகொலை ஏன் இந்தக் கலையாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லை? அடுத்த ஆண்டு இதற்குத்தான் நான் முனைவேன். அதற்காக என்னை முன்மொழியும் கலைஞர்களை நான் வழிமொழிவேன்; துணையிருப்பேன்! எனத் தெரிவித்திருக்கின்றார்.

10 டிச., 2013

குடிபோதையில் தண்டவாளத்தில் தூங்கிய 2 வாலிபர்கள் ரயில் மோதி பலி
விழுப்புரம் அருகே கருங்காலிபட்டு காலனியை சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் சிவக்குமார் (வயது 30). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மகன் வினோத் (27) என்பவரும் நெருங்கிய
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக, இந்திய அமைதிப் படையினர் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர்: இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளம்
கடந்த காலத்திலும் தற்போதும் இந்தியா, இலங்கை தமிழர்களின் மனித உரிமைகளை மீறி வருவதாக இலங்கையின் பாதுகாப்பு இணைத்தளத்தில் கட்டுரை ஒன்று பிரசுரமாகியுள்ளது.
யாழில் பாலியல் வல்லுறவு தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு: காவல் துறையினர் - பெண்பிள்ளைகள் குறித்து பெற்றோர் விழிப்பாக இருக்க வேண்டும்: யாழ் அரச அதிபர்
யாழ் மாவட்டத்தில் இடம்பெற்று வரும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையம் 
ஜெனிவாவில் இராணுவத்தினரை காப்பாற்ற நான் தயார்!- சரத் பொன்சேகா
சுவிஸர்லாந்தின் ஜெனிவா நகரில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கை சார்பில் குரல் கொடுக்க தான் தயாராக இருப்பதாக முன்னாள்
வட மாகாண சபையில் இன்று வரவு செலவுத் திட்டம்!- முதலமைச்சர் சமர்ப்பிக்கிறார்!
வட மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை காலை கைதடியில் நடைபெறவுள்ள மாகாணசபை அமர்வில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் சமர்ப்பிக்கவுள்ளார்.

மலக்குழிக்குள் மனிதனை இறக்காதே: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மறியல் போராட்டம்
மலக்குழிக்குள் மனிதனை இறக்கக் கூடாது. பாதாள சாக்கடையில் மனிதனை இறக்கக் கூடாது. பாதாள சாக்கடை மற்றும் மலக்குழியில் நிகழ்ந்த மரணங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இரயில்வே துறையில் மனித கழிவை மனிதனே
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கெதிராக யாழில் பிரசார ஊர்வலம் 
நவம்பர் 25 தொடக்கம் டிசம்பர் 10 வரை உலகெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத நீதி கோரும் விழிப்புணர்வு பேரணி இன்று யாழில் பெண்கள் அமைப்புக்களால் நடத்தப்பட்டது.
இலங்கை மீது விசாரணை ரோமில் சனியன்று ஆரம்பம்; இறுதிப்போரில் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் நாடுகளின் பங்களிப்புக் குறித்தும் ஆராய்வு
இத்தாலி தலைநகர் ரோமைத் தளமாகக் கொண்டு இயங்கும் "நிரந்தர மக்கள் சபை' இலங்கைப் போரில் நடைபெற்ற மனிதப் படுகொலைகள், உலக நாடுகளின் பங்களிப்புகள், சமாதானப் பேச்சுக்களில் ஏற்பட்ட தோல்விகளுக்கான காரணம் என்பன குறித்து தனது இரண்டாவது விசாரணையை ஆரம்பித்துள்ளது.
லங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்­று­விப்­பா­ள­ர் பதவிக்கான தேர்வில் இங்கி லாந்து அணியின் முன்னாள் வீரர் போல் பார் ப்ராஸும் இணைக்கப்பட்டுள்ளார்.
 
புதிய பயிற்­று­விப்­பாளர் தேர்வு தொடர்வில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த குழுவே அவரை இப்­ப­த­விக்கு பரிந்­துரை செய்­துள்­ளது.
 
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ள கிரஹம் போர்ட் அடுத்தவருடம் பெப்ரவரி மாதம் பயிற்றுவிப்பாளர் பதவி யிலிருந்து விலகவுள்ளார்.
டர்பனில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
 
தென்னாபிரிக்கவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

கள்ளக் காதலியின் வீட்டுக்குத் தீ வைத்துவிட்டு தன்னையும் மாய்த்துக்கொண்ட சுகாதார பரிசோதகர்

பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர்தனது கள்ளக் காதலியின் வீட்டுக்குத் தீ வைத்துக் கொளுத்திவிட்டு தானும் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

மாணவர் இருவருடன் நிர்வாணமாக இருந்த தேரருக்கு விளக்கமறியல்

ஆண் மாணவர்கள் அறுவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பிக்கு ஒருவரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி. அமரசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிட்டார்.
மிசோரம் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்தது காங்கிரஸ்

40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் 28 தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மிசோ தேசிய முன்னணி கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளர் லால்தான்ஹாவ்லா தனது சொந்தமாவட்டமான செர்ச் சிப்பிலுள்ள, செர்ச்சிப் மற்றும் ஹராங்டுர்ஹோ ஆகிய இரு தொகுதிகளில் போட்டி வெற்றி பெற்றார், 

ஆட்சி அமைக்க 21 இடங்கள் போதுமான நிலையில் 28 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது,
தமிழக அமைச்சரவை மாற்றம்! ஆர்.பி.உதயகுமாருக்கு அமைச்சர் பதவி! கே.வி.ராமலிங்கம் பதவி பறிப்பு!
 
தமிழக விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.வி.ராமலிங்கம் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக விளையாட்டு இளைஞர் நலத்துறை

9 டிச., 2013

சிங்கக் கொடியை ஏற்றமாட்டேன்: அமைச்சர் ஐங்கரநேசன் மறுப்பு
இலங்கையின் தேசியக் கொடியை புறக்கணிக்கப் போவதாக வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் இன்று 08.12.2013 ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறை தொகுதிக்குட்பட்ட வேலணை, புங்குடுதீவு பகுதிகளுக்கு விஜயம் செய்து தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு தனது நன்றியினைத்தெரிவித்துக்கொண்டதுடன், மக்களின் தேவைகள்,பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார். மாகாணசபை உறுப்பினருடன் வலி.தெற்கு பிரதேசசபை தலைவர் தி.பிரகாஷ், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சி.ஹரிகரன், இலங்கைத்தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞரணிச்செயலாளர் ப.தர்சானந் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஐரோப்பிய பயணத்தில் அனந்தி!
சர்வதேச மனித உரிமைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று அனந்தி சசிதரன் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை தொடர்பான குழுக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றார்....
கொழும்பில் -மேல்மாகாணத்தில்- பலமான அரசியல் சக்தியாக நாங்கள் உங்களுக்கு துணையிருப்போம்!
நாம் வாழும் கொழும்பில் எம் உரிமைக்கு குரல் கொடுப்போம்!
எங்கள் வடக்கு, கிழக்கு, மலையக உறவுக்கு கரங்கொடுப்போம்!
(நமது கட்சியின் மாகாணசபை-மாநகரசபை உறுப்பினர்களுடன் வடக்கு முதல்வரை சந்தித்த போது - 05/12/13)




               மிழ்நாடு முழுவதும் டிச.02-ம் தேதி முதல் அடுத்த மாதம் 26-ம் தேதி வரை "இல்லம் தோறும் தாமரை, உள்ளம் தோறும் மோடி' என்கிற பிரச்சார யாத்திரையை பா.ஜ.க. நடத்து கிறது. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான மோடியின் அருமை பெருமைகளை விளக்கும் இந்த யாத்திரையின் உச்சகட்டமாக நரேந்திர மோடியின் செல்போன் எண்ணை கிராமத்தில் உள்ள விவசாயியிடம் கொடுத்து நேரடியாக மோடியுடன் பேச வைக்கின்றனர்.

           ""ஹலோ தலைவரே... அ.தி.மு.க பொதுக்குழு, தி.மு.க பொதுக் குழுன்னு எம்.பி. தேர்தலுக்கான ஹீட் அதிகமாகிக்கொண்டே இருக்குது.''


         சின்னஞ்சிறுசுகளுக்கே சர்வசாதாரணமாக சர்க்கரை நோய் எனும் காலத்தில், நோய் நொடி எதுவுமின்றி 100 வயதை நெருங்கிவர... உற்சாகமாக நடைபோட்டு வருகிறார்கள், நெல்லை கிராமங்களில்.

8 டிச., 2013

யாழ் ஈபிடிபி தலைமையகத்தில் கைத்துப்பாக்கியா? நாட்டின் ஜனநாயகம்: சபையில் அரியநேத்திரன் காட்டம்
நாட்டின் ஜனநாயகம் இன்று கைத்துப்பாக்கியாகிவிட்டதுடன், யாழில் ஈபிடிபி அரசியற் கட்சி காரியாலயத்தில் கைத்துப்பாக்கி என்பதுடன் யுத்தமில்லாத காலத்தில் 500 பேர் கொலை என்றால் நாட்டில் நடப்பது என்ன என்று சபையில் அரியநேத்திரன் பா.உ காட்டம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஆரம்பமாகியது: அனைத்துலக பிரமுகர்கள் பங்கெடுப்பு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை காலத்திற்கான முதலாம் அரசவை அமெரிக்கா நியூ ஜெர்சி நகரில் கடந்த 6ம் திகதி கூடியது.
ஆம் ஆத்மியின் சாதனை ஆச்சரியப்படுத்துகிறது: பெரிய கட்சிகளுக்கு எச்சரிக்கை: காங்கிரஸ் கருத்து
முதன் முறையாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் அக்கட்சி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. 

மோடி அலையே வெற்றிக்கு காரணம்: வசுந்தரா ராஜே

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தில்லி, சட்டீஸ்கர் உட்பட நான்கு மாநிலங்களில் பாஜக அமோ வெற்றி பெற்றதற்கு மோடியின் அலையே காரணம் என்று ராஜஸ்தான் பாஜக தலைவரும் அங்கு முதல்வராக  பொறுப்பேற்க விருக்கும் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றததையடுதது பாஜகவினர் பட்டாசுவெடித்து கொண்டாடிவருகின்றனர்,
ராஜஸ்தானில்(199) பாஜக 128இடங்களில் வெற்றி 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 18இடங்களில்வெற்றி பெற்று 7இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 7இடங்களில் வெற்றி பெற்று 8 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
தில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.முதல்வர் ஷீலா தீட்சத் உள்பட பலர் தோல்வியை சந்தித்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஷகீல் அகமது கூறுகையில், தங்களது கட்சி ஒருபோதும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்காது என்று கூறியுள்ளார்.
சட்டீஸ்கரில் பாஜக 19இடங்களில் வெற்றி 25இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில்வெற்றி பெற்று24 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
டெல்லி: 21 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் அரவிந்த் கேஜ்ரிவால்
 


டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. பாஜக, ஆம் அத்மி கட்சி முன்னிலை பெற்றிருந்தது. 
மத்தியப்பிரதேசத்தில் 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!
மத்தியப்பிரதேசத்தில் பாஜக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. அக்கட்சியின் தொண்டர்கள் முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் வீட்டின் முன்பு திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். 
மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 116 இடங்களை கைப்பற்றினால் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலையில், பாஜக 157 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 2005 மற்றும் 2009 சட்டமன்ற தேர்தல்களில் ஆட்சியை பிடித்த பாஜக தற்போது 2013 சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்கிறது. 
ஏற்காடு: 78 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி
 


சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எ

ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக: முதல் அமைச்சராக பதவியேற்கிறார் வசுந்தரா ராஜே சிந்தியா
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை வகித்தது.

199 தொகுதிகளில் நடந்த தேர்தல்களில் 109 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. 57 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்று, 11 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பாஜக பிடிப்பது உறுதியானது.
டெல்லி: 24 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை
டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் பாஜக 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 24 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
மத்தியப்பிரதேசம்: பாஜக 103 தொகுதிகளில் முன்னிலை
மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக 103 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 47 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளார். 
ராஜஸ்தான்: 119 தொகுதிகளில் பாஜக முன்னிலை
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக 119 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 6 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

4 மாநிலத் தேர்தல் முடிவுகள்: அனைத்திலும் பாஜக முன்னிலை

4 மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை துவங்கியது.
இதில் அனைத்து மாநிலங்களிலும் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காலை 10.15 நிலவரப்படி,
சட்டீஸ்கர் : மொத்தம் (75/90)
ஏற்காடு சட்டமன்ற தொகுதி 5வது சுற்று முடிவு: அதிமுக 29,106: திமுக 15,394

ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் 5வது சுற்று முடிவில் அதிமுக 29,106 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. திமுக 15,394 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்
1) பி.சரோஜா - அதிமுக.
2) மாறன் - திமுக.
3 )பழனி - சுயேட்சை
4) எம்.பழனிசாமி - சுயே
5) கே.பழனிவேல் - சுயே
6) கே.பூபாலன் - சுயே
7) ஈ.பொன்னுசாமி - சுயே.
8) சி.மணிகண்டன் - சுயே
9) கே.மதியழகன் - சுயே
10) ஏ.ராஜாக்கண்ணு - சுயே.
11) ஏ.ராஜேந்திரன் - சுயே.
12) நோட்டா (மேலே உள்ள யாவருக்கும் இல்லை)
மொத்தம் பதிவான வாக்குகள் 2,14,434
ஆண்கள் 1,05,610
பெண்கள் 1,08,820
திருநங்கைகள் 4
ஏற்காடு: 21.336 வாக்குகளில் அதிமுக முன்னிலை
ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் 4வது சுற்று முடிவில் அதிமுக 21336 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. திமுக 11788 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. 9 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது. 
ஏற்காடு தொகுதியில் இதுவரை 912 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்
டெல்லியில் தொடர்ச்சியாக 3 முறை ஆட்சி புரிந்த ஷீலா தீட்சித் கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்
டெல்லி மாநிலத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சி புரிந்த முதல்வர் ஷீலா தீட்சித் இம்முறை கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார். அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் கணக்குக
மத்தியப்பிரதேசம்: 10 தொகுதிகளில் பாஜக முன்னிலை
230 தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் 10 தொகுதிளில் பாஜக முன்னிலையில் உள்ளது. 4 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளன.
ஷீலா தீட்சித்தை பின்னுக்குத் தள்ளிய கேஜ்ரிவால்

டில்லி சட்டசபைத் தேர்தலில் முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலையில் உள்ளார். டில்லி சட்டப் பேரவைத் தொகுதியில், சற்று முன்னர் வரை ஷீலா தீட்சித் முன்னிலை பெற்றிருந்தார். பின்னர் அவரைப் பின்னுக்குத் தள்ளி அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலை  பெற்றுள்ளார்.

ராஜஸ்தான்: பாஜக 76 தொகுதிகளில் முன்னிலை
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி பாஜக 76 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுயில் முன்னிலையில் உள்ளது.
சத்தீஸ்கர்: பாஜக, காங்கிரஸ் 3 தொகுதிகளில் முன்னிலை
சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
ஏற்காடு: 14,951 வாக்குகள் பெற்று அதிமுக முன்னிலை
ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில 3வது சுற்று முடிவில் அதிமுக 14951 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. திமுக 8563 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

ad

ad