புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2013


எப்போது எங்களுக்காக கதைக்கப்போகின்றீர்கள் ? மலையக பிரதிநிதிகளுக்கு ஒரு பகிரங்க மடல்

தேர்தல் காலங்­களில் மட்டும் சிரித்த முகத்­தோடு எம்மை தேடி வரும் பிர­தி­நி­தி­க­ளுக்கு வணக்கம் ! 
கல்வி, சுகா­தரம், விளை­யாட்டு, போக்­கு­ரத்துதொழில் குடி­யி­ருப்பு என சகல அம்­சங்­க­ளிலும் பின்­தங்­கி­யி­ருக்கும் எங்கள் பிரச்­சி­னைகள் பற்றி கதைக்க வேண்­டிய இடத்தில் நீங்கள் எவ­ருமே

சீனாவிலிருந்து ஹொங்கொங்கிற்கு கடத்தல்காரர்களால் நிர்மாணிக்கப்பட்ட இரகசிய சுரங்கப் பாதை

கடத்தலில் ஈடுபடுபவர்களால் சீன எல்லையிலிருந்து ஹொங்கொங்கிற்கு நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்ட இரகசிய சுரங்கப்பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி ஆதிக்கம்

அவுஸ்திரேலியாவுடனான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறுகிறது.
மெல்போர்னில் நேற்று முன்தினம் ஆரம்பமான போட்டியின் இரண்டாவது நாளான நேற்று 226 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. இரண்டாவது நாள் போட்டியை பார்வையிட 78,346 பேர் அரங்கில் குவிந்த நிலையில் அவுஸ்திரேலியா தனது பந்து வீச்சு திறமையை வெளிக்காட்டியது.

சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய 75,000 பழங்கள் புறக்கோட்டையில் மீட்பு

இரசாயன பதார்த்தம் தெளிக்கப்பட்டதாக கண்டுபிடிப்பு

நெடுந்தீவு குதிரைகளை அழிவிலிருந்து காப்பாற்ற சரணாலயம் அமைக்கப்படும்

யாழ்ப்பாணக் குடா நாட்டில் இருந்து 35 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடலில் இருக் கும் மிகப் பெரிய தீவான நெடுந்தீவில் இருக்கும் குதிரைகள் மற்றும் கோவேறு கழுதை களுக்கென ஒரு சரணாலயத்தை அமைப் பதென்று வனவிலங்கு பாதுகாப்பு துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது நிபந்தனைகளை விதிப்பதற்கு முன் அரசின் பணிகளை பார்த்து முடிவெடுக்க வேண்டும்

ஐ.நா.மனித உரிமைப் பேரவையிடம் அமைச்சர் வேண்டுகோள்
அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அரசிடம் ஒப்படைத்த பொறுப்புக்களை முழுமையாக நாம் உணர்ந்து கொண்டுள்ளோம்.
அதனடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து நம்நாட்டு பிரஜைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் என்று வெளிவிவகார
சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளரை மீட்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன் என்பவர், கிளிநொச்சிப் பகுதியில் கிறித்தவத் தேவாலயம் ஒன்றிலிருந்தபோது சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். 
மகா. தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்படலாம் என தெரிவிப்பு! விடுவிக்க கோரி வைகோ மன்மோகனுக்கு கடிதம்
கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணை திணைக்கள அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஜூனியர் விகடன் சஞ்சிகையின் ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரன் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒருமுறை ஏமாறுவதற்கு தமிழ் மக்கள் தயாரா...?
உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு, பிறநாடுகளில் தீர்வுகளைத் தேடுவதை விட, தேசிய நல்லிணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் எமது நாட்டுக்கு உள்ளேயே உகந்த தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறைகூவல் விடுத்துள்ளார்,நாட்டின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­.
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா?
கடந்த வாரம் அமைச்சர் பஸில் ராஜபக்­வும், இந்திய நிதியமைச்சர் சிதம்பரமும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்த புதுமையான இருவேறு கதைகளை வெளியிட்டிருந்தனர்.
சிசு எரித்துப் புதைப்பு; கள்ளக்காதலன் கைது
உரும்பிராய் பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ்
 பெண் ஒருவரை ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவு
19 வயதுடைய பெண் ஒருவரை ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஜெனிவாவில் எழுச்சி மாநாடு திரள்கிறது தமிழரின் சேனை
மனித உரிமைகளை மதிக்காது தமிழ் மக்களை அடக்கி ஆள முனையும் இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக சமூகம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் வகையில் மாபெரும் எழுச்சி
இறுதியாக கிடைத்த செய்தி இரவு 11 இலங்கை நேரம் 

தோழர்களே தம்பி பத்திரிகையாளர் தோழர் மகா தமிழ் பிரபாகரன் அவர்கள் இன்னும் ராணுவ காவலிலேயே உள்ளார் அவர் விடுவிக்க பட்டதாகவோ அல்லது விசாரணை முடிந்தாதாகவோ எந்த செய்தியும் தற்போது இலங்கை நேரம் இரவு 11 வரை கொழும்
பு ஊடக 
வட்டாரங்களில் இல்லை தொடர்ந்தும் தோழர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவே அறிகிறோம் போராட தயாராகுங்கள் உறவுகளே 

தி.மு.க.வின் லட்சியத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்றார் கலைஞர்! டி.ஆர். கண்ணீர் பேட்டி!
திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷா ராஜேந்தருடன் வெள்ளிக்கிழமை மாலை  சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்
என் அன்பு அழைப்பினை ஏற்று திமுகழகத்தில் டி.ராஜேந்தர் இணைந்துள்ளதை வரவேற்கிறேன்: கலைஞர் அறிக்கை
திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷா ராஜேந்தருடன் வெள்ளிக்கிழமை மாலை  சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்
கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா: சென்னையில் நேரடி ஒளிபரப்பு
 டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் நாளை பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழா டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
தே.மு.தி.க. சார்பில் உங்களிடம் பேச்சுவார்த்தைக்கு யாராவது வந்தார்களா? கலைஞர் பதில்
தி.மு.க. தலைவர் கலைஞரை வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி :- டி. ராஜேந்தர் மீண்டும் தி.மு.கழகத்தில் இணைந்திருக்கிறார். இது எந்த அளவிற்கு தி.மு.கழகத்திற்கு பலமாக இருக்கும்?
பதில் :- நீங்கள் இவ்வளவு பேர் வந்திருப்பதிலிருந்தே, எவ்வளவு பலமாக இருக்கும் என்று தெரிகிறதே!
கெஜ்ரிவால் உட்பட 28 எம்.எல்.ஏ.க்களும் ரயிலில் சென்று பதவியேற்பு! ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு!
டெல்லியில் 7வது முதல்வராக, ராம்லீலா மைதானத்தில் சனிக்கிழமை நடக்க உள்ள பதவி ஏற்பு விழாவில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்க உள்ளார்.

இதுதொடர்பாக காசியாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மனிஷ் சிசோடியா, சனிக்கிழமை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள அர்விந்த் கெஜ்ரிவால் உட்பட, 28 எம்.எல்.ஏ.க்களும், மெட்ரோ ரயில் மூலம் பதவியேற்பு விழா நடைபெறும் ராம் லீலா மைதானத்திற்கு வருவார்கள். 
12 காங்கிரஸ் முதல்வர்களுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி புதுடெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

ad

ad